Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நாணயக்கொள்கையில் மாற்றங்களை மேற்கொள்ள தீர்மானம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாணயக்கொள்கையில் மாற்றங்களை மேற்கொள்ள தீர்மானம்

cbsl.jpg

இலங்கை மத்திய வங்கி அதன் நாணய கொள்கையில் வட்டி வீதங்களை உயர்த்துவதற்கு தீர்மானித்துள்ளது.

இந்த வட்டி விகிதங்கள் இன்று முதல் அதிகரிக்கப்படும் என மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிணங்க, நிலையான வைப்பு வட்டி வீதம் (Standing Deposit Facility Rate – SDFR)  15.5 வீதமாக அதிகரிக்கப்படவுள்ளது.

இதேவேளை, மத்திய வங்கியினால் கடனுக்காக அறவிடப்படும் வட்டி வீதம் (Standing Lending Facility Rate – SLRF) 16.5 வீதமாக அதிகரிக்கப்படவுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் திட்டத்தின் கீழ் பணவீக்கத்தை மேலும் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக இந்த வட்டி விகிதங்கள் அதிகரிக்கப்படுவதாக மத்திய வங்கியின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

https://thinakkural.lk/article/243268

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு அமைவாக கொள்கை வட்டிவீதங்கள் 100 அடிப்படைப்புள்ளிகளால் அதிகரிப்பு - மத்திய வங்கி ஆளுநர் அறிவிப்பு

Published By: T. SARANYA

04 MAR, 2023 | 11:02 AM

(நா.தனுஜா)

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு அமைவாக வைப்புவசதி வீதம் மற்றும் கடன்வசதி வீதம் ஆகிய கொள்கை வட்டிவீதங்கள் 100 அடிப்படைப்புள்ளிகளால் அதிகரிக்கப்படுவதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க அறிவித்துள்ளார்.

அதுமாத்திரமன்றி சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவியைப் பெற்றுக்கொள்வதற்கு அவசியமான அனைத்து முன்நிபந்தனைகளும் தற்போது பூர்த்திசெய்யப்பட்டிருப்பதாகவும், எனவே வெகுவிரைவில் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெற்றுக்கொள்ளமுடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

நாணயச்சபையின் இவ்வருடத்துக்கான இரண்டாவது கூட்டத்தின் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று வெள்ளிக்கிழமை மாலை மத்திய வங்கியின் கேட்போர்கூடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே ஆளுநர் நந்தலால் வீரசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அங்கு அவர் மேலும் கூறியதாவது,

மத்திய வங்கியின் நாணயச்சபையானது கொள்கை வட்டிவீதங்களை 100 அடிப்படைப்புள்ளிகளால் அதிகரிப்பதற்குத் தீர்மானித்திருக்கின்றது. அதன்படி முன்னர் 14.50 ஆகக் காணப்பட்ட துணைநில் வைப்புவசதிவீதம் தற்போது 15.50 சதவீதமாகவும், 15.50 ஆகக் காணப்பட்ட துணைநில் கடன்வசதிவீதம் தற்போது 16.50 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அதிகரிப்பானது ஏற்கனவே கடந்த செப்டெம்பர் மாதம் சர்வதேச நாணய நிதியத்துடன் எட்டப்பட்ட இணக்கப்பாட்டுக்கு அமைவாகவே மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சர்வதேச நாணய நிதியத்துடனான இணக்கப்பாடு எட்டப்பட்டதைத்தொடர்ந்து மத்திய வங்கியினாலும், சர்வதேச நாணய நிதியத்தினாலும் நாட்டின் பணவீக்கம் தொடர்பில் மதிப்பிடப்பட்டது. அதன்படி 2022 டிசம்பர் மாதமளவில் பணவீக்கம் 70 சதவீதமாக உயர்வடையுமென சர்வதேச நாணய நிதியம் மதிப்பிட்டிருந்தது. இருப்பினும் அதற்கு மாறாக எதிர்பார்க்கப்பட்ட அளவை விடவும் பணவீக்கம் குறைவடைந்து, தற்போது தொடர்ந்து வீழ்ச்சியடைந்துவருவதன் காரணமாகக் கொள்கை வட்டிவீதங்களை பெருமளவாலன்றி, வெறுமனே 100 அடிப்படைப்புள்ளிகளால் மாத்திரம் அதிகரிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

இருப்பினும் கொள்கை வட்டிவீதங்களுக்கும் சந்தை வட்டிவீதங்களுக்கும் இடையில் தொடர்ந்து இடைவெளியொன்று காணப்படுகின்றது. அதனையும் இக்கொள்கை வட்டிவீத அதிகரிப்பின் ஊடாக சீரமைக்கமுடியுமென எதிர்பார்க்கின்றோம்.

அடுத்ததாக சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவியைப் பெற்றுக்கொள்வதற்கு அவசியமான அனைத்து முன்நிபந்தனைகளையும் நாம் தற்போது பூர்த்திசெய்திருக்கின்றோம். எனவே அவ்வுதவிக்கான சர்வதேச நாணய நிதிய இயக்குனர் சபையின் அனுமதி வெகுவிரைவில் கிடைக்கப்பெறும் என்று நம்புகின்றோம்.

மேலும் சுயாதீன மத்திய வங்கி இல்லாத நாட்டில் பணவீக்கம் தொடர்ச்சியாக அதிகரித்துச்செல்லும் என்பதை சிம்பாவே போன்ற பல்வேறு நிகழ்கால உதாரணங்களின் ஊடாகப் புரிந்துகொள்ளமுடியும். மத்திய வங்கியினால் அனைவராலும் விரும்பத்தக்க தீர்மானங்களை மேற்கொள்ளமுடியாது. மாறாக விரும்பினாலும், விரும்பாவிடினும் சரியான தீர்மானங்களை மாத்திரமே மத்திய வங்கியினால் மேற்கொள்ளமுடியும் என்று தெரிவித்தார். 

https://www.virakesari.lk/article/149674

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கொள்கை வட்டிவீதங்களை அதிகரிக்கும் இலங்கையின் அறிவிப்பிற்கு சர்வதேச நாணயநிதியம் பாராட்டு

Published By: T. SARANYA

04 MAR, 2023 | 12:01 PM
image

கொள்கை வட்டிவீதங்களை அதிகரிக்கும் இலங்கையின் தீர்மானத்தை சர்வதேச நாணயநிதியம் பாராட்டியுள்ளது

இது பணவீக்கத்தை குறைப்பதற்கான இலங்கையின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துவதாக சர்வதேச நாணயநிதியம் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கான சர்வதேச நாணயநிதியத்தின் பிரதிநிதிகள் இதனை தெரிவித்துள்ளனர்.

இலங்கையின் பணவீக்கம் குறைவடைகின்ற போதிலும் தொடர்ந்தும் உயர்மட்டத்திலேயே காணப்படுகின்றது இது அளவுக்கதிகமான விதத்தில் பொதுமக்களிற்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றது எனவும் சர்வதேச நாணயநிதியம் தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/149683

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.