Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கேரளாவில் உல்லாசப் படகு கவிழ்ந்து 22 பேர் பலி: விபத்து நேரிட்டது எப்படி? அதிக உயிரிழப்பு ஏன்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
படகு விபத்து நேரிட்டது எப்படி?
கட்டுரை தகவல்
  • எழுதியவர்,சுதாகர்
  • பதவி,பிபிசி தமிழுக்காக
  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் உல்லாசப் படகு கவிழ்ந்ததில் 22 பேர் பலியானார்கள். 20 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். , அதில் 6 பேருக்கு பெரியளவில் பாதிப்பு இல்லை. மற்றவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டம் தானூர் தாலுகாவிற்கு உட்பட்ட ஓட்டும்புறம், தூவல் தீரம் என்ற இடத்தில் சுற்றுலா பயணிகள் கடலில் உல்லாச பயணம் செய்து வருவது வாடிக்கையானது. அவ்வாறு சுற்றுலா வந்த இடத்தில் ஈரடுக்கு உல்லாசப் படகில் சுற்றுலாப் பயணிகள் சுற்றிப் பார்க்கச் சென்ற போது இந்த விபத்து நேரிட்டுள்ளது.

விபத்து நேரிட்டதும், மீட்புப் படையினருடன் உள்ளூர் மக்களும் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். விபத்துக்குள்ளான படகை வெட்டி மக்கள் வெளியே கொண்டு வந்தனர். மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தனூர், திரூர் தீயணைப்புத் துறையினர், காவல்துறை, வருவாய்த்துறை, சுகாதாரத் துறையினர் மற்றும் அப்பகுதி மக்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அமைச்சர்கள் பிஏ முஹம்மது ரியாஸ் மற்றும் வி அப்துர் ரஹ்மான் ஆகியோர் மீட்பு பணியை ஒருங்கிணைத்து வருகின்றனர்.

மீட்பு பணிகளுக்காக தேசிய பேரிடர் மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் இணைந்துள்ளனர். இந்த விபத்தில் இதுவரை 22 இறப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இதில் 6 குழந்தைகள் 3 பெண்கள் அடங்குவர். 20 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்டவர்களில் 6 பேர் நலமுடன் இருப்பதாகவும், மீதமுள்ளவர்களுக்கு தீவிர சிகிச்சை பிரிவில், சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுவரை 12 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. திரூறங்காடி மருத்துவமனையில் 8 உடல்கள் உள்ளன. இறந்தவர்களில் குழந்தைகள் அதிகம் என்பது பெரும் வேதனையளிப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். காயமடைந்தவர்கள் அருகிலுள்ள ஊர்களில், இருக்கும் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவ்விபத்தில் நசருதீன் என்ற கண்ட்ரோல் ரூம் போலீஸ்காரரும் இறந்துள்ளார். அவர் குடும்பத்துடன் படகில் சென்றுள்ளார்.

படகு விபத்து நேரிட்டது எப்படி?

மீட்புப்பணிகளை துரிதப்படுத்த உத்தரவு

அவசர மீட்புப் பணிகளை மேற்கொள்ளுமாறு மலப்புரம் மாவட்ட ஆட்சியருக்கு முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

மலப்புரம் தானூரில் படகு விபத்தில் காயமடைந்தவர்களுக்கு நிபுணத்துவ சிகிச்சை அளிக்கவும், அவர்களுக்கு போதிய ஏற்பாடுகளை செய்யவும் சுகாதாரத்துறை இயக்குனருக்கு சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் உத்தரவிட்டார். மஞ்சேரி மருத்துவக் கல்லூரி மற்றும் அரசு மருத்துவமனைகளில் கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அருகில் உள்ள தனியார் மருத்துவமனைகளிலும் அரசு மருத்துவர்களின் சேவை அளிக்கப்பட்டு வருகிறது.

