Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"காம்பா.. நீயா?"

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பரபரப்பின்றி அமைதியாகக் காணப்பட்டது

நைரோபி நேஷனல் பார்க். வாசல் கதவு திறந்திருந்தாலும் காவலுக்கென்று எல்லாம் பெரிய அளவில் கவலைப்பட்டு நிற்க ஆளில்லை போலும்.  யார் வேண்டுமானாலும் உள்ளே வரலாம் என்கிற மறைமுக செய்தி தாங்கி காணப்பட்டது அதன் வாசல்.

 

கொஞ்ச நேரத்தில் சிறிய சலசலப்பு.  கொஞ்ச தூரத்தில் மரங்களுக்கிடையிலிருந்து தோன்றியது ஒரு யானை.  அதைத் தொடர்ந்து வேறு சில யானைகளும் வர, அமைதியாக வந்த அவை காப்பக வாசலருகே வந்ததும் நின்று விட்டன.
 
முதலில் இது ஒரு விஷயமாக படவில்லை அங்கிருந்த ஆட்களுக்கு.  நேரம் செல்லச் செல்ல அவை அசையாமல் எதற்கோ காத்திருப்பது போல நின்றிருக்க, ஓரிருவராக கூடத் தொடங்கினார்கள்.
 
செய்தி மெல்லப் பரவியது.
 
உள்ளே அமர்ந்திருந்த அந்த வயதான மாது டாப்னேயின் காதுகளுக்கும் சென்று அடைந்தது செய்தி.
 
அந்தக் காப்பகத்தில் உள்ள வனவிலங்குகளைக் காண வந்திருந்தார் அவர்.  விலங்குகள் மேல் நிறைய பாசம் கொண்டவர்.  அவைகளுக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்.
 
சிறு வயதிலிருந்தே இந்த எண்ணம் மனதில் தலைதூக்கி இருந்ததால் தனக்கு கிடைத்த மருத்துவப் படிப்பைக் கூட துறந்து வனவிலங்குகள் சேவையில் ஆழ்ந்தவர் அவர்.  அங்கேயே விலங்குகளுக்கு சேவை செய்யும்  வாலிபர் ஒருவரை மணந்து, பின்னர் அவரை விவாகரத்து செய்துவிட்டு அவர் முதலாளி ஷெல்ட்ரிக்கை மணந்து  17 வருடங்கள் இருவரும் விலங்குகளுக்காக அன்புடன் சேவை செய்தனர்.  1977 ல் கணவர் மறைந்தாலும் இவரின் சேவை நிற்கவில்லை.
 
அனாதையாக்கப்பட்ட விலங்குகளை பராமரித்து வனத்துக்குள் விடும் சேவையை அன்புடன் செய்து வந்தார்.  குறிப்பாக யானைகள்.
 
அதில் ஒரு முறை வந்தொரு கைவிடப்பட்ட யானைக்கு காம்பா என்று பெயரிட்டு அன்புடன் வளர்த்து வந்தார்.  தாய் தந்தை இருவரையும் இழந்துவிட்ட அதுவும் இதுவரை பழகிய யானைகளிலேயே இவரிடம் அதிகம் அன்பு காட்டிய செல்லமாக இருந்தது.  கதைகள் எல்லாம் படித்துக் காட்டி தூங்க வைப்பார் டாப்னே.  என்ன வளர்த்தாலும், உரிய வயது வந்ததும் அதையும் வனத்துக்குள் அனுப்பிதானே ஆகவேண்டும்?  
 
இப்போதெல்லாம் வயதாகி விட்டதால் ஈடுபாடு இருந்தாலும் அவ்வளவு வேகமாக சேவைசெய்ய முடிவதில்லை.  பல வருடங்கள் கழிந்து விட்ட நிலையில் இங்குள்ள விலங்குகளை பார்க்க வந்திருந்தார் அவர்.
 
சில நாட்களாக இங்கேயே தங்கி அங்கு இருந்த விலங்குகளுடன் பழகி, பேசி பொழுதைக் கழித்து வந்தார்.
 
இந்த நேரத்தில்தான் வெளியில் ஒரு யானை குடும்பம் நிற்கிறது ஏனென்று தெரியவில்லை என்று ஊழியர்கள் சொல்லி அழைத்ததும் அவற்றைப் பார்க்கக் கிளம்பினார்.  அவரால் என்ன ஏது என்று உணர்ந்து சொல்ல முடியும்.
 
