Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கையில் இருந்து மேலும் 10 பேர் அகதிகளாக தமிழகத்தில் தஞ்சம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: DIGITAL DESK 3

06 MAY, 2023 | 03:19 PM
image

தொடரும் பொருளாதார நெருக்கடியால் மேலும் 10 இலங்கை தமிழர்கள் இன்று சனிக்கிழமை காலை தமிழகத்தை சென்றடைந்துள்ளனர்.  

நாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக அங்குள்ள மக்கள் உணவு பொருட்கள், அத்தியாவசிய தேவைகளுக்காக கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். 

இதனால் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் இலங்கையில் இருந்து 244 இலங்கை தமிழர்கள் தனுஷ்கோடிக்கு அகதிகளாக வந்துள்ளனர்.

இந்நிலையில் இலங்கை முல்லைத்தீவு மாவட்டம் 8 ஆம் வட்டாரம் பகுதியை சேர்ந்த இரண்டு ஆண்கள், நான்கு பெண்கள், மூன்று ஆண்குழந்தை ஒரு பெண் குழந்தை உட்பட 10 பேர் முல்லைத்தீவு கடற்கரையில் இருந்து நேற்று இரவு  பைபர் படகில் புறப்பட்டு இன்று அதிகாலை தனுஷ்கோடி அடுத்துள்ள முதல் மணல் திட்டிற்கு சென்றுள்ளனர்.

இலங்கை தமிழர்கள் மணல் திட்டில் காத்திருப்பதை கண்ட அப்பகுதியில் மீன் பிடித்த நாட்டுப்படகு மீனவர்கள் மரைன் காவல் ஆய்வாளருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்த ராமேஸ்வரம் மரைன் பொலிஸார் இலங்கை தமிழர்களை மீட்டு மண்டபம் மரைன் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணையில் இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதில் இருந்து அத்தியாவசிய பொருட்களின் விலை குறைந்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் இன்னும் அத்தியாவசிய பொருட்களின் விலை குறைந்தபாடில்லை. இலங்கையில் வாழ வழி இல்லாமல் தான் இந்திய மக்களை நம்பி கடலில் உயிரை பணயம் வைத்து பிளாஸ்டிக் படகில் சென்றதாக 75 வயது மூதாட்டி தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இந்து கோவில்களை இடித்து விட்டு புத்த விகாரைகளை சட்விரோதமாக கட்டி வருவதாக இலங்கையில் இருந்து அகதியாக வந்தவர் தெரிவித்தார்.

பாதுகாப்பு வட்டார அதிகாரிகளின் விசாரணைக்கு பிறகு 10 பேரும் மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைக்கப்பட உள்ளனர். பொருளாதார நெருக்கடி காரணமாக தமிழகத்திற்கு இலங்கையிலிருந்து வந்த அகதிகளின் எண்ணிக்கை 254 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/154648

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சட்டவிரோதமாக இந்தியா செல்ல முயற்சித்த 6 பேர் கைது !

மன்னார் பகுதியில் இருந்து, சட்டவிரோதமாக படகுமூலம், இந்தியாவுக்கு செல்ல முயற்சித்த 6 பேர், கடற்படையால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

நான்கு ஆண்களும், இரண்டு பெண்களும் இவ்வாறு கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவர்களில் மூன்று சிறார்களும் அடங்குகின்றனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக, மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

https://thinakkural.lk/article/252414

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த புலம்பெயர் அவல நிலைகளுக்கு முக்கிய காரணம் இன்றுள்ள தமிழ் அரசியல்வாதிகளே... 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.