Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

"கட்டிங் பிளேடு வைத்து பல்லை பிடுங்கினார்" - விசாரணை கைதிகளை ஏஎஸ்பி தாக்கிய குற்றச்சாட்டின் பின்னணி

விசாரணை கைதிகளின் பற்களைப் பிடுங்கி கொடூர தாக்குதல்
ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் விசாரணைக் கைதிகளை அந்த மாவட்ட ஏஎஸ்பி பல்வீர் சிங், கொடூரமாகத் தாக்கி, பற்களைப் பிடுங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

அதையடுத்து, இந்த விவகாரம் குறித்து விசாரிக்க சேரன் மாதேவி உதவி ஆட்சியருக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அம்பாசமுத்திரம் சரக காவல் நிலையத்திற்கு வரும் விசாரணைக் கைதிகளை அந்த மாவட்ட கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளராக உள்ள பல்வீர் சிங், கொடூரமாகத் தாக்கி, அவர்களது பற்களைப் பிடுங்கியதாக விசாரணைக் கைதிகள் சிலர், வீடியோ வெளியிட்டு குற்றம் சாட்டியுள்ளனர்.

வெங்கடேசன் என்பவரைக் கொலை செய்ய முயன்றதாக கடந்த மார்ச் 23ஆம் தேதி சிலர் கல்லிடைக்குறிச்சி காவல்நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். அங்கு வந்த மாவட்ட கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் பல்வீந்தர் சிங் அவர்களைக் கொடூரமாகத் தாக்கியதாகக் குற்றம் சாட்டப்படுகிறது.

 

தாக்கப்பட்டவர்கள் சமூக ஊடகங்களில் வெளியிட்ட வீடியோவில், காவல் நிலையத்திற்கு இவர்கள் அழைத்து வரப்பட்டபோது காவல்துறையினருக்கான சீருடையில் இருந்த பல்வீந்தர் சிங், பிறகு சாதாரண உடைக்கு மாறிக்கொண்டு இவர்களைத் தாக்கியதாகக் கூறியுள்ளனர்.

"ஏஎஸ்பி சார் கையில் கையுறை அணிந்து கொண்டு டிராக் பேண்ட் அணிந்துகொண்டு அங்கு வந்தார். எங்கள் வாய்க்குள் ஜல்லி கற்களைப் போட்டு கொடூரமாக அடித்தார். மேலும் கற்களை வைத்து பல்லை உடைத்தார்.

எனது அண்ணன் மாரியப்பனுக்கு சமீபத்தில்தான் திருமணம் நடைபெற்றது. அவன் தற்போது படுத்த படுக்கையாக உணவு சாப்பிட முடியாமல் தவித்து வருகிறான். எங்களுக்கு நடந்ததைப் போன்று வேறு யாருக்கும் நடக்கக்கூடாது," என்று அவர்கள் பேசியுள்ளனர்.

பல்வீந்தர் சிங்கால் பல்லை பிடுங்கப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ள வேத நாராயணனிடம் பிபிசி பேசியபோது, "நான் அம்பாசமுத்திரம் விக்கிரமசிங்கபுரத்தில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்டோ ஓட்டி வருகிறேன். எனக்கு இரண்டு மகன்கள் ஒரு மகள் உள்ளனர்.

எனக்கும் எனது மனைவிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், குடும்பத்தை விட்டுப் பிரிந்து கடந்த நான்கு ஆண்டுகளாகத் தனியாக வாழ்ந்து வருகிறேன். 27 ஆண்டுகளுக்கு முன் நான் கல்லூரிப் படிப்பை முடித்தேன். எனக்கு அந்தச் சான்றிதழ் தேவைப்பட்டதால் கடந்த 20ஆம் தேதி அதைக் கேட்டு என் மனைவி தங்கியிருக்கும் வீட்டிற்குச் சென்றபோது எனக்கும் எனது மனைவிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

வாக்குவாதம் ஏற்பட்ட சிறிது நேரத்தில் காவல்துறையினர் அங்கு வந்து என்னிடம் இருந்து செல்போனை பிடுங்கிவிட்டு உடனடியாக காவல் நிலையத்திற்கு வருமாறு கூறிச் சென்றனர். மறுநாள் கோவில் திருவிழா என்பதால் 23ஆம் தேதி காலை காவல் நிலையம் செல்வதற்குத் தயாராகிக் கொண்டிருந்தபோது, என்னைத் தேடி வந்த இரண்டு காவலர்கள் விக்கிரமசிங்கபுரம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று உட்கார வைத்தனர்.

