Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மின்சார சபை ஊழியர்கள் எண்ணிக்கையை 40 சதவீதத்தால் குறைக்க அவதானம் - டி.வி.சானக

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மின்சார சபை ஊழியர்கள் எண்ணிக்கையை 40 சதவீதத்தால் குறைக்க அவதானம் - டி.வி.சானக

Published By: DIGITAL DESK 5

06 MAR, 2023 | 08:19 PM
image

(இராஜதுரை ஹஷான்)

மின்சார சபை ஊழியர்கள் எண்ணிக்கையை 40 சதவீதத்தால் குறைக்க அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. மின்சார சபை மறுசீரமைப்பு தொடர்பான நிபுணத்துவ அறிக்கையை எதிர்வரும் ஏப்ரல் மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க மின்சாரத்துறை மற்றும் வலுசக்தி துறை அமைச்சு தீர்மானித்துள்ளது என மின்சாரத்துறை இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக தெரிவித்தார்.

மின்சாரத்துறை மறுசீரமைப்பு தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

24 மணித்தியாலமும் மின்சாரத்தை விநியோகிக்க மின்சாரத்துறை அமைச்சு விசேட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மின்னுற்பத்திக்கான செலவை முகாமைத்துவம் செய்வதற்காவே மின்கட்டணம் தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது.

மின்சாரசபையின் நட்டத்தை ஈடு செய்வதற்காக மின்கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது என குறிப்பிடுவது அடிப்படையற்றது.

நட்டமடையும் அரச நிறுவனங்களை மறுசீரமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. மின்சார சபையை மறுசீரமைக்க நியமிக்கப்பட்ட நிபுணத்துவ குழு அறிக்கை அமைச்சுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

மறுசீரமைப்பு அறிக்கையை எதிர்வரும் மாதம் முதல் வாரம் அமைச்சரவையில் சமர்ப்பித்து அதனை தொடர்ந்து பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

2015 ஆம் ஆண்டு 14 ஆயிரமாக காணப்பட்ட மின்சார சபை சேவையாளர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு 22400 ஆக அதிகரித்துள்ளது.

மறுசீரமைப்பு அறிக்கையில் ஊழியர் குறைப்பு தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைய மின்சார சபையின் ஊழியர்களின் எண்ணிக்கையை 40 சதவீதத்தால் குறைக்க அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

மின்சார உற்பத்தி,விநியோகம்,மற்றும் இதர சேவை நடவடிக்கைகளில் ஈடுபடும் நிறுவனங்களை ஒருமுகப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. மின்சார சபையின் செலவுகளை மட்டுப்படுத்தும் போது ஒரு முன்னேற்றகரமான தீர்மானத்தை எடுக்க முடியும் என்றார்.

https://www.virakesari.lk/article/149815

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மின்சார சபையை தனியார் மயப்படுத்துவதற்கு இடமளிக்கப் போவதில்லை

மறுசீரமைப்பு என்ற போர்வையில் மின்சார சபையை தனியார் மயப்படுத்துவதற்கு இடமளிக்கப் போவதில்லை என மின்சார தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. இறுதி சட்டமூலம் பாராளுமன்றில் முன்வைக்கப்படுவதற்கு முன்னதாக மின்சார சபையில் மேற்கொள்ளக் கூடிய மறுசீரமைப்பை அடுத்த வாரத்திற்குள் செயற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக நேற்றைய தினம் தகவல் வெளியாகிருந்தது. அத்துடன் கூட்டு ஒப்பந்தங்களில் இருந்து விலகுவதும் நிதி நிர்வாகம் தொடர்பாக தேவையான புதிய கொள்கை முடிவுகளை எடுப்பதும் அதன் முதற்கட்ட நடவடிக்கை என தெரிவிக்கப்படுகிறது. மின்சார சபை மறுசீரமைக்கப்படும் என வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவும் குறிப்பிட்டிருந்தார். இந்தநிலையில் கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து கருத்துரைத்த இலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்க சம்மேளனத்தின் இணைப்பாளர் ரஞ்சன் ஜயலால், மின்சார சபையை தனியார் தரப்பினருக்கு வழங்குவதற்கு அனுமதிக்க முடியாது என தெரிவித்துள்ளார். அமைச்சர் காஞ்சன விஜேசேகரவுடன் தங்களுக்கு எந்த கொடுக்கல்வாங்கலும் இல்லை எனவும் மின்சார சபையை விற்பனை செய்வதற்கு முயற்சித்தால் அந்த நடவடிக்கை முறியடிக்கப்படும் எனவும் இலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்க சம்மேளனத்தின் இணைப்பாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார்.

https://thinakkural.lk/article/244437

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை மின்சார சபையை 9 கட்டங்களாக வேறுபடுத்த அரசாங்கம் முயற்சி - மின்சாரத்துறை சேவை சங்கம்

Published By: T. SARANYA

13 MAR, 2023 | 03:15 PM
image

(இராஜதுரை ஹஷான்)

இலங்கை மின்சார சபையை 09 கட்டங்களாக பிரித்து,வெளிநாட்டு நிறுவனங்களுக்கு உரித்துரிமையை வழங்கும் முயற்சிகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.

