Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தப்பித்தது வங்கிக் கட்டமைப்பு ; ஊழியர் சேமலாப, நம்பிக்கை நிதியங்களுக்கு என்ன நடக்கும்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: DIGITAL DESK 3

06 JUL, 2023 | 02:53 PM
image
 

ரொபட் அன்டனி

கடன் பெறுவதற்காக ஊழியர் சேமலாப நிதியத்துக்கு ஏற்கனவே வழங்கிய உண்டியல்கள் மற்றும் பிணைமுறிகளை மீண்டும் பெறவுள்ள திறைசேரி புதிய பிணைமுறிகளை வழங்கவுள்ளது.  அதற்கு 12 வீத மற்றும் 9 வீத வட்டி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அங்கு ஏற்கனவே அதிகளவு வட்டிக்கு பெறப்பட்டிருந்த பிணைமுறிகளும் இந்தப் புதிய வட்டி முறைக்கு மாற்றப்படுவதால் அதில் ஒரு வட்டி இழப்பு சேமலாப நிதியத்துக்கு ஏற்படுகிறது. அதேபோன்று இந்தக் கடன்களை மீள் செலுத்தும் காலமும் நீடிக்கப்பட இருக்கின்றது. முதிர்ச்சிக் காலம் நீடிக்கப்படுவதால் சேமலாப நிதியத்துக்கு ஓர் இழப்பு ஏற்படுகின்றது. ஆனால் அந்த இழப்பு நிதியத்தின் அங்கத்தவர்களுக்கு ஏற்படாதவாறு பார்த்துக் கொள்வதாக அரசாங்கம் அறிவித்திருக்கின்றது.  காரணம் மக்களுக்கு ஏற்கனவே 9 வீதமளவிலேயே வட்டி கிடைக்கின்றது.  அந்த 9  வீத வட்டி எதிர்காலத்தில் உறுதிப்படுத்தப்பட்டிருக்கும் என்று அரசாங்கம் அறிவித்திருக்கின்றது. ஆனால் அரசாங்கம் இதனை எவ்வாறு உத்தரவாதப்படுத்தும்? அதற்கான சட்ட ரீதியான உத்தரவாதம் என்ன என்பதே நிபுணர்களின் கேள்வியாக இருக்கின்றது.

பல்­வேறு  சர்ச்­சைகள், விமர்­ச­னங்­க­ளுக்கு   மத்­தியில் உள்­நாட்டு கடன் மறு­சீ­ர­மைப்பு தொடர்­பாக அரசாங்கம் தயா­ரித்­தி­ருக்­கின்ற வேலைத்­திட்­டத்­துக்கு பாரா­ளு­மன்­றத்தின் அனு­மதி கிடைத்­தி­ருக்­கின்­றது. இந்­நி­லையில்  கடன் மறு­சீ­ர­மைப்பு செய்­யப்­ப­ட­வுள்ள தரப்­பி­ன­ருக்கு இந்த யோசனை இன்று செவ்­வாய்க்­கி­ழ­மையின் பின் அனுப்­பப்­படும்.     

21 நாட்­க­ளுக்குள்  சம்­பந்­தப்­பட்ட கடன் மறு­சீ­ர­மைப்­புக்கு உட்­ப­டு­கின்ற நிறு­வ­னங்கள் தமது நிலைப்­பாட்டை அர­சாங்­கத்­துக்கு அறி­விக்க வேண்டும்.  அதா­வது இந்த மறு­சீ­ர­மைப்பு யோச­னையில் சில தெரி­வுகள் வழங்­கப்­பட்­டி­ருக்­கின்­றன.  அந்தத் தெரி­வு­களில் எதனை கடன் மறு­சீ­ர­மைப்­புக்கு உட்­படும் நிறு­வ­னங்கள் ஏற்­றுக்­கொள்­கின்­ற­ன என்­பதை அர­சாங்­கத்­துக்கு அறி­விக்க வேண்டும்.  இதில் ஏதா­வது  ஒரு திட்­டத்தை அல்­லது தெரிவை இந்த நிறு­வ­னங்கள் ஏற்­றுக்­கொண்டு தான் ஆக ­வேண்டும். 

