Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மட்டக்களப்பில் டெங்கினால் இளைஞர் உயிரிழப்பு : ஒரே நாளில் 14 பேர் வைத்தியசாலையில் அனுமதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பில் டெங்கினால் இளைஞர் உயிரிழப்பு : ஒரே நாளில் 14 பேர் வைத்தியசாலையில் அனுமதி

Published By: NANTHINI

19 FEB, 2023 | 01:42 PM
image

ட்டக்களப்பு ஏறாவூரில் டெங்கு நோய்க்கு இலக்காகி போதனா வைத்தியசாலையின் அவசர பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த 22 வயது இளைஞரொருவர் சிகிச்சை பலனின்றி நேற்று சனிக்கிழமை (18) உயிரிழந்துள்ளார். 

அத்துடன் குறித்த மாவட்டத்தில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை மட்டும் 14 பேர் டெங்கு நுளம்பு நோய்த் தாக்கத்தினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு சுகாதார பிராந்திய பணிப்பாளர் வைத்தியர் குணசிங்கம் சுகுணன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் கூறியதாவது:

ஏறாவூர் ஜயங்கேணி பாரதி கிராமத்தைச் சேர்ந்த 22 வயதுடைய பகீரதன் தனுஷ்கரன் என்கிற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞன் டெங்கு நுளம்பு தாக்கத்துக்குள்ளாகி செங்கலடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, 16ஆம் திகதி மட்டு. போதனா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை 3 மணியளவில் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை தற்போது அவ்வப்போது மழை பெய்துவரும் காரணத்தால் டெங்கு நுளம்பின் பெருக்கம் ஏற்பட்டுள்ளது. 

அத்துடன் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை மட்டு. டெங்கு நுளம்பு நோய் தாக்கத்தினால் களுவாஞ்சிக்குடியில் 2 பேரும், காத்தான்குடியில் ஒருவரும், செங்கலடியில் 2 பேரும், வாழைச்சேனையில் ஒருவரும், கோறளைப்பற்று மத்தியில் 4 பேரும், மட்டக்களப்பில் 4 பேரும் என 14 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே, பொதுமக்கள் வீட்டில் ஒரு நுளம்பை கண்டாலும் சுற்றுப்புறச் சூழலை துப்புரவு செய்யுங்கள். காய்ச்சல் ஏற்பட்டால் அரச வைத்தியசாலைக்கு சென்று உடனடியாகவே மருத்துவ ஆலோசனையை பெறுங்கள். காய்ச்சல் மூன்று நாட்களுக்கு தொடர்ந்தால் இரத்த பரிசோதனை செய்யுங்கள். காய்ச்சலுக்கு பரசிட்டமோலை தவிர வேறு மருந்துகளை ஒருபோதும் உட்கொள்ளாதீர்கள்.

'ஒரு நுளம்பு உன்னை நாளை கொல்லும்; நீ அதை இன்றே கொல்லாவிடில்' என்பதனை மனதில் நிறுத்திக்கொண்டு பொதுமக்கள் தமது சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்துக்கொள்வதுடன்  டெங்கு நுளம்பு தொடர்பாக எச்சரிக்கையாகவும் அவதானமாகவும் செயற்படுங்கள் என அவர் கேட்டுக்கொண்டார். 

https://www.virakesari.lk/article/148563

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கில் ஒன்றரை மாதத்திற்குள் 1363 டெங்கு நோயாளர்கள் - வைத்தியர் எஸ். அருள்குமரன்

Published By: DIGITAL DESK 5

22 FEB, 2023 | 10:54 AM
image

கிழக்கு மாகணத்தில் 45 நாட்களுக்குள் 1363 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண தொற்று நோயியல் நிபுணரும், சமூக வைத்திய நிபுணருமாண வைத்தியர் எஸ். அருள்குமரன் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில் கடந்த பல நாட்களாக அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் அதிக மழை தொடராக பெய்துவருகின்ற இந்நிலைமையில், டெங்குத் தொற்று தொடர்பில் கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 315 நோயாளர்கள் இனங்காணப்படுள்ளதாகவும், இதில் செங்கலடி, ஏறாவூர் மற்றும் மட்டக்களப்பு நகரம் போன்ற இடங்களில் தோற்றாளர்கள் பதிவாகியுள்ள இந்நிலையில், கல்முனை சுகாதார சேவைகள் பிரிவில் 780 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். 

குறிப்பாக, சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி அலுவைகத்திற்குட்பட்ட பிரிவில் 203 டெங்கு நோயாளர்களும், அக்கரைபபற்று சுகாதார வைத்திய அதிகாரி அலுவைகத்திற்குட்பட்ட பிரிவில் 148 நோயாளர்களும், அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவைகத்திற்குட்பட்ட பிரிவில் 118 நோயாளர்களும் இனங்காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், திருகோணமலை மாவட்டத்தில் 243 நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும், திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்குட்பட்ட பிரிவில் 87 நோயாளர்களும், உப்புவெளி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்குட்பட்ட பிரிவில் 58 நோயாளர்களும், மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்குட்பட்ட பிரிவில் 24 டெங்கு நோயாளர்களும், கந்தளாய் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்குட்பட்ட பிரிவில் 19 நோயாளர்களும், கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்குட்பட்ட பிரிவில் 18 நோயாளர்களும், குச்சவெளி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்குட்பட்ட பிரிவில் 16 நோயாளர்களும் பதிவாகியுள்ள இதேவேளை, அம்பாறை மாவட்டத்தில் 7 சுகாகதார வைத்திய அதிகாரி அலுவைகத்திற்குட்பட்ட பிரிவுகளில் 25 நோயாளர்கள் இனங்காணப்பட்டடுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எனவே, பொதுமக்கள் இதுதொடர்பில் அதிக கவனம் செலுத்தி, தாங்கள் வசிக்கின்ற சுற்றுப்புறச் சூழல்களை சுத்தமாகவும், டெங்கு நுளம்புகள் பரவும் விதத்தில் காணப்படும் பொருட்களை அகற்றுமாறும் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணியம் கோரிக்கை விடுத்துள்ளது.

https://www.virakesari.lk/article/148818

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.