Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

4 மாதங்களில் 709 ​பேர் உயிரிழப்பு !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

SSP Nihal Thalduwa Archives - NewsRadio - English
இந்த வருடத்தின் முதல் நான்கு மாதங்களில் வீதி விபத்துக்களால் 709 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

ஆகவே வீதியில் வாகனங்களை செலுத்தும் போது போக்குவரத்து விதிகளை முறையாக பின்பற்றுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி வரையான நிலவரப்படி, மொத்தமாக 8,202 விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக விபத்துக்களில் 667 பேர் விபத்து இடம்பெற்ற இடத்திலேயே உயிரிழந்தனர் அத்தோடு 2,160 பாரிய விபத்துகள் பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

3,201 சிறு விபத்துகள் இடம்பெற்றுள்ளதோடு விபத்துகளில் உயிரிழந்த 709 பேரில் 220 பேர் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் என்பதுடன், 102 பேர் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்கள் எனவும் அத்துடன் 179 பாதசாரிகளும் மரணித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

வீதியில் நிகழும் விபத்துக்களில் பெரும்பாலானவை மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டிகளால் இடம்பெற்றுள்ளவை.

எனவே, மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மற்றும் முச்சக்கர வண்டி சாரதிகள் வீதியில் வாகனங்களை செலுத்தும் போது போக்குவரத்து விதிகளை பின்பற்றுவது மிகவும் அவசியமாகும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

https://thinakkural.lk/article/258189

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, ஏராளன் said:

SSP Nihal Thalduwa Archives - NewsRadio - English
இந்த வருடத்தின் முதல் நான்கு மாதங்களில் வீதி விபத்துக்களால் 709 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

ஆகவே வீதியில் வாகனங்களை செலுத்தும் போது போக்குவரத்து விதிகளை முறையாக பின்பற்றுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி வரையான நிலவரப்படி, மொத்தமாக 8,202 விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக விபத்துக்களில் 667 பேர் விபத்து இடம்பெற்ற இடத்திலேயே உயிரிழந்தனர் அத்தோடு 2,160 பாரிய விபத்துகள் பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

3,201 சிறு விபத்துகள் இடம்பெற்றுள்ளதோடு விபத்துகளில் உயிரிழந்த 709 பேரில் 220 பேர் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் என்பதுடன், 102 பேர் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்கள் எனவும் அத்துடன் 179 பாதசாரிகளும் மரணித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

வீதியில் நிகழும் விபத்துக்களில் பெரும்பாலானவை மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டிகளால் இடம்பெற்றுள்ளவை.

எனவே, மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மற்றும் முச்சக்கர வண்டி சாரதிகள் வீதியில் வாகனங்களை செலுத்தும் போது போக்குவரத்து விதிகளை பின்பற்றுவது மிகவும் அவசியமாகும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

https://thinakkural.lk/article/258189

கனரக வாகனங்கள் மோதி, வீதியால் சென்ற பொதுமக்கள் பலர்  இறந்ததை,
கடந்த பல மாதங்களாக தினமும் வரும் செய்தியாக உள்ளது.
இதற்கு யார் பொறுப்பு ஏற்பது?

முதலில் லஞ்சம் வாங்காமல்... கடுமையான ஒட்ட பயிற்சிகளுடன்,  
வாகன அனுமதி பத்திரத்தை  வழங்க வேண்டும்.

ஜேர்மனியில் 48.2 மில்லியன் கார்கள் வீதியில் ஓடுகின்றன.
மக்கள் தொகையில் பாதிப்பேருக்கு மேல் வாகனங்கள் வைத்திருந்தும்...
2022´ம் ஆண்டு முழுவதும் நடந்த விபத்தில்  
200 பேர்
அளவிலேயே இறந்து இருக்கின்றார்கள். 

இந்த சின்னஞ் சிறிய நாட்டில்,  
4 மாதங்களில் 709 பேர் உயிரிழந்தது எவ்வளவு அதிகம் தெரியுமா?

அரச அதிகாரிகளின் அசமந்த போக்கே... விலை உயர்ந்த உயிர் பறிபோக முக்கிய காரணம்.
சட்டத்தை கடுமையாக்கி, தண்டனைகளை அதிகரியுங்கள் குற்றம் குறையும்.

வழக்குகளை வருடக் கணக்கில், இழுபட விடுவதால், குற்றவாளிகள் தப்பி 
விடுகின்றார்கள் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.
விகாரை கட்டுவதை விட்டுவிட்டு... பொதுமக்களின் உயிரில் கவனம் செலுத்துங்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, தமிழ் சிறி said:

கனரக வாகனங்கள் மோதி, வீதியால் சென்ற பொதுமக்கள் பலர்  இறந்ததை,
கடந்த பல மாதங்களாக தினமும் வரும் செய்தியாக உள்ளது.
இதற்கு யார் பொறுப்பு ஏற்பது?