சர்­வ­தேச  நாணய நிதி­யத்­துடன் இலங்கை செய்து கொண்­டி­ருக்­கின்ற உடன்­ப­டிக்­கையின் பிர­காரம் உள்­நாட்டு மட்­டத்­திலும் இலங்கை அர­சாங்­கத்தின் சார்பில் திறை­சேரி பெற்­றி­ருக்­கின்ற கடன்­க­ளுக்கு மறு­சீ­ர­மைப்பு செய்து கொள்ள வேண்டும். உள்­நாட்டில் திறை­சேரி பல்­வேறு தரப்­பிடம் கடன்­களைப் பெற்­றி­ருக்­கின்­றது. 

முக்­கி­ய­மாக மத்­திய வங்கி,  அரச மற்றும் தனியார் வங்கி கட்­ட­மைப்பு,  ஊழியர்  சேம­லாப நிதியம், ஊழியர் நம்­பிக்கை  நிதியம் மற்றும் நிதி நிறு­வ­னங்கள் என்­ப­வற்­றிடம்  திறை­சேரி கடன்­களைப் பெற்­றுள்­ளது.  தற்­போ­தைய சூழலில் இலங்­கையின் மொத்த கடன்   83 பில்­லியன் டொலர் என்று அறி­விக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. 

அண்­மையில் அர­சாங்­கத்­தால் இந்தத் தரவு வெளி­யி­டப்­பட்­டி­ருக்­கின்­றது.  இதில் கிட்­டத்­தட்ட 42 பில்­லியன் டொலர் உள்­நாட்டுக் கடன்­க­ளாக காணப்­ப­டு­கின்­றன.  இதனை ரூபாவில் கூறு­வது என்றால் கிட்­ட­த்தட்ட 16  ட்ரில்­லியன் ரூபா­வாக காணப்­ப­டு­கி­றது.  இந்த 42 பில்­லியன்  டொலர் உள்­நாட்டுக் கடனில் சுமார் 19.5 பில்­லியன் டொலருக்கே கடன் மறு­சீ­ர­மைப்பு செய்­யப்­ப­டு­கின்­றது.

வங்கிக் கட்­ட­மைப்­புக்கு விலக்­களிக்கப்­பட்­டது ஏன்?

இங்கு மிக முக்­கி­ய­மாக அரச மற்றும் தனியார் வங்கிக் கட்­ட­மைப்­பிடம் திறை­சேரி பெற்­றி­ருக்­கின்ற கடன்­க­ளுக்கு மறு­சீ­ர­மைப்பு செய்­யப்­பட மாட்­டாது என அறி­விக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது.  அதா­வது வங்கிக் கட்­ட­மைப்பு ஏற்­க­னவே இலங்­கையின் வரி வரு­மா­னத்தில் 50 வீத­மான பங்­க­ளிப்பை செலுத்­து­கின்­றது.  அதா­வது மக்­க­ளி­ட­மி­ருந்து வரியை பெற்றுக் கொடுப்­பதில் வங்­கிகள் பாரி­ய­ளவில் பங்­க­ளிப்பை வழங்­கு­கின்­றன.  அதே­போன்று வங்­கிகள் இலங்­கையின் பொரு­ளா­தா­ரத்­துக்கு வழங்­கிய கடன் ஒரு ட்ரில்­லியன் ரூபா அளவில் அற­வி­டப்­பட வேண்­டி­யுள்­ளது. அப்­படிப் பார்க்­கும்­போது வங்கிக் கட்­ட­மைப்பு நாட்டின் பொரு­ளா­தா­ரத்­துக்கும்  அர­சாங்­கத்தின் வரு­மா­னத்­துக்கும் பாரிய பங்­க­ளிப்பை செலுத்தி வரு­கின்­றது.  எனவே மேலும் வங்கித் துறையை சுமைக்கு உட்­ப­டுத்­தாமல்  உள்­நாட்டுக் கடன்   மறு­சீ­ர­மைப்பு செயற்­பாட்டிலிருந்து வங்­கி­களை விலக்­க­ளிப்­ப­தற்கு தீர்­மா­னிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது.

