Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாணத்துக்கு உணவு, மருந்துகள் சென்றடையும் வரை எமது போராட்டம் தொடரும்- ஓயமாட்டோம்: பழ. நெடுமாறன்

Featured Replies

யாழ்ப்பாணத்தில் பட்டினியால் வாடும் தமிழ் மக்களுக்கு உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் சென்றடையும் வரை எமது போராட்டம் தொடரும்- எம்மைத் தடுத்து கைது செய்தாலும் எமது படகுப் பயணம் நடைபெறும் என்று தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் பழ. நெடுமாறன் அறிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க

குடாநாட்டிற்கு 42,000பக்கெட் சீமெந்து 2,400 தொன் உரவகை அடுத்த பத்து நாட்களுக்குள் அனுப்பி வைக்கப்படும். இலங்கை அரசு. அத்துடன் 10,000 சி.டி.எம்.ஏ தொலைபேசிகள் அனுப்பி வைக்கப்பட உள்ளது.

2006ம் ஆண்டு ஓகஸ்ட் முதல் இந்த வருடம் ஓகஸ்ட் வரையான ஒரு வருடகாலத்திற்குள் ஒரு லட்சத்து 87 ஆயிரத்த 127 மெற்றிக் கொன் அத்தியாவசியப் பொருட்கள் யாழுக்கு அனுப்பி வைக்கபட்டள்ளன என யாழ். விநியோகம் தொடாபாக அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அத்தியாவசியச் சேவைகள் பணிப்பாளர் நாயகம் திவாரட்ண தெரிவித்தார்.

நன்றி : சுடர் ஒளி

அட பிறகு என்னத்துக்கு நெடுமாறன் ஐயா இப்படிக்கஸ்டப்படுகிறார். சிங்கள அரசு சிமெந்தும் உரமும் சாப்பிட அனுப்பி வைக்கினம். பிறகு எதுக்கு படகில...? சி.டி.எம்.ஏ அனுப்பிவைச்சாப் போதாது வேலை செய்யவும் வேணும்.

ஜானா

குடாநாட்டிற்கு 42,000பக்கெட் சீமெந்து 2,400 தொன் உரவகை அடுத்த பத்து நாட்களுக்குள் அனுப்பி வைக்கப்படும். இலங்கை அரசு. அத்துடன் 10,000 சி.டி.எம்.ஏ தொலைபேசிகள் அனுப்பி வைக்கப்பட உள்ளது.

அத்தியாவசியப் பொருட்களோ இல்லையோ, இவைதான் இன்று தென்னிலங்கை வர்த்தகர்களுக்கு பெரும் இலாபத்தைத் தருவன.

இவற்றின் எடையும் பல்லாயிரம் மெற்றிக் தொன்களாகும்.

  • தொடங்கியவர்

ஈழத்தில் அல்லற்படும் தமிழர்களுக்கான உணவு மற்றும் மருந்துப் பொருட்களை ஏற்றிக் கொண்டு தமிழ்நாட்டிலிருந்து தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் பழ நெடுமாறன் யாழ்ப்பாணம் நோக்கி படகில் மேற்கொள்ளும் "தமிழர் தியாகப் பயணம்" போராட்டம் தொடங்கியுள்ளது.

மேலும் வாசிக்க

2 ஆம் இணைப்பு) பழ. நெடுமாறனின் தலைமையில் எழுச்சியோடு தொடங்கியது "தமிழர் தியாக பயணம்"! [புதன்கிழமை, 12 செப்ரெம்பர் 2007, 10:18 ஈழம்] [புதினம் நிருபர்] ஈழத்தில் அல்லற்படும் தமிழர்களுக்கான உணவு மற்றும் மருந்துப் பொருட்களை ஏற்றிக் கொண்டு தமிழ்நாட்டிலிருந்து தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் பழ நெடுமாறன் யாழ்ப்பாணம் நோக்கி படகில் மேற்கொள்ளும் "தமிழர் தியாகப் பயணம்" போராட்டம் தொடங்கியுள்ளது.புதினம்-மேலும் வாசிக்க...

