Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழர் தாயகத்தில் செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்படும் ஹர்த்தாலுக்கு பலரும் ஆதரவு!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மே 6ஆம் திகதி நாடு தழுவிய ஹர்த்தாலுக்கு அழைப்பு!

தமிழர் தாயகத்தில் செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்படும் ஹர்த்தாலுக்கு பலரும் ஆதரவு!!

தமிழர் தாயகத்தில் நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்படும் ஹர்த்தாலுக்கு மன்னார், மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்ட ஆயர்கள், யாழ்ப்பாணம் தென்னிந்தியத் திருச்சபையின் பேராயர் மற்றும் யாழ். கத்தோலிக்க மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு என்பன ஆதரவு தெரிவித்துள்ளன.

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்துக்கு எதிராகவும், சிங்கள – பௌத்த பேரினவாதத்தின் ஆக்கிரமிப்பைக் கண்டித்தும் நாளைமறுதினம் செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்படவுள்ள கதவடைப்புப் போராட்டத்துக்கு யாழ். கத்தோலிக்க மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு தமது பூரண ஆதரவை வழங்கியுள்ளது.

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் இலங்கைக்கு மட்டுமல்ல எந்தவொரு நாட்டுக்கும் பொருந்தாது என்றும் அதனை முற்றாக எதிர்க்க வேண்டும் என்றும் நாம் இந்த ஹர்த்தாலுக்கு ஆதரவை வழங்குகின்றோம் என்றும் மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ தெரிவித்தார்.

மக்களினுடைய சுதந்திரத்துக்கும் உரிமைக்கும் பாதகமான விடயங்களுக்கு எதிராக குரல் கொடுக்கப்பட வேண்டும் என்றும் ஹர்த்தாலுக்கு முழுமையான ஆதரவளிப்பதாக திருகோணமலை மறைமாவட்ட ஆயர் கிறிஸ்டியன் நோயல் இமானுவேல் தெரிவித்தார்.

‘அமைதியான சூழல் நிலவுவதற்காக நாங்கள் எப்பொழுதும் போராடிக்கொண்டே இருப்போம். இவ்வாறான சட்டங்கள் உடனடியாக நீக்கப்படவேண்டும். ஹர்த்தாலுக்கு முழுமையான ஆதரவை வழங்குகின்றேன்’ என்று மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் ஜோசப் பொன்னையா தெரிவித்தார்.

‘பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை ஒட்டுமொத்த தமிழ் பேசும் மக்கள் அதேபோல சகோதர மொழி பேசுகின்ற மக்கள் முனைப்போடு இதனை எதிர்க்க வேண்டும் என்பது என்னுடைய ஆணித்தரமான கருத்து. இம்முறை அனைத்து கட்சிகளும் ஒரே கண்ணோட்டத்தில் ஒரே தளத்தில் நின்று ஹர்தாலுக்கு அழைப்பு விடுத்ததை நான் பாராட்டுகின்றேன்.

இதில் எந்தவித வேறுபாடுகளுமற்று அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் அனைத்து தரப்பினரும் ஹர்த்தாலுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும்’ என்று தென்னிந்தியத் திருச்சபையின் பேராயர் கலாநிதி வேலுப்பிள்ளை பத்மதயாளன் தெரிவித்தார்.

https://athavannews.com/2023/1330668

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு – கிழக்கில் நிர்வாக முடக்கல்: பல்கலைக்கழக மாணவ ஒன்றியங்களால் விடுக்கப்பட்டுள்ள அழைப்பு

15-17.jpg

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் மற்றும் தமிழர் தாயகத்தில் முன்னெக்கப்படும் பௌத்த மயமாக்கலை எதிர்த்து, தமிழ்த் தேசியக் கட்சிகளால் நாளை மறுதினம் (25.04.2025) முன்னெடுக்கப்படும் நிர்வாக முடக்கலுக்கு ஆதரவு வழங்குவதாக யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், கிழக்கு பல்கலைக்கழக கலைகலசார பீட மாணவர் ஒன்றியம், இலங்கை திறந்த பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஆகியன தெரிவித்துள்ளன.

