Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நாடுகளின் உதவிகளை இழந்து வரும் இலங்கை

Featured Replies

எதிர்வரும் 2 தொடக்கம் 3 ஆண்டுகளுக்குள் சிறிலங்காவிற்கு வழங்கப்படும் அபிவிருத்திக்கான உதவிகளை நிறுத்துவதற்கு சுவீடன் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது சரிந்து போயுள்ள சிறிலங்காவின் பொருளாதாரத்தில் கடுமையான தாக்கத்தை உண்டு பண்ணலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் வாசிக்க

  • கருத்துக்கள உறவுகள்

உலக நாடுகளின் உதவிகளை இழந்து வரும் இலங்கை

நாட்டின் பொருளாதாரத்தைத் தவறாகக் கையாளுகின்றமை, நல்லாட்சி முறைக்கான அடிப்படைகளைக் கைவிட்டமை, தேசிய இனப்பிரச்சினையை அமைதி வழி யில் தீர்ப்பதற்கான பரந்த விசால கொள்கை நடை முறையைத் துறந்தமை ஆகியவை தொடர்பான போக்கு களால் இலங்கை அரசு சர்வதேச நல்லுறவைப் படிப்படி யாக இழந்து வருகின்றது என்று இப்பத்தியில் ஏற்கனவே பல தடவைகள் சுட்டிக்காட்டி வந்தோம்.

ஏற்கனவே இலங்கை அரசின் போக்கு மற்றும் அராஜகச் செயற்பாடுகள் காரணமாக சர்வதேச மனித உரிமை அமைப் புகள் அரசுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியிருக்கின்றன. பல சர்வதேசத் தரப்புகள் கண்டனக் கணைகள் எழுப்பி யிருக்கின்றன.

பல நாடுகள் இலங்கைக்கு எதிரான தமது அதிருப்தியை வெளிப்படுத்துவதற்காக இலங்கைக்கான தமது உதவித் திட்டங்களை வெட்டிக் குறைக்கத் தொடங்கியுள்ளன.

குறிப்பாக இலங்கை அரசின் நல்லாட்சி விரோதப் போக்கு ஐரோப்பிய நாடுகளையே பெரும் அதிருப்திக் குள்ளும் விசனத்துக்குள்ளும் ஆழ்த்தியிருக்கின்றன.

ஏற்கனவே பிரிட்டன் சில உதவித்திட்டங்களை நிறுத்தி யுள்ளது. அந்த வழியில் ஜேர்மனியும் இலங்கைக்கான தனது பல உதவித்திட்டங்களை ஒரேயடியாக முடக்கி யிருக்கின்றது.

டென்மார்க்கும் கூட அதே அதிருப்தி நிலையை எட்டியிருப்பதாகக் கூறப்படுகின்றது. இலங்கையில் டென்மார்க்கிற்குத் தனியாக ஒரு தூதரகம் இல்லை. பிரதிநிதி அலு வலகம் ஒன்றையே அது திறந்து வைத்திருந்தது. அந்த அலுவலகத்தை தனியான தூதரகமாகத் தரம் உயர்த்தத் திட்டமிட்டிருந்த டென்மார்க், அந்தத் திட்டத்தைக் கை விட்டது மட்டுமன்றி, தற்போதைய பிரதிநிதியின் அலு வலகத்தையே மூடிவிட்டு, மூடை, முடிச்சுகளோடு வெளியேறவே தீர்மானித்து விட்டதாகத் தெரிகின்றது.

இந்த வரிசையில் மற்றொரு ஸ்கண்டிநேவிய நாடான சுவீடனும் இணைந்திருப்பதாக இப்போது செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

இலங்கைக்கான தனது உதவித்திட்டங்களை அடுத்த இரண்டு முதல் நான்கு வருடங்களுக்குள் முற்றாக நிறுத்தி விட அது முடிவுசெய்துவிட்டது.

சுவீடனில் கடந்த வருடம் ஆட்சிக்கு வந்த புதிய அரசு எதிர்காலத்தில் தனது நாடு உதவி வழங்கும் சர்வதேச நாடு களின் விவரத்தைப் பட்டியலிட்டுள்ளது. அதில் இலங்கை இல்லை எனத் தெரியவருகின்றது.

