Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

`நிர்வாணமும் ஆபாசமும் ஒன்றல்ல!’ -ரஹானா பாத்திமா மீதான வழக்கு தள்ளுபடி; கேரள ஹைகோர்ட் சொன்னது என்ன?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கேரள மாநிலத்தைச் சேர்ந்த சமூகச் செயற்பாட்டாளரான ரஹானா பாத்திமா அவ்வப்போது மேற்கொள்ளும் செயல்பாடுகள் பரபரப்பாகப் பேசப்படும். சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில், அனைத்து வயது பெண்களும் சாமி தரிசனம் செய்யலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவைத் தொடர்ந்து, சபரிமலை ஐயப்பன் கோவில் சன்னிதானம் சென்று அவர் சாமி தரிசனம் செய்தபோது பரபரப்பானது.

இவர், தன் அரை நிர்வாண உடம்பில் தன் மகனை ஓவியம் வரைய வைத்தார். பின்னர் அந்த வீடியோவை 'பாடி ஆர்ட் பாலிடிக்ஸ்' என்ற தலைப்பில் சமூக வலைதளங்களில் பரப்பினார்.

’மகனாக இருந்தாலும் சிறுவன் முன்பு அரை நிர்வாணமாக அவர் வெளிப்பட்டது தவறு’ என அது சர்ச்சையானது. இதையடுத்து திருவல்லா, எர்ணாகுளம் சவுத் காவல் நிலையங்களில் பதிவான புகார்களின் அடிப்படையில் ரஹானா பத்திமா மீது போக்ஸோ, ஐடி ஆக்ட் பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. அத்துடன், ரஹானாவின் லேப்டாப், பெயின்டிங் உபகரணங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த வழக்கில் ரஹானா பாத்திமா கைது செய்யப்பட்டிருந்தார். பின்னர் அவர் ஜாமினில் வெளியே வந்தார். இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

அதைத் தொடர்ந்து இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என ரஹானா பாத்திமா, விசாரணை கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதை தொடர்ந்து, வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி, கேரள கோர்ட்டில் ரஹானா பாத்திமா மனுத்தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த கேரள ஐகோர்ட், `பெண்களின் ஆடையில்லாத உடலை எல்லா நேரத்திலும் ஆபாசமாகப் பார்க்க முடியாது’ எனக் கூறியதுடன், ரஹானா பாத்திமா மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது.

கேரள கோர்ட் தனது தீர்ப்பில் கூறியுள்ளதாவது: ``ரஹானா பாத்திமா வெளியிட்ட பெயின்டிங் வீடியோ ஆபாசமானது அல்ல. நிர்வாணமும் ஆபாசமும் ஒன்றல்ல. ஆடையில்லாத உடல் சாதாரணமானதுதான் என மகனுக்கு அறிவுறுத்துவதற்காக, உடலை பயன்படுத்தியது தவறு அல்ல. நாட்டில் எவ்வளவோ அரை நிர்வாண ஓவியங்களும், சிற்பங்களும் உள்ளன. அவற்றில் பலவும் தெய்வீகமாகப் பார்க்கப்படுகின்றன.

புலி விளையாட்டுக் கலையிலும், தெய்யம் கலையிலும் ஆண்களின் உடலில் ஓவியங்கள் வரையப்படுகின்றன. தங்கள் உடலில் ஓவியம் வரையும் ஆண்களிடம் கேள்வி எழுப்புவதில்லை. அதே நேரம் பெண்களுக்குத் தங்கள் சொந்த உடல் மீதுள்ள அதிகாரம் கேள்வி எழுப்பப்படுகிறது.

உடலின் பெயரால் பெண்ணை மிரட்டுவதும், தனிமைப்படுத்துவதும், விசாரணை செய்வதும் நடக்கிறது. சமூகத்தின் இரட்டை நிலையை இது அம்பலப்படுத்துவதாக உள்ளது.

ரஹானா பாத்திமா
 
ரஹானா பாத்திமா

இந்த வழக்கில், குழந்தை எந்த ஒரு பாலியல் செயலுக்கும் பயன்படுத்தப்பட்டதாக யாரும் குற்றம்சாட்டவில்லை. குழந்தையை ஓவியம் வரைவதற்காக மட்டுமே தாய் அனுமதித்தார்.

தனது உடலைப் பற்றி முடிவெடுக்கும் அடிப்படை உரிமை ஒரு பெண்ணுக்குத்தான் உள்ளது. இங்கு வீடியோ வெளியிட்ட பெண்ணின் சந்தர்ப்பமும், அது சமூகத்துக்கு வழங்கிய கருத்தையும் புறக்கணித்துவிட்டு, நடவடிக்கை எடுப்பதற்கான காரணங்கள் ஒன்றும் இந்த வழக்கில் இல்லை" என கேரளை ஹைகோர்ட் கூறியுள்ளது.

`நிர்வாணமும் ஆபாசமும் ஒன்றல்ல!’ -ரஹானா பாத்திமா மீதான வழக்கு தள்ளுபடி; கேரள ஹைகோர்ட் சொன்னது என்ன? | Kerala HC quashes case against Rehana Fathima - Vikatan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எமது புராதன கோவில் கோபுரங்களில் உள்ள  சிலைகளை பார்த்தால் ஆபாசமாக தெரிவதில்லை. ஏனெனில் அது சிற்பம். :cool:

 

கோவில் கோபுர சிலைகள் சொல்லும்... - தஞ்சையை பற்றி கொஞ்சம் | Facebook

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.