Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அந்நியச் செலாவணி பறிபோகும் வாய்ப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: VISHNU

09 JUL, 2023 | 06:02 PM
image
 

சுபத்ரா

மாலியில் ஐ.நா அமை­திப்­ப­டையின் 10 ஆண்­டு­கால நட­வ­டிக்­கைகள் முடி­வுக்குக் கொண்டு வரப்­ப­ட­வுள்­ளன.

கடந்த முதலாம் திகதி முன்­னி­ரவில் மாலி நோக்கிப் புறப்­ப­டு­வ­தற்கு 20 அதி­கா­ரி­களும், 150 இலங்கை இரா­ணு­வத்­தி­னரும் தயா­ராகிக் கொண்­டி­ருந்த நிலையில் தான், நியூ­யோர்க்கில் இருந்து அந்த தகவல் கொழும்­புக்குக் கிடைத்­தது.

2023 ஜூன் 30ஆம் திகதி வரை மாலியில் ஐ.நா அமை­திப்­ப­டையை நிறுத்தி வைப்­ப­தற்கே, 2013இல் ஐ.நா பாது­காப்புச் சபையின் ஆணை பெறப்­பட்­டது.

Mali_Sri_Lankan_army.jpg

அந்த ஆணை முடி­வுக்கு வரு­வ­தற்கு இரண்டு வாரங்­க­ளுக்கு முன்­ன­தா­கவே, மாலியில் 2021ஆம் ஆண்டு ஆட்­சியைக் கைப்­பற்­றிய இரா­ணுவ அர­சாங்கம், ஐ.நா அமை­திப்­ப­டையை உட­ன­டி­யாக வெளி­யேற்­று­மாறு பாது­காப்புச் சபை­யிடம் கோரி­யி­ருந்­தது.

மாலியில் ஐ.நா அமை­திப்­படை தோல்­வி­ய­டைந்து விட்­ட­தா­கவும், உட­ன­டி­யாக அவர்­களை வெளி­யேற்­று­மாறும், மாலியின் வெளி­வி­வ­கார அமைச்சர் அப்­துல்­லாயே டியோப், ஐ.நா பாது­காப்புச் சபை­யிடம் கோரி­யி­ருந்தார்.

இந்­த­நி­லையில் தான், கடந்த 30ஆம் திகதி  பாது­காப்புச் சபைக் கூட்­டத்தில், மாலியில் இருந்து ஐ.நா அமை­திப்­ப­டை­யி­னரை விலக்கிக் கொள்ளும் தீர்­மா­னத்தை பிரான்ஸ் முன்­வைத்­தது.

பிரான்ஸின் முன்­னைய குடி­யேற்ற நாடாக விளங்­கிய மாலியில், ஆரம்­பத்தில் பிரெஞ்சுப் படைகள் தான் இஸ்­லா­மிய தீவி­ர­வாத எதிர்ப்பு மற்றும் உள்­நாட்டு குழப்­பங்­களை தீர்க்கும் நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்­தன. பின்­னரே ஐ.நா அமை­திப்­படை அங்கு அனுப்பி வைக்­கப்­பட்­டது. 

மாலியின் தற்­போ­தைய இரா­ணுவ அர­சாங்­கத்­துடன் பிரான்ஸ் பாது­காப்பு உடன்­பாடு ஒன்றைச் செய்து கொண்­டி­ருக்­கி­றது.

இவ்­வா­றான நிலையில் ஐ.நா அமை­திப்­படையை விலக்கிக் கொள்­வ­தற்கு பாது­காப்புச் சபையில் இருந்த எந்த நாடும் எதிர்ப்புத் தெரி­விக்­க­வில்லை.

15 உறுப்பு நாடு­களின் ஆத­ர­வுடன் இந்த தீர்­மானம் எடுக்­கப்­பட்­டி­ருக்­கி­றது.

