Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கையை அண்மித்த நிலநடுக்கங்களால் கொழும்பில் பாரிய கட்டிடங்கள் ஆபத்தில் – பேராதனை பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் அதுல சேனாரத்ன

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையை அண்மித்துள்ள பகுதிகளில் ஏற்படும் நிலநடுக்கங்களால் கொழும்பில் உள்ள பாரிய கட்டிடங்களுக்கு ஆபத்து ஏற்படும் என பேராதனை பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர் அதுல சேனாரத்ன தெரிவித்துள்ளார். அண்மையில் இலங்கையில் தென்கிழக்கு கடல் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே பேராசிரியர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

“சமீபத்தில், தென்கிழக்கு கடல் பிராந்தியத்தில் ஏற்பட்ட அதிர்வு இலங்கையின் பல பகுதிகளிலும் உணரப்பட்டது. குறிப்பாக கொழும்பு பிரதேசத்தில் அதிர்வு உணரப்பட்டுள்ளது. அதாவது தென்கிழக்கு பிராந்தியத்தில் ஏற்படும் அதிர்வுகளால் மேல் மாகாணத்தில் உள்ள உயரமான கட்டிடங்கள் நிச்சயம் பாதிக்கப்படலாம். இலங்கையின் தென்கிழக்கு பகுதியில் நிலநடுக்கம் உணரப்படுவதால், அந்த பகுதிகளில் உள்ள உயரமான கட்டிடங்கள் சேதமடையலாம். எனவே, இலங்கையில் உள்ள புதிய மற்றும் பழைய கட்டிடங்களை, குறிப்பாக உயரமான கட்டிடங்களை வகைப்படுத்துவது நாம் செய்ய வேண்டிய ஒன்று என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த கட்டிடங்கள் பூமியின் புவியியல் நிலைமைகளுக்கு பொருந்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளனவா என்பதை நாம் அடையாளம் காணவேண்டும் . நிலநடுக்கங்களுக்கு ஏற்றவாறு அந்த கட்டிடங்களின் அடித்தளம் சரியான முறையில் உருவாக்கப்பட்டுள்ளதா என்று ஆய்வு செய்யவேண்டும் . அந்த ஆபத்தான கட்டிடங்களை அடையாளம் கண்டு, சில சமயங்களில் அவற்றைச் சரிசெய்வதற்கு சில வழிமுறைகள் உள்ளன. பழுதுபார்க்க முடியாத கட்டிடங்களை கருப்பு பட்டியலில் சேர்த்தல் அல்லது அந்த கட்டிடங்களை பாவனையில் இருந்து அகற்றுதல் போன்றவற்றின் மூலம் ஆபத்தான சூழ்நிலையை தவிர்க்கலாம். அந்த நிலை குறித்து இலங்கை இப்போது கவனம் செலுத்த வேண்டும் என பேராசிரியர் மேலும் தெரிவித்துள்ளார்.

மவ்ரட்ட

https://thinakkural.lk/article/261407

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்காவில் நிலநடுக்கத்துக்கு ஏற்றாற் போல கட்டிடங்கள் எங்காவது கட்டப்பட்டுளது என நான்  நினைக்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
On 4/7/2023 at 22:54, nunavilan said:

சிறிலங்காவில் நிலநடுக்கத்துக்கு ஏற்றாற் போல கட்டிடங்கள் எங்காவது கட்டப்பட்டுளது என நான்  நினைக்கவில்லை.

இந்த நில நடுக்கத்தை நானும் உணர்ந்தேன். இப்போது கடடப்படும் உயர் மாடி கட்டிடங்களில் இவைகள் கருத்தில் கொள்ளப்படுகின்றன. எனக்கு தெரிந்த மட்டில் Monarch , Emperor போன்ற High Rise கட்டிடங்களில் இதட்காக மேலதிகமாக செலவிட்டிருந்தார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Cruso said:

இந்த நில நடுக்கத்தை நானும் உணர்ந்தேன். இப்போது கடடப்படும் உயர் மாடி கட்டிடங்களில் இவைகள் கருத்தில் கொள்ளப்படுகின்றன. எனக்கு தெரிந்த மட்டில் Monarch , Emperor போன்ற High Rise கட்டிடங்களில் இதட்காக மேலதிகமாக செலவிட்டிருந்தார்கள். 

நன்றி குரூசோ.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.