Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சுயாதீன உள்ளகப்பொறிமுறையின் ஊடாக மனித உரிமைகளையும் நல்லிணக்கத்தையும் நிலைநாட்டுவதில் இலங்க உறுதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சுயாதீன உள்ளகப்பொறிமுறையின் ஊடாக மனித உரிமைகளையும் நல்லிணக்கத்தையும் நிலைநாட்டுவதில் இலங்க உறுதி

Published By: VISHNU

08 MAR, 2023 | 08:40 PM
image

 

(நா.தனுஜா)

சுயாதீன உள்ளகப்பொறிமுறைகளின் ஊடாக மனித உரிமைகளையும் நல்லிணக்கத்தையும் நிலைநாட்டுவதில் இலங்கை உறுதியாக இருக்கின்றது.

அதற்கமைய அரசியலமைப்பின் பிரகாரம் உண்மை மற்றும் நல்லிணக்கப்பொறிமுறை ஒன்றை ஸ்தாபிப்பது குறித்தும், இலங்கைக்குப் பொருந்தக்கூடிய முறை எதுவென்பது குறித்தும் தற்போது ஆராயப்பட்டுவருகின்றது என்று ஐ.நா மனித உரிமைகள் மீளாய்வுக்குழுக்கூட்டத்தில் ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி ஹிமாலி அருணதிலக சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின்கீழ் இயங்கும் சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச சமவாயம் தொடர்பான மனித உரிமைகள் மீளாய்வுக்குழுவின் இலங்கை தொடர்பான 6 ஆவது மீளாய்வுக்கூட்டம் இன்று (08) புதன்கிழமை இலங்கை நேரப்படி பி.ப 2.30 மணிக்கு ஆரம்பமானது. 

இக்கூட்டத்தில் இலங்கையின் சார்பில் உரையாற்றுகையிலேயே ஹிமாலி அருணதிலக மேற்கண்டவாறு சுட்டிக்காட்டினார். அங்கு அவர் மேலும் கூறியதாவது: 

இலங்கை அரசாங்கமானது நாட்டுமக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் அவற்றை மேம்படுத்துவதற்கும் அதிக முக்கியத்துவம் வழங்கிவருகின்றது. 

அண்மையகாலங்களில் நாடு முகங்கொடுத்திருக்கும் சமூக - பொருளாதார சவால்களுக்கு மத்தியிலும் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அதன் உபகட்டமைப்புக்களுடன் இலங்கை அரசாங்கம் மிகநெருக்கமாகப் பணியாற்றிவருகின்றது. 

குறிப்பாக கடந்த பெப்ரவரி மாதம் முன்னெடுக்கப்பட்ட 4 ஆவது உலகளாவிய காலாந்தர மீளாய்விலும் இலங்கை முனைப்புடன் பங்கெடுத்துக்கொண்டது. 

அதேபோன்று சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச சமவாயம் தொடர்பான மனித உரிமைகள் மீளாய்வுக்குழுவின் 6 ஆவது மீளாய்வுக்கூட்டத்துக்கான அறிக்கை கடந்த 2019 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் சமர்ப்பிக்கப்பட்டதுடன், அண்மையகால முன்னேற்றங்கள் தொடர்பான தகவல்கள் கடந்த பெப்ரவரி மாதம் சமர்ப்பிக்கப்பட்டன. 

இவ்வருடத்தை சமூக - பொருளாதார உறுதிப்பாடு, நல்லிணக்கம் மற்றும் பொருளாதார மீட்சி ஆகியவற்றை அடைந்துகொள்வதற்கான ஆண்டாகவே இலங்கை கருதுகின்றது. கடந்த ஆண்டு மிகமோசமான பொருளாதார நெருக்கடியினால் இலங்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டது. 

இருப்பினும் நாட்டுமக்களின் நலனை முன்னிறுத்தி இந்த நெருக்கடியிலிருந்து வெகுவிரைவில் நிரந்தரமாக மீள்வதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. குறிப்பாக கடந்த 2022 ஆம் ஆண்டு சமூக - பொருளாதாhர உறுதிப்பாட்டை அடைந்துகொள்வதிலும், மீட்சியை நோக்கிப் பயணிப்பதிலுமே அரசாங்கம் விசேட கவனம்செலுத்தியது. அதனை சர்வதேச நாணய நிதியத்துடனும் ஏனைய சர்வதேசப்பங்காளிகளுடனும் இணைந்து முன்னெடுப்பதற்கு எதிர்பார்த்துள்ளோம். 

