Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ். சத்திர சந்தையை நவீன முறையில் நிர்மாணித்துத் தருமாறு யாழ். வணிகர் கழகம் ஜனாதிபதியிடம் கோரிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ். சத்திர சந்தையை நவீன முறையில் நிர்மாணித்துத் தருமாறு யாழ். வணிகர் கழகம் ஜனாதிபதியிடம் கோரிக்கை

Published By: NANTHINI

22 FEB, 2023 | 02:00 PM
image

 

 (எம்.நியூட்டன்)

ரியூட்டப்பட்ட சத்திர சந்தையை நவீன தொழில்நுட்ப முறையில் நிர்மாணித்துத் தருமாறு யாழ்ப்பாண வணிகர் கழகத்தினர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

அண்மையில் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க யாழ். மாவட்டத்தை சேர்ந்த வர்த்தகர்கள், முதலீட்டாளர்களை பிரத்தியேகமாக சந்தித்து கலந்துரையாடினார். 

இதன்போதே இக்கோரிக்கைகளை யாழ். வணிகர் கழகத்தினர் முன்வைத்தனர்.

இது தொடர்பில் அவர்கள் கூறுகையில்,

1981ஆம் ஆண்டு யாழ். பொது நூலகம் எரிக்கப்பட்டபோது நகரத்தின் மத்தியில் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்திருந்த சத்திர சந்தையும் எரிவுற்றது. அது நடந்து நாற்பது வருடங்களுக்கு மேலாகியும் புதிதாக சத்திரச் சந்தை நிர்மாணிக்கப்படவில்லை. 

சுமார் 1 ஏக்கர் விஸ்தீரணம் கொண்ட நகரத்தின் மத்தியில் உள்ள இந்த இடத்தில் 100க்கும் மேற்பட்ட வர்த்தகர்கள் சிறு குடில்களிலேயே வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். 

பல தடவைகள் நாம் அரசாங்கத்திடமும் உரிய அமைச்சரிடமும் கோரிக்கை விடுத்தும், இன்று வரை புனரமைக்கப்படவில்லை.

எனவே, பொது மக்கள் மற்றும் வர்த்தகர்களின் நலன் கருதி சத்திரச் சந்தையினை பல மாடிகளை கொண்ட நவீன தொழில்நுட்ப முறையில் புதிதாக நிர்மாணித்து தருமாறு  கோரிக்கையினை முன்வைத்திருந்தோம்.

யாழ். குடாநாட்டில் அமைந்துள்ள தீவுகளுக்கு உட்கட்டமைப்பு வசதிகள் போதியளவு இல்லை. குறிப்பாக, நயினாதீவு, நெடுந்தீவு, அனலைதீவு, எழுவைதீவு போன்ற தீவுகளுக்கு உட்கட்டமைப்பு வசதிகள் போதியளவு இல்லை. இதனால் அங்குள்ள மக்கள் பல சிரமங்களை எதிர்நோக்குவதுடன், அத்தீவுகளுக்குரிய அபிவிருத்தி வர்த்தக தொழில்துறை, சுற்றுலாத்துறை போன்றவற்றை அபிவிருத்தி செய்ய முடியாதுள்ளது. 

ஆகவே, தீவுப்பகுதியின் அபிவிருத்திக்கு முக்கியமாக தேவைப்படும் பொருட்களை சுலபமாக காவிக்கொண்டு கடலில் பயணிக்கக்கூடிய LCMஐ (Landing Craft Mechanism) வழங்குவதன் மூலம் தீவுப் பகுதிகளை சுலபமாக அபிவிருத்தி செய்வதுடன், உட்கட்டமைப்பை மேம்படுத்தி வர்த்தக கைத்தொழில்துறை மற்றும் சுற்றுலாத்துறைகளையும் மேம்படுத்த முடியும். எனவே, இதனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காரைநகர் மற்றும் ஊர்காவற்றுறையை இணைக்கும் சுமார் ஒரு கிலோமீற்றர் கடல் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பாதையானது அடிக்கடி பழுதடைவதால் போக்குவரத்தில் இடையூறு ஏற்படுகிறது. இதனால் தொழில், வர்த்தகம் நிமித்தமாக செல்வோர் மற்றும் பொதுமக்கள் சிரமத்தை எதிர்நோக்குகின்றனர். 

ஆகவே, பாதையினை சீர்செய்வதுடன் இதற்கான பாலம் அமைப்பதற்கு முடிவு செய்யப்பட்ட போதும், இதுவரை அது அமைக்கப்படவில்லை. எனவே, இதனையும் செய்துத் தருமாறு வேண்டுகின்றோம்.

மேலும், நயினாதீவுக்கு பெருந்தொகையான மக்கள், யாத்திரிகர்கள், சுற்றுலாப் பயணிகள் சென்றுவரும் போக்குவரத்து வீதியானது மிகவும் மோசமான நிலையில் உள்ளது. 

வேலணை வங்களாவடிச் சந்தியில் இருந்து குறிகட்டுவான் துறைமுகம் வரைக்குமான வீதியை நவீன முறையில் அபிவிருத்தி செய்து, யாத்திரிகர்களுக்கும் பொது மக்களுக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும் போக்குவரத்துக்காக புனரமைத்து தருமாறு கோரிக்கை முன்வைக்கின்றோம்.

எனவே, குறித்த விடயத்தில் கூடிய கவனம் எடுத்து கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு, நாங்கள் கலந்துரையாடி மகஜரொன்றை கையளித்துள்ளோம் என தெரிவித்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/148844

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.