Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இடைநிறுத்தப்பட்ட இலங்கைக்கான செயற்திட்டங்களை மீள ஆரம்பிக்கும் JICA !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இடைநிறுத்தப்பட்ட இலங்கைக்கான செயற்திட்டங்களை மீள ஆரம்பிக்கும் JICA !

 

 

JICA-meeting-Dinesh-Gunawardena-715528-4

நிதி நெருக்கடி காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிறுவனத்தின் (JICA) அனைத்து செயற்றிட்டங்களையும் மீள ஆரம்பிக்குமாறு பிரதமர் தினேஷ் குணவர்தன அந்நிறுவனத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிறுவனத்தின் தெற்காசியாவிற்கான பணிப்பாளர் நாயகத்தை சந்தித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தினால் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் நிறைவு பெற்றதன் பின்னர், ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிறுவனத்தின் செயற்றிட்டங்களை விரைவாக ஆரம்பிக்கவுள்ளதாக அவர் இதன்போது உறுதியளித்துள்ளார்.

நிதி நெருக்கடி காரணமாக ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிறுவனத்தின் 2.5 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான 12 செயற்றிட்டங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பல்வேறு நகரங்களிலும் செயற்படுத்தப்படும் நீர் சுத்திகரிப்பு, கழிவுநீர் அகற்றல், சுகாதார பாதுகாப்பு மற்றும் திண்மக்கழிவு அகற்றல் ஆகிய செயற்றிட்டங்களுக்காக பல தசாப்தங்களாக இலங்கைக்கு வழங்கப்படும் தொடர்ச்சியான ஒத்துழைப்பிற்காக ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிறுவனத்தின் தெற்காசியாவிற்கான பணிப்பாளர் நாயகத்திற்கு பிரதமர் நன்றி தெரிவித்தார்.

புதுப்பிக்கத்தக்க வலுசக்தி மற்றும் ரயில் பாதைகள் உள்ளிட்ட பொது போக்குவரத்தை நவீனமயமாக்குதல் உள்ளிட்ட புதிய துறைகளுக்கு ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிறுவனத்தின் ஒத்துழைப்பை வழங்குமாறும் பிரதமர் இதன்போது கோரிக்கை விடுத்துள்ளதாக பிரதமர் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

https://thinakkural.lk/article/241110

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இடை நிறுத்தப்பட்டுள்ள வேலைத்திட்டங்களை மீண்டும் ஆரம்பிக்குமாறு ஜெய்காவிடம் பிரதமர் கோரிக்கை

Published By: DIGITAL DESK 5

22 FEB, 2023 | 02:12 PM
image

(எம்.மனோசித்ரா)

நிதி நெருக்கடி காரணமாக தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ள சகல வேலைத்திட்டங்களையும் மீண்டும் ஆரம்பிக்குமாறு பிரதமர் தினேஷ் குணவர்தன ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் (ஜெய்க்கா) பிரதிநிதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆசியாவிற்கான ஜைக்கா நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் இதோ தெருயுகியுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே பிரதமர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தினால் மறுசீரமைப்பு தொடர்பான வேலைத்திட்டங்களுக்கு இணக்கப்பாடு தெரிவிக்கப்பட்டவுனேயே தமது வேலைத்திட்டங்களை மீள ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாக அவர் பிரதமரிடம் உறுதியளித்தார்.

அரச நிதி நெருக்கடிகள் காரணமாக 2.5 பில்லியன் டொலர் பெறுமதியுடைய ஜைக்கா நிறுவனத்தின் 12 வேலைத்திட்டங்கள் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளன.

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு விடயங்களில் ஜப்பான் முக்கிய பங்கினை வகிக்கின்றது. அந்த வகையில் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் திருப்தியளிப்பதாக ஜைக்கா பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

பல்வேறு நகரங்களில் நடைமுறைப்படுத்தப்பட்ட நீர் சுத்தீகரிப்பு , கழிவு நீர் கால்வாய், சுகாதாரம் மற்றும் சுத்தீகரிப்பு வேலைத்திட்டங்கள் உள்ளிட்டவற்றுக்கு பிரதமர் ஜைக்கா நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்தார்.

மீள் புதுப்பிக்கத்தக்க சக்தி வளங்கள் , புகையிரத கடவைகள் உள்ளிட்டவற்றை இலத்திரனியல்மயப்படுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் பிரதமர் இதன் போது கோரிக்கை விடுத்தார்.

ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரையின்படி தேவையான சட்டங்களை இயற்றுவதன் மூலம் திட்டங்களை அமுல்படுத்துவதில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை மேம்படுத்துவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் பிரதமர் , ஜைக்கா பிரதிநிதிகளுக்கு விளக்கமளித்தார்.

மேலும், ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்கள் மற்றும் கொள்கைகள் தொடரும் வகையில் வரவு - செலவு திட்ட சட்டம் நிறைவேற்றப்படும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/148847

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.