அதேபோன்று கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் பாராளுமன்றத்தில் அரசியலமைப்புக்கான 21 ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டது. அதன்மூலம் சுயாதீன ஆணைக்குழுக்கள் உள்ளிட்ட முக்கிய கட்டமைப்புக்களின் சுயாதீனத்தன்மை வலுப்படுத்தப்பட்டது. 

அதேபோன்று இவ்வாண்டு ஜனவரி மாதம் நிறைவேற்றப்பட்ட தேர்தல் செலவுகளைக் கட்டுப்படுத்துவதற்கான சட்டத்தின் ஊடாக தேர்தலின்போதான அநாவசிய செலவினங்கள் மட்டுப்படுத்தப்படுவதுடன், அச்செலவினங்கள் குறித்த வெளிப்படைத்தன்மை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கடந்த 2022 மார்ச் மாதம் பயங்கரவாதத்தடைச்சட்டத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய திருத்தங்கள் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன. 

அடுத்ததாக சுயாதீன உள்ளகப்பொறிமுறைகளின் ஊடாக மனித உரிமைகளையும் நல்லிணக்கத்தையும் உறுதிசெய்வதில் இலங்கை முன்னின்று செயலாற்றிவருகின்றது. அதற்கமைய அரசியலமைப்பின் பிரகாரம் உண்மை மற்றும் நல்லிணக்கப்பொறிமுறை ஒன்றை ஸ்தாபிப்பது குறித்தும், இலங்கைக்குப் பொருந்தக்கூடிய முறை எதுவென்பது குறித்தும் தற்போது ஆராயப்பட்டுவருகின்றது. 

அந்த ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்கு அமைச்சரவையில் அங்கம்வகிக்கும் அனைத்து அமைச்சர்களும் இணங்கியிருப்பதுடன், அதற்குரிய சட்டவரைபைத் தயாரிப்பதற்கான அமைச்சரை உபகுழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. அக்குழு அதன் பணிகளை ஏற்கனவே ஆரம்பித்துள்ளது என்று சுட்டிக்காட்டினார்.

அதுமாத்திரமன்றி நீதியரசர் நவாஸ் தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயற்பாடுகள், காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் விசாரணை செயன்முறைகள், இழப்பீட்டுக்கான அலுவலகத்தின் அண்மைக்கால நடவடிக்கைகள் மற்றும் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கான நிதி ஒதுக்கீடு, வட-கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்ற காணிவிடுவிப்பு, நல்லிணக்கத்தை வலுப்படுத்தும் நோக்கில் ஜனாதிபதியினால் அழைப்புவிடுக்கப்பட்ட சர்வகட்சிக்கூட்டம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் ஹிமாலி அருணதிலக மீளாய்வுக்குழுக்கூட்டத்தில் பிரஸ்தாபித்தமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/150043

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஏராளன் said:

கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் பாராளுமன்றத்தில் அரசியலமைப்புக்கான 21 ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டது. அதன்மூலம் சுயாதீன ஆணைக்குழுக்கள் உள்ளிட்ட முக்கிய கட்டமைப்புக்களின் சுயாதீனத்தன்மை வலுப்படுத்தப்பட்டது. 

அதே நேரம் எந்த அதிகாரமுமற்ற பதின்மூன்றாம் சீர்திருத்தச்சட்டத்தை முப்பத்தைந்து ஆண்டுகளாக நிறைவேற்ற முடியாமல் தெருவில் போட்டு தீவைக்கிறோம் எண்டதையும் சொல்லியிருக்க வேண்டும் அல்லது ஐ. நா. நினைவூட்டியிருக்க வேண்டும் அவர்களுக்கு. ஒன்றை உருவாக்குவது, பிறகு அதை எரித்து, மறுத்து வேறொன்றை நிறைவேற்றுவது. 

 

3 hours ago, ஏராளன் said:

சுயாதீன உள்ளகப்பொறிமுறைகளின் ஊடாக மனித உரிமைகளையும் நல்லிணக்கத்தையும் உறுதிசெய்வதில் இலங்கை முன்னின்று செயலாற்றிவருகின்றது.

எப்படி செயலாற்றுகிறது? அதன் நடவடிக்கை என்ன? 

 

3 hours ago, ஏராளன் said:

குறிப்பாக கடந்த 2022 ஆம் ஆண்டு சமூக - பொருளாதாhர உறுதிப்பாட்டை அடைந்துகொள்வதிலும், மீட்சியை நோக்கிப் பயணிப்பதிலுமே அரசாங்கம் விசேட கவனம்செலுத்தியது. அதனை சர்வதேச நாணய நிதியத்துடனும் ஏனைய சர்வதேசப்பங்காளிகளுடனும் இணைந்து முன்னெடுப்பதற்கு எதிர்பார்த்துள்ளோம். 