கடன் மறு­சீ­ர­மைப்பு செயற்­பாட்டை பொறுத்­த­வ­ரையில் வங்கிக் கட்­ட­மைப்­புக்கு விலக்­க­ளித்­தமை மிக முக்­கி­ய­மா­ன­தாக இருக்­கின்­றது.  காரணம் கிட்­டத்­தட்ட 57 மில்­லியன் வங்கிக் கணக்­குகள் நாட்டில்  காணப்­ப­டு­கின்­றன.  அதா­வது 5 கோடியே 70 இலட்சம் வங்கிக் கணக்­குகள் காணப்­ப­டு­கின்­றன.  அந்த வங்கிக் கணக்­கு­க­ளுக்கு எந்த வித­மான பாதிப்பும் ஏற்­ப­டக்­ கூ­டாது.  மக்கள் வைத்­தி­ருக்­கின்ற வைப்­பு­க­ளுக்கு எந்தப்  பாதிப்பும் வரக் ­கூ­டாது. அதே­போன்று மக்கள் பெறு­கின்ற வட்­டி­க­ளுக்கும் எந்­த­வி­த­மான பாதிப்பு ஏற்­ப­டக்­ கூ­டாது என்­பதை கருத்தில் கொண்டு அர­சாங்கம் இவ்­வாறு வங்கிக் கட்­ட­மைப்பை  விலக்­கி­யுள்­ளது.

ஏனைய கடன்­க­ளுக்கு மறு­சீ­ர­மைப்பு செய்­யப்­படும்

மறு­புறம் மத்­திய வங்கி திறை­சே­ரிக்கு  கொடுத்த கடன்­க­ளுக்கு மறு­சீ­ர­மைப்பு செய்­யப்­படவிருக்­கின்­றது.  அது மக்­களை பொறுத்­த­ வ­ரையில் மிகப்­பெ­ரிய சுமையை ஏற்­ப­டுத்­தாது என்று நிபு­ணர்கள் கரு­து­கின்­றனர்.     ஆனால்,    திறை­சேரிக்கு   ஊழியர் சேம­லாப  நிதியம்  மற்றும் ஊழியர் நம்­பிக்கை நிதியம் ஆகியன  வழங்­கிய கடன்­க­ளுக்கு மட்­டுமே கடன் மறு­சீ­ர­மைப்பு செய்ய ஏற்­பா­டாகி இருக்­கின்­றது. 

சேம­லாப நிதி­யத்­துடன் எவ்­வாறு கடன் மறு­சீ­ர­மைப்பு செய்­யப்­படும்?

திறை­சேரி ஊழியர் சேமலாப மற்றும் நம்­பிக்கை நிதி­யங்­க­ளுக்கு வழங்­கி­யுள்ள பிணை­மு­றிகள் அனைத்தும் ஸ்டெப்-­டவுன் என்ற முறையில்  மீளப்­பெ­றப்­பட்டு புதிய பிணை­மு­றிகள் வழங்­கப்­படும். அவற்­றுக்கு  2025 ஆம் ஆண்­டு­ வரை  12 வீத வட்­டியும் அதன் பின்னர் பிணை­முறி காலம் முடி­யும் ­வரை 9 வீத வட்­டியும் வழங்­கப்­படும்.  இதனால் இந்த நிதி­யங்­களின் அங்­கத்­த­வர்­களின் பணத்­துக்கு எந்தப் பாதிப்பும் ஏற்­ப­டாது.  

