Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்+

கேணல் வாகீசன் (சீலன்/துரோணர்)

 

தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறையின் வெளியகப் புலனாய் நடவடிக்கையின் “தாயக விடுதலைக்காய் தன்னையே மறைத்து எதிரியின் சாம்ராஜ்யத்தில் சாதனைகள் பல படைத்து விடுதலை அமைப்பின் நகர்வுக்கு வித்திட்ட போராளி”

புலனாய்வுக் கட்டமைப்பே ஒரு இராணுவ அமைப்பை சீராக வழிநடத்த ஊன்றுகோலான ஒன்றாகும். போராட்டத்தில் இணைந்த ஆரம்பத்திலேயே புலனாய்வு சம்பந்தமான துறையில் இணைந்து விடுதலைப் பணியாற்றிய தளபதி துரோணர். இவரின் பணியில் விடுதலை தீ வீச்சாக தென்பட்டது.

காலம் உருண்டோட பொறுப்பாளர்களின் அதி நம்பிக்கைக்குரியவனாக திகழ்ந்தான். விடுதலையை வேண்டி போராடும் ஒரு இராணுவ அமைப்பு கட்டுக் கோப்பாக சீர்குலைவின்றி வளர புலனாய்வுத் துறையே முக்கியம் என்பதை உணர்ந்து செயலாற்றியவர். 

புலனாய்வுத்துறையின் முக்கிய தளபதிகளின் வீரச்சாவின் பின் அந்த வெற்றிடங்களை இவரே பொறுப்பெடுத்து செயலாற்றினார். இவரின் செயற்திறன் தலைமையின் கவனத்தை ஈர்த்தது. பல செயற்பாடுகளில் விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளரின் பாராட்டைப் பெற்றவர். அமைப்பின் தலைமை இவரின் புலனாய்வு ஆளுமையை உணர்ந்து இவருக்கு சிறந்த ஒரு புலனாய்வு அணியை வழிநடத்தும் பொறுப்பைக் கையளித்தது. தனது பொறுப்பை சரிவரச் செய்து தன் விடுதலைப் பணியில் சிறந்து விளங்கினார். 

கடமை தவறும் போராளிகளை சரியாகத் தண்டித்து பணியின் முக்கியத்துவத்தை உணர்த்தி சிறந்த வழிகாட்டியாக திகழ்ந்தார். போராளிகளோடு மிகவும் அன்பாகப் பழகுவார். பாராபட்சம் பாராது தனக்கு கீழ் இருக்கும் போராளிகளை வழிநடத்திய சிறந்த தளபதி.

இவரின் விடுதலைப் பணியான புலனாய்வுத்துறையின் அவசியம் எவ்வளவோ அதே நேரம் ஆபத்தும் அதிகம். எதிரியின் கட்டுப்பாட்டு முக்கிய நகரங்களில் நிகழ்ந்த நடவடிக்கையின் சாதனையாளர்.

மக்களோடு மக்களாய் அன்பாகப் பழகி அவர்களை பயன்படுத்தியே பல சரித்திரங்கள் படைத்தவர். தன் போராளிகளை சந்திக்கும் நேரங்களில் தலைவரின் கரத்தை நாங்கள் தான் பலப்படுத்தோணும். அந்த ஆள் என்ன செய்யிறது, எத்தனை என்று கவனிக்கிறது. அவர் என்ன எதிர்பார்க்கிறாரோ அதை எங்கட உயிர பணயம் வைத்தாவது செய்து குடுப்பம். என்று தான் அடிக்கடி கதைப்பாராம். ஆடம்பரத்தை முற்றாக புறந்தள்ளி வாழ்ந்த தளபதி.

தமிழீழத்தின் வெளிப் புலனாய்வு நடவடிக்கைகளின் பல வெற்றிகளின் வேராகவும் செயற்பட்டவர். இவரின் சாதனைகள் பற்றி பலருக்கு தெரியாது. இருந்தாலும், அந்த சாதனை வீரனைப் பற்றி குறிப்பிட்டவர்களுக்கு நன்கு தெரியும்.

இவரின் விடுதலைப் பணியின் முக்கியத்துவம் பற்றி குறிப்பிட்ட ஒரு சம்பவம் நினைவில் குறிப்பிடுகிறேன் ஒரு இறுக்கமான காலகட்டத்தில் இலங்கையின் தலைநகரில் ஒரு நடவடிக்கைக்கான புலனாய்வு அணி நகர்த்தப்பட்டது. எந்த நேரமும் ஆபத்தும் அதிஉயர் பாதுகாப்புக்களை உடைத்து இவரின் திறமையால் அந்த அணி குறிப்பிட்ட இடத்தை அடைந்தது. எதிர்பாராத விதமாக அந்த அணியின் போராளி ஒருவர் கைது செய்யப்பட்டார். உடனே அந்த நடவடிக்கைக்கான காலத்தை நீடித்து அந்த அணிக்கு வரப்போகும் ஆபத்தான சூழலை உணர்ந்து அணியை தளத்தை நோக்கி நகர்த்தி பின்பு குறிப்பிட்ட காலவோட்டத்தின் பின் அந்த நடவடிக்கை வெற்றிகரமாக நடத்தப்பட்டது. நிலமைகளை உணர்ந்து கண்ணும் கருத்துமாக செயற்பட்டவர்.

