Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

3 பெண்களின் ஆதரவு கிடைத்திருக்காவிட்டால் கடும் நெருக்கடிகளை எதிர்கொண்டிருப்போம் - ஜனாதிபதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

3 பெண்களின் ஆதரவு கிடைத்திருக்காவிட்டால் கடும் நெருக்கடிகளை எதிர்கொண்டிருப்போம் - ஜனாதிபதி

Published By: DIGITAL DESK 5

09 MAR, 2023 | 05:14 PM
image

 (எம்.மனோசித்ரா)

இலங்கை அண்மையில் எதிர்கொண்ட நெருக்கடிகளிலிருந்து மீள பாடுபட்டவர்கள் பிரதானமானவர்கள் 3 பெண்களாவர். இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் , திறைசேரி செயலாளர் ஜெனட் யெலன் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிரிஸ்டலினா ஜோர்ஜியேவா ஆகியோரே அம்மூன்று பெண்களுமாவர். 

இவர்களது ஆதரவு கிடைக்கப் பெறாமலிருந்திருந்தால் கடும் நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிட்டிருக்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

'அவள் தேசத்தின் பெருமை' எனும் தொனிப்பொருளில் பத்தரமுல்ல வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் புதன்கிழமை (08) இடம்பெற்ற சர்வதேச மகளிர் தின தேசிய விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ,

ஆசிய பிராந்தியத்தில் உள்ள ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் பெண்கள் முன்னிலையில் உள்ளனர்.

அந்த நிலைமையை மேலும் விரிவுபடுத்தி, உலகில் முன்னேறிய நாடுகளைப் போன்று பெண்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

'பாலின சமத்துவம் மற்றும் பெண்களை வலுவூட்டல் தொடர்பான தேசிய கொள்கை' மற்றும் 'பெண்கள், அமைதி மற்றும் பாதுகாப்பு தொடர்பான தேசிய செயற்திட்டம்' ஆகியவை அதற்கு உறுதுணையாக இருக்கும்.

சார்க் அமைப்பில் பெண்களின் உரிமைகள் பற்றி எதுவும் குறிப்பிடப்படாததால், அந்த உரிமைகளை பெற்றுக்கொள்வதற்காக சார்க் நாடுகளின் பிரதான பெண் செயற்பாட்டாளர்களின் கூட்டம் இந்த வருடம் இலங்கையில் நடைபெறவுள்ளது.  ஆசிய பிராந்தியத்தில் பெண்களின் உரிமைகளை வென்றெடுப்பதில் இலங்கை முன்னிலையில் இருக்க வேண்டும்.

கடந்த காலங்களில் நாம் அனுபவித்த துன்பங்களில் இருந்து மக்களை விடுவிக்க உழைத்தவர்களின் பெயர்களைக் கருத்தில் கொண்டால், மூன்று பெண்களின் பெயர்கள் இடம்பிடித்துள்ளன. அவர்களை முதலில் குறிப்பிட வேண்டும் என்று நான் நினைத்தேன்.

நிர்மலா சீதாராம் தான் இந்தியாவின் நிதியமைச்சர். அவர்தான் பிரதமர் மற்றும் அமைச்சரவையுடன் கலந்துரையாடி இலங்கைக்கு 3 பில்லியன் டொலர்களை கடனாக வழங்க தீர்மானித்தவர். 

அது, கடந்த ஏப்ரலில் நாங்கள் வங்குரோத்தாகிவிட்டதாக அறிவிக்கப்பட்ட பிறகு நடந்தது. வங்குரோத்தான நாட்டுக்கு கடன் கொடுப்பது மிகவும் துணிச்சலான செயல் ஆகும். எனவே முதலில் அவருக்கு நன்றி கூற வேண்டும். 3 - 4 மாதங்களில், 3 பில்லியன் கிடைக்கவில்லை. என்றால் இன்று நாட்டின் நிலைமையை நான் சொல்ல வேண்டியதில்லை.

