Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மத்திய கிழக்கில் நீளும் பனிப்போர்: இஸ்ரேலிய இராணுவ அச்சுறுத்தலை தடுக்க ஈரான் திறந்துள்ள நிலத்தடி வான்தளம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மத்திய கிழக்கில் நீளும் பனிப்போர்: இஸ்ரேலிய இராணுவ அச்சுறுத்தலை தடுக்க ஈரான் திறந்துள்ள நிலத்தடி வான்தளம்

ஐங்கரன் விக்கினேஸ்வரா

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தங்கள் சமீபத்திய இராணுவப் பயிற்சியில் அச்சுறுத்தி உருவகப்படுத்தியது போன்ற சாத்தியமான தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் வகையில் போர் விமானங்களை ஈரான் தயார்படுத்தி வருவதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இஸ்ரேலின் இராணுவ அச்சுறுத்தல் :

ஈரானின் இராணுவத் தலைவர் மேஜர் ஜெனரல் அப்தோல்ரஹிம் மௌசவி மற்றும் ஈரானிய ஆயுதப் படைகளின் தலைமை அதிகாரி, மேஜர் ஜெனரல் முகமது பாகேரி ஆகியோர், ஈரானில் வெளியிடப்படாத இரகசிய இடத்தில், “ஈகிள் 44” எனப்படும் முதல் நிலத்தடி விமானப்படை தளத்தை கடந்த வாரம் பார்வையிட்டனர். ஆயினும் இத்தளத்தின் இருப்பிடம் வெளி உலகிற்கு இதுவரை வெளியிடப்படவில்லை.

1979 ஆம் ஆண்டு இஸ்லாமியப் புரட்சியின் 44 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் அதிகரித்த பதற்றங்களுக்கு மத்தியில் இந்த நிலத்தடி வான்தள தகவல் வெளியிடப்பட்டுள்ளது.மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரிக்கும் வகையில் கடந்த மாதம், இஸ்ஃபஹானில் உள்ள ஈரானின் பாதுகாப்பு அமைச்சகத்துடன் இணைக்கப்பட்ட இராணுவத் தளத்தை ட்ரோன் தாக்குதல் இலக்காகக் கொண்டது, பின்னர் அது இஸ்ரேல் மீது குற்றம் சாட்டப்பட்டது.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஈரான் மீது அமெரிக்காவோ, இஸ்ரேலோ அதிரடித் தாக்குதல்கள் எதனையும் தொடுக்குமா என வியந்து கொண்டிருக்கும் வேளையில் கடந்த வாரம் (28/1/23)சனிக்கிழமை இரவு ஈரான் ராணுவ தொழிற்சாலை மீது ட்ரோன் (Drone Attack) தாக்குதலை இஸ்ரேல் மேற்கொண்டது.

இஸ்பாஹானில் உள்ள ஈரானின் பாதுகாப்பு அமைச்சகத்துடன் இணைக்கப்பட்ட இராணுவ தொழில் தளத்தை ட்ரோன் தாக்குதல் இலக்காகக் கொண்டது. பின்னர் அது இஸ்ரேல் மீது குற்றம் சாட்டப்பட்டது. இத்தகைய சூழ்நிலையில ஈரான் வல்லாதிக்க அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள கங்கணம் கட்டியுள்ளது.

நிலத்தடி வான்தளம் :

ஈரான் தங்கள் வான் வல்லமையை முதன் முதலாக உலகிற்கு வெளிப்படுத்தும் வகையில், போர் விமானங்களுக்கான முதல் நிலத்தடி இராணுவ தளத்தை (Underground Air Base ) திறக்கும் போது ஈரானிய இராணுவத்தின் தளபதி மேஜர் ஜெனரல் அப்தோல்ரஹிம் மௌசவி பேசுவதைக் காட்டும் தகவல்களை AFP வழியாக ஈரானிய இராணுவ அலுவலகம் வெளியிட்டுள்ளது.

நீண்ட தூர ஏவுகணைகளுடன் கூடிய ஜெட் விமானங்களுடன் நிலத்தடி விமான தளத்தை பற்றி முதன் முதலாக ஈரான் வெளிப்படையாக அறிவித்துள்ளது.

ஈரானிய இராணுவம் அதன் முதல் நிலத்தடி விமானப்படை தளமான “ஈகிள் 44” கடந்த செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டது என்று மாநில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.அரசு செய்தி நிறுவனமான IRNA இந்த தளத்தை “விமானப்படையின் மிக முக்கியமான விமான தளங்களில் ஒன்று” என்று விவரித்தது. நீண்ட தூர ஏவுகணைகள் அந்தப் போர் விமானங்களில் பொருத்தப்பட்டுள்ளன எனவும் அறிவித்துள்ளது.

இந்த தளத்தின் முக்கிய சிறப்பியல்பு மலைகள் மற்றும் “பூமியின் ஆழத்தில்” அதன் இருப்பிடமாகும், இது போர் விமானங்கள் மற்றும் ட்ரோன்களை சேமித்து இயக்கும் திறன் கொண்டது என்று ஐ.ஆர்.என்.ஏ.கூறியுள்ளது.

நிலத்தடி இராணுவ விமானத்தளத்தை இரகசியமாக வெளிப்படுத்தாத இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த தளம் சமீப ஆண்டுகளில் ஈரான் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இராணுவத்தின் விமானப்படைக்காக கட்டப்பட்ட பல தந்திரோபாய நிலத்தடி விமான தளங்களில் ஒன்றாகும்” என்றும் IRNA தெரிவித்துள்ளது.

ஈரானின் வான்படை வல்லமை:

1979 ஆம் ஆண்டு இஸ்லாமியப் புரட்சியின் 44 வது ஆண்டு நிறைவை ஈரான் அனுஷ்டிக்கும் வேளையில் , அமெரிக்கா – இஸ்ரேலின் அதிகரித்த அச்சுறுத்தல் மத்திய கிழக்கில் மேலும் பதட்டங்களுக்கு வித்திட்டுள்ளது.

ஈரானின் விமானப்படையானது 1979 புரட்சிக்கு முன்பிருந்த பல்வேறு அமெரிக்க தயாரிக்கப்பட்ட இராணுவ விமானங்களையும், ரஷ்ய தயாரிப்பான மிக் மற்றும் சுகோய் விமானங்களையும் கொண்டுள்ளது. இருப்பினும், பல தசாப்தங்களாக மேற்கத்திய தடைகள் உதிரி பாகங்களைப் பெறுவது மற்றும் வயதான கடற்படையை பராமரிப்பது கடினமாக்கியுள்ளன. ஆயினும் எவ்வகையில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் சமீபத்திய இராணுவ அச்சுறுத்திலை எதிர்கொள்ளப் போவது என்பது கேள்விக்குறியாகும்.

கடந்த மே மாதம், ஈரான் நாட்டின் மேற்கில் மற்றொரு நிலத்தடி ட்ரோன்களை தயாரிப்புக்களையும் சர்வதேசத்திற்கு வெளிப்படுத்தியது. இந்த ட்ரோன்களை உக்ரேனிய போரில் ரஷ்யா பயன்படுத்தியதாக மேற்குலகு குற்றஞ்சாட்டியது.

ஈரான் தன் வான்படை வல்லமையை வலுப்படுத்த மேலும் ரஷ்ய சுகோய் சு-35 போர் விமானங்கள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை மார்ச் மாதத்திற்குள் பெற உள்ளதாக அறிவித்துள்ளது.

https://thinakkural.lk/article/241081

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.