உங்கள் அறிக்கை எல்லாம் கடனை நோக்கியே விடப்படுகின்றன, கடன்  வேண்டியதும் எல்லாம் கிடப்பில் போட்டுவிட்டு சிறுபான்மையினரை நசுக்குவதற்கே செலவிடப்படும். மீண்டும் அறிக்கையை தூக்கிக்கொண்டு வருவீர்கள், நீங்கள்எல்லாம் அறிக்கை வீரர் செயற்திறன் அற்றவர்கள் என்று சுட்டிக்காட்ட வக்கற்ற ஐ. நா. பாராட்டி அறிக்கை விடும்.

3 hours ago, ஏராளன் said:

நல்லிணக்கத்தை வலுப்படுத்தும் நோக்கில் ஜனாதிபதியினால் அழைப்புவிடுக்கப்பட்ட சர்வகட்சிக்கூட்டம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் ஹிமாலி அருணதிலக மீளாய்வுக்குழுக்கூட்டத்தில் பிரஸ்தாபித்தமை குறிப்பிடத்தக்கது.

பிற மதங்களை அவமதித்து, அவர்களின் சுயாதீனத்தை மறுத்து, நீதிமன்றத்தை உதாசீனம் செய்து விகாரை கட்டுவது நல்லிணக்கம்? கேள்வி கேட்க தெரியாதவர்கள், இத்தனைகாலமாய் அறிக்கையை கொண்டு வருகிறீர்கள் உங்கள் திட்டங்களில் நிகழ்ந்தவை எவை? தமிழரின் பிரச்சனையை தீர்ப்பதாக கொடுத்த வாக்குறுதிகளில் நிறைவேற்றியவை எவை? என்பதை மட்டும் கூறுங்கள், அடுத்தமுறை அறிக்கையோடு வரவேண்டாம் நிறைவேற்றிய செயற்பாட்டோடு வாருங்கள் இல்லையேல் நாங்கள் அவற்றை செய்து முடிப்போம் என்று அழுத்திக்கூற முடியாதவர்கள், கொலைகாரர் கொடுக்கும் அறிக்கையை பாராட்டுவதற்கு கூடுகினம். அவர்களின் அறிக்கையை மறுத்து நிறுவுவதற்கு, ஆதாரங்களை சமர்ப்பிப்பதற்கு யாருமில்லை, சும்மா உள்நாட்டில் வீராவேசம் காட்ட போட்டி!

3 hours ago, ஏராளன் said:

அந்த ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்கு அமைச்சரவையில் அங்கம்வகிக்கும் அனைத்து அமைச்சர்களும் இணங்கியிருப்பதுடன், அதற்குரிய சட்டவரைபைத் தயாரிப்பதற்கான அமைச்சரை உபகுழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

எத்தனை முறை குழு அமைப்பீர்கள்? முன்னைய குழுக்கள் வரைந்த சட்ட வரைபுகளுக்கு என்ன நடந்தது? ஒவ்வொரு கூட்டத்தொடருக்கும் வெவ்வேறு பிரதிநிதிகள் செல்வது, முன்பு கொடுத்த வாக்குறுதி என்ன? விட்ட அறிக்கை என்ன? பிரச்சனை என்ன? முன்னைய வாக்குறுதிக்கு என்ன நடந்தது? என்கிற விளக்கம் இல்லை. ஒவ்வொருமுறை போபவர் தன் மன எண்ணப்படி புதிதாக எதற்கும் தொடர்புபடாத அறிக்கை விடுவது. இதனால் என்ன பயன் பாதிக்கப்பட்டவர்களுக்கு? எதற்காக காலத்தையும், சக்தியையும், பணத்தையும் விரயமாக்கி மற்றவர்களை ஏமாற்றுகிறார்கள்? பாதிக்கப்பட்ட மக்களின் உண்மையான பிரச்சனைகளை இவர்கள் தீர்த்திருக்க வேண்டும் அல்லது அவர்களை தங்கள் வழியில் தீர்வு காண விட்டிருக்க வேண்டும். சும்மா இவ்வளவு காலத்தை வீணாக்கி அந்த மக்களின்  ஆசைகளை, உரிமைகளை அடக்கி கொலைகாரருக்கு உதவியும், அவகாசமும் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள்!               

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.