இதன் மூலம், உட­ன­டி­யாக படை­வி­லக்கம் தொடங்­கப்­படும். அங்­குள்ள 15 ஆயிரம் ஐ.நா அமைதிப் படை­யி­னரும் கட்டம் கட்­ட­மாக விலக்கிக் கொள்­ளப்­பட்டு, 2024 ஜன­வரி 1ஆம் திக­திக்குள் படை­வி­லக்கம் நிறைவு செய்­யப்­படும் என்று அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

ஐ.நா பாது­காப்புச் சபையின் இந்த முடிவு, மாலி நோக்கிப் புறப்­படும் இலங்கை இரா­ணு­வத்தின் 5 ஆவது அணியின் பய­ணத்தில் உட­னடித் தாக்­கத்தை ஏற்­ப­டுத்­த­வில்லை.

243 பேர் கொண்ட அணி மாலிக்குச் சென்று, பணி­களைப் பொறுப்­பேற்க, அங்­குள்ள 243 பேர் கொண்ட இரா­ணுவ அணி இலங்­கைக்கு திரும்ப வேண்டும்.

முதற்­கட்­ட­மாக கேணல் விக்­ர­மா­ராச்சி தலை­மை­யி­லான 170 படை­யி­னரும் கடந்த 1ஆம் திகதி கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்தில் இருந்து புறப்­பட்டுச் சென்­றனர்.

அவர்கள் அதிக உற்­சா­கத்­துடன் வழி­ய­னுப்பி வைக்­கப்­ப­ட­வில்லை. ஏனென்றால், அவர்கள் ஏற்­க­னவே திட்­ட­மி­டப்­பட்ட காலத்­துக்கு குறை­வா­கவே, மாலியில் பணி­யாற்றப் போகி­றார்கள்.

மாலியில் பணி­யாற்றும் ஒவ்­வொரு அமை­திப்­ப­டை­யி­ன­ருக்கும் ஐ.நா வர­வு­செ­லவுத் திட்டப் பணி­ய­கத்­தினால், 1,428 டொலர் ஊதி­ய­மாக கொடுக்­கப்­படும். 

2017ஆம் ஆண்டு தொடக்கம், இது­வரை அங்கு தலா 243 பேர் கொண்ட நான்கு இரா­ணுவ அணிகள் அங்கு பணி­யாற்­றி­யி­ருக்­கின்­றன. 78 அதி­கா­ரிகள் மற்றும் 916 படை­யினர் அங்கு பணி­யாற்­றி­யி­ருக்­கின்­றனர்.

இவர்­க­ளுக்கு ஒரு வரு­டத்தில் குறைந்­த­பட்சம், 18 ஆயிரம் டொலர்கள் வரை ஊதி­ய­மாக கிடைத்­தது. இது இரா­ணு­வத்தில் வழங்­கப்­படும் ஊதி­யத்­துக்கு மேல­தி­க­மா­னது.

மாலியில் ஐ.நா அமை­திப்­படை நட­வ­டிக்­கைகள் ஆறு மாதங்­க­ளுக்குள் நிறை­வ­டையும் என்­பதால், இலங்­கையில் இருந்து சென்ற இரா­ணுவ அணி­யினர், எந்த நேரத்­திலும் திருப்பி அனுப்­பப்­ப­டலாம்.

அது ஒரு மாத­மா­கவும் இருக்­கலாம், ஆறு மாதங்­க­ளா­கவும் இருக்­கலாம்.

எவ்­வா­றா­யினும், இலங்கை இரா­ணு­வத்தின் அணி மாலியில், விநி­யோகத் தொட­ர­ணி­க­ளுக்குப் பாது­காப்பு வழங்கும் பணியை முன்­னெ­டுப்­பதால், கடைசி நேரம் வரை அங்கு பணி­யாற்றும் வாய்ப்புக் கிடைக்­கலாம்.

அமை­திப்­படை நட­வ­டிக்கை என்­பது சவா­லா­னது. அதிலும், ஒரு அமை­திப்­படை நட­வ­டிக்­கையை தொடங்­கு­வதும், நிறைவு செய்­வதும் கடி­ன­மா­னது.

அமை­திப்­படை நட­வ­டிக்­கையை தொடங்கும் போது, பல்­வேறு தரப்­பு­களின் எதிர்ப்பை சந்­திக்க வேண்­டி­யி­ருக்கும். அது மோதல்­க­ளையும் ஏற்­ப­டுத்தும். இலங்­கையில் இந்­திய அமை­திப்­படை அந்த நிலையை எதிர்­கொண்­டது. 