யாழ் நோக்கிய தியாகப் பயணம் தடுத்து நிறுத்தப்பட்ட போதும் போராட்டம் தொடர்கிறதுதமிழீழ ஆதரவாளர் ஒருங்கிணைக்குப் குழுவினரின் ஆதரவாளர்கள் ஒரு அணியினர் உணவுப் பொருட்களை சுமந்தவாறு கடற்கரையை சென்றடைந்துள்ளனர்.நாகைபட்டி? கடற்கரையை நோக்கி பழ.நெடுமாறன் தலைமையிலான ஆயிரத்திற்கு மேற்பட்ட தமிழீழ ஆதரவாளர்கள் உணவுப் பொருட்களை சுமந்தவாறு கடற்கரை நோக்கிச் சென்றுள்ளனர்.மறு அணி ராமேஸ்வரம் கடற்கரை நோக்கி தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொதுச் செயலாளர் பரந்தாமன் தலைமையில் 500 மேற்பட்ட தமிழீழ ஆதரவாளர்கள் கடந்கரையை நெருங்கியுள்ளனர்.இரு அணியினரும் கோசங்களை முழங்கியவாறு பெரும் எழுச்சி மக்கள் வீதியின் இரு மருங்கிலும் நின்றவாறு தமிழீழ ஆதரவாளர்கள் உணவுகளைச் சுமந்தவாறு சென்றனர்.தமிழகக் காவல்துறையினர் தமிழீழ ஆதரவாளர்களின் யாழ் குடாநாட்டுக்கான தியாகப் பயணத்தை தடுத்து நிறுத்தியுள்ளனர்.நாகைப் பட்டினத்தை சென்றடைந்த உள்ள தரித்து நிறுதப்பட்ட ஆயிரக்கணக்கான படகுகளை தமிழக காவல்துறையினர் நெருங்க விடாது தடுத்து நிறுத்தியுள்ளனர்.நாகைபட்டின?் சென்றடைந்த ஊர்வலம் காவல்துறையினரால் தடுக்கப்பட்ட நிலையில் நாகை நகரின் ஊடாக அந்த பேரணி சாலைக் கடற்கரை நோக்கி நகர்ந்து செல்கின்றனது.நன்றி-பதிவு

Edited by தமிழினீ

  • கருத்துக்கள உறவுகள்

சென்றடைந்த ஊர்வலம் காவல்துறையினரால் தடுக்கப்பட்ட நிலையில் அடையாள உண்ணாவிரதம் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றத

Edited by கறுப்பி

  • கருத்துக்கள உறவுகள்

பழ. நெடுமாறன் ஐயா அவர்கள் கைது செய்யப்பட்டு வண்டியில் ஏற்றப்பட்டிருக்கிறார்.

''தமிழர் தியாகப் பயணம்'' தடுக்கப்பட்டது: நெடுமாறனின் சாகும் வரையிலான உண்ணாநிலைப் போராட்டம் ஆரம்பம்

யாழ் குடநாட்டுக்கான தியாகப் பயணத்தை தமிழகக் காவல்துறையினர் மற்றும் கடற்படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. நாகைபட்டினம், இராமேஸ்வரம் ஆகிய துறைமுகங்கள் நோக்கி உணவுகளையும் மருந்துப் பொருட்களையும் தலையில் சுமந்தவாறு தமிழீழ ஆதரவாளர் சென்றபோதும் படகேற தமிழ காவல்துறையினர் அனுமதி மறுத்துள்ளது. யாழ் குடாநாட்டுக்கு பொருட்களை அனுப்ப இந்திய அரசாங்கம் அனுமதி அளிக்கும் வரை பழ.நெடுமாறன் அவர்கள் சாகும் வரையிலான உண்ணாநிலைப் போராட்டதை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.

