Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரச வங்கிகளின் பணிப்பகிஷ்கரிப்பு தடையெனில் தனியார் வங்கிகளில் கணக்குகளை ஆரம்பிக்க தீர்மானம் - அரசாங்கம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அரச வங்கிகளின் பணிப்பகிஷ்கரிப்பு தடையெனில் தனியார் வங்கிகளில் கணக்குகளை ஆரம்பிக்க தீர்மானம் - அரசாங்கம்

Published By: T. SARANYA

02 MAR, 2023 | 03:53 PM
image

(எம்.எம்.சில்வெஸ்டர்)

மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கான கடன் உறுதிப் பத்திரங்களை பெற்றுக்கொள்வதற்கு அரச வங்கிகளின் பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டம் தடையாக இருக்குமானால், தனியார் வங்கிகளில் வங்கிக் கணக்குகளை ஆரம்பிப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளரும்  போக்குவரத்து, பெருந்தெருக்கள் மற்றும் ஊடக அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கடந்த முதலாம் திகதியன்று கூடிய விசேட அமைச்சரவைக் கூட்டத்தின்போதே இந்தத் தீர்மானம்  எடுக்கப்பட்டதாகவும், அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்கள் உள்ளிட்ட அரச நிறுவனங்களுக்கு  இதற்கான அனுமதியை வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் பந்துல குணவர்தன மேலும் குறிப்பிட்டார்.

நிதி அமைச்சின் அனுமதியுடன், மேற்குறித்த வங்கிக் கணக்குகள் தனியார் வங்கிகளில் ஆரம்பிக்கப்படுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக அரச வங்கிகள் ஊடான வங்கிக் கொடுக்கல் வாங்கல்கள் செயற்படுத்தப்பட முடியாமல் போனால், கடன் உறுதிப் பத்திரம் உள்ளிட்ட அடிப்படை நடவடிக்கைகள்  அனைத்தும் மந்த கதியில் இடம்பெறுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக காணப்படும் என விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் ஆழமாக கலந்துரையாடப்பட்டதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக அரச வங்கிகளின் நடவடிக்கைகள் மந்த கதியில் இடம்பெற்று மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கான  கடன் உறுதிப் பத்திரங்களை பெற்றுக்கொள்வதற்கு முடியாமல் போனால், நிதி அமைச்சின் அனுமதியுடன் அமைச்சுக்கள், திணைக்களங்கள், கூட்டுறவுகள், அரச நிறுவனங்கள் உள்ளிட்டவை  தனியார் நிறுவனங்களில் வங்கிக் கணக்குகளை ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

https://www.virakesari.lk/article/149530

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.