Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தொலைத்த கவிதை...

Featured Replies

உன்னை நினைக்க மறந்த

இரவொன்றில் நிலவின் துணை

கொண்டு எழுதிய கவிதை இது

தயவு செய்து வாசித்துவிடாதே

உன் கண்ணீரை ஏந்தினால் என்

கவிதை இறந்துவிடும்

காலங்கள் கரைந்தாலும் கரை

சேராத நதியாய் தேங்கியபடியே

கிடக்கிறது என் காதல் உன்னால்

காதல் எனும் வானத்தில் நாமிருவரும்

பறந்து திரிந்த காலங்களை எண்ணியபடியே

சிறகுகள் இன்றி தனிமரமாய் இன்று நான்

என் காதல் உன்னை மட்டும் காதலிக்க

கற்றுத்தரவில்லை உன்னைத் தவிர யாரையும்

காதலிக்க கூடாது என்பதையும்தான் கற்றுத்தந்தது

உன் இரவுகளின் தாலாட்டு எது என்பதை

நானறியேன் ஆனால் என் ஒவ்வொரு

விடியலின் ஓசையும் என் கவிக்குழந்தையின்

அழுகுரல்தான்

உனக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை நீ

என்னோடு இருந்தபோது ஒவ்வொரு நாளும்

புதுப்பக்கங்களாய் இருந்தது என் வாழ்க்கை என்று

நீ மறந்திருக்கக்கூடும் நான் உன் இதயத்தை

காதலால்தான் வாங்கிக் கொண்டேன் என்பதை

அனால் நான் மறக்கவில்லை நீ வார்த்தைகள்

எனும் அடியாட்களைக் கொண்டு என்னை

அகதியாய் விரட்டி அடித்ததை

என்றோ ஓர் நாள் யாரோ ஒருவனுக்கு

சொந்தமாகப்போகும் உன் இதயத்தில்

சில மாதங்கள் வாழ்ந்ததில் சந்தோசப்படாலும்

உன் இதயத்தில் தொடர்ந்து வாழ

வாய்ப்பில்லாமல் போனதைவிட

உன் இதயத்தில் நான் இறக்காமல்

போனதில் கவலைதான் எனக்கு

உன்னால் என் தனிமைக்கு மிஞ்சியிருப்பது

என் பேனா மட்டும்தான் பாவம் அது நான்

அழுதால் உடனே அழ அரம்பிக்கிறது இருவரில்

யார் அழுதாலும் உன்னால் குறையப் போவது

எங்கள் அயுல்தானே

பாவப்பட்டவனின் கைக்கு விலைபோன

பேனா படாதபாடுபடத்தானே வேண்டும்

இன்று என்னைவிட என் பேனா அதிகமாக

அழுகிறது பாவம் நான் எனக்கிருக்கும்

உறவை அழவிட்டு விட்டு என்ன செய்யப்

போகிறேன் எனவே உனக்கு சொல்ல

வந்ததை சொல்லிவிடுகிறேன்

இறந்து போன என் காதலை

எரிக்க மனமின்றி என்னைக்

கொண்டு கொஞ்சம் கொஞ்சமாய்

எரித்து வருகிறேன்

முடிந்தால் நான் இறந்த மூன்றாம் நாள்

வா காதல் சாம்பலோடு என்னை சேர்த்து

அள்ளலாம்

-யாழ்_அகத்தியன்

உன்னால் என் தனிமைக்கு மிஞ்சியிருப்பது

என் பேனா மட்டும்தான் பாவம் அது நான்

அழுதால் உடனே அழ அரம்பிக்கிறது இருவரில்

யார் அழுதாலும் உன்னால் குறையப் போவது

எங்கள் அயுள்தானே

அடடா என்ன வரிகள்..

காதல் வாலிபவயதில் எழுதப்பட்ட நூலாக இருந்தாலும்..

வயோதிபத்தில்தான் முடிவை ரசிக்கமுடியும்..