இவ்விபத்தில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள சிலர் அபாய கட்டத்தில் இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.உயிரிழந்தவர்களுக்கு தலா 2 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

படகு விபத்து நேரிட்டது எப்படி?

அதிக உயிரிழப்புக்கு காரணம் என்ன?

ஞாயிற்றுக்கிழமை என்பதால் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகளவில் இருந்துள்ளது. விபத்துக்குள்ளான படகில் 40 க்கும் மேற்பட்டோர் பயணித்ததாக உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர். மாலை 6 மணி வரை மட்டுமே படகு சவாரி செய்ய அரசு அனுமதித்துள்ளது. ஆனால், நாசர் என்பவருக்கு சொந்தமான ஈரடுக்கு கொண்ட அந்த உல்லாசப் படகு இரவு 7 மணிக்கு மேல் சுற்றுலா பயணிகள் 40க்கும் மேற்பட்டோருடன் புறப்பட்டுள்ளது. கடற்கரையில் இருந்து சுமார் 500 மீட்டர் சென்றபோது, இந்த படகு தலைகீழாக கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

படகில் உயிர் காக்கும் தற்காப்பு கருவிகள் எதுவும் இருக்கவில்லை. இரண்டு அடுக்குகொண்ட படகில் அளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றியதும், நேரம் கடந்த பிறகு இருளில் படகு சவாரி சென்றதும் அதிக அளவில் உயிரிழப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

https://www.bbc.com/tamil/articles/c25evxg8zeqo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கேரள படகு விபத்து: ஒரே குடும்பத்தில் 9 பேர் பலி - விதிகள் அப்பட்டமாக மீறப்பட்டது எப்படி?

படகு விபத்து நேரிட்டது எப்படி?
கட்டுரை தகவல்
  • எழுதியவர்,சுதாகர்
  • பதவி,பிபிசி தமிழுக்காக
  • 8 மே 2023, 02:55 GMT
    புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் உல்லாசப் படகு கவிழ்ந்ததில் 22 பேர் பலியானார்கள். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை 9 பேர் உயிரிழந்துள்ளனர். மற்றொரு குடும்பத்தில் தாய், குழந்தைகள் என 4 பேர் உயிரைப் பறிகொடுத்தனர். படகுச் சுற்றுலாவில் விதிகள் அப்பட்டமாக மீறப்பட்டதே அதிக உயிரிழப்புக்கு காரணமாக கூறப்படுகிறது. விபத்து குறித்து நீதி விசாரணை நடத்த கேரள அரசு உறுதியளித்துள்ளது.

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் தானூர் தாலுகாவிற்கு உட்பட்ட ஓட்டும்புறம், தூவல் தீரம் என்ற இடத்தில் சுற்றுலா பயணிகள் கடலில் உல்லாச பயணம் செய்வது வாடிக்கை. அவ்வாறு சுற்றுலா வந்த இடத்தில் ஈரடுக்கு உல்லாசப் படகில் சுற்றுலாப் பயணிகள் சுற்றிப் பார்க்கச் சென்ற போது இந்த விபத்து நேரிட்டுள்ளது.

விபத்து நேரிட்டதும், மீட்புப் படையினருடன் உள்ளூர் மக்களும் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். விபத்துக்குள்ளான படகை வெட்டி மக்கள் வெளியே கொண்டு வந்தனர்.

படகில் சுமார் 40 பேர் இருந்ததாக உறுதிப்படுத்தப்படாத தகவல் உள்ளது. 22 பேர் உயிரிழந்தனர். 5 பேர் நீந்தி உயிர்தப்பினர். 10 பேர் மீட்கப்பட்டனர். இன்னும் ஒருவரின் நிலை மட்டும் என்னவென தெரியவில்லை. இதன் அடிப்படையில் விபத்து நடந்த இடம் மற்றும் அதன் அருகில் உள்ள இடங்களில் தேடுதல் வேட்டை தொடர்கிறது. அமைச்சர்கள் பிஏ முஹம்மது ரியாஸ் மற்றும் வி அப்துர் ரஹ்மான் ஆகியோர் மீட்பு பணியை ஒருங்கிணைத்து வருகின்றனர்.