மேலும் எதிர்­வரும் காலங்­களில் 9 வீத வட்டி உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.   அல்­லது ஊழியர் சேம­லாப   மற்றும்  நம்­பிக்கை  நிதி­யங்கள்   தற்­போது வழங்­கு­கின்ற  14 வீத வரி வரு­மா­னத்தை  30 வீத­மாக அதி­க­ரிக்­கலாம்  என்ற தெரி­வுகள் இவற்­றுக்கு வழங்­கப்­பட்­டுள்­ளன.  ஊழியர் சேம­லாபம் நிதி­யம் என்­பது    தொழி­லாளர் வர்க்­கத்தின் சம்­ப­ளத்தில் இருந்தும் தொழில் வழங்­கு­னர்­களின் தரப்­பி­ லி­ருந்தும் செய்­யப்­ப­டு­கின்ற சேமிப்­பாகக் காணப்­ப­டு­கி­றது. இந்த ஊழியர் சேம­லாப  நிதியம் கிட்­டத்­தட்ட 3.5 ட்ரில்­லியன் ரூபாவை திறைசேரிக்கு கடனாக  வழங்­கி­யி­ருப்­ப­தாகத் தெரி­விக்­கப் ப­டு­கி­றது. இதற்­கா­கவே தற்­போது இந்த மறு­சீ­ர­மைப்பு  செய்­யப்­ப­டு­கின்­றது.

கடன் மறு­சீ­ர­மைப்புக் கரு­விகள்

கடன் மறு­சீ­ர­மைப்பு செயற்­பாட்டில் மூன்று கரு­விகள் பிர­யோ­கிக்­கப்­ப­டலாம். அதில் ஏற்­க­னவே பெறப்­பட்ட கடன்­க­ளுக்­கான வட்டி வீதத்தைக் குறைக்­கலாம்.  அல்­லது அந்தக் கடன்­க­ளுக்­கான தவணைப் பணத்தை மீள்­ செ­லுத்தும் காலத்தை அதி­க­ரிக்­கலாம்.  அதா­வது கடன் செலுத்­து­வ­தற்கு நீண்ட நிவா­ரண காலப்­ப­கு­தியை பெற்றுக்கொள்­ளலாம்.  மூன்­றா­வ­தாக இலங்கை   பெற்­றி­ருக்­கின்ற கடன்­களில் ஒரு தொகையைக் கழித்து விடலாம். அல்­லது இரத்து செய்­து­வி­டலாம்.  அதனை Haircut  என்று கூறு­வார்கள்.  இந்த மூன்று முறை­களில்   கடன் மறு­சீ­ர­மைப்பை செய்து கொள்ள முடியும்.  இந்தக் கரு­வி­களைப்  பயன்­ப­டுத்தி  கடன் மறு­சீ­ர­மைப்பு செய்­யும்­போது  எவ்­வா­றான தாக்­கங்கள் ஏற்­படும் என்­பது சக­ல­ருக்கும் தெரியும். 

என்ன விமர்­சனம்?  

இந்­நி­லையில் ஊழியர் சேம­லாப,   நம்­பிக்கை நிதியம்  ஆகி­ய­வற்­றுக்கு திறை­சேரி  வழங்­கி­யுள்ள  உண்­டி­யல்கள் மற்றும் பிணை­மு­றி­க­ளை சகலதையும்  பெற்­றுக்­கொண்டு மீண்டும் புதிய பிணை­மு­றிகள் வழங்­கப் ­ப­ட­வுள்­ளன.   இதற்­காக   2025 ஆம் ஆண்டு வரை 12 வீத வட்­டியும்  அதற்குப் பின்னர் 9 வீத வட்­டியும் வழங்­கப்­ப­ட­வி­ருக்­கின்­றது.  இந்தப் பின்­ன­ணியில் இந்தக் கடன் மறு­சீ­ர­மைப்புக் கரு­வி­களில் எவை இதில் பயன்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன என்று பார்க்­கும்­போது ஒரு விதத்தில் வட்டி வீதக் குறைப்பு செய்­யப்­படவுள்ளதை காணலாம்.    

