Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சட்டவிரோத ஆயுதங்களை கைப்பற்ற உதவுபவர்களுக்கான வெகுமதி அதிகரிப்பு !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சட்டவிரோத துப்பாக்கிகள் மற்றும் கைக்குண்டுகள் புழக்கத்தில் இருப்பது இந்த நாட்களில் பல குற்றச்செயல்களுக்கு முக்கிய காரணமாக இருப்பதால், தேடுதல் நடவடிக்கைகளை அதிகரிக்க பொலிஸார் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சட்டவிரோத துப்பாக்கிகள் மற்றும் கைக்குண்டுகளை தேடுவதற்கு உதவும் பொலிஸ் அதிகாரிகள் மற்றும் தகவல் கொடுக்கும் தனியாருக்கு வழங்கப்படும் வெகுமதி தொகையை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸ் வழங்கிய அறிவுறுத்தலின் படி, பொலிஸ் மா அதிபர் சி. ஈ. விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.

அடிப்படை நடவடிக்கையாக இன்று (25) முதல் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை மேற்கொள்ளப்படவுள்ள சுற்றிவளைப்பின் போது கைப்பற்றப்பட்ட சட்டவிரோத துப்பாக்கிகள் மற்றும் கைக்குண்டுகளுக்கு வழங்கப்படும் வெகுமதி தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.

T-56 துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டால், பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு 250,000 ரூபா வெகுமதியும், தனியார் உளவாளிக்கு 250,000 ரூபாவும் வழங்கப்படும்.

இதேவேளை பல்வேறு வகையான தோட்டாக்கள் மற்றும் கைக்குண்டுகளை கைது செய்பவர்களுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகையை அதிகரிக்குமாறு அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன பணிப்புரை விடுத்துள்ளார்.

https://thinakkural.lk/article/259873

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சட்ட விரோத துப்பாக்கிகள் மற்றும் கைக்குண்டுகள் தொடர்பில் தகவல் வழங்குபவர்களுக்கு சன்மான தொகை அதிகரிப்பு

Published By: NANTHINI

25 JUN, 2023 | 03:51 PM
image
 

(எம்.வை.எம்.சியாம்)

சட்ட விரோத துப்பாக்கிகள் மற்றும் கைக்குண்டுகளை தேடும் நடவடிக்கைகளுக்கு உதவும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் அது தொடர்பில் தகவல்களை பெற்றுத் தரும் தரப்பினருக்கு வழங்கப்படும் சன்மான தொகையை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள விசேட அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

சட்ட விரோத துப்பாக்கிகள் மற்றும் கைக்குண்டுகள் புழக்கத்தில் இருப்பது, இந்த நாட்களில் பல குற்றச் செயல்களுக்கு முக்கிய காரணமாக இருப்பதால் தேடுதல் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பொது பாதுகாப்பு அமைச்சின் அறிவுறுத்தலின் படி, சட்ட விரோத துப்பாக்கிகள் மற்றும் கைக்குண்டுகளை தேடும் நடவடிக்கைகளுக்கு உதவும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் தனிநபர் தகவல் வழங்குநர்களுக்கு வழங்கப்படும் சன்மான தொகையை அதிகரிக்க  தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில், இன்று ஞாயிற்றுக்கிழமை (25) முதல் அடுத்த மாதம் 31ஆம் திகதி வரை மேற்கொள்ளப்படவுள்ள சுற்றிவளைப்பின்போது கைப்பற்றப்படும் சட்ட விரோத துப்பாக்கிகள் மற்றும் கைக்குண்டுகளுக்கு வழங்கப்படும் வெகுமதித் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும், டீ-56 துப்பாக்கியுடன் சந்தேக நபர் ஒருவர் கைதுசெய்யப்படும்போது பொலிஸ் உத்தியோகத்தர் மற்றும் தனிநபர் தகவல் வழங்குநருக்கு 2,50,000 ரூபாய் சன்மானம்  வழங்கப்படவுள்ளது. 

சந்தேக நபர் ஒருவர் இன்றி துப்பாக்கியை மாத்திரம் கைப்பற்றப்படும் சந்தர்ப்பத்தில்  பொலிஸ் உத்தியோகத்தருக்கு 2 இலட்சம் ரூபாவும், தனிநபர் தகவல் வழங்குநருக்கு  2,50,000 ரூபாவும் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும் இது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான நிஹால் தல்துவ கருத்து தெரிவிக்கையில்,

நாம் நாட்டு மக்களிடத்தில் கோரிக்கையை முன்வைக்கிறோம். சட்ட விரோதமாக துப்பாக்கிகள் மற்றும் கைக்குண்டுகளை தம் வசம் வைத்திருப்பவர்கள் தொடர்பில் தகவல் கிடைக்கப்பெற்றால் உடனடியாக பொலிஸாருக்கு தெரியப்படுத்துங்கள். 

119 அல்லது 1997 எனும் அவசர பொலிஸ் தொலைபேசி இலக்கங்களுக்கு அழைத்து தகவல்களை வழங்க முடியும். 

வழங்கப்படும் தகவல்கள் இரகசியமாக பேணப்படும். மக்களால் வழங்கப்படும் இவ்வாறான ஒத்துழைப்புகள் நாட்டில்  தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் குற்றச்செயல்களை கட்டுப்படுத்துவதற்கு உதவும் என்றார்.

 

https://www.virakesari.lk/article/158557

  • கருத்துக்கள உறவுகள்

ஏன், ஆயுதம் கொடுத்தவர்களுக்கு யாரிடம் கொடுத்தோம் என்பது மறந்து போய்ச்சா? அல்லது வகை தொகையில்லாமல் கொடுத்தார்களா? பாத்து, கொடுத்துவிட்டு  பறித்தால் கொடுத்தவர்களுக்கே விழும் வெடி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.