இரண்டாவதாக, பல முக்கிய நாடுகளுடன் நாம் பேச்சுவார்த்தை நடத்தினோம். அந்த நாடுகளில், முக்கியமான நாடு அமெரிக்கா. இதற்கு அந்நாட்டின் திறைசேரி செயலாளர் ஜெனட் யெலன் தலைமை தாங்கினார். அவருக்கும் நாம் நன்றி சொல்ல வேண்டும்.

பல்வேறு நாடுகள், பாரிஸ் கிளப், உலக வங்கி உட்பட அனைவருடனும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீயேவா தலைமையேற்று தனிப்பட்ட ரீதியில் தியாகத்துடன் செயற்பட்டார் என்பதை நான் குறிப்பிட வேண்டும். இந்த மூன்று பெண்களும் எங்களுக்கு ஆதரவளிக்காமல் இருந்திருந்தால், நாங்கள் கடும் நெருக்கடிக்கு ஆளாகியிருப்போம்.

ஒருபுறம், இந்தப் பிரச்சினைக்குக் காரணமானவர்களில் பெண்கள் ஒருவரும் இல்லை என்பதுடன் மறுபுறம், உதவியவர்களில் பெண்களும் உள்ளனர்.

இந்த மூன்று பெண்களின் மீது கவனம் செலுத்தும்போது, இந்தப் பெண்கள் ஏன் இந்த இடங்களில் இருக்கிறார்கள் என்று பார்க்க வேண்டும். ஏன் நம் நாட்டில் இவ்வாறானவர்கள். இவர்கள் மூவர் மட்டுமல்ல, ஐரோப்பிய ஆணைக்குழுவின் தலைவர் உர்சுலா வொன் டெர் லேன் மற்றுமொரு பெண். ஐரோப்பிய ஒன்றியத்தின் மத்திய வங்கியின் ஆளுநர் கிறிஸ்டின் லகார்ட் மற்றொரு பெண் ஆவார்.

இலங்கை குறித்து நாம் கவனம் செலுத்தும் போது 92 வருடங்களுக்கு முன்னர் எமது முதல் பெண் எம்.பி. தெரிவுசெய்யப்பட்டார்.

1960 ஆம் ஆண்டு உலகின் முதல் பெண் பிரதமராக சிறிமாவோ பண்டாரநாயக்கா தெரிவானார். ஆனால் நாம் முன்னேற்றம் அடையவில்லை.இன்று சில நாடுகளில் அரசியல் துறையில் பெண்களின் பிரதிநிதித்துவம் குறைந்தது 20 - 25 சதவீதமாக உள்ளது. ஆனால் நாம் அந்த மட்டத்தை அடையவில்லை.

எங்கள் நிர்வாகத் துறையில் பெண்கள் முன்னிலைக்கு வந்துள்ளனர். அதில் எந்தக் பிரச்சினையும் இல்லை. கல்வித் துறையிலும் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரித்துள்ளது. ஆனால் வணிகத் துறை போன்ற பல துறைகளில் இந்தக் குறைபாடு உள்ளது. இந்நிலையை மாற்றியமைக்கும் வகையில் மகளிர் விவகார அமைச்சுடன் இணைந்து கொள்கை அறிக்கை தயாரிப்பதற்காக 2 குழுக்கள் நியமிக்கப்பட்டன.

இந்த இரண்டு குழுக்களின் அறிக்கைகளையும் அமைச்சரவை அங்கீகரித்து என்னிடம் வழங்கியுள்ளது. 2023 முதல் 2033 வரை 'பாலின சமத்துவம் மற்றும் பெண்களை வலுவூட்டுவதற்கான தேசியக் கொள்கை' மற்றும் 'பெண்கள் அமைதி மற்றும் பாதுகாப்புக்கான தேசியக் கொள்கை' ஆகிய இரண்டும் தற்பொழுது சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இந்த செயற்பாடுகளை இத்தோடு நாம் நிறுத்த மாட்டோம். இது குறித்து விரிவாக ஆராய்ந்து, இதில் சேர்க்கப்பட வேண்டிய திருத்தங்கள் குறித்து யோசனைகளைப் பெறுவோம்.