வெளியில் வந்து பார்த்தவர் யானைக் கூட்டத்தைப் பார்த்தார்.  அருகில் சென்றார்.  அதன் தலைவன் போலிருந்த பெரிய யானையைப் பார்த்தார்.  அதன் அருகில் நம்பிச் சென்றார்.
 
1.jpg
அதுவும் இவர் அருகில் வருவதைப் பார்த்ததும் மெல்ல நகர்ந்து அருகில் வந்தது.  அதன் அசைவுகளிலிருந்து அதற்கு மனிதர்கள் புதிதல்ல என்று தோன்றியது டாப்னேவுக்கு.
 
அதன் துதிக்கையை மெல்லத் தொட்டு தடவியவாறு இருந்தவருக்கு திடீரென ஒரு உள்ளுணர்வு தோன்ற "காம்பா..  நீயா?" என்றார் ஆச்சர்யத்துடன்.
 
 
அதுவும் இவரைத் தொட்டு, உரசியபடி அருகில் நின்றிருந்தது. ஆம், காம்பாதான்.   கொஞ்ச நேரம் கழித்து அந்தக் குடும்பம் மெல்ல மீண்டும் திரும்பி வனத்துக்குள் சென்று மறைந்தது.
 
இது மாதிரி எத்தனை சம்பவங்கள்...
 
சமீபத்தில் தமிழகத்தில் தயாரான எலிபன்ட் விஸ்பரர்ஸ் குறும்படத்துக்கு ஆஸ்கார் விருது கிடைத்ததை படித்திருப்பீர்கள்.  அதற்கு முன்பே ஒரு எலிபன்ட் விஸ்பரர் பிரபலம்.  கூகிளிட்டு பார்த்தால் தெரியும்.  லாரன்ஸ் ஆண்டனி.  படிக்காதவர்கள் இவரைப்பற்றி கூகுள் செய்து கட்டாயம் படித்துப் பாருங்கள்.
 
அவர் மரணமடைந்த நாளில் எங்கிருந்து வந்ததென தெரியாமல் ஒரு யானைக்கூட்டம் பல கிலோமீட்டருக்கு அப்பாலிருந்து ஒழுங்கான வரிசை முறையில் வந்து அவருக்கு அஞ்சலி செலுத்தி விட்டுப் போன செய்தியும் அறிந்திருப்பீர்கள்.  ஜெமோ கூட இதை வைத்துதான் 'யானை டாக்டர்' எழுதினார்.
 
தன்னை வளர்த்த தாய் இங்கு வந்திருக்கிறார் என்பதை பல கிலோமீட்டர்களுக்கு அப்பால் இருந்த காம்பா எப்படி அறிந்தது?  குடும்பத்துடன் வந்து பார்த்து மரியாதை செய்து விட்டு போகவேண்டும் என்று எப்படி யானைகளுக்கு தோன்றுகிறது?  பார்க்காமல் இருந்திருந்தால் டாப்னே கோபித்துக் கொள்ளப்போகிறாரா, வருத்தப்படப் போகிறாரா?  காம்பா இருக்கும் இடம் கூட டாப்னேவுக்கு தெரியாது.  கிட்டத்தட்ட அதை மறந்தே விட்டிருந்தார். 
 
கள்ளக்காதலுக்காகவும், பணத்துக்காகவும் தாயை, தந்தையை, கணவனை, மனைவியை கொடூரமாகக் கொலை செய்யும் ஆறறிவு படைத்த மனிதர்கள் நடுவே ஐந்தறிவு என்று சொல்லப்படும் விலங்குகளின் குணங்கள் ஆச்சர்யப்படுத்துபவைதானே?  இதேபோல தன்னை வளர்த்தவர்களை இனம் கண்டு அடையாளம் கண்டு செல்லம் கொஞ்சும் சிங்கம், புலிகளை பற்றியும் நாம் இணையத்தில் படித்திருக்கிறோம்தானே?
 
வருடா வருடம் சரியாக லாரன்ஸ் மறைந்த நாளில்  மரியாதை தெரிவிக்கவும், அவரை நினைவு கூரவும் வரும் யானைக் கூட்டங்களின் அன்பை என்னவென்று சொல்ல...
  • கருத்துக்கள உறவுகள்

விலங்குகளின் உணர்வுகள் மிகவும் அலாதியானவை......தங்களின் உள்ளுணர்வால் எதையும் புரிந்து கொள்ளும் திறமை அவைகளுக்கு உண்டு........!  🙏

நன்றி ஏராளன் ......!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.