Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அறிவியல் நகர் பற்றி பலர் அறியாத தகவல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்+

http://www.tamizhvalai.com/

 

திருகோணமலை தமிழீழத்தின் தலைநகரம். திருகோணமலையை நிருவாகத் தலைநகராகவும் யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களை கலாசாரத் தலைநகர்களாகவும் வன்னிப் பிரதேசத்தை கைத்தொழில் துறைத் தலைநகராகவும் கொண்டு தமிமீழத்தைக் கட்டியெழுப்பத் தமிழர்கள் – தமிழீழ விடுதலைப்புலிகள் திட்டமிட்டிருந்தனர். சிறிய மற்றும் நடுத்தரக் கைத்தொழிற்சாலைகளை நிறுவுவதே தமிழீழ அரசின் நோக்காக இருந்தது. நெடுந்தீவு கடல்வளம் மற்றும் மீன்வளத்துறைக்கான ஆராய்ச்சி மையமாக இருந்தது.

நாட்டின் நிருவாகத்தை பொதுநலன் கொண்டு நிருவகிக்கக் கூடிய சிற்பிகள் செஞ்சோலையில் வளர்ந்து வந்தனர்.
வன்னிப்பகுதி விடுதலைப்புலிகளின் ஆளுகைக்குள் இருந்தபோது மாங்குளம் தமிழர்களின் பாதுகாப்பு மையமாக விளங்கியது. மாங்குளத்தின் நில அமைப்பும் பரந்துவிரிந்த காட்டுப் பிரதேசமும் குறைவான மக்கள் குடியிருப்பும் ஒரு தொழில் துறை நகரை கட்டியெழுப்ப வாய்ப்பாக இருந்தது. மாங்குளத்தை பெருநகராகக் கட்டியெழுப்ப விடுதலைப்புலிகள் திட்டமிட்டிருந்தனர்.

கிளிநொச்சிப் பெருநகருக்கும் தொழிற்றுறை நகராக வளர்ந்து வரும் மாங்குளத்துக்குமிடையில் எ-9 வீதியின் மேற்குப் பகுதியில் உள்ள முறுகண்டி சந்தியில் இருந்து 500மீ தொலைவில் உள்ளது உள்ள பெருவெளியில் – காட்டுப் பகுதியில் அறிவியல் நகரைக் கட்டியெழுப்ப விடுதலைப்புலிகள் விரும்பினர். இன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் மற்றும் விவசாய பீடங்களை அமைக்கும் அளவுக்கு யுத்தப் பேரழிவையும் தாங்கியாவாறு அறிவியல் நகர் விளங்குகிறது.

கிளிநொச்சி மற்றும் மாங்குளம் ஆகிய பெருநகர்களுக்கிடையில் ஒரு அறிவியல் நகரை உருவாக்கும் செயற்திட்டம் தமிழீழத் தனியரசு நிறுவிய விடுதலைப் புலிகள் அமைப்பின் திட்டமிடல் ஆலோசகர்களால் விடுதலைப் புலிகளின் தலைமையிடம் முன்வைக்கப்பட்டது. தாயகத்தில் இருந்த புலமையாளர்களுடன் தமிழக மற்றும் புலம்பெயர் அறிஞர்களும் இத்திட்டத்தைத் தயாரிப்பதில் பங்குகொண்டனர். அறிவியல் நகரானது ஏறத்தாழ 5000 ஏக்கர் நிலத்தில் அமைக்கப்பட இருந்தது. இதற்காக எ-9 வீதிக்கு சமாந்தரமாக வீதி ஒன்றும் அமைக்கப்பட்டது.

அறிவியல் நகர் 1 இல் ஊடகவியற் கல்லுாரி (ஐயன் குளம் ஊடகவியில் கல்லுாரி)‚ மாவீரர் குடியிருப்பு‚ எழுத்தாளர் குடியிருப்பு‚ மருத்துவப் பயிற்சி நிலையம்‚ விண்வெளி ஆய்வு மையம்‚ நவம் அறிவுக்கூடம்‚ அன்பு இல்லம்‚ அன்பு மூதாளர் பேணகம்‚ செஞ்சோலை‚ காந்தரூபன் அறிவுச்சோலை முதலானவை அமைந்திருந்தன.

