Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

குமுதினி படகு மீண்டும் சேவையை தொடங்கியது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: VISHNU

21 JUN, 2023 | 12:51 PM
image
 

குமுதினி படகின் திருத்த வேலைகள் முடிவடைந்தது நேற்று செவ்வாய்க்கிழமை (20) படகு கடலினுள் இறக்கப்பட்டது. 

யாழ்ப்பாணம் குறிகாட்டுவான் பகுதிக்கும் நெடுந்தீவுக்கும் இடையில் சேவையில் ஈடுபட்டு வந்த குமுதினி படகு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பழுதடைந்துள்ளது. 

IMG-20230621-WA0011.jpg

படகின் திருத்த வேலைகள் வல்வெட்டித்துறை ரேவடி கடற்கரை பகுதியில் இடம்பெற்றது. வீதி அபிவிருத்தி அதிகார சபையின் 70 இலட்ச ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் படகின் திருத்த வேலைகள் முன்னெடுக்கப்பட்டன. 

IMG-20230621-WA0008.jpg

இந்நிலையில், படகின் திருத்த வேலைகள் முடிவடைந்த நிலையில் செவ்வாய்க்கிழமை (20) படகினை கடலுக்குள் இறக்குவதற்கு பாரம்பரிய முறைப்படி பொங்கல் பொங்கி படைக்கப்பட்டு, படகு கடலினுள் இறக்கப்பட்டது. 

வல்வெட்டித்துறை கடற்பகுதியில் இரு நாட்கள் படகு தரித்து நின்று, வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் கடல் போக்குவரத்து தொடர்பிலான அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் படகின் தரம் மற்றும் திருத்த வேலைகள் தொடர்பில் ஆராய்ந்து பயணிகள் சேவைக்கு அனுமதி வழங்கிய பின்னர் மீண்டும் குமுதினி படகு சேவையில் ஈடுபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குமுதினி படக்கானது 1968 ஆம் ஆண்டு முதல் நெடுந்தீவுக்கும் குறிகாட்டுவனுக்கும் இடையில் சேவையில் ஈடுபட்டு வருகின்றது. பல தடவைகள் பழுதடைந்த போதிலும், படகினை மீள திருத்தி சேவையில் ஈடுபட்டு வருகின்றது. 

கடந்த 1985ஆம் ஆண்டு மே மாதம் 15ஆம் திகதி இந்த படகில் பயணித்த 33 பேர் கடற்படையினரால் கூட்டு படுகொலை செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/158211

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மீள ஆரம்பிக்கப்பட்ட குமுதினி படகு சேவைnews-03-3-1024x333.jpg

யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறை ரேவடி கடற்கரையில் திருத்தப் பணிகளுக்காக பல மாதங்களாக நிறுத்தப்பட்டிருந்த குமுதினி படகு சேவை மீளவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கான சம்பிரதாயபூர்வ நிகழ்வு நேற்று(20) பிற்பகல் நடைபெற்றது.

யாழ்.குறிகட்டுவான் மற்றும் நெடுந்தீவு பயணிகளுக்கான கடல்வழிப் பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபட்ட குமுதினி படகு அடிக்கடி செயலிழந்த நிலையில் வல்வெட்டித்துறை ரேவடி கடற்கரையில் திருத்தப் பணிகளுக்காக நிறுத்தப்பட்டிருந்தது.

வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் குமுதினி படகின் திருத்தப்பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

திருத்தப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் படகை கடலுக்குள் இறக்குவதற்காக நடவடிக்கை நேற்று(20) பிற்பகல் முன்னெடுக்கப்பட்டது.

இதனை முன்னிட்டு பொங்கல் பொங்கி வழிபாடு இடம்பெற்றதுடன் சம்பிரதாயபூர்வமாக குமுதினி படகு கடலுக்குள் இறக்கி விடப்பட்டது.

குமுதினி படகு 1968 ஆம் ஆண்டு முதல் யாழ்.நெடுந்தீவிற்கான போக்குவரத்து சேவையில் ஈடுபடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://thinakkural.lk/article/259292

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ். நெடுந்தீவு கடல்வழி போக்குவரத்துச் சேவைக்கான குமுதினி படகு மீண்டும் செயலிழந்தது!

30 JUL, 2023 | 01:49 PM
image
 

திருத்த வேலைகளின் பின்னர் நெடுந்தீவு பயணிகளுக்காக நேற்று சனிக்கிழமை (29) சேவையில் ஈடுபட தயாராக இருந்த குமுதினி படகானது மீண்டும் இயந்திரக் கோளாறு ஏற்பட்டு செயலிழந்துள்ளது.

திருத்த வேலைகளின் பின்னர் குமுதினி படகுச் சேவையை மீண்டும் ஆரம்பிப்பதற்கான நிகழ்வு குறிக்கட்டுவான் இறங்குதுறையில் நேற்று காலை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பங்கேற்புடன் நடைபெறவிருந்த நிலையிலேயே படகில் மீண்டும் இயந்திரக் கோளாறு ஏற்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் - குறிகட்டுவான் மற்றும் நெடுந்தீவு பயணிகளுக்கான கடல்வழிப் பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபட்டிருந்த குமுதினி படகு அடிக்கடி செயலிழந்து வந்துள்ளது. 

