Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மக்களை தூக்கி நிமிர்த்துவதற்கு எந்த நேரத்திலும் எந்த முடிவினையும் எடுப்பேன் – பிள்ளையான்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

 

மக்களை தூக்கி நிமிர்த்துவதற்கு எந்த நேரத்திலும் எந்த முடிவினையும் எடுப்பேன் – பிள்ளையான்

வரலாற்றில் மிகவும் கஸ்டப்பட்டுவந்த மக்களை  தூக்கி நிமிர்த்துவதற்கு எந்த நேரத்திலும் எந்த முடிவினையும் எடுக்ககூடியவன் நான்.அதனால்தான் இவ்வளவு பிரச்சினைக்கும் மத்தியிலும் அரசாங்கத்துடன் நிற்கின்றேன்  என மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவரும் இராஜாங்க அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

விவசாயிகளின் நெல்லை கொள்வனவு செய்து அதனை அப்பகுதியில் உள்ள பொருளாதார நெருக்கடியில் வறுமை நிலையில் உள்ள மக்களுக்கு பகிர்ந்தளிக்கும் தேசிய திட்டத்தின் கீழான முதல் நிகழ்வு இன்று மட்டக்களப்பில் ஆரம்பித்துவைக்கப்பட்டது.

பொருளாதார நெருக்கடியில் வாழும் மக்களை நோக்காக கொண்டு ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ள திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக 10151 குடும்பங்களுக்கான இரண்டு மாதங்களுக்கு தேவையான 20கிலோ அரிசிகள் இன்று வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

மட்டக்களப்பு மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலகத்தில் இது தொடர்பான நிகழ்வு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா தலைமையில் ஆரம்பித்துவைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவரும் இராஜாங்க அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு ஆரம்பித்துவைத்தார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தன், கடந்த காலத்திலிருந்த மோசமான சூழ்நிலையிலிருந்து நாடு எழுந்துவருகின்றபோது வறுமையில் வாழும் மக்கள் தங்களை தாங்களே கட்டியெழுப்பிச்செல்வதற்கான ஒரு சந்தர்ப்பத்தினை உருவாக்கவேண்டும் என்று அரசாங்கம் மிக கடுமையான உழைத்துக்கொண்டிருக்கும் நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கும் 53கோடிரூபா நிதியானது ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது இந்த மாதமும் அடுத்தமாத்திற்கும் நெல் கொள்வனவு செய்து அரசியினை வழங்குவதற்கு.

அரசாங்கம் பணிக்கும் கடமைகளை செய்துவழங்கு என்பதை மாவட்ட அரசியல்வாதிகள்,அதிகாரிகள் என்ற நிலையில் ஏற்று கடமையாற்றவேண்டும்.அரசாங்கம் பாரிய செலவினை செய்துள்ளது இந்த அரசி வழங்கலுக்காக.மக்கள் இதனை முதலீடாக கொண்டு வேறு தொழில்களை முன்னெடுக்கவேண்டும்.

எனக்கு தனிப்பட்ட ரீதியாக நிவாரணங்கள் வழங்குவதில் உடன்பாடு இல்லை.எனினும் ஏழ்மையான மக்களுக்கு நிவாரணமும் தேவை ஊக்குவிப்பும் தேவை,அதனைவிட அவர்களுக்கு ஊக்கம் தேவை.

ஊக்கமானவர்கள்முயற்சிகளை மேற்கொண்டு உழைக்கவேண்டும்.சில இடங்களில் அதிகமான நிவாரணங்கள் காரணமாகவும் மக்கள் சோம்பேறிகளாக்கப்பட்டுள்ளார்கள்.நிவாரணம் மக்களை சோம்பறியாக்கினால் இந்த மாவட்டத்தினை கட்டியெழுப்பமுடியாத நிலைக்கு செல்லும்.