நாகைபட்டின கடற்கரையை நோக்கி பழ.நெடுமாறன் தலைமையிலான தமிழீழ ஆதரவாளர் ஒருங்கிணைக்குப் குழுவினரின் ஆதரவாளர்கள் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் உணவுப் பொருட்களையும் மருத்துப் பொருட்களையும் தலையில் சுமந்தவாறு கடற்கரை நோக்கிச் சென்றுள்ளனர்.

மறு அணி ஒருங்கிணைப்புக் குழுவின் பொதுச் செயலாளர் பரந்தாமன் தலைமையில் 500 மேற்பட்ட தமிழீழ ஆதரவாளர்கள் இராமேஸ்வரம் கடற்கரை நோக்கிச் சென்றனர்.

இரு அணியினரும் கோசங்களை முழங்கியவாறு பெரும் எழுச்சி மக்கள் வீதியின் இரு மருங்கிலும் நின்றவாறு தமிழீழ ஆதரவாளர்கள் உணவுகளைச் சுமந்தவாறு சென்றனர்.

''எச்சரிக்கை எச்சரிக்கை: இறுதியான எச்சரிக்கை''

''வெல்லட்டும் வெல்லட்டும்: தமிழீழம் வெல்லட்டும்''

''தமிழ்த் துரோகி கருனாநிதி: பதவி விலகட்டும்''

''வெல்லட்டும் வெல்லட்டும்: விடுதலைப் புலிகள் வெல்லட்டும்''

''மலரட்டும் மலரட்டும்: தமிழீழம் மலரட்டும்''

''ஈழத் தமிழர் சிந்தும் இரத்தம்: எங்கள் இரத்தம்''

''தேவைப்பட்டால் உயிரையும் கொடுப்போம்''

''யாழ்ப்பாணம் செல்ல: அஞ்ச மாட்டோம்'''

''தடை போடாதே தடை போடாதே: தியாகப் பயணத்திற்கு தடை போடாதே''

போன்ற கோசங்களை எழுப்பியவாறு பேரணியில் தமிழீழ ஆதரவாளர்கள் உணர்வுடன் பங்கெடுத்தனர்.

தமிழகக் காவல்துறையினர் தமிழீழ ஆதரவாளர்களின் யாழ் குடாநாட்டுக்கான தியாகப் பயணத்தை நாகை பட்டின துறைமுகத்திலும், இராமேஸ்வர துறைமுகத்திலும் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

நாகைப் பட்டினத்தை சென்றடைந்த உள்ள தரித்து நிறுதப்பட்ட ஆயிரக்கணக்கான படகுகளை தமிழக காவல்துறையினர் நெருங்க விடாது தடுத்து நிறுத்தியுள்ளனர்.

நாகைபட்டினம் சென்றடைந்த ஊர்வலம் காவல்துறையினரால் தடுக்கப்பட்ட நிலையில் நாகை நகரின் ஊடாக அந்த பேரணி சாலைக் கடற்கரை நோக்கி நகர்ந்து செல்கின்றது.

நாகை நகை நகர் நோக்கிச் சென்றபோதும் அங்கு தமிழீழ ஆதரவாளர்களினால் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சாலையில் தமிழீழ ஆதரவாளர்கள் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து உணவுப் பொருட்களையும், மருந்துப் பொருட்களையும் எடுத்துச் செல்ல தமிழக காவல்துறையினர் தடுத்து நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் அவர்கள் சாகும் வரையிலான உண்ணாநிலைப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

இவருக்கு ஆதரவு தெரிவித்து தமிழீழ ஆதரவாளர்கள் ஒரு நாள் உண்ணாநிலைப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

மறுமுனையில் இராமேஸ்வரம் சென்றடைந்த பேரணி காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்படாத நிலையில் இந்திய கடற்படையினர் படகுகளை ஆழக் கடலில் நோக்கிக் கட்டியுள்ளனர்.

மீனவர்கள் தமது படகுகளைக் கொடுத்தால் கடும் நடவடிக்கை எடுப்போம் என கடற்படையினர் விரட்டியுள்ளனர்.

இராஸ்மேஸ்வரதிலும் ஒரு நாள் அடையாள உண்ணா நிலைப் போராட்டதை ஆரம்பித்துள்ளனர்.

