Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யேர்மனியில் லெபனான், சிரிய இனக் குழுக்களுக்கிடையில் மோதல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி ஒரு இனங்களுக்கான மோதலை என் வாழ்நாளில் நான் யேர்மனியில் பார்த்ததில்லைஎன  யேர்மனிய பொலீஸ் அதிகாரி ஒருவர் அதிர்ச்சியுடன் அறிவித்திருக்கிறார்.

Nordrhein-Westfalen மாநிலத்தில் எசன் நகரில் சிரியா, லெபனான் இனக் குழுக்களிடயில் வெள்ளிக்கிழமை மாலை ஐந்து மணி அளவில் மோதல் ஒன்று இடம் பெற்றிருந்தது . ஆரம்பத்தில் 70 முதல்80 வரையிலானோர் வரையில் பங்கு பற்றிய இந்த மோதல் 500 பேருக்கு மேலானோர் பங்கு பற்றும் அளவுக்கு விரவடைந்திருந்தது.

எசன் நகரில் ஒரே குடியிருப்பில் வசிக்கும்இரண்டு  குடும்பங்களுக்குள் ஏற்பட்ட சச்சரவே  16.06.2023 வெள்ளிக்கிழமை மாலை நேரத்தில் இரத்தக் களறியை ஏற்படுத்தியிருக்கிறது. அதுவும் சிறார்களுக்கிடையில் விளையாட்டின் போது ஏற்பட்ட சண்டையே அடிப்படையானது என அறிய முடிகிறது.

தகவல் கிடைத்து காவல்துறை வந்தபோது, கத்தி, வாள், இரும்புக் கம்பிகள், துடுப்பாட்ட மட்டைகள் போன்றவை மோதலின் போது மிகவும் மோசமாகப் பயன்படுத்தப் பட்டுக் கொண்டிருந்தன.

அங்கு நின்ற லெபனான் நாட்டைச் சேர்ந்த ஒருவரை பத்திரிகையாளர் வினவிய போது,  “சிரியன் எங்களுடன் கேவலமாக நடந்து கொள்கிறார்கள். இப்பொழுது நாங்கள் யார் என்று அவர்களுக்கு காட்ட வேண்டிய தருணம்  வந்திருக்கிறது. எங்களில் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு படுகாயம் அடைந்திருக்கிறார். எங்களில் பெரியவர் ஒருவர் Whatsapp மூலமாக அறிவித்தல் தந்ததால் லெபனான் குடும்பத்தைச் சேர்ந்த  நாங்கள் இங்கே ஒன்றாகத் திரண்டிருக்கிறோம். எங்களின் தாக்குதல் எப்படி இருக்கும் என்பதை சிரியர்களுக்கு காட்டப் போகிறோம்என்றார்.

மேலும் எசன் நகரப் பூங்காவில் இருந்து 150 மீற்றர் தூரத்தில் இருக்கும் லெபனான் நாட்டைச் சேர்ந்தவரது உணவு விடுதிக்கு முன்னால் சிரிய இனத்தைச் சேர்ந்தவர்கள் கொலை மிரட்டல்கள் விடுக்கும் காட்சியின் ஒளிப்பதிவு பரவலாகப் பரப்பப்பட்டு வந்திருக்கிறது.

இதன் எதிரொலியாக 500க்கு மேற்பட்ட லெபனான் நாட்டைச் சேர்ந்தவர்கள் சிரிய நாட்டவர்களுக்குச் சொந்தமான சிற்றுண்டி விடுதியைச் சேதமாக்கி இருக்கிறார்கள். “எங்களை யாரும் பயமுறுத்த முடியாதுஅது மிகவும் பிழையான காரியம்அதன் விளைவுகள் பாரதூரமாக இருக்கும். பிரச்சினை ஒரு முடிவுக்கு வரும் வரை இது தொடரும்என லெபனானைச் சேர்ந்த ஒருவர் கருத்துத் தெரிவித்துள்ளார்.

