Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கொழும்பு துறைமுகத்திற்கு வந்த 17 கப்பல்கள் திரும்பிச் சென்றன: நிமல் சிறிபால

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பு துறைமுகத்திற்கு வந்த 17 கப்பல்கள் திரும்பிச் சென்றன: நிமல் சிறிபால

துறைமுக தொழிற்சங்கங்களின் போராட்டத்தால் கொழும்பு துறைமுகத்திற்கு வந்த 17 கப்பல்கள் திரும்பிச் சென்றதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

அவர்களை மீண்டும் துறைமுகத்திற்கு கொண்டு வருவதற்கு தாம் பெரும் முயற்சிகளை மேற்கொண்டதாகவும் அவர்களில் சிலரை மாத்திரமே தன்னால் மீளக் கொண்டுவர முடிந்ததாகவும் அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

“கப்பல்களை மீண்டும் துறைமுகத்திற்கு கொண்டு வர கப்பல் ஏஜென்சிகளுடன் ஆலோசித்தேன். ஆனால், அவற்றில் சிலவற்றை மாத்திரமே கொண்டு வர முடிந்தது,” என்றார்.

துறைமுக ஊழியர்களின் போராட்டங்களால் கொழும்பு துறைமுகத்தின் வர்த்தகம் இந்தியா, டுபாய் மற்றும் சிங்கப்பூர் போன்ற அருகிலுள்ள துறைமுகங்களுக்கு திசைதிருப்பப்படுவதையே ஏற்படுத்தும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

துறைமுக ஊழியர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தினால், நமது துறைமுகம் இடிந்து விழும் அதே வேளையில் நமக்கு நெருக்கமான நாடுகளில் உள்ள துறைமுகங்கள் செழிக்கும்.

துறைமுக ஊழியர்கள், ஏனைய அரச ஊழியர்களைப் போல் இல்லாமல், ரூ. 171,000 மேலான மாதச் சம்பளம், மூன்று வேளை உணவு இலவசம், ஒரு பாரிய போனஸ் மற்றும் பிற நன்மைகளை பெறுவதாகவும் அமைச்ச்ர் மேலும் தெரிவித்துள்ளார்.

https://thinakkural.lk/article/243905

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:

நமக்கு நெருக்கமான நாடுகளில் உள்ள துறைமுகங்கள் செழிக்கும்.

எவன் எக்கேடு கெட்டால் என்ன நமக்கு தமிழர் பகுதியில் புத்தர் சிலையை நிறுவினால் சரி .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை போராட்டங்களால் நாட்டை விட்டு திரும்பி சென்ற 17 கப்பல்கள்

கப்பல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

9 மார்ச் 2023, 07:21 GMT
புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்

இலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்ற போராட்டங்கள் காரணமாக, நாட்டிற்கு வருகை தந்த 17 கப்பல்கள் திரும்பி சென்றுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

துறைமுகங்கள், கப்பற்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இதனைக் குறிப்பிட்டார்.

நாடாளுமன்றத்தில் எதிர்கட்சி எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த போதே அவர் இதனைக் கூறினார்;.

துறைமுக அதிகார சபைக்கு சொந்தமான சொத்துக்களை விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, துறைமுக ஊழியர்கள் போராட்டங்களை நடத்தவில்லை என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

 

மாறாக தமது சம்பளத்திலிருந்து அரசாங்கத்தினால் வசூலிக்கப்படும் வரியை ரத்து செய்துக்கொள்ளுமாறு கோரியே போராட்டங்கள் நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறுகின்றார்.

துறைமுக அதிகார சபை ஊழியர்களுக்கும், தனக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, துறைமுக ஊழியர்களே இதனை தன்னிடம் கூறியதாகவும் அமைச்சர் நிமல் சிறிபால சில்வா தெரிவிக்கின்றார்.

எனினும், சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து அரசாங்கத்தினால் எட்டப்பட்டுள்ள தீர்மானத்தை மாற்ற முடியாது என அமைச்சர் குறிப்பிடுகின்றார்.

இலங்கை துறைமுகத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவரின் சம்பளம் ஒரு லட்சத்து 71 ஆயிரத்தை தாண்டியுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

''சாதாரண அரச ஊழியர்களை போன்றல்ல அவர்கள், அவர்களுக்கு சலுகைகள் உள்ளன. அவர்கள் மிகவும் அதிகபட்ச சம்பளத்தை பெற்றுக்கொள்ளும், சிறப்புரிமைகளை பெற்றுக்கொள்ளும் ஊழியர்கள். மூன்று வேளை உணவு வழங்கப்படுகின்றது. அதேபோன்று, வருடாந்திர கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்றன." என துறைமுகத்தில் கடமையாற்றும் ஊழியர்கள் தொடர்பில் தகவல்களை நாடாளுமன்றத்தில் அமைச்சர் வெளியிட்டார்.

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் நாடு இன்று 5 பில்லியன் ரூபா லாபத்தை பெற்றுக்கொண்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

இலங்கை பொருளாதார நிலை

இதேவேளை, கடந்த கால போராட்டங்களின் பெறுபேறாக துறைமுகத்திற்கு வருகைத் தந்த 17 கப்பல்கள் திரும்பி சென்றுள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

''இதுவே போராட்டத்தின் பெறுபேறு. அந்த கப்பல்களை மீள கொண்டு வருவதற்கு கப்பல் நிறுவனங்களுடன் கலந்துரையாடல்களை நடத்தி, நான் பாரிய பிரயத்தனங்களை மேற்கொண்டேன். எனினும், அவற்றில் சில கப்பல்களை மாத்திரமே மீள நாட்டிற்கு கொண்டு வருவதற்கான இயலுமை எமக்கு கிடைத்தது. ஏனையவை பங்களதேஷ் போன்ற நாடுகளை நோக்கி சென்றன. எமக்கு பாரியதொரு வியாபாரம் இல்லாது போயுள்ளது. டுபாய், சிங்கப்பூர், இந்தியா போன்ற நாடுகளின் இலங்கைக்கான வியாபாரத்தை தம்வசப்படுத்திக் கொள்ள பார்த்துக்கொண்டிருக்கின்றன. அந்த நாடுகளின் துறைமுகங்களை வலுப்படுத்துவதே போராட்டத்தின் பெறுபேறாக அமைகின்றது. போராட்டத்தின் பெறுபேறாக எமது துறைமுகங்கள் வலுவிழக்கின்றன என்பதை நான் கூறிக் கொள்ள வேண்டும்." என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா குறிப்பிடுகின்றார்.

https://www.bbc.com/tamil/articles/ceqvqg477qeo

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.