விசாரணை கைதிகளின் பற்களைப் பிடுங்கி கொடூர தாக்குதல்

காவல் நிலையத்தில் வெகுநேரமாக உட்கார்ந்து இருந்தபோது அங்கிருந்த காவலர் ஒருவர் 'உனக்கு தனி ட்ரீட்மென்ட் இருக்கு, ஏஎஸ்பி வந்து கொடுப்பாரு' என்று கூறினார். இதனிடையே எனது கையில் கட்டியிருந்த பாஜக கயிறு, சாமிக் கயிறு மற்றும் இடுப்பிலிருந்த கயிற்றை போலீசார் அறுத்து எடுத்தனர்.

சிறிது நேரத்தில் ஏஎஸ்பி அங்கே வந்து என்னிடம் இந்தியில் ஏதோ கேட்டார். எனக்கு விளங்கவில்லை. நான் உடனே ஆங்கிலத்தில் குடும்பத்தில் மனைவிக்கும் எனக்கும் பிரச்னை எனக் கூறினேன்.

காவல் நிலையத்தின் மேல்பகுதியில் இருந்த அறைக்கு என்னை ஏஎஸ்பி மற்றும் சில காவலர்கள் அழைத்துச் சென்றனர். அங்கு கட்டிங் பிளேடு ஒன்றை எடுத்து எனது வாயின் கீழ் தாடையில் உள்ள பல் ஒன்றைப் பிடுங்கினார். மேலும் எனது காதில் அந்த கட்டிங் பிளேயரை வைத்து அமுக்கியதில் எனக்குக் காயம் ஏற்பட்டது.

பின்னர் காவல் நியைத்தில் இருந்து மாலை 5 மணிக்கு என்னை அனுப்பினார். நான் அன்றிலிருந்து இன்று வரை ஐந்து நாட்களாகச் சாப்பிட முடியவில்லை," என்றார் வேதநாராயணன்.

திருநெல்வேலி மாவட்ட காவல்துறையில் அம்பாசமுத்திரம் கூடுதல் காவல் கண்காணிப்பாளராக பல்பீர் சிங் பொறுப்பேற்ற பிறகு அம்பாசமுத்திரம் பகுதியில் சிறு குற்றங்களில் ஈடுபடும் இளைஞர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று அவர்களுடைய பற்களைப் பிடுங்கி கொடூரமான தண்டனை வழங்கி வருவதாகப் பலர் கூறுகின்றனர்.

அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, பாப்பாக்குடி உள்ளிட்ட பகுதியில் சுமார் 10க்கும் மேற்பட்ட நபர்களின் பற்களைப் பிடுங்கியதாகச் சொல்லப்படுகிறது.

சில நாட்களுக்கு முன்பு ஜமீன் சிங்கம்பட்டியைச் சேர்ந்த சூர்யா என்பவர் அதே பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை உடைத்து பிரச்னை செய்தார் என்ற குற்றச்சாட்டில் காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அங்கு ஏஎஸ்பி பல்பீர் சிங் அவரது பற்களைப் பிடுங்கியது மட்டுமல்லாமல் விசாரணைக்காக வந்த அதே பகுதியைச் சேர்ந்த மேலும் மூன்று இளைஞர்களின் பற்களையும் உடைத்து, தற்போது அந்த மூன்று பேரும் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக சூர்யா பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

விசாரணை கைதிகளின் பற்களைப் பிடுங்கி கொடூர தாக்குதல்

இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள வழக்கறிஞர் மகாராஜா பிபிசி தமிழிடம் பேசும்போது, "பொதுவாக எவ்வளவு பெரிய வழக்காக இருந்தாலும் விசாரணைக் கைதிகளை காவல் நிலையத்தில் வைத்தோ, சிறைச்சாலையில் வைத்தோ காவல்துறையினர் தாக்கக்கூடாது என்பது சட்டம். அந்த விதியை மீறி பல்வேறு வழக்குகளில் காவல்துறையினர் கைதிகளைக் கொடூரமாகத் தாக்குகின்றனர்.

