Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மக்களுக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் போதை ஊட்டுகின்றனர் - டக்ளஸ் தேவானந்தா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மக்களுக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் போதை ஊட்டுகின்றனர்

April 28, 2023

douglas.jpg?resize=1200%2C540

சில தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்குகளை அபகரிக்க கூடிய வகையில் கருத்துக்களை கூறி, தமிழ் மக்களுக்கு ஒரு போதையை ஊட்டுகின்றனர். அவர்கள் தொடர்பில் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும்  என கடற் தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்

யாழ்ப்பாணம் வேலனை பிரதேச செயலகத்தில், இன்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இலவச அரிசிப்பொதி வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் ,

வறிய மக்களுக்கு உதவும் முகமாக நாடு முழுவதும் 20 லட்சம் குடும்பங்களை தெரிவு செய்து, ஒரு குடும்பத்திற்கும் தலா 10 கிலோ அரிசி வீதம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்த திட்டம் வட மாகாணத்தை பொறுத்தவரையில், இலங்கையினுடைய ஏனைய மாகாணங்களை விட சிறப்பாக முன்னெடுக்கப்படுகின்றது. அந்த வகையில் சம்பந்தப்பட்ட அரசாங்க அதிபர்களுக்கு இந்த சந்தர்ப்பத்தில் நன்றி கூற கடமைப்பட்டு இருக்கின்றேன்.

ஒரு தேவையற்ற யுத்தத்தில் விசேடமான பிரச்சனைகள் எதிர்கொள்ளப்பட்டது. இந்த பிரச்சனைகளில் இருந்து விடுபட்டு நாடு தழுவிய ரீதியில் பொருளாதார ரீதியான பாதிப்புகளுக்கு எங்கள் மக்கள் முகம் கொடுத்து வருகின்றார்கள்.

அந்த வகையில் இந்த நாடு கடந்த கால தேவையற்ற அழிவு யுத்தம் காரணமாக, கொரோனா தொற்று காரணமாக, ஆட்சி தலைவர்களின் நிதி மற்றும் பொருளாதார முறையான முகமைத்துவம் இல்லாத நிலை காரணமாக, எங்களுடைய நாடு பொருளாதார ரீதியாக ஒரு அதாள பாதாளத்துக்கு சென்று விட்டது.அந்த நேரத்தில் இந்த நாட்டுக்கு தலைமை தாங்கக் கூடிய, பாதிப்பில் இருந்து மக்களை மீட்க கூடிய, முன்னோக்கி கொண்டு செல்லக்கூடிய வகையில் யாரும் இருக்கவில்லை.

எல்லோரும் பின்னடித்த நேரத்தில் எங்களுடைய மாண்புமிகு ஜனாதிபதி ரனில் விக்ரமசிங்க அவர்கள் முன் வந்ததை மக்கள் சார்பாக இந்த சந்தர்ப்பத்தில் அவருக்கு நான் பாராட்டை தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.பாராளுமன்றத்தில் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் கட்டைக்காடில் இருநூறு ஏக்கர் சீனாவுக்கும், கிளிநொச்சியில் 800 ஏக்கர் வெளிநாடுகளுக்கு கொடுப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்தார்.

அதில் எந்தவிதமான உண்மை இல்லை.  நமது அரசாங்கத்தில் அவ்வாறு திட்டமும் இல்லை. எந்தவிதமான அடிப்படையும் இல்லாமல் அவ்வாறான பொய்யினை சில தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறுவதன்  ஊடாக மக்களை தவறாக வழி நடத்துகின்றனர். வாக்குகளை அபகரிக்க கூடிய வகையில் கருத்துக்களை வைத்து வருகின்றார்கள். அது தொடர்பில்,  மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும்.

போதை வஸ்து பற்றி பேசுகின்றோம். இவர்களுடைய இந்த கருத்துக்களும் மக்களுக்கு ஒரு போதை ஊட்டக்கூடிய வகையில் தான் அமைந்திருக்கின்றனஎன்றார்,
 
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

சில தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்குகளை அபகரிக்க கூடிய வகையில் கருத்துக்களை கூறி, தமிழ் மக்களுக்கு ஒரு போதையை ஊட்டுகின்றனர்

சொல்வது யார் சிங்கள அமைச்சரோ? சிங்களத்தோடு சேர்ந்து தான் யாரென்பதே மறந்து விட்டது இவருக்கு.

3 hours ago, கிருபன் said:

அந்த வகையில் சம்பந்தப்பட்ட அரசாங்க அதிபர்களுக்கு இந்த சந்தர்ப்பத்தில் நன்றி கூற கடமைப்பட்டு இருக்கின்றேன்.

சிங்களத்துக்கு பின்னல் அலைந்து மக்களை கையேந்த வைத்ததற்கு கண்டிப்பாக இவர் நன்றி கூறித்தான் ஆகவேண்டும். இவர் மக்களுக்கு காட்டிய அபிவிருத்தியது.

