Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கை இராணுவ வீரர்களுக்கு பதவி உயர்வு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை இராணுவ வீரர்களுக்கு பதவி உயர்வு!

இலங்கை இராணுவ வீரர்களுக்கு பதவி உயர்வு!

இலங்கை இராணுவம் மற்றும் கடற்படை அதிகாரிகள் பலருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

இன்று (வெள்ளிக்கிழமை) தேசிய இராணுவ வீரர்கள் தின கொண்டாட்டத்துடன் இணைந்து இந்த பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி இலங்கை இராணுவத்தின் 402 அதிகாரிகளும், 3,348 இதர நிலைகளும் அவர்களின் அடுத்த தரத்திற்கு பதவி உயர்வு பெற்றவுள்ளனர்.

இதேவேளை இலங்கை கடற்படையின் 1,731 அதிகாரிகளுக்கும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2023/1332268

  • கருத்துக்கள உறவுகள்

14 ஆவது போர் வீரர் தினத்தை முன்னிட்டு 3750 இராணுவ வீரர்களுக்கு பதவி நிலை உயர்வுகள்

Published By: DIGITAL DESK 3

19 MAY, 2023 | 03:23 PM
image

(எம்.மனோசித்ரா)

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனைக்கமைய 14ஆவது தேசிய போர் வீரர் தினத்தை முன்னிட்டு பாதுகாப்பு அமைச்சு மற்றும் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகேவின் பரிந்துரைக்கமைய 3750 இராணுவ வீரர்களுக்கு பதவி நிலை உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய 402 சிரேஷ்ட அதிகாரிகளுக்கும் , 3348 ஏனைய அதிகாரிகளுக்கும் இவ்வாறு பதவி நிலை உயர்வு வழங்கப்பட்டுள்ளது. 

பிரிகேடியர் நிலையிலுள்ள 7 அதிகாரிகள் மேஜர் ஜெனரல்களாகவும் , கேர்ணல் நிலையிலுள்ள 19 பேர் பிரிகேடியர்களாகவும், லெப்டினன் கேர்ணல்களாகவுள்ள 29 பேர் கேர்ணல்களாகவும், மேஜர்களாகவுள்ள 33 பேர் லெப்டினன் கேர்ணல்களாகவும், கப்டன் நிலையிலுள்ள 118 பேர் மேஜர்களாகவும், லெப்டினன்களாகவுள்ள 97 பேர் கப்டன்களாகவும், இரண்டாம் வெலப்டினன்களாகவுள்ள 90 பேர் லெப்டினன்களாகவும் பதவி நிலை உயர்வுகளைப் பெற்றுள்ளனர்.

அதே போன்று கெடட் அதிகாரிகள், படையணிகளின் பிரதானிகள், கோப்ரல் நிலை அதிகாரிகள், லான்ஸ் கோப்ரல் நிலை அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் உள்ளிட்ட பலருக்கும் இவ்வாறு பதவி நிலை உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக இராணுவத்தலைமையகம் தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/155693

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.