இதற்கமைய ”நிர்வாக முடக்கலுக்கு எமது பூரண ஆதரவு உண்டு. இதனை முன்னெடுக்கின்ற அரசியல்வாதிகள் வெறுமனே கதவடைப்புடன் மாத்திரம் தமது எதிர்ப்புக்களை சுருக்கிவிடாது தொடர்ச்சியாக மக்கள் மயப்படுத்திய போராட்டங்களை முன்னெடுக்கவேண்டும்”  என யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் அழகராசா விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

இதன்போது “தமிழர்களின் இருப்பை நசுக்கவும் போராட்டச் சிந்தனையை முற்றாக இல்லாது செய்யவும் 30 வருடங்களாக நடைமுறையிலிருந்த பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் ஜனநாயகத்தை மீறியவகையில் பலவாறாக எம்மைப் பாதித்தது. இதனை நிறுத்துவதை விடுத்து இதற்கு மேலாக நடைமுறைக்கு வரவிருக்கும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் அரச இயந்திரத்தின் சதிச்செயலாகும். இதற்கும் எதிர்ப்புத் தெரிவித்து முன்னெடுக்கப்படும் வடக்கு மற்றும் கிழக்கு தழுவிய நிர்வாக முடக்கலுக்கு எமது பூரண ஆதரவை வழங்குகின்றோம்” என யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர் சில்வெஸ்டார் ஜெல்சின் தெரிவித்துள்ளார்.

தொடர்ச்சியாக எமது மாணவர் சமூகத்தை நசுக்குகின்ற ஒரு சட்டமான இந்தப் பயங்கரவாதத் தடைச்சட்டம் எத்தனை உருமாறி வந்தாலும் அது ஆபத்தானதே. நாளைமறுதினம் முன்னெடுக்கப்படவுள்ள பூரண நிர்வாக முடக்கலுக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களாகிய எமது பூரண ஆதரவு உள்ளது” என கிழக்கு பல்கலைக்கழக கலைகலாசார பீட மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

மேலும் “தெற்கிலே நாளை 24 ஆம் திகதி அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்கின்றது. இந்நிலையில் வடக்கு – கிழக்கில் இவ்வாறான பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்த பூரண நிர்வாக முடக்கலுக்கு நாம் ஆதரவளிக்கின்றோம்” என இலங்கை திறந்த பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கூறியுள்ளமை குறிப்புடத்தக்கது.

 

https://akkinikkunchu.com/?p=244066

 

  • கருத்துக்கள உறவுகள்

ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்குமாறு ரெலோ இளைஞர் அணி அழைப்பு

Published By: VISHNU

23 APR, 2023 | 04:04 PM
image

இளைஞர் அணி தலைவர் சபா குகதாஸ் சிங்கள பேரினவாத அரசாங்கம் தமிழர் தாயகத்தில் மேற்கொள்ளும் சட்டரீதியற்ற காணி அபகரிப்பு, பௌத்த மயமாக்கல், சைவக் கோவில்கள் அழிப்பு, தொல்லியல்களை மாற்றியமைத்தல் போன்ற செயற்பாடுகளை நிறுத்தக் கோரியும் பயங்கரவாத தடை சட்டத்தை நீக்குவதுடன் உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை மீளப் பெறுமாறும் எதிர்வரும் 25 திகதி செவ்வாய்க்கிழமை தமிழர் தாயகமான வடக்கு கிழக்கு மாகாணங்கள் தழுவிய முழுமையான ஹர்த்தாலுக்கு அனைவரையும் ஒத்துழைப்பு தருமாறு வடகிழக்கில் உள்ள தமிழ்த் தேசியக் கட்சிகளும் சமூக மற்றும் மத அமைப்புக்களும் கூட்டாக முடிவெடுத்து அழைத்துள்ளனர்.