சுவீடன் அரசின் உதவித் திட்டங்கள் பெரும்பாலும் "சிடா' (சுவீடன் சர்வதேச அபிவிருத்தி கூட்டிணைவு ஏஜென்ஸி) என்ற அமைப்பு ஊடாகவே மேற்கொள்ளப் படுகின்றன. அந்த அமைப்பு உலகின் எழுபது நாடுகளில் தனது உதவித் திட்டங்களைச் செயற்படுத்தி வருகின்றது.

சுவீடன் அரசின் புதிய தீர்மானத்தின்படி "சிடா' அமைப்பு இலங்கையில் புதிதாக எந்த அபிவிருத்தித் திட்டங்களை யும் இனிமேல் பொறுப்பேற்காது. பெரும்பாலும் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டு அரைகுறையில் இருக்கும் அபிவிருத் தித் திட்டங்களைக் கையாள்வதோடு அதன் பணி இங்கு முடிவுக்கு வந்துவிடும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

உலகளாவிய ரீதியில் சுவீடனின் சர்வதேச உதவித்திட்டங்களின் வருடாந்தப் பெறுமதி சுமார் முந்நூறு கோடி அமெரிக்க டொலராகும். இந்த வருடம் இலங்கையில் அந்த நாடு மேற்கொள்ளும் அபிவிருத்தித் திட்டங்களின் நிதிப் பெறுமதி சுமார் ஒன்றரைக் கோடி அமெரிக்க டொலர் (சுமார் 165 கோடி ரூபா) ஆகும். அந்த நாட்டின் புதிய உத வித் திட்டங்கள் எவையும் இனி இலங்கைக்கு இல்லை என்றாகிவிட்டது.

இலங்கையின் பொருளாதார வளர்ச்சி வீதம் கடந்த இரண்டு ஆண்டு காலத்தில் மிக மோசமான வீழ்ச்சியை இப்போது பூர்த்தியாகியிருக்கும் இரண்டாவது காலாண் டில் வெளிப்படுத்தி நிற்கின்றது.

நாட்டின் பொருளாதாரப் பின்னடைவை பணவீக்க அதிகரிப்பு அப்பட்டமாக வெளிப்படுத்தியுள்ளது. பண வீக்கத்தால் ஏற்பட்டுள்ள நெருக்கடியைச் சமாளிப்பதற் காக இலங்கை மத்தியவங்கி, குறுகிய காலத்துக்குள் ஆறா வது தடவையாக வட்டிவீத உச்ச எல்லையைத் தொடர்ந்து அதிகரித்திருக்கின்றது. அது கடந்த ஐந்து வருட காலத்துக் குள் மிக உச்ச அதிகரிப்பை இப்போது எட்டி 10.5 வீதம் என்ற நிலையைத் தொட்டு நிற்கின்றது.

இந்த அரசுத் தலைமையின் யுத்தத் தீவிரப் போக்கை நிறைவு செய்வதற்காக நாட்டின் பெருந்தொகை நிதி வளம் யுத்தத்துக்குத் திருப்பப்படுகின்றது. மறுபுறம் ஊழலும், மோசடியும், முறைகேடுகளும் நிர்வாகத்தில் தலைவிரித் தாடுகின்றன. இவற்றின் காரணமாக நாட்டின் பொருளா தார நிலைமை மீளவே முடியாத நிலையில் அதலபாதாளத் துக்குள் வீழ்ந்து கொண்டிருக்கின்றது.

இந்நிலையில் சர்வதேச சமூகமும் இந்த அரசுத் தலைமையின் போக்கால் சினமும் அதிருப்தியுமுற்று இலங் கைக்கான தனது உதவித் திட்டங்கள், அபிவிருத்தி உத விகள் ஆகியவற்றைக் கைவிடுமானால் மீட்பர் இல்லாத அவலத்துக்குள் இந்த நாடு அழுந்தும் ஆபத்து ஏற்படும்.

அந்த ஆபத்தை நோக்கி, நாடு மெல்லமெல்ல நகர்ந்து கொண்டிருப்பதாகவே தோற்றுகின்றது.

மாறிவரும் சர்வதேச எண்ணப் போக்கைப் புரிந்து கொண்டு இலங்கை அரசுத் தலைமை தன்னை மாற்றிக் கொள்ளாவிட்டால், நாடு தனிமைப்படுத்தப்பட்டு பெரும் பின்னடைவுகளை எதிர்கொள்வது தவிர்க்க முடியாததாக இருக்கும்.