 

உயிரிழந்த 22 பேரில் 9 பேர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள். பரப்பனங்காடி கூனும்மாள் வீட்டில் சைதலவி, அவரது சகோதரர் சிராஜ் ஆகியோரின் மனைவி, குழந்தைகள் உட்பட 9 பேர் உயிரிழந்தனர். சைதலவியின் மனைவி ஜீனத் (43), குழந்தைகள் ஹஸ்னா (18), ஷஃபாலா (13), ஷாம்னா (12), ஃபிதா தில்னா (7), சிராஜின் மனைவி ரசினா (27), குழந்தைகள் ஜஹாரா, (8), நைரா (7), மற்றும் ஒன்றரை வயது ருஷ்தா உயிரிழந்தார்.

படகு விபத்து நேரிட்டது எப்படி?

பட மூலாதாரம்,ANI

பிரேத பரிசோதனைக்குப் பிறகு, ஒன்பது பேரின் உடல்களும் குழந்தைகள் ஒன்றாக விளையாடி வளர்ந்த வீட்டிற்கு கொண்டு வரப்படும். அவரது மரணச் செய்தி கேட்டு குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் கண்ணீர் விட்டு கதறி அழுது வருகின்றனர்.

இதேபோல், மலப்புரம் செட்டிப்பாடியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், குழந்தைகள் என 4 பேர் உயிரிழந்தனர். ஆயிஷாபி (38) மற்றும் அவரது குழந்தைகள் அடிலா ஷெரின் (13), அர்ஷன் (3), அட்னான் (10) ஆகியோர் உயிரிழந்தனர். மற்றொரு மகன் ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஆயிஷாபியின் தாய் சீனத்தும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுவரை 12 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. திரூறங்காடி மருத்துவமனையில் 8 உடல்கள் உள்ளன. இறந்தவர்களில் குழந்தைகள் அதிகம் என்பது பெரும் வேதனையளிப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இவ்விபத்தில் நசருதீன் என்ற கண்ட்ரோல் ரூம் போலீஸ்காரரும் இறந்துள்ளார். விபத்துக்குள்ளான படகில் அவர் குடும்பத்துடன் பயணித்ததாக தெரிகிறது.

படகு விபத்து நேரிட்டது எப்படி?

படகு விபத்து நேரிட்டது எப்படி?

தூவல் தீரம் கடற்கரையில் படகு விபத்தை நேரில் பார்த்த அப்பகுதி மீனவர் பிரகாசன், பிபிசி தமிழிடம் கூறுகையில்,

"படகில் தண்ணீர் புகுந்த போதும் ஓட்டுநர் தொடர்ந்து அழமான பகுதியிலேயே போட்டை செலுத்தினார் . படகை உடனடியாக கரைக்கு கொண்டு வந்திருந்தால் விபத்தை தடுத்திருக்கலாம்.

விபத்துக்குள்ளான படகு சுற்றுலாவுக்கு ஏற்றதல்ல எனவும் , இது ஒரு மீன்பிடி படகு, சுற்றுலாப் படகு போல் மாற்றியமைக்கப்பட்டுள்ளது, என்றார். சுற்றுலாவிற்குப் பயன்படுத்தப்படும் படகுகள் பொதுவாக தட்டையான அடிப்பகுதியைக் கொண்டுள்ளன, இதனால் அவை எளிதில் மூழ்கும் வாய்ப்புகள் குறைவு. எனினும், இந்த படகின் அடிப்பகுதி போதுமான அகலமாக இல்லை" என்றார்.

படகு விபத்து நேரிட்டது எப்படி?
 