மாலி­யிலும் கூட ஐ.நா அமை­திப்­படை குளி­ரூட்­டிய அறை­களில் இருக்­க­வில்லை.  இது­வரை 303 ஐ.நா அமை­திப்­ப­டை­யினர் மாலியில் உயி­ரி­ழந்­தி­ருக்­கி­றார்கள். அவர்­களில் இரண்டு பேர் இலங்கை இரா­ணு­வத்­தினர்.

இலங்கை இரா­ணு­வத்­தினர் விநி­யோக தொட­ர­ணி­க­ளுக்கு வழித்­துணை வழங்கும் பணியில் ஈடு­ப­டு­வதால், அவர்­க­ளுக்கு பாது­காப்பு அச்­சு­றுத்­தல்கள் அதிகம்.

படை­வி­லக்­கத்தின் போது, பாது­காப்பு அச்­சு­றுத்தல் இன்னும் அதி­க­மாக இருக்கும். ஏனென்றால், ஐ.நா அமை­திப்­படை விலகிக் செல்லும் இடங்­களை கைப்­பற்றிக் கொள்­வ­தற்கு, அங்கு போட்­டிகள் காணப்­படும்.

ஐ.நா அமை­திப்­ப­டையின் போர்த் தள­பா­டங்கள் மற்றும் சொத்­துக்­களை கைப்­பற்­றவும், சூறை­யா­டவும், முயற்­சிகள் இடம்­பெறலாம். அண்­மையில் ஆப்­கா­னிஸ்­தானில் இருந்து அமெ­ரிக்கப் படை­யினர் விலகிக் கொண்ட போது நடந்த சம்­ப­வங்கள் யாவரும் அறிந்­ததே.

தலி­பான்­க­ளுடன் இணக்­கத்தை ஏற்­ப­டுத்திக் கொண்டு அந்த படை­வி­லகல் இடம்­பெற்­றி­ருந்­தாலும், படை­வி­ல­கலின் இறுதி நாட்கள் மிகவும் ஆபத்­தா­ன­வை­யாக இருந்­ததை மறுக்க முடி­யாது.

அது­போல தீவி­ர­மான நிலை மாலியில் எதிர்­பார்க்­கப்­ப­டாத போதும், அங்கு நிலை­மைகள் முற்­றிலும் சுமு­க­மா­ன­தாக இருக்கும் என்று எதிர்­பார்க்­கப்­ப­ட­வில்லை.

அதனால் தான், "வரும் மாதங்­களில் ஐ.நா அமை­திப்­ப­டையின் பணி­யா­ளர்கள் மற்றும் சொத்­துக்­களை ஒழுங்­கா­கவும் பாது­காப்­பா­கவும் மீளப் பெறு­வ­தற்கு இடைக்­கால அர­சாங்­கத்தின் முழு ஒத்­து­ழைப்பு அவ­சியம்” என்று, ஐ.நா ‍ெசயலாளர் நாயகம் அன்­டா­னியோ குட்­டெரெஸ், வலி­யு­றுத்­தி­யி­ருக்­கிறார்.

மாலியின் இடைக்­கால அர­சாங்கம் அதற்கு இணக்கம் தெரி­வித்­தி­ருந்­தாலும், தங்­களின் போர்த்­த­ள­பா­டங்­க­ளுடன் பாது­காப்­பாக வந்து தரை­யி­றங்கும் வரை, இரா­ணுவத் தலை­மை­ய­கத்­துக்கு நிம்­ம­தி­யாக இருக்­காது.

அதே­வேளை, மாலியில் இருந்து இலங்கை இரா­ணு­வத்­தினர் விலக்கிக் கொள்­ளப்­ப­டு­வதால், படை­யி­ன­ருக்கு கிடைக்கும் ஊதியம் மூலம் மாத்­திரம், மாதத்­துக்கு 345,060 டொலர் அந்­நியச் செலா­வ­ணியை இலங்கை அர­சாங்கம் இழக்கப் போகி­றது.

இது தவிர, அங்கு பயன்­ப­டுத்­தப்­படும் போர்த்­த­ள­பா­டங்­க­ளுக்­கான கொடுப்­ப­ன­வு­களும் இழக்­கப்­படும்.