அதே­போன்று பிணை­முறை கடன்­க­ளுக்­கான மீள் செலுத்தும் காலம் நீடிக்­கப்­படவுள்ளமை மேலோட்­ட­மாகத் தெரி­கி­றது.   ஏற்­க­னவே பல்­வேறு வட்­டி ­மு­றை­களில் திறை­சே­ரிக்கு இந்­த நிதி­யங்கள் கடன்­களை வழங்கி இருக்கும்.  ஆனால், அந்த சகல கடன்­க­ளையும் மீளப் பெற்று தற்­போது புதிய கடன்கள் வழங்­கப்­ப­ட­வி­ருக்­கின்­றன. ஆனால்  தற்­போது அதற்­கான வட்டி வீதம்   2025 ஆம் ஆண்­டு ­வரை 12 வீத­மா­கவும்  பின்னர் ஒன்­பது வீத­மா­கவும் வரை­ய­றுக்­கப்­பட்­டுள்­ளது. இங்கே வட்டி வீத குறைப்பு செய்­யப்­படுகின்றது  என்று எடுத்­துக்­கொள்­ளலாம்.  

அதே­போன்று மீள் செலுத்தும் காலப்­ப­குதி தொடர்­பான புதிய தீர்­மானம்  இனிமேல் தான் எடுக்­கப்­படும்.  ஆனால், அர­சாங்­கத்தின் கருத்தின் பிர­காரம் இது­வரை காலமும் ஊழியர் சேம­லாப நிதியம் மற்றும்   நம்­பிக்கை நிதிய அங்கத்தவர்கள்   பெற்றுக் கொண்ட வட்­டி­க­ளுக்கு அல்­லது அவர்கள் வைத்­தி­ருக்­கின்ற பண ­மீ­திக்கு  எந்­த­வித பாதிப்பும் ஏற்­ப­டாது என்­பது உறு­தி­யா­கி­யி­ருக்­கின்­றது.  

இரண்டு வகை­யான விமர்­ச­னங்கள்

ஆனால் இந்த விட­யத்தில் இரண்டு வகை­யான விமர்­ச­னங்கள் முன்வைக்கப்படுகின்றன.   அதா­வது ஊழியர் சேம­லாப,   நம்­பிக்கை நிதி­யங்­களின்  அங்­கத்­த­வர்­க­ளுக்கு இதனால் பாதிப்பு ஏற்­படும், அவர்­க­ளுக்கு இழப்பு ஏற்­படும் என்று எதிர்க்­கட்­சிகள் தர்க்கம் செய்­கின்­றன. எப்­ப­டி­யென்றால் தற்­போது வரை­ய­றுத்­தி­ருப்­பதை விட அதி­க­மான வட்­டியைப் பெறு­வ­தற்­கான சாத்­தியம் இருக்­கின்­றது என்பதும்  அதே­போன்று இந்த 9 வீத வட்டி வழங்­கப்­ப­டு­வது உத்­த­ர­வா­தப்­ப­டுத்­தப்­ப­டுமா?  என்­பதும்  எதிர்க் ­கட்­சிகள்  முன்­வைக்­கின்ற தர்க்­க­மாக இருக்­கின்­றது. ஆனால், கடந்த பல வரு­டங்­க­ளாக 10 வீதத்­துக்கு உட்­பட்டே மக்­க­ளுக்கு வட்டி வழங்­கப்­பட்­டுள்­ளது. 

அர­சாங்­கத்தின் திட்­ட­வட்ட அறி­விப்பு

 அர­சாங்கத் தரப்பை பொறுத்­த­ வ­ரையில் இது­வரை காலமும் ஊழியர் சேம­லாப நிதி­யத்தின் அங்­கத்­த­வர்கள் பெற்ற வட்­டிக்கோ அவர்­க­ளது மீதிக்கோ எந்­த­வி­த­மான சிக்­கலும் இல்லை, எதிர்­கா­லத்தில் 12 வீத வட்­டியும் 2025ஆம் ஆண்டின் பின்னர் 9 வீத வட்­டியும் வழங்­கப்­ப­டு­கி­றது.  எனவே அவர்­க­ளுக்கு எந்­த­வி­த­மான இழப்பும் இதில் ஏற்­ப­ட­வில்லை என்ற கருத்தை  தொடர்ச்­சி­யாக தெரி­வித்து வரு­கி­றது.  இந்த விவ­கா­ரத்­தி­னா­லேயே   பாரா­ளு­மன்­றத்­திலும் மிக கார­சா­ர­மான விவா­தங்கள் இடம்­பெற்­றன.   