படக்குறிப்பு,

மீனவர் பிரகாசன்

ரூ.10 லட்சம் நிதியுதவி, நீதி விசாரணை

சம்பவ இடத்தை கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் நேரில் பார்வையிட்டு இறந்தவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார். சிகிச்சை பெற்று வருபவர்களையும் அவர் சந்தித்து பேசினார்.

இறந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும், காயமடைந்தவர்களின் மருத்துவச் செலவை மாநில அரசே ஏற்கும் என்பன போன்ற அறிவிப்புகளை அவர் வெளியிட்டார்.

“இந்த விபத்தை அரசு தீவிரமாக எடுத்துக் கொள்கிறது. விபத்து குறித்து நீதி விசாரணை நடத்தப்படும். விசாரணைக்காக தொழில்நுட்ப வல்லுநர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும். மாநிலத்தில் முந்தைய பேரிடர்களின் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க ஆய்வு நடத்தப்பட்டது. இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்காமல் இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இப்போதே எடுக்க வேண்டும். அதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

படகு கவிழ்ந்து 22 பேர் பலி
 
படக்குறிப்பு,

கேரள படகு விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலமைச்சர் பினராயி விஜயன் நேரில் ஆறுதல்

மலப்புரம் தானூரில் படகு விபத்தில் காயமடைந்தவர்களுக்கு நிபுணத்துவ சிகிச்சை அளிக்கவும், அவர்களுக்கு போதிய ஏற்பாடுகளை செய்யவும் சுகாதாரத்துறை இயக்குனருக்கு சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் உத்தரவிட்டார். மஞ்சேரி மருத்துவக் கல்லூரி மற்றும் அரசு மருத்துவமனைகளில் கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அருகில் உள்ள தனியார் மருத்துவமனைகளிலும் அரசு மருத்துவர்களின் சேவை அளிக்கப்பட்டு வருகிறது.

இவ்விபத்தில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள சிலர் அபாய கட்டத்தில் இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. உயிரிழந்தவர்களுக்கு தலா 2 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

படகு விபத்து நேரிட்டது எப்படி?

பட மூலாதாரம்,ANI

அதிக உயிரிழப்புக்கு காரணம் என்ன?

ஞாயிற்றுக்கிழமை என்பதால் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகளவில் இருந்துள்ளது. விபத்துக்குள்ளான படகில் 40 க்கும் மேற்பட்டோர் பயணித்ததாக உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர். மாலை 6 மணி வரை மட்டுமே படகு சவாரி செய்ய அரசு அனுமதித்துள்ளது. ஆனால், நாசர் என்பவருக்கு சொந்தமான ஈரடுக்கு கொண்ட அந்த உல்லாசப் படகு இரவு 7 மணிக்கு மேல் சுற்றுலா பயணிகள் 40க்கும் மேற்பட்டோருடன் புறப்பட்டுள்ளது. கடற்கரையில் இருந்து சுமார் 500 மீட்டர் சென்றபோது, இந்த படகு தலைகீழாக கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

இரண்டு அடுக்குகொண்ட படகில் அளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றியதும், நேரம் கடந்த பிறகு இருளில் படகு சவாரி சென்றதும் அதிக அளவில் உயிரிழப்பை ஏற்படுத்தி இருக்கிறது. படகில் உயிர் காக்கும் தற்காப்பு கருவிகள் எதுவும் இருக்கவில்லை. உல்லாசப் படகு கவிழ்ந்த போது அதிலிருந்த ஒருவர் கூட லைஃப் ஜாக்கெட் அணிந்திருக்கவில்லை என்பது முதல்கட்ட விசாரணையில் உறுதியாகியுள்ளது.

https://www.bbc.com/tamil/articles/c25evxg8zeqo

  • கருத்துக்கள உறவுகள்

விதிகளை கடுமையாக செயற்படுத்தியிருந்தால், இந்த விபத்தை தவிர்த்திருக்கலாம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.