Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சின்னக்கண்ணன் வருகிறான்.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

24615105721.jpg

24615190623.jpg

கிருஷ்ணன் பெயர்க்காரணம் :

"கிருஷ்ணன்' என்ற சொல்லுக்கு "கருப்பன்' எனப்பொருள். அவன் கரிய நிறம் கொண்டவன். அவனை "கார்வண்ணன்' என்று சொல்வார்கள். "கார்' என்றால் "மேகம்'. மேகம் எவ்வளவுக்கு எவ்வளவு கருப்பாக இருக்கிறதோ, அவ்வளவுக்கு அவ்வளவு மழையைக் கொட்டும். அந்த மழைநீர் கருப்பாக இருப்பதில்லை. மிக சுத்தமாக அப்பழுக்கற்றதாக இருக்கிறது. கரிய நிற கிருஷ்ணனை வணங்குபவர்கள் அப்பழுக்கற்ற அவனது அருளை அடைவார்கள்.

24615105788.jpg

கால் கட்டை விரலை வாயில் வைத்திருப்பது ஏன்?

குழந்தைக் கண்ணன், கால் கட்டை விரலை வாயில் போட்டு சப்பிக் கொண்டிருக்கிறான். இது ஏன்தெரியுமா?

ராமபிரானின் முன்னோர்களில் ஒருவரான மாந்தாதா என்ற மன்னர், தகப்பனாரிடமிருந்து தாயின் சம்பந்தமில்லாமல் நேரடியாகப் பிறந்தவர். தாய் இல்லாததால் பால் கொடுக்க ஆளில்லை. அழுது கொண்டே இருந்தது குழந்தை. அப்போது இந்திரன், "மாம் தாதா' (நானே தருகிறேன்) என்று சொல்லியபடியே, தனது கைவிரல்களை குழந்தையின் வாயில் வைத்தான். குழந்தை அதைச் சுவைத்த போது, அவனது விரல்களில் இருந்த அமிர்தம் குழந்தையின் வாய்க்குள் சென்றது. குழந்தை அழுகையை நிறுத்தி விட்டது. (இப்போதும் குழந்தைகள் கை விரல்களை சூப்புவதின் ரகசியம் இதுதான்). இதனால் இந்தக் குழந்தைக்கு "மாந்தாதா' என்ற பெயரும் வந்துவிட்டது. இந்திரன் தேவன். அதனால், கை விரலை குழந்தைக்கு கொடுத்தான். பகவான் கிருஷ்ணன் தெய்வம் இல்லையா? அதனால், அவன் கால் கட்டை விரலை வாயில் போட்டுக்கொண்டான். அதாவது, தனது உடல் முழுவதுமே அமிர்தம் என அவன் சொல்கிறான். ஒரு பக்தன் தன்னை எப்படி வேண்டுமானாலும் ருசிக்கலாம் (வணங்கலாம்) என்பதே இதன் மூலம் அவன் சொல்லும் கருத்து.அதனால் தான் பாரதியார் அவனை கண்ணம்மாவாக பார்த்தார். ஒரு வேலைக்காரனாக அனுபவித்தார். இது மட்டுமின்றி, "சாப்பிடுவது கடவுள், சாப்பிடப்படுவது கடவுள், சாப்பாடு போடுவதும் கடவுள்' என்ற ஸ்லோகத்தின் அடிப்படையில் "தானே எல்லாம்' என்பதை இவ்வுலகுக்கு தன் செய்கையின் மூலம் விளக்குகிறான்.

வெண்ணெயை ஏன் திருடவேண்டும்? :

கண்ணன் கடவுள், அவன் நினைத்தால் பாற்கடலே வெண்ணெய் கடலாக மாறிவிட்டுப் போகிறது. இருந்தாலும், அவன் ஏன் பூலோகத்துக்கு வந்து வெண்ணெயைத் திருட வேண்டும்? பாலை தண்ணீரில் விட்டால், தண்ணீருடன் கலந்து விடும். வெண்ணெயோ தண்ணீரில் ஒட்டாமல் மிதக்கும். உலகத்தில் பிறந்த ஒவ்வொருவனும், நமக்கு இந்த உலகம் நிரந்தரமில்லை, பரந்தாமனின் வைகுண்டலோகமே நிரந்தரம் என்பதை நினைக்க வேண்டும். வாழ்க்கையை தண்ணீருடன் கலந்த பாலாக நினைப்பதால் தான் இங்கேயே இருக்கத் தோன்றுகிறது. அதை தண்ணீரில் மிதக்கும் வெண்ணெயாக நினைத்தால், அவன் நம்மை அபகரித்துக் கொண்டு போய் விடுவான்.

கண்ணனின் மாயாஜால ரகசியம் :

கண்ணனைப் போன்று மாயாஜாலம் செய்பவன் யாருமில்லை. நியாயத்துக்கு புறம்பான சில செயல்களைச் செய்து, பாண்டவர்களுக்கு உதவுவது போல் பாவனை காட்டுகிறான். அமாவாசையை முதல்நாளே வரவழைக்கிறான். கர்ணனிடம், யாசகம் கேட்டு செல்கிறான். கோபியர்களிடம் கொஞ்சுகிறான். பல தகிடுதத்தங்களைச் செய்யும் மாயாவியாக நம் கண்ணுக்கு தோற்றமளிக்கிறான். "கடவுளே இப்படிச் செய்தானே, நாம் செய்தால் என்ன' என்று நம்மைத் துõண்டிவிடுவது போல் அமைகிறது அவனது செய்கைகள். ஆனால், கபடும் மாயமும் சூதுமாக தெரியும் அவனை, நாம் வெள்ளை மனதுடன் வழிபடுகிறோமா என்பதை சோதிக்கவே அவன் இந்த செய்கைககளை எல்லாம் செய்கிறான் என்பதே இதில் புதைந்துள்ள ரகசியம். நமது மன அடக்கத்திற்கு வைக்கும் சோதனையே அவனது மாயச்செயல்கள்.

தினமலரிலிருந்து.........

  • 3 weeks later...

அருமையான பதிவு

அருமையான படங்கள்

நமது மூத்த தலைவர் கனம் ஆனந்தசங்கரி அவர்களை ஞாபகப்படுத்துகிறது. :o

பதிவிற்கு நன்றி :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.