Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

போக்குவரத்து சட்டத்தில் விரைவில் திருத்தம் : இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
26 JUL, 2023 | 10:17 AM
image
 

(எம்.மனோசித்ரா)

போக்குவரத்து சட்டங்களில் திருத்தங்களை மேற்கொண்டு விரைவில் புதிய போக்குவரத்து சட்ட மூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

அதற்கமைய அடையாளங்காணப்பட்ட 32 போக்குவரத்து குற்றங்களுக்கு ஜனவரி முதலாம் திகதி முதல் கடுமையான சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் செவ்வாய்கிழமை  (25) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நாட்டில் தற்போது பதிவாகும் விபத்துக்களைக் கட்டுப்படுத்தும் வகையில் போக்குவரத்து சட்டங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.

அதற்கமைய சாரதிகளால் மேற்கொள்ளப்படும் 32 வகையான குற்றங்கள் அடையாளங்காணப்பட்டுள்ளன. இந்தக் குற்றங்களைப் புரியும் சாரதிகளுக்கு எதிராக ஜனவரி 1முதல் சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய சமிஞ்ஞைகளை முறையாகப் பின்பற்றுதல், உரிய வேகத்தில் பயணித்தல், செல்லுபடியாகும் காப்புறுதி, விபத்தை ஏற்படுத்தி விட்டு வாகனத்தை நிறுத்தாமல் செல்லல் உள்ளிட்ட பல குற்றங்கள் இவற்றில் உள்ளடங்கும். இவை தவிர ஜனவரி முதல் இலத்திரனியல் போக்குவரத்து முறைமையும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இதற்காக எதிர்வரும் தினங்களில் விலைமனு கோரப்படவுள்ளது. விலைமனு கோரலின் பின்னர் முன்வரும் முதலீட்டாளர்களுக்கு அதற்கான வாய்ப்புக்கள் வழங்கப்படும்.

போக்குவரத்து சட்டங்களை கடுமையாக நடைமுறைப்படுத்தும் செயற்பாடுகள் பொலிஸ் திணைக்களம், மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் என்பவற்றினால் இணைந்து முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/160924

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

போக்குவரத்து விதி மீறல்களுக்கான தேர்ச்சி புள்ளிகள் முறை ஜனவரி 1 முதல் நடைமுறையில்

போக்குவரத்து விதி மீறல்களுக்கான தேர்ச்சி புள்ளி முறை ( Demerit points ) 2024 ஜனவரி 1ஆம் திகதி முதல் தொடங்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

இந்த முறையின் கீழ், 24 தேர்ச்சி புள்ளிகளை பெறும் சாரதியின் சாரதி அனுமதிப்பத்திரம் உடனடியாக இரத்து செய்யப்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், அனைத்து பரிவர்த்தனைகளையும் டெபிட் அல்லது கிரெடிட் கார்ட் மூலம் முடிக்கக்கூடிய தொழில்நுட்பத்தை மோட்டார் போக்குவரத்து திணைக்களம் ஏற்றுக்கொண்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் அழகியவண்ண தெரிவித்தார்.

ஏழு தசாப்தங்களாக நடைமுறையில் உள்ள மோட்டார் போக்குவரத்து சட்டத்தை புதுப்பித்து புதிய சட்டத்தை அறிமுகப்படுத்த போக்குவரத்து அமைச்சு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

‘நிலையான நாட்டிற்கான கூட்டுப்பாதை’ எனும் தொனிப்பொருளில் ஜனாதிபதி ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்த போக்குவரத்து இராஜாங்க அமைச்சர், இலங்கை போக்குவரத்து சபையினால் இயக்கப்படும் 50 மின்சார பஸ்களை வினைத்திறன் மற்றும் தரமான போக்குவரத்து சேவையை உருவாக்கும் முன்னோடி செயற்திட்டம் ஆரம்பிக்கப்படும்.

லக்திவ இன்ஜினியரிங் கம்பனி பிரைவேட் லிமிடெட் மூலம் நடைமுறைப்படுத்தப்படும் திட்டத்திற்கு ஏற்கனவே அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

https://thinakkural.lk/article/265210

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.