Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நட்டஈட்டை வழங்கினார் முன்னாள் ஜனாதிபதி மைத்திரி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நட்டஈட்டை வழங்கினார் முன்னாள் ஜனாதிபதி மைத்திரி

நட்டஈட்டை வழங்கினார் முன்னாள் ஜனாதிபதி மைத்திரி

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு 100 மில்லியன் ரூபா நட்டஈடு வழங்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதன் நிலையில் அவர் 15 மில்லியன் ரூபாவை நட்டஈடாக வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு செலுத்த வேண்டிய பணத்தை 10 தவணைகளில் வழங்க முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நீதிமன்ற அனுமதியை கோரியுள்ளார்.

நீதிமன்ற உத்தரவின் பேரில், கடந்த 28 ஆம் திகதி 15 மில்லியனை இழப்பீடாக செலுத்திய அவர், மீதமுள்ள தொகையை 2024 ஜூன் 30 முதல் 2033 ஜூன் 20 வரை கட்டம்கட்டமாக 8.5 மில்லியனை செலுத்துவதாக கூறியுள்ளார்.

தாக்குதல் சம்பவத்திற்கு முன்னர் தங்களுக்கு கிடைத்த உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில் அவர்கள் செயல்படத் தவறியதால் உயிரிழந்தவர்களுக்கு மைத்திரிபால சிறிசேன தனிப்பட்ட நிதியில் இருந்து 100 மில்லியன் ரூபாய் நட்டஈடு வழங்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதேவேளை மைத்திரிபால சிறிசேன தனது சட்டத்தரணிகள் ஊடாக உச்ச நீதிமன்றில் சமர்ப்பித்த பிரேரணையில், முன்னாள் ஜனாதிபதி என்ற வகையில் 97,500/- ரூபாவை ஓய்வூதியமாகப் பெறுவதாகவும், பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் 54,285/ ரூபா பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2023/1338691

  • கருத்துக்கள உறவுகள்

எங்களிற்கு அவர்களின் ஒரு சதம் கூட தேவையில்லை - ஆனால் அவர்கள் எங்கள் வேதனையை அனுபவிக்கவேண்டும் -மைத்திரி இழப்பீட்டு தொகையை செலுத்துவதை தாமதிப்பது குறித்து உயிர்த்தஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள்

Published By: RAJEEBAN

13 JUL, 2023 | 10:02 AM
image
 

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இழப்பீட்டு தொகையை செலுத்த தவறியுள்ளமை தொடர்பில்  உயிர்த்தஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் கடும் சீற்றம் வெளியிட்டுள்ளனர்.

தங்கள் கவனக்குறைவு அலட்சியத்தினால் உயிர்த்தஞாயிறு தாக்குதல்கள் இடம்பெறகாரணமாகயிருந்தவர்கள்  அது குறித்து எந்த கழிவிரக்கத்தையும் கவலையையும் வெளிப்படுத்தவில்லைஎன வெளிப்படுத்தவில்லை நீதிமன்றம் உத்தரவிட்டது போல இழப்பீட்டு தொகையை  வழங்க முன்வரவில்லை என உயிர்த்தஞாயிறு தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்கள்  கவலையும் ஆத்திரமும் வெளியிட்டுள்ளனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உறவுகளை பலிகொடுத்த பல குடும்பத்தவர்கள்  தங்கள் உறவுகளிற்கு நீதிவழங்கவேண்டும் என மீண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Maithripala-Sirisena.png

நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் இவர்கள் இழப்பீட்டினை செலுத்தாதமை ஆச்சரியமளிக்கவில்லை அவர்கள் பல விடயங்களை அலட்சியம் செய்து பழகியவர்கள் என கட்டுவாப்பிட்டிய தேவாலயத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தவர்களின் நலன்புரிச்சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

தாக்குதல் இடம்பெறலாம் என்ற பல எச்சரிக்கைகளை அலட்சியம் செய்தவர்கள் இவ்வாறு நீதிமன்றத்தின் உத்தரவை அலட்சியம் செய்வது பெரியவிடயமில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

நாங்கள் எங்கள் அன்புக்குரியவர்களை மீளப்பெறப்போவதில்லை ,ஆனால் இதற்கு காரணமானவர்கள் தங்கள் அலட்சியத்திற்கான விலையை செலுத்தவேண்டும்என தனது குடும்ப உறுப்பினர் ஒருவரை இழந்த லெஸ்லிஎன்பவர்  தெரிவித்துள்ளார்.

அவர்கள் செலுத்தவேண்டிய பெருந்தொகையாவது அவர்களுக்கு வேதனையை ஏற்படுத்தட்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

தங்களுக்கும் உயிர்த்தஞாயிறுதாக்குதலிற்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது போலஇந்த அரசியல்வாதிகள்நடந்துகொள்கின்றனர் இது கடும் வெறுப்பை ஏற்படுத்துகின்றது என உயிர்த்தஞாயிறு தாக்குதலில் தனது தந்தையை  இழந்த சுடாரா பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.

எனக்கு தந்தை மீண்டும் கிடைக்கப்போவதில்லை எங்களுக்கு இந்த பணம் தேவையில்லை ஆனால் இதற்கு காரணமானவர்கள் நாங்கள் எதிர்கொள்ளும் இந்த வேதனையை அனுபவிக்கவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்..

தனது கணவர் டென்சில் பெர்ணான்டோவை இழந்த டபில்யூபீஏடபில்யூ பெரேரா கண்ணீருடன் தனது கருத்தினை இவ்வாறு தெரிவித்தார்.

image_1b3d05e59f.jpg

எனது நேசத்திற்குரிய கணவரின் மரணத்திற்கு காரணமானவர்களின் ஒரு சதம் கூட எங்களுக்கு தேவையில்லை,நான் அவர்கள் குறித்து வெட்கப்படுகின்றேன் அவர்களின் பெயர்களை கூட கேட்கவிரும்பவில்லை என அவர் தெரிவித்தார்.

dailymirror

https://www.virakesari.lk/article/159879

  • கருத்துக்கள உறவுகள்

மைத்திரியால் வழங்கப்பட்ட பணம் நீதிமன்றால் பாதிக்கப்பட்ட மக்களுககு பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும்.
சாமானிய மனிதன் எனில்  சொத்தையே  பறிக்கும் நீதிமன்றம்  காசு உள்ளவருக்கு தவணை முறையில் கொடுப்பனவு. நல்ல நீதி????

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, nunavilan said:

மைத்திரியால் வழங்கப்பட்ட பணம் நீதிமன்றால் பாதிக்கப்பட்ட மக்களுககு பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும்.
சாமானிய மனிதன் எனில்  சொத்தையே  பறிக்கும் நீதிமன்றம்  காசு உள்ளவருக்கு தவணை முறையில் கொடுப்பனவு. நல்ல நீதி????

அவர்கள் அப்படி தவணை முறையில் செலுத்த அனுமதி கேட்டிருந்தாலும், இன்னும் அதட்குரிய தீர்ப்பு வழங்கப்படவில்லை. பொறுத்திருந்து பார்ப்போம் நீதிமன்றம் என்ன தீர்ப்பு வழங்குது என்று. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

image_01edfbd572.jpg

ஈஸ்டர் குண்டு வெடிப்பிலிருந்து... மக்களை பாதுகாக்காத முன்னாள்  ஜனாதிபதி மைத்திரி 
அதே... மக்களிடம் தன்னை பாதுகாக்க, பணம் கேட்கின்றார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.