Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

500 மில்லியன் டொலர் : உலக வங்கியுடன் ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா தடுப்பூசி கொள்வனவு: இலங்கைக்கு உலக வங்கி பாராட்டு

500 மில்லியன் டொலர் : உலக வங்கியுடன் ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்

500 மில்லியன் டொலர் ஆதரவைப் பெற்றுக்கொள்வதற்காக உலக வங்கியுடன் ஒப்பந்தம் செய்து கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

வரவு செலவுத் திட்டத்திற்குத் தேவையான நிதியை வழங்குவது தொடர்பில் இலங்கைக்கும் உலக வங்கிக்கும் இடையில் இணக்கப்பாடு எட்டப்பட உள்ளது.

உலக வங்கியிடமிருந்து இலங்கைக்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைக்கவுள்ளதாக ரொய்ட்டர்ஸ் இணையத்தளத்தின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

700 மில்லியன் டொலர்களில் 200 மில்லியன் நலத்திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் ரொய்ட்டர்ஸ் இணையதளம் தெரிவித்திருந்தது.

https://athavannews.com/2023/1336431

  • கருத்துக்கள உறவுகள்

250 மில்லியன் டொலரை வழங்கியது உலக வங்கி – நிதி இராஜாங்க அமைச்சர்

ஐ.எம்.எப். இடமிருந்து நாளை சாதகமாக பதில் கிடைக்கலாம் – செஹான் சேமசிங்க –  Athavan News

உலக வங்கியினால் இலங்கைக்கு 250 மில்லியன் அமெரிக்க டொலர் வழங்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

இலங்கைக்கு 700 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக வழங்க உலக வங்கி இணக்கம் தெரிவித்தது.

குறித்த கடன் தொகையிலேயே 250 மில்லியன் அமெரிக்க டொலரை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

500 மில்லியன் அமெரிக்க டொலர் வரவு செலவு திட்டத்திற்கும் எஞ்சிய 200 மில்லியன் அமெரிக்க டொலர் சமூக பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கும் ஒதுக்கப்படவுள்ளது.

இதற்கமைய இன்றைய தினம் வழங்கப்பட்டுள்ள 250 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரவு செலவு திட்டத்துக்கு ஒதுக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

https://thinakkural.lk/article/261392

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைக்கான புதிய ஒத்துழைப்பு செயற்திட்டம் : பொருளாதார மீட்சியை இலக்காகக்கொண்டு உலக வங்கி நடவடிக்கை

05 JUL, 2023 | 02:02 PM
image
 

(நா.தனுஜா)

இலங்கையின் பொருளாதார மீட்சி மற்றும் நிதியியல்துறை உறுதிப்பாடு ஆகியவற்றுக்கு உதவும் நோக்கில் உலக வங்கியினால் எதிர்வரும் 2024 - 2027 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இலங்கைக்கான புதிய ஒத்துழைப்பு செயற்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. 

நாட்டின் பொருளாதார மற்றும் நிதியியல்துறை ஸ்திரத்தன்மையை மீளுறுதிப்படுத்தும் அதேவேளை, அனைவரையும் உள்ளடக்கியதும் மீண்டெழக்கூடிய தன்மை வாய்ந்ததுமான மீட்சிக்கான வலுவான அடித்தளத்தை இடுவதை முன்னிறுத்திய இலங்கைக்கான புதிய ஒத்துழைப்பு செயற்திட்டம் தொடர்பில் கடந்த வாரம் உலக வங்கிக் குழுமத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் சபையினால் ஆராயப்பட்டது.