தமிழக காவல்துறையினர் பொருட்களை எடுத்துச் செல்லவதைத் தடுத்து நிறுத்தியமை: ஆதரவாளர்களைக் கைது செய்யாமை தியாகப் பயணப் போராட்டதை தமிழக அரசாங்கம் கொச்சைப் படுத்தியுள்ளது என ஆதரவாளர்கள் விசனம் கொண்டுள்ளனர்.

நன்றி-பதிவு

பழ நெடுமாறன் கைது

நாகப்பட்டினம் துறைமுகத்தில் தமிழீழ விடுதலை ஆதரவாளர்களிடையே பழ. நெடுமாறன் ஆற்றிய உரை:

அன்புள்ள நண்பர்களே!

இந்த தியாக பயணத்திலே கலந்து கொண்டிருக்கிற அருமைப் போராட்ட வீரர்களே!

பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்களே!

நம்முடைய இந்தப் போராட்டம் என்பது யாழ்ப்பாணத்தில் பட்டினி கிடக்கக் கூடிய நம்முடைய சகோதர தமிழர்களுக்கு உணவு, மருந்துகள் அனுப்புவதற்கான போராட்டம்.

ஆட்சிப் பீடத்திலே அமர்ந்திருப்பவர்களை அந்த நாற்காலியிலிருந்து இறக்குவதற்கான போராட்டம் அல்ல இது.

பசியோடும் பட்டினியோடும் அங்கே செத்துக் கொண்டிருக்கும் நம்முடைய மக்களுக்கு மருந்துகளையும் அனுப்புவதற்கும் 7 மாத காலமாக படாதபாடு பட்டோம்.

நாம் தட்டாத வீட்டுக் கதவில்லை.

ஏறி நுழையாத அரசு அலுவலகங்கள் இல்லை.

இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் மூலம் அனுப்புவதற்கு நாம் எடுத்துக் கொண்ட அனைத்து முயற்சிகளையும் அலட்சியம் செய்துவிட்டார்கள். உதாசீனப்படுத்தி விட்டார்கள். இந்த நிலைமையில் நாம் நடத்திய படகுப் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையில் புதுக்கோட்டையிலிருந்து இராமேஸ்வரம் வரை இருக்கக் கூடிய அத்தனை மீனவக் கிராமங்களுக்கும் காவல்துறை நுழைந்து யாரும் படகு கொடுக்கக் கூடாது. படகு கொடுத்தால் உங்கள் படகுகள் பறிமுதல் செய்யப்படும்- நீங்களும் சிறையில் தள்ளப்படுவீர்கள் என்று மிரட்டியுள்ளனர்.

நான் மதிப்பிற்குரிய முதலமைச்சர் அவர்களைப் பார்த்து பணிவோடு ஒன்று கேட்க விரும்புகிறேன்...

எங்களது போராட்டத்தை கொச்சைப்படுத்துவதிலே நீங்கள் காட்டிய அக்கறையில் ஒரு பங்கை யாழ். மக்களுக்கு உணவும் மருந்துப் பொருட்களையும் அனுப்புவதில் அக்கறை காட்டியிருந்தால் இந்தப் பிரச்சினையே வந்திருக்காது.

அதனைச் செய்கிற யோக்கியதையோ தகுதியோ உங்களுக்கு இல்லை.

எங்கள் போராட்டத்தை அவமானப்படுத்துவதாக நினைத்து நீங்கள் அவமானப்பட்டுப் போய் நிற்கிறீர்கள். யாழ். மக்களுக்காக நாங்கள் திரட்டியிருக்கக் கூடிய இந்த உணவு மற்றும் மருந்துப் பொருட்களை யாழ்ப்பாண மக்களுக்கு அனுப்ப இந்திய செஞ்சிலுவைச் சங்கத்துக்கு இந்திய அரசாங்கம் அனுமதி அளிக்கும் வரையிலே "சாகும் வரை உண்ணாவிரதம்" இருப்பதாக முடிவு செய்துள்ளேன். அதற்கு போராட்டக் குழுவினரும் ஒப்புதல் அளித்துள்ளனர்.