மாவட்ட நிர்வாகம் நடத்தும் விசாரணையில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. எனவே, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அல்லது சிபிஐ இதை விசாரிக்கவேண்டும். புகார் தெரிவிக்கும் நபர்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

ஏஎஸ்பி மற்றும் இதில் தொடர்புடைய காவலர்கள் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவுசெய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறினார்.

இது சமூக ஊடகங்களில் பரவிய நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த, நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் உத்தரவின்பேரில், சேரன்மாதேவி உதவி ஆட்சியர் முகமது சபீர் ஆலம் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

குற்றம்சாட்டப்பட்டுள்ள பல்வீந்தர் சிங், காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். ஶ்ரீவைகுண்டம் பகுதியின் காவல்துறை துணை கண்காணிப்பாளர் வெங்கடேசன் அம்பாசமுத்திரம் பொறுப்பு டிஎஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

https://www.bbc.com/tamil/articles/c514ljyg8xwo

  • 9 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கைதி பற்களை உடைத்ததாக புகார் - அம்பை ஏ.எஸ்.பி. பல்வீர் சிங் இடைநீக்கம் ரத்து ஏன்?

பல்வீர் சிங் இடைநீக்கம் ரத்து
கட்டுரை தகவல்
  • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
  • பதவி, பிபிசி செய்தியாளர்
  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

கைது செய்யப்பட்டவர்களைக் கடுமையாகத் தாக்கி, அவர்களின் பற்களை கற்களால் உடைத்ததாக குற்றம்சாட்டப்பட்ட அம்பாசமுத்திரம் காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் பல்வீர் சிங்கின் இடைநீக்கம் ரத்து செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. வழக்கு நிலுவையில் இருக்கும்போது இடைநீக்கம் ரத்துசெய்யப்பட்டது ஏன்?

நடந்தது என்ன?

திருநெல்வேலி மாவட்டத்தின் அம்பாசமுத்திரம் துணைச் சரகத்தில் காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளராக (ஏஎஸ்பி) பணியாற்றி வந்தவர் பல்வீர் சிங். இவர் அங்கே ஏ.எஸ்.பியாக பணியாற்றி வந்த காலகட்டத்தில், அந்தச் சரகத்திற்குட்பட்ட அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, விக்கிரமசிங்கபுரம் ஆகிய மூன்று காவல் நிலையங்களுக்கு வரும் விசாரணைக் கைதிகளை தாக்கியதாகவும், அவர்களின் பற்களைப் பிடுங்கியதுடன் வேறு பல துன்புறுத்தல்களில் ஈடுபட்டதாகவும் புகார்கள் எழுந்தன. இந்த விவகாரம் 2023 மார்ச் மாதம் மிகப் பெரிதாக வெடித்தது.

பல்வீர் சிங் இடைநீக்கம் ரத்து

பணியாளர் தேர்வாணய விதிகள் என்ன சொல்கின்றன?