-உதயன்

  • கருத்துக்கள உறவுகள்

Posted on : 2007-09-17

உலகுக்கு இப்போது உண்மை மெல்லப் புரிய ஆரம்பிக்கிறது

இலங்கையில் சிறுபான்மையினரான தமிழர்களுக்கு எதிரான அரச பயங்கரவாதம் எல்லை மீறுவது குறித்து தமிழர்கள் தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றார்கள்.

அது சர்வதேசத்தின் காதில் இப்போது விழத் தொடங்கியிருக்கின்றது.

ஏற்கனவே லண்டனைத் தளமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மன்னிப்புச் சபை, அமெரிக்காவை மையமாகக் கொண்டு செயற்படும் மனித உரிமைகள் காப்பகம், ஆசிய மனித உரிமைகள் மையம், ஜெனிவா அழைப்பு அமைப்பு, சர்வதேச ஜூரர்கள் குழு போன்றவை தொடர்ந்து இலங்கை நிலைமை குறித்துப் பகிரங்க அறிக்கைகள் வெளியிட்டு வருகின்றன.

இந்நிலையில் மேற்குலக நாடுகள் பலவும் கூட தீர்க்கமான முடிவுகளை எடுக்கத் தொடங்கிவிட்டன.

இலங்கையில் இடம்பெறும் மனித உரிமை மீறல்களைத் தொடர்புபடுத்தி பிரிட்டன், ஜேர்மன்,டென்மார்க் போன்றவை இலங்கைக்கான தமது உதவித்திட்டங்களை வெட்டிக் குறைத்துள்ளன. இந்தஅணியில் சுவீடனும் இணைகின்றது என இப்போது செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

இதேசமயம், இருபத்தியைந்து ஐரோப்பிய நாடுகளை உள்ளடக்கிய ஐரோப்பிய ஒன்றியம், இலங்கையில் இடம்பெறும் மனித உரிமை மீறல்களை அங்கு பிரசன்னமாகியிருந்து, கண்காணித்து, விசாரித்து, அறிக்கையிடுவதற்குத் தகுதியும் தகைமையு முடைய ஒரு சுயாதீன சுதந்திர கண்காணிப்புக்குழுவை ஐ. நா. அமைக்கவேண்டுமென ஐ. நா. மனித உரிமைகள் கவுன்ஸிலைக் கோருவது எனத் தீர்மானித்திருக்கின்றது.

இதேசமயம், உலகப் பெரு வல்லாதிக்க நாடான அமெரிக்காவும் இலங்கை அரசின் மனித உரிமை மீறல் போக்கைக் கண்மூடிப் பார்த்திருக்கத் தயாரில்லை என்பதைக் கோடி காட்டிவிட்டது.

இலங்கை அரசு தன்னைத் திருத்திக்கொள்ளாதவரை இலங்கைக்கான இராணுவ உதவித் திட்டங்களை முடக்க அமெரிக்கா தீர்மானிப்பது பெரும்பாலும் உறுதியாகி வருகின்றது எனச் செய்திகள் தெரிவிக்கின்றன.

சட்டத்துக்கு முரணான படுகொலைகள், சிறுவர்களைப் படைக்குச் சேர்த்தல் போன்ற மனித உரிமை மீறல்களில் ஈடுபடும் தனது படையினரை இலங்கைப் படைகள் சேவையிலிருந்து இடைநிறுத்தவும், இலங்கை அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தவும் நடவடிக்கை எடுக்காதவரை

இலங்கையில் தமிழ் மக்கள் வாழும்பிரதேசங்களுக்கு மனிதாபிமான உதவி நிறுவனப் பணியாளர்கள், ஊடகவியலாளர்கள் தாராளமாகச் சென்று வருவதற்கு இலங்கை அரசு அனுமதிக்காத வரை

ஐ. நா. மனித உரிமைகள் கவுன்ஸிலின் கள அலுவலகம் ஒன்றை இலங்கையில் திறந்து செயற்பட இலங்கை அரசு அனுமதிக்காத வரை

இலங்கைக்கு அமெரிக்காவின் எத்தகைய வெளிநாட்டுப் படைத்துறை நிதி உதவித்திட்டத்தின் கீழும் உதவிகள் ஏதும் வழங்கப்படக்கூடாது என்று அமெரிக்க செனட்சபை தீர்மானித்திருக்கின்றது. அமெரிக்க நாடாளுமன்றம் இன்னும் இத்தகைய தீர்மானம் ஒன்றை எடுக்கவில்லை. ஆனால் நாடாளுமன்றமும் இத்தகைய தீர்மானத்துக்கு வருவதற்கான சாத்தியங்கள் தென்படுகின்றன.

