Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

குடும்பங்களாக சரணடையும் போது அவர்களுடன் சேர்ந்து சரணடைந்த குழந்தைகள் எங்கே ? காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: VISHNU

30 MAY, 2023 | 12:32 PM
image
 

வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் செவ்வாய்க்கிழைமை (30) கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

IMG_20230530_103253.jpg

வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்ற இப்போராட்டத்தில் சர்வதேசமே எமக்கான நீதியை பெற்றுத்தா என்ற தொனிப்பொருளில் போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.

IMG_20230530_103206.jpg

போராட்டத்தின் போது குடும்பங்களாக சரணடையும் போது அவர்களுடன் சேர்ந்து சரணடைந்த 29 க்கும் மேற்பட்ட குழந்தைகள் எங்கே?, புதிய பயங்கரவாத தடை சட்டத்தை உடன் நிறுத்து, புதிய புதிய சட்டங்களை இயக்கி மக்களின் குரல்களை நசுக்காதே போன்ற பல்வேறு பாதாதைகளை தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

IMG_20230530_103230.jpg

IMG_20230530_103140.jpg

IMG_20230530_103100.jpg

IMG_20230530_103117.jpg

https://www.virakesari.lk/article/156502

  • கருத்துக்கள உறவுகள்

 

இனி எங்களால் போராட முடியுமா ? என்பது கூட எமக்கு தெரியாமல் இருக்கின்றது - காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் 

இனி எங்களால் போராட முடியுமா? என்பது கூட எமக்கு தெரியாமல் இருக்கின்றது என வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் சங்கத்தின் செயலாளர் சி.ஜெனிற்றா தெரிவித்தார்.

வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக செவ்வாய்க்கிழமை (30) இடம்பெற்ற போராட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

தொடர்ச்சியாக ஒவ்வொரு மாதமும் முப்பதாம் திகதி  சர்வதேச நீதியை கோரி கவன ஈர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றோம். 

உறவுகளை கடத்தி காணாமல் ஆக்கப்பட்டு, சரணடைந்து, கையில் ஒப்படைக்கப்பட்ட, எமது உறவுகளை தேடித்தான் நாம் ஜனநாயக போராட்டத்தை அகிம்சை வழியில் 14 வருடங்களாக தொடர்ச்சியாக வீதியில் நின்று போராடி கொண்டிருக்கின்றோம்.

புதிய அரசாங்கமானது, பயங்கரவாத தடை சட்டத்தை எடுப்பதாக கூறி, புதிதாக பயங்கரவாத எதிர்ப்பு தடை சட்டத்தை அமுல்படுத்த நினைக்கின்றார்கள்.

ஆனால் அதை செய்கின்ற போது எமது ஜனநாயக போராட்டத்திற்கான கருத்து சுதந்திரமோ , தனியாகவோ அல்லது கூட்டாகவோ சேர்ந்து போராடுவதற்கு பயங்கரவாத எதிர்ப்பு தடை சட்டமானது ஒரு படிக்கல்லாக அமையும் என்பதற்காக பாராளுமன்ற உறுப்பினர்களிடமும், ஏனையவர்களிடமும் நிறைவேற்றாது நிறுத்த வேண்டும் என்பதனை ஊடக வாயிலாக கேட்டு கொள்கின்றோம்.

இலங்கை தேசத்து மக்கள் அழிக்கப்பட்டிருக்கின்ற போதும் கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளுக்கும் எந்த ஒரு நீதியும் வழங்காமல் இந்த சர்வதேசம் பார்த்து கொண்டிருக்கின்றது. அதேபோன்று கடத்தி காணாமல் ஆக்கப்பட்டிருக்கின்ற உறவுகளை தேடி நீதிக்காக போராடிக்கொண்டிருக்கின்ற போது இலங்கை தேசத்தை ஏன் கண்டு கொள்ளாமல் இருக்கின்றீர்கள்.

உறவுகள் இனியாவது மனிதர்களாக வாழ வேண்டும். ஏனையவர்களுடன் வாழ்வதற்கு உதவ வேண்டும் என்பதற்காக நடக்க இருக்கின்ற கூட்ட தொடரிலாவது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் குற்றங்கள் இழைத்தவர்களை பாரப்படுத்தி மக்களுக்கான நீதியை பெற்றுத்தர வேண்டும் என்பதை நாம் மிகவும் பணிவாக கேட்டு நிற்கின்றோம்.

இனி எங்களால் போராட முடியுமா? என்பது கூட எமக்கு தெரியாமல் இருக்கின்றது. ஏனென்றால் அச்சுறுத்தல்கள், தடை உத்தரவுகள் இருந்தன. தற்போது நீதிமன்ற வழக்குகள் கூட எமக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டு கொண்டிருக்கின்றன. எனவே தொடர்ச்சியாக போராட சர்வதேசம் உறுதுணையாக இருக்க வேண்டும் என கேட்டு கொள்கிறேன்.

இனி எங்களால் போராட முடியுமா ? என்பது கூட எமக்கு தெரியாமல் இருக்கின்றது - காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்  | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியே ஒவ்வொன்றாக மௌனித்துப்போகும்???😭

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, விசுகு said:

இப்படியே ஒவ்வொன்றாக மௌனித்துப்போகும்???😭

நிச்சயமாக. யுத்தம் செய்ய ஒரு காலமுண்டு, சமாதானமாக ஒரு காலமுண்டு. போராட ஒரு காலமுண்டு , போராட்டத்தை முடிக்க ஒரு காலமுண்டு. இளாவிடடாள் விளைவுகள் வேறாக இருக்கும். யுத்தத்தில் இவ்வளவு பயங்கரமான இழப்புக்களை சந்திக்க நேரிட்டதும் இதனால்தான். உள்நாட்டிலும் சரி, வெளி நாட்டிலும் சரி இதை எல்லாம் அறியாத ஒரு சந்ததி உருவாக்கிக்கொண்டு இருக்கிறது என்பதை மறக்க வேண்டாம். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.