அறிவியல் நகர் 2 இல் விளையாட்டுத் துறைக்கான பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டு ஆரம்பநிலையில் இருந்தது. இங்கிலாந்து கிறிக்கற் அணியின் முன்னாள் தலைவர் இயன்பொத்தம் இந்நகரைப் பார்வையிட வருகை தந்திருந்தார்.

அறிவியல் நகர் 3 இல் தமிழ்மொழி ஆய்வுப் பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது. தமிழ் மொழியியற் பல்கலைக்கழகம் நிறுவுவது தொடர்பில் தமிழ்மொழி‚ கல்வி மற்றும் பண்பாட்டுத் துறையினர் பன்னாட்டு தமிழ்ப் பேரறிஞர்களுடன் ஆலோசனைகளை மேற்கொண்டனர். இம் மொழியியற் பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழி‚ தமிழர் நாகரிகம், சிந்துவெளியில் தமிழ் ஆய்வுகள், தமிழின் தொன்மை‚ தமிழுக்கும் பிறமொழிகளுக்குமான தொடர்பு‚ தமிழர் கலைகள்‚ பண்பாடு‚ கலாசாரம் முதலான தமிழியல் ஆய்வுகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்தது. உலகின் எந்த ஒரு மொழியியலாளரும்‚ ஆய்வாளரும் இங்கு வந்து ஆய்வுகளை மேற்கொள்ளக் கூடியவகையில் ஆய்வாளர்களுக்கான குடியிருப்புடன் கூடிய உயர் தரத்திலான வளாகச் சூழல் ஏற்படுத்தப்பட இருந்தது.

இயற்கையுடன் – வனத்தின் வனப்புடன் இணைந்த கட்டுமானமாக ஆய்வுப் பல்கலைக் கழகம் அமைக்கப்படவிருந்தது. எந்தவித குளிரூட்டி வசதிகளும் இல்லாமலே குளிர்ச்சியான காற்று உள்வரத்தக்க முறையில் இந்நகரின் ஆரம்பக் கட்டுமானத்தினை விடுதலைப் புலிகள் செய்திருந்தனர். இவ்வாரம்பக் கட்டுமானத்திற்காக பெருமரங்கள் தறிக்கப்படவில்லை.

நாமக்கல்லைச் சேர்ந்த தமிழபிமானியும் தமிழறிஞருமாகிய இராமசாமி என்பவர் தனது வாழ்நாள் சேமிப்புக்களை இந்த மொழியியற் பல்கலைக்கழகத்திற்கு அன்பளிப்பாக வழங்கியிருந்தார். இவர் வழங்கிய நூல்களில் ஒரு தொகுதி மொழியியற் பல்கலைக்கழகத்திற்கு வந்திருந்தது. மீதி நூல்கள் தற்போதும் தமிழ்நாட்டில் இருக்கின்றன.

இவ்வாறே அறிவியல் நகர் 3‚ 4‚ 5 ஆகியவற்றில் விஞ்ஞான தொழிநுட்ப ஆய்வுகளுக்கான வளாகங்களை அமைக்கத் திட்டமிட்டிருந்தனர்.

 

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

 அறிவியல் நகரில் உள்ள பல்கலைக் கழகம் பற்றி நானறிந்தவை

 

  • தகவல் வழங்கியவர்: இதற்கு ஒருவித பங்களிப்பு வழங்கியிருந்த எனது உறவினன்

 

தமிழீழத்தில் விடுதலைப்புலிகளின் ஆட்சிக்காலத்தில் கட்டியெழுப்பப்பட்ட பல்கலைக்கழகம் தான் கிளிநொச்சி அறிவியல் நகரில் அமைந்துள்ள பல்கலைக்கழகம்.

இது தமிழீழ தேசிய நிதியில் இருந்து 300 கோடி உருபாய் செலவு செய்யப்பட்டு கட்டியெழுப்பப்பட்டது. இதற்கான நிதிப்பணிகளை கவனித்தவர் கேணல் தமிழேந்தி (மாவீரர்) ஆவார். இந்த பல்கலைக் கழகத்திற்கும் சிங்கள அரசிற்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை. சிங்களம் இதைக் கட்ட ஒரு நயாச் சதமும் செலவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் கட்டுமானத்தினை மேற்கொள்ள கட்டிடக் கலைஞர் துரைராஜா அவர்கள் அவுஸ்ரேலியாவிலிருந்து வரவழைக்கப்பட்டு, ஒரு பல்கலைக்கழகத்திற்கு தேவையான அனைத்து கட்டடங்களையும் வடிவமைக்கும் படி கேட்டுக் கொள்ளப்பட்டது.