இந்நிலையில், இந்த குமுதினி படகு வல்வெட்டித்துறை ரேவடி கடற்கரையில் நிறுத்தப்பட்டு, வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் படகின் திருத்தப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. 

படகு திருத்தும் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், அதனை கடலுக்குள் இறக்குவதற்கான நடவடிக்கை அண்மையில் முன்னெடுக்கப்பட்டது. 

இதன்போது, படகுக்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு ஐந்து தடவை பரீட்சார்த்தமாக குமுதினி படகு இயக்கப்பட்டது.

படகினை மீள செலுத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியான நிலையில், நேற்றைய தினம் படகினை மீண்டும் சேவையில் ஈடுபடுத்துவதற்கான நிகழ்வு ஆரம்பமாவதற்கு சில மணித்தியாலங்களுக்கு முன் படகினை இயக்கி குறிக்கட்டுவான் இறங்குதுறைக்கு கொண்டுவரும்போது திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டு செயலிழந்தது.

படகை இயக்குவதற்கான பகீரத பிரயத்தன முயற்சிகள் எடுக்கப்பட்டும் பலன் கிடைக்கவில்லை. 

இதேவேளை படகின் செயலிழந்த இயந்திரப் பகுதி திருத்தப் பணிக்காக நீர்கொழும்புக்கு கொண்டுசெல்லப்படவுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் வட மாகாண பணிப்பாளர் குரூஸ் தெரிவித்ததுடன், தமது திணைக்கள நிபுணத்துவ குழுவின் பரிசோதனைக்குப் பின்னரே மீண்டும் படகுச் சேவையை ஆரம்பிக்க முடியும் என்றும் அவர் கூறினார்.

குமுதினி படகு 1968ஆம் ஆண்டு தொடக்கம்  யாழ்ப்பாணம், நெடுந்தீவுக்கான கடல்வழிப் போக்குவரத்து சேவையில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/161268

அதரப் பழைய படகை ஞாபகச் சின்னமாக நிறுத்திவிட்டு தரமான புதிய படகை வாங்க/ஏதாவதொரு நாட்டிடம் கோரிப் பெறலாமே!

  • கருத்துக்கள உறவுகள்
On 21/6/2023 at 10:31, ஏராளன் said:

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் 70 இலட்ச ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் படகின் திருத்த வேலைகள் முன்னெடுக்கப்பட்டன. 

டக்கிளஸ் இப்படித்தான் மொக்குத்தனமாக செலவு செய்து ஒன்றையும் தமிழ் மக்களுக்கு உருப்படியாகச் செய்தது கிடையாது.

இந்தப் படகை காட்சிப்படுத்திவிட்டு.. அல்லது ஓரளவுக்கு இயங்கக் கூடிய நிலையில்.. நிறுத்தி வைத்துவிட்டு.. உல்லாசப் பயணிகளின் பார்வைக்கு.. புதிய நவீன வசதிகளுடன் கூடிய படகுகளை கொள்வனவு செய்து இயக்கி இருக்கலாம்... இந்தக் காசுக்கு. 

  • 4 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குமுதினிப் படகு மீண்டும் பயணிகள் சேவையில் ஈடுபட்டுள்ளது

Published By: VISHNU

24 AUG, 2023 | 09:26 PM
image
 

நெடுந்தீவின் பிரதான போக்குவரத்து மார்க்கமான குமுதினிப் படகு  வியாழக்கிழமை (24) முதல் மீண்டும் பயணிகள் சேவையில் ஈடுபட ஆரம்பித்துள்ளது.

குமுதினிப் படகு பழுதடைந்த நிலையில் திருத்த வேலைகளின் பின்னர் குறிகாட்டுவானில் தரித்துவிடப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் புதன் கிழமை  மாலை குமுதினிப் படகு குறிகாட்டுவானில் இருந்து பயணிகளை ஏற்றியவாறு நெடுந்தீவு சென்று தரித்ததுடன் வியாழக்கிழமை (24) காலை 7 மணிக்கு நெடுந்தீவில் இருந்து குமுதினிப் படகு குறிகாட்டுவான் நோக்கிப் புறப்பட்டு அங்கிருந்து மீண்டும் நெடுந்தீவுக்கு பயணித்தது.

யாழ்.குறிகட்டுவான் மற்றும் நெடுந்தீவு பயணிகளுக்கான கடல்வழிப் பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபட்ட குமுதினி படகு அடிக்கடி செயலிழந்த நிலையில் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் குமுதினி படகின் திருத்தப்பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

குமுதினி படகு 1968 ஆம் ஆண்டு முதல் யாழ்.நெடுந்தீவிற்கான போக்குவரத்து சேவையில் ஈடுபடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/163123

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.