ஊழியர் சேம­லாப நிதியம் என்ன முடிவு எடுக்கும்? 

எந்­தக் ­கா­ரணம் கொண்டும் ஊழியர் சேம­லாப நிதி­யத்தின் அங்­கத்­த­வர்­க­ளுக்கு பாதிப்பு ஏற்­ப­டாத வகையில் இந்தக் கடன் மறு­சீ­ர­மைப்பு செய்து கொள்­ளப்­பட வேண்டும் என்­பது சுட்­டிக்­காட்­டப்­ப­டு­கி­றது.        எதிர்­வரும் நாட்­களில்   ஊழியர் சேம­லாப நிதி­யத்­துக்கு அர­சாங்­கத்­தால் இந்த  யோசனை முன்­வைக்­கப்­படும்.  இந்­நி­லையில் சேம­லாப நிதியம் என்ன முடிவு எடுக்கப் போகின்­றது என்­பதை பொறுத்­தி­ருந்து பார்க்க வேண்­டி­யி­ருக்­கி­றது.

தற்­போ­தைய நெருக்­க­டியில் இலங்­கைக்கு மறு­சீ­ர­மைப்­புகள் மிக முக்­கி­யமான­தா­கவே காணப்­ப­டு­கின்­றன. மறு­சீ­ர­மைப்­புகளின்றி அடுத்த கட்­டத்தை நோக்கி நகர முடி­யாது என்­பதே  யதார்த்­த­மாகும்.  பொரு­ளா­தார ரீதி­யா­கவும் சகல துறை­க­ளிலும் மறு­சீ­ர­மைப்­புகள் அவ­சி­ய­மா­கின்­றன. உள்­நாட்டுக்  கடன் மறு­சீ­ர­மைப்பை செய்தால்  வெளி­நாட்டுக் கடன் மறு­சீ­ர­மைப்­பையும்  செய்து கொள்ள முடியும்.  இலங்கை வெளி­நா­டு­களில் காணப்­ப­டு­கின்ற கிட்­டத்­தட்ட 42 பில்­லியன் டொலர் கடனில் சுமார் 17 பில்­லியன் டொலரை ரத்து செய்­வ­தற்கு அதா­வது ஹெயார்கட்  செய்­வ­தற்கு எதிர்­பார்க்­கின்­றது.

 அதற்கு உள்­நாட்டில் ஓர் அர்ப்­ப­ணிப்பை காட்ட வேண்டும். ஆனால், அது ஊழியர் சேம­லாப நிதி­யத்தின் அங்­கத்­த­வர்­களை பாதிக்­கக் ­கூ­டாது.    

மக்­க­ளுக்கு இழப்பு ஏற்­ப­டு­கின்­றதா? நிபு­ணரின் விளக்கம்..

இந்த உள்­நாட்டு மறு­சீ­ர­மைப்பு  தொடர்பில் கொழும்பு பல்­க­லைக்­க­ழ­கத்தின் பொரு­ளியல் துறை சிரேஷ்ட விரி­வு­ரை­யாளர் கலா­நிதி  கணே­ச­மூர்த்தி இவ்­வாறு விளக்­க­ம­ளிக்­கிறார்.  அதா­வது ஊழியர்  சேம­லாப நிதி­யத்­து­ட­னான மறு­சீ­ர­மைப்பில்   இரண்டு கரு­வி­ களைப் பயன்­ப­டுத்­த­வுள்­ளன.   