இது கட்டுவதற்கான அடிக்கல் 2000 ஆம் ஆண்டில் நாட்டபெற்று 2008 ஆம் ஆண்டு அவ்வளவு பொருளாதாரத் தடைகளையும் மீறி 90% கட்டி முடிக்கப்பட்டது.

இந்த பல்கலைக்கழகம் சுமார் 100 ஏக்கர் அளவில் பரந்து விரிந்து இருந்தது... இதில் மொத்தம் 5000 மாணவர்கள் பயிலலாம். அங்குபயிலும் மாணவர்கள் தங்களின் ஓய்வு நேரத்தினை கழிப்பதற்காக அருகில் இருந்த ஓர் பள்ளம் நன்கு சீரமைக்கப்ப்பட்டு ஓர் சிறுகுளம் கட்டப்பட்டிருந்தது. அக்குளத்தின் கரைகள் மட்டப்புல் என்று அழைக்கப்படும் ஒரு வகைப் புற்களால் அழகுபடுத்தப்பட்டிருந்தது. அந்த குளத்தினைச் சுற்றி மிகவும் அழகான அழகுமரங்கள் நடப்பட்டிருந்தன. அத்துடன் அந்த சிறுகுளம் நிரம்புமாயின் அந்நீர் தேங்கி நிற்க அருகில் ஓர் முறிகுளமும் கட்டப்பட்டிருந்தது. அந்த முறிகுளமும் நிரம்புமாயின் அதன் நீர் அருகில் உள்ள காட்டிற்குச்செல்ல ஓர் கால்வாயும் வெட்டப்பட்டிருந்தது. (இவை அனைத்தையும் கீழுள்ள நிகழ்படத்தில் கண்டுகளிக்கவும்)

மேலும் அந்த நகர் முழுவதும் கற்கை மற்றும் விஞ்ஞானத்திற்கு என்பதால் சுற்றிவர மக்கட் குடியிருப்புகள் அமைக்கப்படவில்லை. சுற்றிவர முழுவதும் காடுகளே இருந்தன.

  • கட்டியெழுப்பப்பட்டதன் நோக்கம்:

இது முற்றுமுழுதாக வெளிநாட்டில் தாய்மண் வாசம் மறந்து வெள்ளைக்காரனின் கலாச்சாரத்தோடு வாழும் எம்மாணவர்கள் தமிழீழம் திரும்பிவந்து இங்கு கற்கை நெறிகளை மேற்கொள்ள வேண்டும் என்னும் முக்கிய தூர நோக்கினை குறியாகக் கொண்டே த.வி.பு ஆல் கட்டியெழுப்பப்பட்டது. ஆனால் போக்கூழாக இது போரால் திறக்கப்படாமல் போனது.

→ இதை விடுதலைப்புலிகள் தங்களின் போராட்டத்திற்காக ஒருகாலும் பயன்படுத்தவில்லை!

 

 

கிளிநொச்சி அறிவியல் நகரில் அமைந்துள்ள ஈழப் பல்கலைக் கழகம் :

(2009இல் இப்படித்தான் இருந்தது)

 

 

Edited by நன்னிச் சோழன்

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு சிறப்பாகச் செயலாற்றித்தனது தாய்மண்ணின் உயர்வுக்காகப் பாடுபட்ட தேசியத்தலைவரும் மாவீரர்களும் நாட்டுப்பற்றாளர்களும் எல்லாவற்றையும் தூக்கியெறிந்துவிட்டு  மறைந்தது தமிழினத்தின் துர்ப்பாக்கியம்.  இவையெல்லாம் கடற்கரையில் மண்வீடுகட்டிய வேலைகளா? பொறுப்புமிக்க தேசியத்தலைவர் அவ்வளவு இலகுவாகத் தனது முடிவைத் தானே தீர்மானித்திருக்க மாட்டாரென்றே எண்ணத் தோன்றுகின்றது.  காலம்தான் பதில் கூறவேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.