 

3 hours ago, கிருபன் said:

இந்த நாடு கடந்த கால தேவையற்ற அழிவு யுத்தம் காரணமாக, கொரோனா தொற்று காரணமாக, ஆட்சி தலைவர்களின் நிதி மற்றும் பொருளாதார முறையான முகமைத்துவம் இல்லாத நிலை காரணமாக, எங்களுடைய நாடு பொருளாதார ரீதியாக ஒரு அதாள பாதாளத்துக்கு சென்று விட்டது.

அப்பவும் சிங்களத்துக்கு வெள்ளை அடிக்குது, அமைச்சரவை வேண்டுமெல்லோ.

3 hours ago, கிருபன் said:

ஆட்சி தலைவர்களின் நிதி மற்றும் பொருளாதார முறையான முகமைத்துவம் இல்லாத நிலை காரணமாக, எங்களுடைய நாடு பொருளாதார ரீதியாக ஒரு அதாள பாதாளத்துக்கு சென்று விட்டது.அந்த நேரத்தில் இந்த நாட்டுக்கு தலைமை தாங்கக் கூடிய, பாதிப்பில் இருந்து மக்களை மீட்க கூடிய, முன்னோக்கி கொண்டு செல்லக்கூடிய வகையில் யாரும் இருக்கவில்லை.

கோத்தாவுக்கு கேக்காது என்று நினைத்தாரோ அல்லது அவரால் இனி தன்னை ஒன்றும் செய்ய முடியாது என்று துணிந்தாரோ?

3 hours ago, கிருபன் said:

எல்லோரும் பின்னடித்த நேரத்தில் எங்களுடைய மாண்புமிகு ஜனாதிபதி ரனில் விக்ரமசிங்க அவர்கள் முன் வந்ததை மக்கள் சார்பாக இந்த சந்தர்ப்பத்தில் அவருக்கு நான் பாராட்டை தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.

பாவம் ரொம்ப மறதிக்குணம். இந்திய பத்திரிகைக்காரர் ஒருவர் பேட்டியெடுத்தபோது, கோத்தா ஒளிந்திருந்த போது, இவர் அளித்தபதில்; இந்தப்பிரச்சனை தற்காலிகமானது, இன்னும் ஒருசில தினங்களில் நமது ஜனாதிபதி இதற்கெல்லாம் தீர்வு காணுவார் என்றார்.  அவர் கூறிய ஒருசில தினங்களில் ரணில் அழைக்க, ஓடிப்போய் சொந்தம் கொண்டாடிக்கொண்டு  குந்திவிட்டார். அதுசரி.... பிச்சை போடுகிறவர் யாராக இருந்தாலும் வேண்டுபவர் பாராட்டத்தானே வேண்டும். இவருக்கு என்ன திறமையினாலேயா பதவி கிடைக்கிறது? இவரது கூலித் தொழில் யாருக்கு தேவைப்படுகிறதோ அவர்கள் வேலைக்கு அமர்த்துவார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

அரிசிப் பொதியோடும் வந்தீரோ தம்பி, அரிசி மலைநாடும் கண்டீரோ தம்பி.....

நெல்லுப் உதியோடும் வந்தீரோ தம்பி, நெல்லு மலைநாடும் கண்டீரோ தம்பி....

இவர் அரிசிப் பொதி கொடுக்கிறார் என்றவுடன் "மண்டுமந்த மேனியர்" நாடகம் மனதில் வருகிறது. 

இவர்களை எல்லாம் தலையில் வைத்துக் கொண்டாடிய பழைய ஞாபகம்தான் வந்து தொலைக்கிறது......😏

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கில் இந்த 20 கிலோ அரிசியை பிச்சையாக கொடுத்து விட்டு, இதை முதலீடாக வைத்து மக்கள் முன்னேறவேண்டுமென்று  கிழக்கின் விடிவெள்ளி ஒன்று அறிவுரை கொடுத்தது. தமிழரை அழித்த இராணுவம் தமிழருக்கு உணவூட்டுதாம், அவ்வளவு பாசம். தமிழினம் சிங்களத்துக்கு எதிரி, ஆனால் அவர்களின் தலைவர்களுக்கு  சிங்களம் விருந்தாளிகள், அவர்களை அழைத்து மக்களை, அவர்களின் நிலங்களை, உரிமைகளை விருந்தளிக்கிறார்களாம். வந்தவர்களோ விருந்துண்ட களிப்பில் ஓம்பியவரின் கோவணத்தை உருவியதும்  உண்டு, ஆனாலும் பாராட்டுகிறார்கள் காரணம் உருவிய கோவணத்தோடு இருந்த வெக்கம், துக்கம் எல்லாம்  சேர்ந்து போட்டுது, இனி அது அவர்களிடம் இருந்தாற்தானே வருவதற்கு. கை தட்டி பாராட்டி மறைக்கிறார்களாம்.   

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.