முதலில் லஞ்சம் வாங்காமல்... கடுமையான ஒட்ட பயிற்சிகளுடன்,  
வாகன அனுமதி பத்திரத்தை  வழங்க வேண்டும்.

ஜேர்மனியில் 48.2 மில்லியன் கார்கள் வீதியில் ஓடுகின்றன.
மக்கள் தொகையில் பாதிப்பேருக்கு மேல் வாகனங்கள் வைத்திருந்தும்...
2022´ம் ஆண்டு முழுவதும் நடந்த விபத்தில்  
200 பேர்
அளவிலேயே இறந்து இருக்கின்றார்கள். 

இந்த சின்னஞ் சிறிய நாட்டில்,  
4 மாதங்களில் 709 பேர் உயிரிழந்தது எவ்வளவு அதிகம் தெரியுமா?

அரச அதிகாரிகளின் அசமந்த போக்கே... விலை உயர்ந்த உயிர் பறிபோக முக்கிய காரணம்.
சட்டத்தை கடுமையாக்கி, தண்டனைகளை அதிகரியுங்கள் குற்றம் குறையும்.

வழக்குகளை வருடக் கணக்கில், இழுபட விடுவதால், குற்றவாளிகள் தப்பி 
விடுகின்றார்கள் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.
விகாரை கட்டுவதை விட்டுவிட்டு... பொதுமக்களின் உயிரில் கவனம் செலுத்துங்கள்.

விபத்தை ஏற்படுத்தி மரணத்தை ஏற்படுத்தினால் குற்றவாளியாக்கி தண்டனை வழங்க வேண்டும், இங்கே தண்டப்பணம் தான் தண்டனை!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

6 மாதங்களில் 8,875 வீதி விபத்துக்கள் : 1,043 உயிர்ப் பலிகள்

நாட்டில் கடந்த ஆறு மாதங்களில் மொத்தம் 8,875 வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளதுடன் இந்த விபத்துகளில் 1,043 உயிர்கள் பலியாகியுள்ளன. இந்த விபத்துக்களில் பெரும்பாலானவை பேருந்துகள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளால் ஏற்பட்டதாக அரச போக்குவரத்து அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்தார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பொலிஸாரால் வெளியிடப்பட்ட புள்ளிவிபரங்களின்படி, இவ்வருடம் ஜூன் 18ஆம் திகதி வரை வாகன விபத்துக்கள் மற்றும் விபத்துக்களினால் ஏற்படும் உயிரிழப்புக்கள் கணிசமாக அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அதன்படி, கடந்த ஆறு மாதங்களில் 902 விபத்துகளில் மரணங்கள் சம்பவித்துள்ளன , 1,856 விபத்துகளில் பாரிய காயங்களும், 3,951 விபத்துகளில் சிறு காயங்களும், 2,096 விபத்துகளில் சேதங்களும் பதிவாகியுள்ளன.

எனவே, இந்த விபத்துகளுக்கான காரணங்கள் குறித்து அரசு மற்றும் அனைத்து அரசு உதவி நிறுவனங்களும் தற்போது கவனம் செலுத்தி வருகின்றன.

குடிபோதையில் வாகனங்களை ஓட்டுவது மற்றும் போதைப்பொருள் பாவனையே விபத்துக்களின் முக்கிய அம்சமாகவும், விபத்துக்கள் அதிகரிப்பதற்கும் காரணம் என கண்டறியப்பட்டது.

இதன்படி, பொது பாதுகாப்பு அமைச்சு, இலங்கை பொலிஸ், தேசிய ஆபத்தான மருந்துகள் கட்டுப்பாட்டு சபை, சுகாதார அமைச்சு, வீதி பாதுகாப்புக்கான தேசிய சபை, தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனம், அரசாங்க பகுப்பாய்வாளர் திணைக்களம் மற்றும் மோட்டார் போக்குவரத்து திணைக்களம் (DMT) ஆகியவை இணைந்து மது அல்லது போதையில் வாகனம் செலுத்தும் ஓட்டுநர்களை அடையாளம் காணும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளன.

மே 18 அன்று மேல் மாகாணத்தில் இந்த முன்னோடித் திட்டம் தொடங்கப்பட்டது. ஜூன் 12 முதல் 6 நாட்களுக்கு போதையில் வாகனம் ஓட்டிய ஓட்டுநர்கள் மீது மொத்தம் 1,781 பேருக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
போதையில் வாகனம் செலுத்தியதற்காக கைது செய்யப்பட்ட 41 பேரில் பொது போக்குவரத்தில் ஈடுபட்டிருந்த 19 பேரூந்து சாரதிகள், 13 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மற்றும் ஒன்பது முச்சக்கர வண்டி சாரதிகள் அடங்குகின்றனர்.

இந்த சாரதிகளின் ஓட்டுநர் உரிமங்கள் நீதிமன்றத்தால் ஆறு மாதங்கள் முதல் ஒரு வருடம் வரை இடைநிறுத்தப்பட்டதுடன், அவர்களில் பலருக்கு சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

https://thinakkural.lk/article/258998

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.