இதனால் ஆண்­டுக்கு 5 மில்­லியன் டொலர் அந்­நியச் செலா­வணி இழப்பை நாடு எதிர்­கொள்ளப் போகி­றது.

இலங்கை இரா­ணு­வமும், அர­சாங்­கமும் இந்த இழப்பை ஈடு செய்­வது இல­கு­வா­ன­தல்ல. ஏனென்றால், இலங்கை இரா­ணு­வத்தை அதி­க­ளவில் ஐ.நா அமை­திப்­ப­டையில் உள்­ளீர்ப்­ப­தற்கு ஐ.நா தயா­ராக இல்லை. சில ஆபத்­தான களங்­க­ளுக்கு மாத்­திரம்- அவர்­களை உள்­ளீர்க்­கி­றது.

அதே­வேளை, அர­சாங்கம் இரா­ணு­வத்­துக்குப் பதி­லாக, விமா­னப்­ப­டையை அதி­க­ளவில், ஐ.நா அமை­திப்­ப­டையில் பங்­கேற்கத் தயா­ராகும் படி அறி­வித்­தி­ருக்­கி­றது.

தற்­போது மத்­திய ஆபி­ரிக்க குடி­ய­ரசில், இலங்கை விமா­னப்­ப­டையைச் சேர்ந்த 110 படை­யினர் ஐ.நா அமை­திப்­ப­டையில் பணி­யாற்­று­கின்­றனர். அத்­துடன் மூன்று எம்.ஐ.- 17 ஹெலி­கொப்­டர்­களும் அங்கு பணியில் அமர்த்­தப்­பட்­டுள்­ளன.

இந்­த­நி­லையில், அண்­மையில் புதிய விமா­னப்­படைத் தள­ப­தி­யாக நிய­மிக்­கப்­பட்ட எயர் மார்ஷல் உதேனி ராஜ­பக்ஷ, மேல­தி­க­மாக ஐ.நா அமை­திப்­ப­டையில் இலங்கை விமா­னப்­ப­டை­யி­னரை ஈடு­ப­டுத்த நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வுள்­ள­தாக கூறி­யி­ருக்­கிறார்.

விமா­னப் ­ப­டை­யி­ன­ருக்கு மேல­தி­க­மாக, போக்­கு­வ­ரத்து ஹெலி­கொப்­டர்­க­ளையும், அனுப்பி வைக்கத் திட்­ட­மிட்­டுள்­ள­தாகவும் அவர் குறிப்­பிட்­டுள்ளார்.

இந்த திட்­டத்­துக்கு அமைய, தற்­போது பாவ­னைக்­காலம் முடிந்த நிலையில், தரையில் நிறுத்தி வைக்­கப்­பட்­டி­ருக்கும், எம்.ஐ. -17 ரக ஹெலிகொப்டர்களை பழுதுபார்த்து, புதுப்பிப்பதற்கு அரசாங்கம் பச்சைக்கொடி காண்பித்துள்ளது என்றும் விமானப்படைத் தளபதி தெரிவித்திருக்கிறார்.

விமானப்படையிடம் 21, எம்.ஐ -17 ரக ஹெலிகொப்டர்கள் இருக்கின்ற போதும், அவற்றில் 10 வரையான ஹெலிகளே பயன்படுத்தக் கூடிய நிலையில் இருக்கின்றன.

பறப்பதற்கு உகந்த காலம் முடிந்த நிலையிலும், பழுதடைந்த நிலையிலும் காணப்படும் ஹெலிகளை பழுது பார்த்து,  புதுப்பித்து ஐ.நா அமைதிப்படை நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

இதன் மூலம், மாலியில் அமைதிப் படையில் பணியாற்றுவதன் மூலம் கிடைத்து வந்த வருவாயை ஈடுகட்ட அரசாங்கம் முயற்சித்தாலும், அது உடனடிச் சாத்தியமாக இருக்கப் போவதில்லை. 

அது சாத்தியமானாலும், மாலியில் இருந்து கிடைத்த அந்நியச் செலாவணிக்கு அது சமமானதாகவும் இருக்கப் போவதில்லை.

https://www.virakesari.lk/article/159601

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.