அரச அதிகாரிகள் மற்றவர்களை பதற்றப்படுத்தாமல் இங்குவந்து மக்களுக்கு சேவையாற்றவேண்டும்.எனக்கு தரப்பட்ட அதிகாரத்தில் யாரையும் விளையாட அனுமதிக்கமாட்டேன்.மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகூடிய வாக்கினால் மக்களால் தெரிவுசெய்ய்பபட்டவன் நான்.அந்த ஆணையை கபளீகரம் செய்வதற்கு அனுமதிக்கமாட்டேன்.

வரலாற்றில் மிகவும் கஸ்டப்பட்டுவந்த மக்களை தூக்கி நிமிர்த்துதற்கு எந்த நேரத்திலும் எந்த முடிவினையும் எடுக்ககூடியவன் நான்.அதனால்தான் இவ்வளவு பிரச்சினைக்கும் மத்தியிலும் அரசாங்கத்துடன் நிற்கின்றேன்.அரசாங்கம் எனக்கு தந்துள்ள பதவினையும் அதிகாரத்தினையும் பயன்படுத்தாமல்செல்வேன் என நினைத்தீர்கள் என்றால் அது உங்களது பிழையான கணிப்பாகத்தான் இருக்கும்.

அதனை எனக்கு நீங்கள் சொல்லித்தர தேவையில்லை.சுற்றுநிரூபங்களையும் தலைவரினால் பணிக்கப்பட்ட விடயங்களையும் செய்வதற்கு பழக்கப்படுத்திக்கொள்ளுங்கள்.

பிள்ளையான் இருக்கும் காலத்தில் நீங்கள் வேலைசெய்யவேண்டும்,இல்லையென்றால் இடமாற்றம் பெற்றுச்செல்லமுடியும்.நான் மிகவும் கஸ்டப்பட்டு துன்பப்பட்டு இந்த இடத்திற்கு வந்துள்ளேன்.எங்களது நல்லெண்ணத்தை பிழையாக கணிப்பிடவேண்டாம்.

கொரனாவும் அரசியல் ரீதியான முடிவுகளும் ஐரோப்பாவில் ஏற்பட்ட யுத்த நிலைமையும் மிகமோசமான நிலைமையினை காட்டிவிட்டுச்சென்றுள்ளது.இந்த சூழ்நிலையிலிருந்து மீள்வதற்கு நாடு படிப்படியாக முன்னேறிவருகின்றது.

கிராமிய பொருளாதாரத்தினை நம்பியிருக்கின்ற மக்களுக்கு ஒரு சந்தர்ப்பத்தினை இந்த உலகம் உருவாக்கிக்கொடுத்துள்ளது.உழைக்கும் மக்கள் தமது உற்பத்தியை அதிகரித்தால் அதற்கான கொள்வனவுத்திறன் உலகில் அதிகரித்துள்ளது.நீங்கள் உழைப்பினை அதிகரிக்கும்போது அதன்பெறுமதி இரட்டிப்பாகும் வாய்ப்புகள் உள்ளது.

இன்றுள்ள நிலைமையினை சிந்திக்காமல் எதிர்கால சமூகம் தொடர்பில் சிந்தித்து மாவட்டத்தினை முன்னேற்றக்கூடிய வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.அரசியலுக்கு அப்பால் கிழக்கு மாகாணத்தின் பொருளாதார இருப்புக்காக செயலாற்ற முன்வாருங்கள் என்ற அழைப்பினை விடுக்கின்றேன்.

https://athavannews.com/2023/1326823

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, தமிழ் சிறி said:

அரசாங்கம் பாரிய செலவினை செய்துள்ளது இந்த அரசி வழங்கலுக்காக.மக்கள் இதனை முதலீடாக கொண்டு வேறு தொழில்களை முன்னெடுக்கவேண்டும்.

அப்போ .... இவர் கொடுத்த இந்த இருபது கிலோ அரிசி அவர்கள் சாப்பிடுவதற்கல்ல, இதை முதலீடாக வைத்து வேறு தொழிலை ஆரம்பிக்கட்டாம். இவர் அல்லவோ திறமையான தொழிலமைச்சர்!

15 hours ago, தமிழ் சிறி said:

அதிகமான நிவாரணங்கள் காரணமாகவும் மக்கள் சோம்பேறிகளாக்கப்பட்டுள்ளார்கள்.