ஆரம்பத்தில் விசயம் இவ்வளவு விபரீதமாக இருக்கும் என்று நினைக்காமல் வந்த பொலிஸாருக்கு தங்களிடம் இருக்கும் Pfefferspray எந்த மூலைக்கு என்பது புரிந்து போயிற்று. மேலும் 250 பொலீஸாரும், சிறப்பு அதிரடிப் பொலீஸாரும் அழைக்கப்பட்டார்கள். கூடுதலாக ஒரு உலர்ங்கு வானூர்தியும் வானத்தில் பறந்து கொண்டிருந்தது. இந்த மோதல்களில் பலர் காயப்பட்டிருக்கிறார்கள். மேலும்100 பேர்வரை கைது செய்யப் பட்டிருக்கிறார்கள்

மதங்களூடாக வழங்கப் படும் நீதி அவரவர்கள் வாழும் நாட்டில் இருக்கலாம். ஆனால் யேர்மனியில் அது சாத்தியப்படாது. யேர்மனிக்கு என்று முறையான சட்ட திட்டங்கள் இருக்கின்றன. இந்த நாட்டில் வாழும் மக்கள் அவர்கள் எந்த நாட்டவரானாலும் சட்டத்தையும் ஒழுங்கையும் மதித்து நடக்க வேண்டும் என Nordrhein Westfalen பாராளுமன்ற கிறிஸ்தவ ஜனநாயக்க கூட்டணிக் கட்சியின் இணைத் தலைவர் Gregor Golland,அறிவித்திருக்கிறார்

பொலிஸார் நடத்திய சோதனைகளில் தாக்குதலுக்குத் தேவையான கத்தி துப்பாக்கி போன்ற ஆயுதங்களுடன் பணமும் கைப்பற்றப் பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

சிரியாவும் அரபிகள் லெபனானும் அரபிகள் தொப்பிள் கொடி உறவுகள். அதோடு இவர்கள் அமைதி மார்க்கமான மதத்தை சேர்ந்தவர்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆகாயத்தில் போன மூதேவிகளை நடு வீட்டில் இறக்கி வைத்து ஆராதனை செய்யும் ஜேர்மனிய அரசிற்கு இதுவும் வேண்டும்.இன்னும் வேண்டும்.
இதுவும் நல்லதிற்குத்தான். ஏனெனில் ஜேர்மனியில் வசிக்கும் வெளிநாட்டவர்களில் ஈழத்தமிழர்களின் அமைதியும் சாந்தமும் பளிச்சென்று புலப்படும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 18/6/2023 at 23:47, குமாரசாமி said:

ஏனெனில் ஜேர்மனியில் வசிக்கும் வெளிநாட்டவர்களில் ஈழத்தமிழர்களின் அமைதியும் சாந்தமும் பளிச்சென்று புலப்படும்.

உண்மைதான் குமாரசாமி. ஞாயிற்றுக்கிழமை நடந்த காமாட்சி அம்மாள் தேர்த்திருவிழாவைப் பற்றி பத்திரிகை ஒன்று இப்படி எழுதியிருக்கிறது

Farbenfroh und sehr friedlich feierten am Sonntag tausende Gläubige der Hindu-Gemeinde in Hamm das höchste Fest des Sri-Kamadchi-Ampal-Tempels.  ( இந்து சமூகத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஹம்மில் உள்ள ஸ்ரீ காமாட்சி அம்பாள் கோயிலின் தேர்த் திருவிழாவை ஞாயிற்றுக்கிழமை அன்று வண்ணமயமாகவும் மிகவும் அமைதியாகவும் கொண்டாடினர்)

  • கருத்துக்கள உறவுகள்

( இந்து சமூகத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஹம்மில் உள்ள ஸ்ரீ காமாட்சி அம்பாள் கோயிலின் தேர்த் திருவிழாவை ஞாயிற்றுக்கிழமை அன்று வண்ணமயமாகவும் மிகவும் அமைதியாகவும் கொண்டாடினர்)

இலங்கையை சேர்ந்த தமிழ் இந்துமத நம்பிக்கையாளர்களை தனது நாட்டில் காவடி எடுத்து பாடல்களுடன் நடனம் ஆடி தேர் இழுத்து செல்ல அனமதியாக அனுமதித்த யேர்மனியின் சிறப்பு மேற்குலநாடுகளின்  சிறப்புகளுக்கு எடுத்துகாட்டு.

தேர்த் திருவிழாவை ஞாயிற்றுக்கிழமை அன்று வண்ணமயமாகவும் மிகவும் அமைதியாகவும் கொண்டாடினர்)
மேற்குலக ஊடகங்கள் அமைதி மார்க்கம் என்ற பெயரை இந்து மதத்திற்கு  கொடுத்துவிடுவார்கள் போலிருக்கிறதே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.