மறுசீரமைப்பு தொடர்பில் மின்சாரத்துறை அமைச்சர் கஞ்சன விஜேசேகர குறிப்பிடும் விடயங்கள் மீது நம்பிக்கை கொள்ள முடியாது என மின்சாரத்துறை ஒன்றிணைந்த சேவை சங்கத்தின் தலைவர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்தார்.

மின்சாரத்துறை அமைச்சருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வி, ஆகவே 15 ஆம் திகதி புதன்கிழமை பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் தெரிவித்தார்.

மின்சார சபை மறுசீரமைப்பு தொடர்பில் மின்சாரத்துறை அமைச்சில் ஞாயிற்றுக்கிழமை (11) இடம்பெற்ற பேச்சுவார்த்தை தொடர்பில வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

மறுசீரமைப்பு என்று குறிப்பிட்டுக் கொண்டு இலங்கை மின்சார சபையை தனியார் மயப்படுத்தும் நடவடிக்கைகளை மின்சாரத்துறை அமைச்சர் மேற்கொண்டுள்ளார்.

மின்சாரத்துறையை தனியார் மயப்படுத்த வேண்டுமாயின் அதற்கு நாட்டு மக்கள் அனுமதி வழங்க வேண்டும்.மக்களாணையை பெற வேண்டுமாயின் அரசாங்கம் தேர்தலை நடத்த வேண்டும்.

மின்சார சபையை தனியார் மயப்படுத்த போவதில்லை என மின்சாரத்துறை அமைச்சர் கஞ்சன விஜேசேகர குறிப்பிடும் கருத்துக்கள் மீது நம்பிக்கை கொள்ள முடியாது.

ஏனெனில் அவர் பாராளுமன்றத்தில் ஒன்றை குறிப்பிடுகிறார். நாட்டு மக்கள் மத்தியில் பிறிதொன்றை குறிப்பிடுகிறார். எம்மிடம் முற்றிலும் மாறுப்பட்ட கருத்தை குறிப்பிடுகிறார்.

இலங்கை மின்சார சபையை 09 கட்டங்களாக வேறுப்படுத்தி, வெளிநாட்டு நிறுவனங்களுக்கு உரித்துரிமையை வழங்கும் வகையில் அரசாங்கம் செயற்படுகிறது.

இலங்கை மின்சார சபையின் கட்டமைப்பை மாற்றியமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.ஆகவே இலங்கை மின்சார சபையை தனியார் மயப்படுத்த இடமளிக்க முடியாது.மின்சாரத்துறை அமைச்சருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வி ஆகவே நாளைய தினம் நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவோம் என்றார்.

https://www.virakesari.lk/article/150417

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மின்சார சபை பொறியியலாளர்களிடமிருந்து எச்சரிக்கை

இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் இன்று (14) தொடங்கி 7 நாட்களுக்கு சட்டப்படி வேலை பிரசாரத்தை ஆரம்பித்துள்ளனர்.

CEB-engineers.jpg
குறித்த காலத்துக்குள் அரசாங்கம் தமது பிரச்சினைகளுக்கு தீர்வு காணத் தவறினால், எதிர்கால நடவடிக்கை குறித்து மீண்டுமொரு கலந்துரையாடலை நடத்தவுள்ளதாக இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கத்தின் பிரதிநிதி ஒருவர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

பல அத்தியாவசிய சேவைத் துறைகளின் தொழிற்சங்கங்கள் திட்டமிட்டுள்ள பாரிய வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு ஆதரவை வழங்குவதற்காக சுகவீன விடுப்புக்கு விண்ணப்பிக்கவும், நாளை வேலைக்குச் செல்வதைத் தவிர்க்கவும் தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இந்தக் காலகட்டத்தில் திட்டமிட்ட மின்வெட்டு இருக்காது என்று கூறிய அதிகாரி, இதனால் மின் தடையை சீரமைப்பது தாமதமாகும் என்றார்.

https://thinakkural.lk/article/244731

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.