Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலம்பெயர் அமைப்புகள் ஊடாக நல்லிணக்கம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முன்னைய ஜனநாயக போராட்டத்துக்கு என்ன நடந்தது? இன்று குமார் பொன்னம்பலத்துக்கு என்ன நடந்தது? யாரும் இரண்டு பேர் கூடினாலே, வெருண்டடித்து சிறைபிடித்து அடைக்குது சிங்களம். அதுக்கு வக்காலத்து வாங்க நாலு கூத்தாடிகள். நீங்கள் எல்லோரையும் ஒன்றுதிரட்டி தலைமை தாங்குங்கள் போராடுவோம். வேண்டாமென்றா சொல்லப்போகிறோம்? ஒவ்வொரு  சிங்கள கட்சியும் அரசகட்டில் ஏறும்போதும் முதலிலிருந்து தொடங்குவோம், இப்ப என்ன அவசரம்? முதலில் தமிழ்கட்சிகள் ஒன்றுசேர்ந்து எல்லோரின் கருத்துக்களுக்கும் மதிப்பளித்து, எல்லோரையும் அரவணைத்து வெளிப்டையாகப்பேசி செயற்பட முடியுமா இவர்களால்? இங்கு ஒரு பேச்சு, அங்கு ஒரு பேச்சு, இரகசிய சந்திப்பு, மறுதலிப்பு, சர்வாதிகாரிபோல் மற்றவர்களை அடக்கியாள்வது, அவமதிப்பது, சவால் விடுவது, விரட்டுவது, சிங்களத்துக்கு வக்காலத்து வாங்குவது, மூடி மறைப்பது, ஏழை மக்களை ஏமாற்றுவது இதுக்கு பெயர் ஜனநாயகம்?

  • Replies 77
  • Views 5.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையை பொறுத்த வரைக்கும் அவர்களது திடடம் முழு நாடடையும் சிங்களமயமாக்குவதே. தந்தை செல்வா தொடக்கம் இப்போது வரைக்கும் அவர்கள் அதைத்தான் செய்கிறார்கள். கதிர்காமம் தொடக்கம் நீர்கொழும்பு வரைக்கும் , மதவாச்சி வரைக்கும் தமிழர்கள் வாழ்ந்ததட்கான ஆதாரமிருக்கின்றது. இன்று வவுனியா மத்தி வரைக்கும் அவர்கள் கலந்து விடடார்கள். கிழக்கின் நிலைமை என்னவென்று இப்போது எல்லோருக்குமே நன்றாக தெரியும். வடக்கில் மடு, சிலவத்துறை  வரைக்கும்வந்து விடடார்கள். இப்போது கிளிநொச்சியும் அதட்குள் போகப்போகின்றது. முல்லைத்தீவில் கணிசமான பகுதிக்குள் வந்து விடடார்கள். இனி யாழ்ப்பாணத்தில் புத்தர் சிலை நிறுவும் வேலை நடை பெறுவதுடன் சில குடியேற்றமும் நடந்து விட்ட்து. இது அவர்களின் நிகழ்ச்சி நிரலில் மிகவும் முக்கியமான ஒன்று. இன்னும் கொஞ்ச காலத்தில் தமிழர் தாயகம் என்று ஒன்று இருக்கப்போவதில்லை .  

இப்போது உலகின் நடக்கும் சம்பவங்களையும் அதன் யதார்த்தத்தையும் புரிந்துகொள்ள வேண்டும். அமெரிக்காவோ, மேட்கு நாடுகளோ , இந்தியாவோ எமக்கு பெரிதாக உதவப்போவதில்லை. இலங்கையை சுற்றி ஒரு ராஜதந்திர போரே நடந்து கொண்டிருக்கிறது. எனவே இப்போது இனப்பிரச்சினை என்பது பெரிதாக எடுபடாது. சீன, ரஸ்சிய போன்ற நாடுகள் அமரியாவின் நடப்பு நாடுகளை தம் பக்கம் மாற்றிக்கொண்டிருக்கின்றது. மத்திய கிழக்கில் அமெரிக்காவிட்க்கு பெரிய தாக்கம் உருவாக்கிக்கொண்டிருக்கிறது. எனவே அவர்கள் மற்றைய நாடுகளை ஆதரித்து போவார்கள் ஒழிய எதிர்களாக்கமாட்ட்டார்கள் . 

உள்நாட்டில் பிரச்சினைகள் உருவாகுவதை எந்த நாடும் அனுமதிக்காது. தென்பகுதி அரசியல் கட்சிகள் ஒற்றுமையாக ஒரு தீர்மானத்துடன் தமிழர் பிரச்சினைக்குத்தீர்வு கண்டாலே ஒழிய எந்த நாடினாலும் தீர்வை கொண்டு வர முடியாது.

இந்தியா தனது சுய நலத்துக்காக ஏதாவது செய்தாலும், இலங்கை தமிழர்களை தமிழ் நாட்டு தமிழர்களைப்போல எதிரிகளாகவே பார்க்கின்றது. தங்களது சுய நலத்துக்காக இங்குள்ள தமிழர்களை அரவணைத்து போகின்றது. வேறொன்றுமில்லை. 

எனவே இங்கு நாங்கள் எதைத்தான் எழுத்து விவாதித்தாலும் இதுதான் யதார்த்தம். என்னை பொறுத்த வரைக்கும், சிங்கள அரசாங்கம் காணி, போலீஸ் அதிகாரமற்ற மாகாண சபைக்கு மேல் எதுவும் தருவதட்கு தயார் இல்லை.

தந்தை செல்வா, அமிர்தலிங்கம் இல்லை இவர்களை மிஞ்சி பெரிய தலைவர்கள் வந்தாலும் இதுதான் நிலைமை. இதுதான் உண்மை. 

  • கருத்துக்கள உறவுகள்

இது வெறும் சிங்களத்தின் திறமையினால் மட்டும் சாத்தியமானதல்ல, தந்திரமாக தலைமைகளை ஏமாற்றி காரியம் சாதித்தது சிங்களம். எச்சரிக்கையில்லாமல் உதாசீனமாக இருந்த தமிழ்த் தலைமைகள், காட்டிக்கொடுத்து வக்காலத்து வாங்கும் தமிழ்க்கூத்தாடிகளின் சாதனையுமுள்ளது. எமது இளம் சந்ததியின் அயரா உழைப்பு, சிங்கள மக்களின் விழிப்புணர்ச்சியினால் மட்டுமே முடியும். அதற்கிடையில் உலகம் ஒரு முடிவுக்கு வந்துவிடும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.