யுபிஎஸ்சி மூலம் அகில இந்தியப் பணிகளில் சேர்பவர்களுக்கான ஒழுங்கு விதிமுறைகள், குற்றம் சாட்டப்படும் ஒரு அதிகாரி எவ்வளவு காலகட்டத்திற்கு இடைநீக்கத்தில் இருக்கலாம் என்பதை வரையறுக்கிறது. அதன்படி, "ஊழல் தவிர்த்த பிற குற்றங்களை எதிர்கொள்ளும் அதிகாரி, ஓராண்டிற்கு மேல் இடைநீக்கத்தில் வைக்கப்பட முடியாது. அந்த கால கட்டத்திற்குள் விசாரணையை முடித்து, உரிய நடவடிக்கைகளுக்கான ஆணையை அரசு பிறப்பிக்க வேண்டும். இடைநீக்கம் செய்யப்பட்ட தேதியிலிருந்து ஓராண்டிற்குள், இந்த நடவடிக்கைகள் நிறைவடையவில்லையெனில், அந்த அதிகாரியின் இடைநீக்கம் தானாகவே ரத்தாகிவிடும்".

ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் அதிகாரிகளை மட்டும் இரண்டாண்டுகளுக்கு இடைநீக்கத்தில் வைத்திருக்கலாம்.

பல்வீர் சிங் இடைநீக்கம் ரத்து
 

தமிழ்நாடு அரசு ரகசியம் காப்பது ஏன்? என கேள்வி

சம்பந்தப்பட்ட அதிகாரி மீது குறிப்பிட்ட காலத்திற்குள் நடவடிக்கையை எடுத்து, உரிய அறிக்கையைத் தாக்கல் செய்யாதது யார் தவறு எனக் கேள்வியெழுப்புகிறார் மக்கள் கண்காணிப்பகத்தின் ஹென்றி திஃபேன்.

"இடைநீக்கத்திற்கு கால வரம்பு இருக்கிறது என்பது உண்மைதான். ஆனால், இந்த காலகட்டத்திற்குள் உரிய நடவடிக்கையை எடுக்காதது யார் தவறு? முதலமைச்சர் பொறுப்பில் இருக்கும் துறை இது. அவர் பதில் அளிப்பாரா? தேர்தல் வரும்போது என்னவெல்லாம் சொன்னார்களோ அதற்கு மாறாகச் செயல்படுகிறார்கள். இந்த விவகாரம் தொடர்பாக ஐஏஎஸ் அதிகாரி அமுதா அளித்த அறிக்கை ஏன் ரகசியமாக வைக்கப்பட்டிருக்கிறது? அவர் இடைநீக்கம் செய்யப்பட்டு ஒன்பது மாதங்களாகியும் எந்த நடவடிக்கை முடிவும் ஏன் எடுக்கப்படவில்லை?

இந்த விவகாரம் குறித்து தேசிய மனித உரிமை ஆணையம் அறிக்கை கேட்டது. அது தொடர்பாக இப்போதுவரை அரசு பதிலளிக்கவில்லை. இதுபோல 1990களின் துவக்கத்தில் தூத்துக்குடியில் ஏடிஎஸ்பியாக இருந்த ஒரு அதிகாரி மீது சரியாக நடவடிக்கை எடுக்காத காரணத்தால்தான், அவர் தொடர் தவறுகளில் ஈடுபட்டுக் கொண்டே சென்றார். இந்த அதிகாரியும் அப்படி ஆகிவிடுவாரோ என்ற அச்சம் இருக்கிறது.

அமுதா அளித்த அறிக்கை வெளியில் வரவில்லை, காவல் நிலையங்களின் சிசிடிவி காட்சிகள் வெளியில் வரவில்லை, ஆனால் இடைநீக்கம் குறித்த செய்திகள் மட்டும் கசிய விடப்படுகின்றன என்றால் என்ன அர்த்தம்? இந்த அரசு யார் பக்கம் இருக்கிறது?" எனக் கேள்வியெழுப்புகிறார் ஹென்றி திஃபேன்.

ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த பல்வீர் சிங் 2020ஆம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியாகத் தேர்ச்சி பெற்றவர். தமிழ்நாடு பிரிவில் இடம்பெற்ற அவர், அம்பாசமுத்திரத்தில் பயிற்சி ஏஎஸ்பியாக பணியாற்றி வந்த காலகட்டத்தில் இந்த விவகாரம் வெடித்தது.

https://www.bbc.com/tamil/articles/cqv6e46x152o

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.