ஆமா..... இவர் என்ன அப்படி வெட்டி விழுத்தி உழைக்கிறார்?

 

15 hours ago, தமிழ் சிறி said:

கிராமிய பொருளாதாரத்தினை நம்பியிருக்கின்ற மக்களுக்கு ஒரு சந்தர்ப்பத்தினை இந்த உலகம் உருவாக்கிக்கொடுத்துள்ளது.

அதை ஏன் இவர் தன் தலையில் போட்டுக்கொண்டாடுகிறார்?

15 hours ago, தமிழ் சிறி said:

வரலாற்றில் மிகவும் கஸ்டப்பட்டுவந்த மக்களை தூக்கி நிமிர்த்துதற்கு எந்த நேரத்திலும் எந்த முடிவினையும் எடுக்ககூடியவன் நான்.அதனால்தான் இவ்வளவு பிரச்சினைக்கும் மத்தியிலும் அரசாங்கத்துடன் நிற்கின்றேன்.

இவர் மக்களை தூக்கி நிமிர்த்துவதற்காக அரசாங்கத்தோடு நிற்கிறாராம், அரசாங்கமே எம்மக்களை பாரபட்ஷம் காட்டுகிறது, கஜானாவை  வெறுமையாக்கி தம்மை காப்பாற்ற வழியில்லாமல் உலகத்தை எதிர்பார்த்து காத்திருக்குது. அவர்களுக்கு நம் மக்களின் உரிமைகளை விற்று, விட்டுக்கொடுத்து, நம் போராட்டத்தை காட்டிக்கொடுத்து அதன் பிடியிலிருந்து விடுபட்டால் பெண்டு கழண்டுவிடும். அதனால அரசாங்கத்தைவிட்டால் வாழுவதற்கு வேறு வழியில்லை இவருக்கு அதில கெட்டித்தனம் வேறு. அங்காலை ஒருத்தர் அரசாங்கத்தோடு சேர்ந்து அபிவிருத்தி செய்யப்போறேன் என்று பிரிச்சுக்கொண்டு போய், இப்போ தனித்தமிழ்க்கட்சியிலேதான் தேர்தலில் போட்டியிடுவேன் என்று ஏலம் விடுகிறார், அதில இவர் வேற அப்பப்ப தமிழ்கட்சிகளோடு இணைய அழைப்பு விட்டு யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை, இப்படி ஒரு நாடகம் வடக்கிலும் கிழக்கிலும் தம் முகவரை வைத்து அரிசிக்காக அரசியல் நடத்த வேண்டியுள்ளது அரசாங்கத்துக்கு. மக்களை ஏதிலிகளாக்கி ஓநாய்களை வைத்து வே ட்டையாடுவதே சிங்களத்தின் நோக்கம். அதற்கு தகுதியானவர்களை அது தேர்ந்தெடுத்து சில சலுகைகளை காட்டி வளைக்கிறது. அது தெரியாமல் நீங்கள் அதன் அடிமைகள் என்பதை பல நேரம் மறந்துவிட்டு குதிக்கிறீர்கள் உங்கள் தராதரம் உங்களுக்கு புரியாததால். ஒரு கேள்வி! மக்களால் பல தசாப்தங்களாக பெரும்பான்மையாக தெரிந்திடுக்கப்படும் தமிழ்த் தலைமைகளின் கோரிக்கைகள் ஏன் நிறைவேற்றப்படுவதில்லை? அதை செய்யாமல், அவர்களை முயற்சிக்கவில்லை என்று குற்றம் சாட்டுகிறதே அது ஏன்? அவர்கள் முயற்சிக்காவிட்டாலும் பிரச்சனைகள் தெரிந்தும்  இவர்கள் தங்கள் கடமையை செய்யாமல் விட்டது ஏன்? அதை யோசிக்க பகுத்தறிவு தேவை! அதுதான் இவர்களிடம் இல்லையே. அதுவே சிங்களத்துக்கு சாதகமாய் போய் விட்டது. ஆலையில்லா ஊருக்கு இலுப்பம் பூ சக்கரையாம்.     

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.