Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

17 ஜூலை 2023

வெம்பக்கோட்டை


விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள வெம்பக்கோட்டையில் இரண்டாம் கட்ட அகழாய்வில் பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்ட அரிய வகை பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவை சுமார் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என தெரியவந்துள்ளது.

சுடுமண்ணால் செய்யப்பட்ட பொம்மை, யானை தந்தத்தான் ஆன பதக்கங்கள், சூதுபவள மணிகள் போன்ற பல்வேறு பொருட்கள் இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளன.

கீழடியில் தொழிற்சாலை இருந்ததற்கான சான்று பொருட்கள் கிடைத்துள்ளது போன்று வெம்பக்கோட்டையிலும் சங்கு தொழிற்சாலை இருந்ததற்கான சான்றுகள் உள்ளன என்று கூறுகிறார் வெம்பக்கோட்டை அகழாய்வு இயக்குநரான பாஸ்கர்.

தங்கம், செப்பு நாணயங்கள் போன்றவையும் கண்டறியப்பட்டுள்ளதாக கூறும் அவர், இதுவரை எழுத்து குறியீடு எதுவும் தென்படவில்லை என குறிப்பிடுகிறார்.

வெம்பகோட்டை அகழாய்வில் கிடைக்கும் பொருட்கள் அனைத்தும் கலைநயத்துடன் இருப்பதால் அக்காலத்தில் இப்பகுதியில் வாழ்ந்த மக்கள் கலைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளனர் என்பதை அறிய முடிகிறது.

இப்பகுதியில் கிடைத்த பொருட்களின் அடிப்படையில் வைப்பாற்றங்கரையில் இருந்து தூத்துக்குடி கடல் வழியாக வணிகம் நடந்ததற்கான சான்று தெரிய வருகிறது. (முழு தகவல் காணொளியில்)

தயாரிப்பு மற்றும் ஒளிப்பதிவு: பிரபுராவ் ஆனந்தன்

எடிட்டிங்: ஜனா

https://www.bbc.com/tamil/articles/c2jrnx7k510o

  • 1 year later...
  • கருத்துக்கள உறவுகள்

வெம்பகோட்டை அகழாய்வு: 6000 ஆண்டு அபூர்வ கற்கள் கண்டெடுப்பு - புகைப்படங்கள்..!

புதுப்பிக்கப்பட்டது 08 Nov 2024 14:25 IST

 
9H4GAL8Wjr7PHcZs0thM.jpg

வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் 3-ம் கட்ட அகழாய்வில் 6000 ஆண்டுகளுக்கு முந்தைய அணிகலன்கள் தயாரிக்க பயன்படும் ஜாஸ்பர்,சார்ட் என்ற கற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

yyx06AHAkSUDvFW99apn.jpg

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை விஜயகரிசல்குளத்தில் கடந்த 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய நுண் கற்காலத்தை அறியும் வகையில் வைப்பாற்றின் வடகரையில் மேட்டுக்காடு பகுதியில் 3-ம் கட்ட அகழாய்வு பணி கடந்த ஜூன் 18-ம் தேதி தொடங்கியது. 
 
OyWF3pnsd2sV6mZwUZoq.jpg
 
இந்த அகழாய்வில் இதுவரை உடைந்த நிலையிலுள்ள சுடுமண் உருவ பொம்மை, சதுரங்க ஆட்டக்காய்கள், கண்ணாடி மணிகள், வட்டச்சில்லு உள்ளிட்ட, 2600க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
UD5VdTLbcrVb5q7Dld84.jpg
இந்நிலையில், சமீபத்தில் தோண்டப்பட்ட குழியில், 6000 ஆண்டுகளுக்கு முந்தைய அணிகலன் தயாரிக்க பயன்படும் ஜாஸ்பர்,சார்ட் என்ற கற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 
pM1rODM7a4rLhaEwKDQR.jpg
இந்தக் கற்கள் அந்த காலத்தில் விலங்குகளை வேட்டையாடவும், கற்கருவிகள் தயாரிக்கவும் மூலப்பொருட்களாக பயன்படுத்தப்பட்டுள்ளன.
i485TCBrmimDWeD9oAEp.jpg
மேலும், ''இக்கற்கள் தற்போது புழக்கத்தில் இல்லை,'' என்றும் அகழாய்வு இயக்குனர் பாஸ்கர் பொன்னுசாமி கூறினார்.
 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.