மக்கள்மீது மிகமோசமான தாக்கங்களை ஏற்படுத்தியுள்ள தீவிர பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு இலங்கை முயற்சித்துக்கொண்டிருக்கும் பின்னணியில், பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கும் வறிய மற்றும் பின்தங்கிய சமூகப்பிரிவினரைப் பாதுகாப்பதற்கும் ஆழமான மறுசீரமைப்புக்கள் அவசியமாகவுள்ள சூழ்நிலையிலேயே இப்புதிய ஒத்துழைப்பு செயற்திட்டம் கொண்டுவரப்படுவதாக உலக வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

அதுமாத்திரமன்றி கடந்த 2021 - 2022 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் இலங்கையின் வறுமை வீதம் 13.1 இலிருந்து 25 சதவீதமாக இருமடங்கால் அதிகரித்திருப்பதாகவும், 2023 ஆம் ஆண்டில் அது மேலும் 2.4 சதவீதத்தினால் அதிகரிக்குமென எதிர்வுகூறப்பட்டிருப்பதாகவும் உலக வங்கி தெரிவித்துள்ளது.

இதுகுறித்துக் கருத்து வெளியிட்டுள்ள உலக வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் ஃபரிஸ் எச்.ஹடாட்-ஸேர்வோஸ், 'இலங்கை முகங்கொடுத்திருக்கும் நெருக்கடியின் தீவிரத்தன்மை முன்கூட்டியே எதிர்பார்க்கப்படாததாகும்.

ஆனால் இது நாட்டின் பொருளாதாரத்தை மீளச்சீரமைப்பதற்கு அவசியமான ஆழமான மறுசீரமைப்புக்களை மேற்கொள்வதற்குரிய வாய்ப்பை வழங்கியிருக்கின்றது.

இந்த நிலைமாற்றத்துக்கு உலக வங்கியின் ஒத்துழைப்பு மீட்சி செயற்திட்டம் உதவும். இச்செயற்திட்டமானது விரைவான பொருளாதார உறுதிப்பாடு, கட்டமைப்பு ரீதியான மறுசீரமைப்புக்கள், வறிய மற்றும் பின்தங்கிய சமூகப்பிரிவினரின் பாதுகாப்பு ஆகியவற்றில் விசேட அவதானம் செலுத்துகின்றது.

இம்மறுசீரமைப்புக்களின் ஊடாக நாட்டை மீண்டும் அனைவரையும் உள்ளடக்கிய அபிவிருத்திப்பாதையில் கொண்டுசெல்லமுடியும்' என்று நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இலங்கைக்கான புதிய ஒத்துழைப்பு செயற்திட்டத்தை எதிர்வரும் 2024 - 2027 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இருகட்டங்களாக நடைமுறைப்படுத்துவதற்கு உலகவங்கி திட்டமிட்டுள்ளது.

அதன்படி முதற்கட்டமாக அவசியமான நுண்பாக - நிதியியல் மற்றும் கட்டமைப்பு ரீதியான மறுசீரமைப்புக்களில் அவதானம் செலுத்தப்படுவதுடன் மனிதவளம் மற்றும் பின்தங்கிய சமூகப்பிரிவினரின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான ஒத்துழைப்பு வழங்கப்படும்.

முதல் 18 - 24 மாதங்களில் மேற்குறிப்பிட்ட மறுசீரமைப்புக்கள் மற்றும் சர்வதேச கடன்சலுகைத்திட்டம் என்பன நடைமுறைப்படுத்தப்பட்டதன் பின்னர், உலகவங்கியின் ஒத்துழைப்பு செயற்திட்டமானது புதிய வேலைவாய்ப்பு உருவாக்கத்துக்குப் பங்களிப்புச்செய்யக்கூடிய நீண்டகால அபிவிருத்தியை முன்னிறுத்திய முதலீடுகளை ஊக்குவிப்பதில் கவனம் செலுத்தும்.

இலங்கைக்கான இப்புதிய ஒத்துழைப்பு செயற்திட்டமானது உலக வங்கி, சர்வதேச நிதியியல் கூட்டுத்தாபனம் மற்றும் பல்தரப்பு முதலீட்டு உத்தரவாத முகவரகம் ஆகிய கட்டமைப்புக்களினதும், ஏனைய அபிவிருத்திப்பங்காளிகளினதும் மிகநெருக்கமான ஒத்துழைப்புடன் நடைமுறைப்படுத்தப்படும்.

https://www.virakesari.lk/article/159260

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.