அந்த வகையில் வடக்கு கிழக்கு எட்டு மாவட்டங்களையும் பிரதி நிதித்துவம் செய்யும் தேசியக் கட்சியாகிய தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) அதன் இளைஞர் அணி இந்த முழுமையான ஹர்த்தாலுக்கு அனைவரும் ஆதரவு நல்குமாறு அழைக்கின்றோம்.

சிங்கள பேரினவாத அரசின் தொடர்ச்சியான அடக்கு முறையை தொடர்கிறது என்பதை முழு உலகிற்கும்  அனைத்து மக்களின் வெளிப்பாடாக வெளிப்படுத்த  இந்த பொது முடக்கத்திற்கு உரிமையுடன் ஒத்துழைப்பு தருமாறு அனைவரிடமும் வேண்டுகின்றோம்.

https://www.virakesari.lk/article/153533

  • கருத்துக்கள உறவுகள்

ஹர்த்தாலுக்கு ஆதரவு : யாழ். தென்னிந்திய திருச்சபையின் பேராயர் மற்றும் யாழ். கத்தோலிக்க மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு

Published By: Nanthini

24 Apr, 2023 | 10:47 AM
image

மிழ் தேசிய கட்சிகளால் வடக்கு, கிழக்கில் நாளை செவ்வாய்க்கிழமை (25) முன்னெடுக்கப்படவுள்ள நிர்வாக முடக்கலுக்கு ஆதரவு வழங்குவதாக மன்னார், மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்ட ஆயர்கள், யாழ்ப்பாணம் தென்னிந்திய திருச்சபையின் பேராயர் மற்றும் யாழ். கத்தோலிக்க மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு தெரிவித்துள்ளன.

அருட்பணி ச.வி.ப. மங்களராஜா (இயக்குநர், யாழ். கத்தோலிக்க மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு)

"பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்துக்கு எதிராகவும், தமிழர் தாயகத்தில் முன்னெடுக்கப்படுகின்ற சிங்கள பௌத்த பேரினவாதத்தின் ஆக்கிரமிப்பை கண்டித்தும் நாளை செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்படவுள்ள கதவடைப்புப் போராட்டத்துக்கு யாழ். கத்தோலிக்க மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு தமது பூரண ஆதரவை வழங்கும்" என அதன் இயக்குநர் அருட்பணி ச.வி.ப. மங்களராஜா தெரிவித்துள்ளார். 

மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ 

"பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் இலங்கைக்கு மட்டுமல்ல, எந்தவொரு நாட்டுக்கும் பொருந்தாது. அதனை முற்றாக எதிர்க்க வேண்டும். நாங்கள் இந்த ஹர்த்தாலுக்கு ஆதரவை வழங்குகிறோம்" என மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ கூறியுள்ளார்.

திருகோணமலை மறைமாவட்ட ஆயர் கிறிஸ்டியன் நோயல் இமானுவேல் 

"மக்களினுடைய சுதந்திரத்துக்கும் உரிமைக்கும் பாதகமான விடயங்களுக்கு எதிராக குரல் கொடுக்கப்பட வேண்டும். ஹர்த்தாலுக்கு முழுமையான ஆதரவளிக்கின்றேன்" என்று திருகோணமலை மறைமாவட்ட ஆயர் கிறிஸ்டியன் நோயல் இமானுவேல் கூறியுள்ளார்.

மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் ஜோசப் பொன்னையா 

"அமைதியான சூழல் நிலவுவதற்காக நாங்கள் எப்பொழுதும் போராடிக்கொண்டே இருப்போம். இவ்வாறான சட்டங்கள் உடனடியாக நீக்கப்படவேண்டும். ஹர்த்தாலுக்கு முழுமையான ஆதரவை வழங்குகின்றேன்" என்றார் மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் ஜோசப் பொன்னையா.