அதா­வது ஏற்­க­னவே இந்த நிதியங்களுக்கு வழங்கப்பட்ட  உண்­டி­யல்கள் மற்றும் பிணை­மு­றி­களை மீண்டும் பெற­வுள்ள திறை­சேரி புதிய பிணை­மு­றி­களை  வழங்­க­வுள்­ளது.   அதற்கு 12 வீத மற்றும்  9 வீத  வட்டி நிர்­ண­யிக்­கப்­பட்­டுள்­ளது. அப்­படி பார்க்­கும்­போது ஏற்­க­னவே அதி­க­ளவு வட்­டிக்கு பெறப்­பட்­டி­ருந்த பிணை­மு­றி­களும் இந்தப் புதிய  வட்டி முறைக்கு மாற்­றப்­ப­டு­வதால் அதில் ஒரு வட்டி இழப்பு ஏற்­ப­டு­கி­றது. 

அதே­போன்று இந்தக் கடன்­களை மீள் செலுத்தும் காலம் நீடிக்­கப்­பட இருக்­கின்­றது. அதா­வது  ஏற்­க­னவே பெறப்­பட்ட ஓர் உண்­டி­ய­லுக்கு அடுத்த வருடம் முதிர்ச்சிக் காலம் செய்­யப்­பட்­டி­ருந்தால் அது பல வரு­டங்­க­ளுக்கு தற்­போது நீடிக்­கப்­பட இருக்­கின்­றது. இதனால் கடன் மீள்­ செ­லுத்தும் காலம் அதி­க­ரிக்கும். விரைவில் கிடைக்­க­வுள்ள கடன் மீளப்­பெ­று­கைக்கும்  நீண்­ட­கா­லத்தில் கிடைக்­க­வுள்ள கடன் மீளப்­பெ­று­கைக்கும் இடையில் வித்­தி­யாசம் உள்­ளது.  

எனவே அதிலும் ஓர் இழப்பு சேமலாப நிதியத்துக்கு ஏற்படும். ஆனால், அது மக்களுக்கு ஏற்படாதவாறு பார்த்துக் கொள்வதாக அரசாங்கம் அறிவித் திருக்கின்றது.  காரணம் மக்களுக்கு ஏற்க னவே 9 மற்றும் 10 வீதமளவிலேயே வட்டி கிடைக்கின்றது.  அந்த ஒன்பது வீத வட்டி எதிர்காலத்தில் உறுதிப்படுத்தப்பட்டு இருக்கும் என்று அரசாங்கம் அறிவித் திருக்கின்றது. 

ஆனால், அரசாங்கம் இதனை எவ்வாறு உத்தரவாதப்படுத்தும்? அதற்கான சட்டமூலங்கள் என்ன? அதன் சட்டத்தன்மை என்ன? என்பது இங்கு கேள்விக்குறியாக இருக்கின்றது.  அதற்குப் பதில் அவசியமாகும்.   முதலில் சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை உடன்படிக்கை செய்தபோது உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு செய்யப்பட மாட்டாது என்று அறிவிக்கப்பட்டது.   ஆனால் தற்போது செய்யப்படுகிறது.  

எனவே எதிர்காலத்தில் 9 வீத வட்டி உறுதியாக கிடைக்கும் என்று கூறுகின்ற அரசாங்கம் எதிர்காலத்தில் இதனை உறுதிப்படுத்துமா?   அதற்கான உத்தரவாதம் என்ன என்ற கேள்வி இங்கே எழுகின்றது என்று நிபுணர் கணேசமூர்த்தி குறிப்பிடுகிறார்.

எப்படியிருப்பினும் இந்த உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு  யோசனை பாராளுமன்றத்தில்  நிறைவேற்றப்பட்டமை இலங்கையின் பொருளாதார மீட்சி செயற்பாட்டில் ஒரு மைல் கல்லாகவே காணப்படுகிறது.  ஆனால் மக்களுக்கோ, ஊழியர் சேமலாப நிதியத்தின் அங்கத்தவர்களுக்கோ எந்தப் பாதிப்பும் இழப்பும் ஏற்படக் கூடாது என்பதே இங்கு மிக முக்கியமாக இருக்கின்றது.

https://www.virakesari.lk/article/159341

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.