இவரின் சாதனைகளை எளிதில் விபரித்து சரித்திரம் எழுதிவிட முடியாது. எதிரி அவிழ்க்க முடியாத பல விசித்திரமான வேட்டைக்காரன் இவன்.

தமிழீழத் தேசியத்தலைவர் மனதிலும், மக்களிடத்திலும், போராளிகளிடத்திலும் தனி இடத்தை பிடித்த ஓர் தளபதி. மாற்று இன மக்கள் மனங்களிலும் நீங்காத இடம் பிடித்தவர். இவரின் சாதனைகளையும், வீரத்தையும், தியாகத்தையும் அறிந்தவர்களால் நிச்சியமாக இவரை ஒரு சாதரண வீரனாகப் பார்க்க முடியாது. இவரின் செயல்கள் ஒவ்வொன்றும் வியப்பையே அளிக்கும். கடமை நேரத்தில் மிக மிக கண்டிப்புடன் இருப்பார். கடமை தவறும் போராளிகளோடு கோபம் கொண்டு சில மணி நேரங்களின் பின் அவர்களை அழைத்து ஆற்றுப்படுத்துவார்.இவரின் வீரச்சாவு உயிரை எம்மிடமிருந்து பிரித்ததே தவிர விடுதலை உணர்வை வீச்சாக்கியுள்ளது.

விடுதலைப் போராட்டப் பாதையில் இவரின் சாதனைகள் வெளிச் சொல்ல முடியாத பொக்கிஷங்கள். பெயர் புகழை மறந்து எந்த நேரமும் பேராபத்தை எதிர்கொள்ள தாயாராக செயற்பட்ட உன்னத வீரன். எதிரிகள் விடைகண்டு பிடிக்க முடியாத பல கேள்விகளின் உரிமையாளன்.

13.02.2009 அன்று சிறிலங்கா படையினரின் எறிகணை வீச்சுக்கு இலக்காகி தமிழ்த்தாய் மடியில் வீரகாவியமானார்.

தாயக விடுதலையை கனவாய் நெஞ்சமதில் சுமந்து தமிழ் மக்களின் மண்,உரிமைகளை மீட்டெடுக்கும் எம் புனிதப் போரிலே கேணல் துரோணரோடு வீரகாவியமான ஏனைய அனைத்து மாவீரர்களையும் இந்நாளில் நினைவுகூர்ந்து பூசித்து வணங்கி இவர்களின் உயரிய உன்னத இலட்சியத்தை மனதில் நிறுத்தி விடுதலை வேண்டி வீறுநடை போடுவோமாக…

 

----------------

மாவீரர்களின் வீரவரலாறுகளோடு “ராஜ் ஈழம்”

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

சீலன்- விசுவாசத்தின் உருவம்
துரோணர்- சாவுக்குள் நின்று சதுராடும் சாமர்த்தியம்

போராட்ட களத்தில் எல்லோரையும் செதுக்கி செம்மைப்படுத்துவார்கள் ஆயினும் அரிதாய் ஒரு சிலரே அதிசிறந்த சிற்பிகளின் உளிகளால் செதுக்கப்படும் பெரும் பாக்கியத்தை பெறுவார்கள்.

சிலருக்கு இருக்கும் இடம் தேடி வாய்ப்புகள் வரலாம், ஆயினும் இவன் அந்த வாய்ப்புக்காய் முழுமையாய் அர்ப்பணித்த நாள் தொடக்கம் தன்னை அதற்காய் ஒப்புக்கொடுத்தான்,தன்னை தானே செதுக்கிக்கொண்டான், ஒரு சில களங்களில் தனி ஒருவனாய் நின்றான், தளபதிகளுக்கு தனித்தே தெரிந்தான்.

கிண்ணி அண்ணாவும், கஸ்ரோ அண்ணாவும் ஒரே களத்தில் கூட்டாய் தோள்தட்டிக்கொடுத்த பாக்கியம் பெற்ற சாதாரண முன்னரங்க போராளி.

கோபம் வந்தால் முகம் சிவக்கும் வெள்ளைத்தோல் புலி தன்னை கரியபுலி கரும்புலியாய் உருமாற்றிய காலத்திடையே இவன் நின்ற களங்கள் தளங்கள் இவன் வாழ்க்கைக் குறிப்பின் முதல் பாகம்.

கரியபுலி கரும்புலியாய் உருமாறி துரோணராய் முழுஅவதாரம் தரித்தபின்னான இரண்டாம் பாகம் துரோணாச்சாரியாரின் வில் வித்தையை போன்றது. 

வேகம், விவேகம், தந்திரம், சாமர்த்தியம், சாணக்கியம் நிறைந்தது.

தை 1 "எல்லாம் வெல்லலாம்" என்றவனை கரிகாலனிடம் இருந்து காலன் வென்ற கதை ...... ஏமாற்றம்...வலிநிறைந்தது!..

காலம் கடந்தே சில விதைகள் விருட்சமாய் முளைக்கும்.

 

-தேவராசா ஞானராஜ்

 

No photo description available.

  • நன்னிச் சோழன் changed the title to வெளியகப் புலனாய்வு நடவடிக்கைகளின் வெளித்தெரியாச் சிற்பி கேணல் வாகீசன் (சீலன்/துரோணர்)

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.