தென்னிந்திய திருச்சபையின் பேராயர் கலாநிதி வேலுப்பிள்ளை பத்மதயாளன் 

"பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை ஒட்டுமொத்த தமிழ் பேசும் மக்களும், சகோதர மொழி பேசுகின்ற மக்களும் முனைப்போடு எதிர்க்க வேண்டும் என்பது என்னுடைய ஆணித்தரமான கருத்து. இம்முறை அனைத்து கட்சிகளும் ஒரே கண்ணோட்டத்தில், ஒரே தளத்தில் நின்று ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்ததை நான் பாராட்டுகின்றேன்.

இதில் எந்தவித வேறுபாடுகளுமற்று அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் அனைத்து தரப்பினரும் ஹர்த்தாலுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும்" என்று தென்னிந்திய திருச்சபையின் பேராயர் கலாநிதி வேலுப்பிள்ளை பத்மதயாளன் தெரிவித்தார்.
 

 

https://www.virakesari.lk/article/153583

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு, கிழக்கில் நாளை ஹர்த்தாலுக்கு முஸ்தீபு

Published By: DIGITAL DESK 5

24 APR, 2023 | 10:55 AM
image

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்திற்கு எதிராகவும் பௌத்தமயமாக்கலுக்கு  எதிராகவும்  வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ் அரசியல் கட்சிகள் நாளை (25) ஹர்த்தால் போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளன.

இதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட வடக்கு, கிழக்கில் உள்ள 07 தமிழ் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து இந்த ஹர்த்தாலுக்கு ஆதரவளித்துள்ள நிலையில், வடக்கு, கிழக்கிலுள்ள மத தலைவர்களும் இதற்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளனர்.

வடக்கு, கிழக்கில் தமிழ் மக்களை ஒடுக்கும் பயங்கரவாதத் தடைச் சட்டம் உடனடியாக நீக்கப்பட்டு அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்பதே ஹர்த்தாலின் பிரதான நோக்கமாகும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

இதற்கு வடகிழக்கு போக்குவரத்து சங்க பிரதிநிதிகள் மற்றும் வர்த்தக சங்க பிரதிநிதிகளும் ஆதரவு அளிப்பார்கள் என வடகிழக்கு அரசியல் கட்சிகள் நம்பிக்கை தெரிவிக்கும் அதே வேளையில் வடகிழக்கு அரசியல் கட்சிகளும் அரசாங்கத்திற்கு அழுத்தங்களை பிரயோகிக்கவுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.

https://www.virakesari.lk/article/153584

  • கருத்துக்கள உறவுகள்

சச்சியர் என்னமாதிரி? அவருக்கு கிறிஸ்தவர்களை கலைப்பதுதான் முதல் வேலை!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தனியார் ஊழியர்கள் எவரும் நாளை பணிக்கு செல்ல தேவையில்லை – வடமாகாண தனியார் வர்த்தக ஊழியர் சங்கம்

தனியார் ஊழியர்கள் எவரும் நாளை பணிக்கு செல்ல தேவையில்லை – வடமாகாண தனியார் வர்த்தக ஊழியர் சங்கம்

வடக்கு மாகாணத்தை சேர்ந்த தனியார் ஊழியர்கள் எவரும் நாளைய தினம்(செவ்வாய்கிழமை) பணிக்கு செல்ல தேவையில்லை என வடமாகாண தனியார் வர்த்தக ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.

நாளைய பொது முடக்கம் தொடர்பில் யாழ்.ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தனியார் வர்த்தக ஊழியர் சங்கத்தின் தலைவர் சாமிநாதன் சிவகுமார் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text that says 'பயங்கரவாத எதிப்புச் சட்டத்தை நிராகரிக்க கோரியும், வடகிழக்கு பிரதேசங்களில் பெௌத்த, சிங்கள, இராணுவமயமாக்கலை நிறுத்தக்கோரியும், எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (25.04.2023) பொது முடக்கத்திற்கு தயாராகும் தமிழர் தாயகம்! മসkara'

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.