அத்துடன் பாராளுமன்ற மகளிர் அமைப்புடன் கலந்துரையாடி எமது வேண்டுகோளின் அடிப்படையில் 3 வரைவுகள் தற்போது தயாரிக்கப்பட்டுள்ளன. அதில் ஒன்று பாலினம் மற்றும் சமத்துவ சட்டம், மற்றொன்று பெண்களை வலுவூட்டும் சட்டம் மற்றும் தேசிய ஆணைக்குழு. இவை குறித்து இந்த மாதத்திற்குள் ஆராய்ந்து குறைந்தபட்சம் ஜூன் மற்றும் ஜூலைக்குள் சட்டமாக்க வேண்டும்.

இது தவிர அரசாங்கத்துடன் தொடர்பில்லாத மக்கள் சபைகள் தொடர்பான சட்டமூலத்தையும் கரு ஜயசூரிய தயாரித்து வருகின்றார். அவருடன் கலந்துரையாடி அதில் பெண்களின் பிரதிநிதித்துவம் மற்றும் பெண்களின் உரிமைகளை உள்ளடக்குமாறு பாராளுமன்றத்தில் உள்ள மகளிர் குழுவிற்கும் அமைச்சிற்கும் பரிந்துரைத்துள்ளேன்.

அத்தோடு, பெண்கள் மற்றும் பாலினத்திற்கான ஒரு நிறுவனத்தை உருவாக்க எதிர்பார்த்துள்ளோம். இதன் ஊடாக பெண்களுக்கான மேம்பாட்டுத் திட்டங்களைச் செயல்படுத்த வாய்ப்பு ஏற்படும். பெண்களுக்காக இந்தப் பணியைச் செய்ய எதிர்பார்க்கிறேன். இது எங்கள் கொள்கையின் ஒரு பகுதியாகும்.

அதேநேரம், பெண்களின் உரிமைகள் குறித்து ஆராய்வதற்காக பல்வேறு துறைகளைச் சேர்ந்த பெண் பிரதிநிதிகளைக் கொண்டு பாரிய மாநாடொன்று நடத்த எதிர்பார்க்கப்படுகிறது. அந்தத் துறைகள் என்ன என்பது குறித்து எமது பெண் எம்.பி.க்களின் அமைப்பு மற்றும் அமைச்சின் செயலாளருடனும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடனும் கலந்தாலோசித்து தீர்மானிப்போம். 500-1000 பேர் கொண்ட குழு அங்கு கூடும் என்று நினைக்கிறேன். அவர்களுடன் இது குறித்து ஆராய வேண்டும்.

ஒன்றை நாம் நினைவில் கொள்ள வேண்டும். நாங்கள் அமெரிக்காவிலோ ஐரோப்பாவிலோ வாழவில்லை. நாங்கள் ஆசியாவில் இருக்கிறோம். ஆசியாவில் இதுபோன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது கிடையாது. பெண்கள் இப்படி முன்வரவில்லை. முழு ஆசியாவை மையமாகக் கொண்டு, கொரியா, பிலிப்பைன்ஸ் மற்றும் மியான்மார் ஆகிய நாடுகளில் பெண் தலைவர்கள் இருந்தனர். எஞ்சிய அனைவரும் தெற்காசியாவிலிருந்தே வந்துள்ளனர். குறிப்பாக பாகிஸ்தான், இந்தியா, பங்களாதேஷ் மற்றும் இலங்கையிலிருந்து வந்துள்ளனர். சோனியா காந்தி உட்பட ஏழு பேர் உள்ளனர். ஆனால் இந்தப் பிராந்தியங்களில் பெண்களுக்குக் கிடைத்துள்ள உரிமைகள் குறித்து நாம் திருப்தியடைய முடியாது.