போராட்டக்களத்திலே புகுந்துள்ள தோழர்கள், என்ன அவர் நெடுமாறன் மட்டும் உண்ணாவிரதம் இருப்பதா? நாமெல்லாம் இருக்கக்கூடாதா? என்று ஆதங்கப்படலாம். அது நியாயம்தான். ஆனால் இப்போதைக்கு வேண்டாம்.

இன்று ஒரு நாள் மட்டும் நீங்கள் என்னுடன் அடையாள உண்ணாவிரதம் இருங்கள். அதன் பின்னர் நீங்கள் உங்களது ஊர்களுக்குத் திரும்பி அங்கெல்லாம் மக்களைத் திரட்டி தோழர்களைத் திரட்டி போராட்டத்தைத் தொடருங்கள்.

நம்முடைய அடிப்படைக் கோரிக்கை "யாழ். மக்களுக்கு உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் அனுப்புவது" என்பதுதான்.

அது நிறைவேறும் வரையிலே நமது போராட்டம் தொடரும்.

சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கும் எனக்கு ஏதேனும் நேர்ந்தால் இந்தப் போராட்டக் குழுவினர் தேர்வு செய்கிற ஒருவர் இந்த சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்துவார். இந்தப் போராட்டம் தொடரும். நம்முடைய கோரிக்கை வெற்றியடையும்வரை தொடரும் என்றார் பழ. நெடுமாறன்.

ஓலி வடிவம் நன்றி-பதிவு

Edited by தமிழினீ

பழ.நெடுமாறன் உட்பட தமிழீழ ஆதரவாளர்கள் அனைவரும் காவல்துறையினரால் கைது

நெடுமாறன் அவர்களின் சாகும் வரையிலான உண்ணாநிலையில் போராட்டத்தை அறிவிப்பை அடுத்து நெடுமாறன் உட்பட தமிழீழ உணர்வாளர்கள் அனைவரும் தமிழகக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு மண்டபம் ஒன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

« முன்னைய பக்கம்

http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=2&

  • தொடங்கியவர்

ஈழத்தில் அல்லல்படும் தமிழர்களுக்கான உணவு மற்றும் மருந்துப் பொருட்களை ஏற்றிக் கொண்டு தமிழ்நாட்டிலிருந்து தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் பழ. நெடுமாறன் யாழ்ப்பாணம் நோக்கி படகில் செல்லும் "தமிழர் தியாகப் பயண"த்துக்கு தமிழ்நாடு காவல்துறை இன்று தடை விதித்தது.

மேலும் வாசிக்க

  • தொடங்கியவர்

தமிழீழத்தின் யாழ்ப்பாண மக்களுக்கு உணவு மற்றும் மருந்துகள் அனுப்பப்படும் வரை சாகும்வரை உண்ணாநிலை போராட்டம் நடத்தப்போவதாகவும் தனக்கு ஏதேனும் நேர்ந்தாலும் போராட்டக் குழுவினர் தேர்வு செய்யும் ஒருவர் சாகும்வரை உண்ணாநிலைப் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்துவர் என்றும் தமிழ்நாட்டில் செயற்பட்டு வரும் தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் பழ. நெடுமாறன் திடீர் என்று அறிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Nedumaran and supporters arrested

http://www.expressindia.com/fullstory.php?newsid=92068

(மேலதிக இணைப்பு) தமிழர் தியாகப் பயணத்துக்குத் தடை: பெரியார் தி.க. கடும் கண்டனம்

தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பழ. நெடுமாறன் தலைமையில் தமிழீழ விடுதலை ஆதரவாளர்கள் இன்று மேற்கொள்ள இருந்த தமிழர் தியாகப் பயணத்தை தமிழக அரசு அவமதித்து தடை செய்துள்ளமைக்கு பெரியார் திராவிடர் கழகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

மேலதிக விவரங்களுக்கு

http://www.eelampage.com/index.php?cn=33369

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.