ஆண்கள் காதலை பேருக்காக பறை சாற்றி விடுவார்கள் அதனால் கழட்டிவிடவிரும்பினாலும் தங்கை என்று சொல்லமுடியாது..

பெண்கள் பாதுகாப்புக்காக காதலை மூடிவைத்திருப்பார்கள் கழண்டுகொள்ள நினைக்கையில் சாட்சியில்லாத காரணத்தாலோ என்னவோ..

அண்ணா என்றும் அழைத்துவிடுவார்கள்..

ஆண்கள் காதலை பல அமைவுகளில் அனுபவிக்க முடிவதால் வாழக்கையில் குடுத்துவைத்தவர்கள் நாங்களே... :rolleyes:

Edited by vikadakavi

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இறந்து போன என் காதலை

எரிக்க மனமின்றி என்னைக்

கொண்டு கொஞ்சம் கொஞ்சமாய்

எரித்து வருகிறேன்

முடிந்தால் நான் இறந்த மூன்றாம் நாள்

வா காதல் சாம்பலோடு என்னை சேர்த்து

அள்ளலாம்

காதல் எரியப் போவதில்லை. காதலால் மனிதர்கள் எரிவதும் வீண் அல்லவா? காதலால் சூழப்பட்ட மனதிலிருந்து இக்கவி வந்திருப்பின் மன்னிக்க நான் சொல்ல வந்தது வருத்தத்தையும், என் மீதான கோபத்தையும் உருவாக்கலாம்.

ஆனால்,

கற் பனையில் இக்கவி வரையப்பட்டிருப்பின் வாழ்த்துகள். யாழோடு சற்று காலம் உறவாட முடியவில்லை அதனால் முதல் முதலாய் நான் படிக்கும் உங்கள் கவிதை. என்பதாலும், உங்கள் கவித்திறனுக்கும் வாழ்த்துக்கள்.

நல்ல கற்பனைத்திறன் அகத்தியரே தொடர்ந்து மலரட்டும் உங்கள் கவிதை மலர்கள்

உன் இதயத்தில் தொடர்ந்து வாழ

வாய்ப்பில்லாமல் போனதைவிட

உன் இதயத்தில் நான் இறக்காமல்

போனதில் கவலைதான் எனக்கு

உன் இதயத்தில் தொடர்ந்து வாழா

அவளுக்கு தான் வாய்பில்லாமல் போய்விட்டது,

அவள் இதயத்திலாவது வாழவிடலாமோ???

காதல் எனும் வானத்தில் நாமிருவரும்

பறந்து திரிந்த காலங்களை எண்ணியபடியே

சிறகுகள் இன்றி தனிமரமாய் இன்று நான்

அன்பு காட்டிய காதலி கிடைக்காமல் போனாலும்,

காதலை நினைத்துப்பார்க ஒரு காதல் கிடைத்ததையிட்டு

மகிழுங்கள்!

உங்கள் கவிதை மிகவும் பிரமாதமாக இருக்கின்றது

வாழ்த்துக்கள்

இறந்து போன என் காதலை

எரிக்க மனமின்றி என்னைக்

கொண்டு கொஞ்சம் கொஞ்சமாய்

எரித்து வருகிறேன்

அகத்தியன் மாமா நல்லா இருக்கு உங்கள் தொலைந்த கவிதை............காதல் இறந்தா அதற்காக உங்களை எரிக்காமல் யூன் போனா யூலை காற்று என்று போக வேண்டும் உதை எல்லாம் பேபி சொல்ல வேண்டிய நிலை........... :rolleyes: :P

அகத்தியன் கவிதையில் உயிரின் வலி தெரிகின்றது.... அனுபவித்து எழுதிய கவி போல் உள்ளது... ஆறுதல் சொல்ல வார்த்தகள் இல்லை அப்படிச்சொல்லிடினும் உங்கள் மனம் ஏற்றிடும் நிலையில் இல்லை ...

வாழ்ந்திடுங்கள் காதலுக்காய் B)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.