இன்று ஆப்கானிஸ்தானில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. பெண்கள் கல்வி கற்க முடியாது, வேலைக்குச் செல்ல முடியாது. அவர்களின் உரிமைகளை அனுபவிக்க முடியாது. இந்தச் சூழலில், தெற்காசியா, குறிப்பாக இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம், பூட்டான், மாலைத்தீவு மற்றும் இலங்கை என்ற வகையில் இதைப் பற்றி ஆராய்வோம்.

ஏனெனில் சார்க் அமைப்பில் பெண்களின் உரிமைகள் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. இந்த உரிமைகளை எவ்வாறு பெறுவது என்பது தொடர்பில் நாம் இணைந்து கலந்துரையாடி , மகளிர் விவகார அமைச்சும் வெளிவிவகார அமைச்சும் இணைந்து இந்த வருடத்தில் இந்த நாடுகளின் பிரதான பெண் செயற்பாட்டாளர்களின் கூட்டத்தை இலங்கையில் நடத்த தீர்மானித்துள்ளன.

இலங்கையை மாத்திரம் முன்னோக்கி கொண்டு செல்வது வெற்றியளிக்காது. இப்பிராந்தியத்திலேயே இதனை செயல்படுத்த வேண்டும். அந்த வழியைப் பின்பற்றும்படி ஏனையவர்களையும் கேட்டுக் கொள்வதோடு நாங்கள் அந்த செயல்முறையில் முன்னணியில் இருப்போம்.

பெண்களின் உரிமைகளை நடைமுறைப்படுத்துவதோடு ஏனைய அபிவிருத்தியடைந்த நாடுகளைப் போல பெண்களுக்கும் அந்த உரிமைகளை வென்றெடுப்போம். இந்நாட்டு மக்கள் தொகையில் பெரும்பான்மையானவர்கள் பெண்கள். அந்த மக்கள் அனைவரின் உரிமைகளையும் நாம் பாதுகாக்க வேண்டும். இதை பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் ஆராய்ந்து முன்னோக்கிச் செல்வோம் என்றார்.

https://www.virakesari.lk/article/150075

  • கருத்துக்கள உறவுகள்
On 10/3/2023 at 01:32, ஏராளன் said:

கடந்த காலங்களில் நாம் அனுபவித்த துன்பங்களில் இருந்து மக்களை விடுவிக்க உழைத்தவர்களின் பெயர்களைக் கருத்தில் கொண்டால்,

இந்தத் துன்பம் எங்கிருந்து வந்தது என்கிற காரணிகளைக் கண்டறிந்து அதை தீர்க்காமல் இந்த நாட்டின் துன்பம் தீராது, தொடர்ந்து கொண்டேயிருக்கும். எல்லாக்காலமும் உதவி வருமென எதிர்பார்த்து உங்களை அராஜகங்களை தொடரக்கூடாது. ஆதரவு கொடுக்கும் மூன்று  பெண்களின் கண்களில், மூன்றாண்டுகளுக்கு மேல் தெருக்களில் கண்ணீரோடும் ஏக்கத்தோடும் அலையும் பெண்கள் படாமல் போனதேன்? இவர்கள் இலங்கைக்கு செய்யும் ஆதரவில் அந்த நாட்டுக்குள் இருக்கும்  இந்த அபலைப்பெண்களுக்கு என்ன உத்தரவாதம் வைத்திருக்கிறார்கள்? அவர்களின் கண்ணீர் தொடரவே இப்படியான உத்தரவாதமற்ற ஆதரவுகளை இலங்கைக்கு வழங்குகின்றனர்.

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டில தேர்தல் நடக்குமா இல்லையா அதை வெளியிடுங்கள் முதலில், மற்றதை பிறகு பறையுங்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.