Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வலி.வடக்கு இராணுவ உயர்பாதுகாப்பு வலயத்தினுள் தொடரும் திருட்டுக்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
23 JUL, 2023 | 01:40 PM
image
 

யாழ்ப்பாணம் - வலி. வடக்கு உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள பிரதேசங்களில் இராணுவத்தினரால் மீள கையளிக்கப்படவுள்ள பகுதிகளுக்குள் திருடர்கள் ஊடுருவி, பொருட்களை திருடிச் செல்வதாக காணி உரிமையாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். 

வலி. வடக்கில் இராணுவ உயர் பாதுகாப்பு வலயமாக கடந்த 33 வருடங்களுக்கு மேலாக உள்ள பிரதேசங்களில் சில பகுதிகளை இராணுவத்தினர் காணி உரிமையாளர்களிடம் மீள கையளிக்கும் நோக்குடன், அந்த காணிகளில் இருந்து வெளியேறி வருகின்றனர். 

குறிப்பாக தெல்லிப்பழை பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட காங்கேசன்துறை மாங்கொல்லை பகுதி மற்றும் தெல்லிப்பழை - தென்மயிலை ஆகிய பகுதிகளில் இருந்து இராணுவத்தினர் வெளியேறியுள்ளனர். 

32__1_.jpg

அவ்வாறு இராணுவத்தினர் வெளியேறியுள்ள போதிலும், அவை உயர் பாதுகாப்பு வலயமாகவே தற்போதும் உள்ளது. குறித்த பகுதிகளை மாவட்ட செயலரிடம் உத்தியோகபூர்வமாக தாம் கையளித்த பின்னரே காணி உரிமையாளர் காணிக்குள் பிரவேசிக்க முடியும் என இராணுவத்தினர் அறிவித்துள்ளனர். 

அதனால், காணி உரிமையாளர்கள் உயர்பாதுகாப்பு வலய முட்கம்பி வேலிக்கு வெளியில் நின்றே விடுவிக்கப்படவுள்ள காணிகளை பார்க்க முடிகிறது. 

இந்நிலையில், தமது காணிக்குள் வெளியாட்கள் சிலர் நடமாடுவது தொடர்பில் அறிந்து காணி உரிமையாளர்கள் காணிக்கு சென்றபோது, உயர் பாதுகாப்பு வலய வேலிக்கு அப்பாலுள்ள காணிப் பகுதிகளில் வாகனங்களுடன் நடமாடும் திருடர்கள் காணிக்குள் திருட்டுச் செயல்களில் ஈடுபடுவதனை அவதானித்துள்ளனர்.  

32__3_.JPG

அது தொடர்பில், கிராம சேவையாளர் மற்றும் பிரதேச செயலர் ஆகியோருக்கு அறிவித்தபோது, அவர்கள் குறித்த பகுதிகள் இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிகள் எனவும் அப்பகுதிகளை இராணுவத்தினர் உத்தியோகபூர்வமாக கையளித்த பின்னரே காணி உரிமையாளர்கள் அப்பகுதிக்குள் செல்ல முடியும் எனவும் அதுவரையில் அவை உயர் பாதுகாப்பு வலயமே எனவும் தெரிவித்துள்ளனர். 

இவ்விடயம் குறித்து இராணுவத்தினரிடம் முறையிட தாம் அஞ்சுவதாகவும், உயர் பாதுகாப்பு வலயத்தினுள் வாகனங்களுடன் சென்று பொருட்களை திருடுகிறார்கள் என்றால், நிச்சயம் அவர்களுக்கு மேலிடத்தில் செல்வாக்கு இருக்கும். அதனால் இந்த திருட்டு தொடர்பில் இராணுவத்தினரிடம் முறையிட சென்றால் தமக்கு ஆபத்து ஏற்படலாம் என காணி உரிமையாளர்கள் அச்சம் தெரிவித்தனர். 

தமது கண் முன்னே தமது காணிக்குள் இருந்து பொருட்களை களவாடி செல்பவர்களை எதுவும் செய்ய முடியாமல், இயலாமையுடன் பார்த்துக்கொண்டு, தமது காணி விடுவிப்பை எதிர்பார்த்து காணி உரிமையாளர்கள் காத்திருக்கின்றனர். 

https://www.virakesari.lk/article/160683

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.