அங்கும் இது நிறைவேற்றப்பட்டு, அந்தப்பின்னணியில் அமெரிக்க ஜனாதிபதி புஷ்ஷ?90;் இந்த நகர்வுக்குப் பச்சைக்கொடி காட்டுவாரேயானால் இலங்கையின் கதி அதோ கதிதான். மஹிந்த ராஜபக்ஷ அரசுக்கு அது ஒரு பேரிடியாக அமையும்.

அப்படியாகுமானால்

படைத்துறையில் அமெரிக்க இலங்கைக் கூட்டுச் செயற்பாடுகள், இராணுவப் பயிற்சிகள் இனி இடம்பெறா. மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய ஆயுதங்களை இலங்கைக்கு அமெரிக்கா வழங்காது. ராடர்கள், எதிரிகளின் சூட்டுத் தாக்குதல்கள் புறப்படும் இடங்களைக் கண்டறியும் கருவிகள், இரவு நேரத் தாக்குதல் கருவிகள், கரையோரப் பாதுகாப்புப் படகுகள், அவற்றுக்கான உபகரணங்கள், இலங்கை அரசின் அதிக பாவனையில் உள்ள ஸி 130 ரக "ஹெர்குலஸ்' போக்குவரத்து விமானங்கள் மற்றும் "பெல்' ஹெலிக்கொப்டர்கள் போன்றவற்றுக்கான உதிரிப்பாகங்கள், உபகரணங்கள், கருவிகள் எவையும் இலங்கைக்கு வாங்க முடியாமல் போகும்.

விடுதலைப் புலிகளை அடக்குவதற்கான உத்தி என்ற பெயரில் தமிழர் தாயகத்தின் மீது மிகக் கொடூரமான அரச ஒடுக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டு, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் அவரது சகோதரரான பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவும், கைகட்டிச் சிரித்துக்கொண்டு பார்த்திருப்பதை சர்வதேச சமூகம் இனிமேலும் பொறுமையுடன் சகித்துக்கொண்டு வாளாவிருக்காது என்பதை அரசுத் தலைமை காலம் பிந்தியாவது உணர்ந்து கொள்ளும் கட்டாயம் அத்தலைமைக்கு மெல்ல மெல்ல ஏற்பட்டு வருகின்றது.

தமிழர் தாயகத்தில் இனந்தெரியாதோர் மேற்கொள்ளும் படுகொலைகள், காணாமற் போகச் செய்தல், ஆட்கடத்தல்கள், அச்சுறுத்தல்கள் என்ற கணக்கில் காட்டப்படும் மனித உரிமை மீறல்களுக்கு ஆட்சிப் பொறுப்பில் இருப்போரே பொறுப்பேற்க வேண்டிய யதார்த்த நிலை வெளிப்பட்டு வருகின்றது.

"புலிப் பயங்கரவாதம்' குறித்து அளவுக்கு மீறி ஆரவாரப்படுத்திக் கொண்டிருந்த உலகம், இப்போது உண்மையை உணர்ந்து "அரச பயங்கரவாதம்' குறித்து ஆராயத் தலைப்பட்டிருப்பது நல்ல சமிக்ஞை. உண்மை தெளிவாகும் போது தமிழர் மேற்கொள்வது "பயங்கரவாதம்' அல்ல "விடுதலை வேள்வி' என்பதும், கொழும்பு நடத்துவது சட்டத்தின் ஆட்சியல்ல, காட்டுத் தர்பார் என்பதும் உலகுக்கு நன்கு தெரியவரும். அதற்கான ஆரம்ப அறிகுறிகளே இப்போது தென்படுகின்றன.

விபரங்கள் இங்கே.....

http://www.uthayan.com/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.