Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசியல் தீர்வுக்கு புலிகளை வரவழைப்பதற்கு இதுவே தருணம் "இந்து' பத்திரிகையின் ஆசிரியர் ராம் கூறுகிறார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அரசியல் தீர்வுக்கு புலிகளை வரவழைப்பதற்கு இதுவே தருணம் "இந்து' பத்திரிகையின் ஆசிரியர் ராம் கூறுகிறார்

வீரகேசரி நாளேடு

ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழ் மக்களுக்கு சமத்துவமும் நீதியும் கிடைக்க இந்தியா உதவ வேண்டும். விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் பின்னடைவுகளை கண்டுள்ளனர். எனவே, அரசியல் ரீதியிலான தீர்வுக்கு புலிகளை வரவழைப்பதற்கு இதுவே சரியான தருணமாகும் என்று "இந்து' பத்திரிகையின் பிரதம ஆசிரியர் என். ராம் தெரிவித்தார்.

இலங்கையில் இந்திய சமூகத்தினரால் இந்திய சுதந்திர தினத்தையொட்டி நேற்று முன்தினம் கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் இரவு விருந்துபசாரமொன்று நடத்தப்பட்டது.

அதில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ராம் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது: இலங்கையில் உள்ள மிதவாதிகள் ஜனநாயகத்தின் மூலம் இந்தியா உதவி செய்ய வேண்டும்.

இலங்கை தொடர்பாக பெற்றுக் கொண்ட கடந்தகால அனுபவங்களின் வாயிலாக இந்தியா சிறந்த பாடத்தை கற்றுக் கொண்டுள்ளது.

1987 ஆம் ஆண்டு கைச்சாத்தான இலங்கை இந்திய ஒப்பந்தம் ஒரு இறந்த காகிதமென கூறப்படுகின்றது. ஆனால் ஜனநாயக ரீதியான தீர்வொன்றை முன்னெடுக்கும் போது அவ்வொப்பந்தத்தின் முக்கியம் உணரப்படும்.

இவ்வொப்பந்தத்தை நிர்வகித்ததில் அதனை நடைமுறைப்படுத்தியதில் இரு தரப்பும் தவறிழைத்துள்ளனர். ஆனால் ஒப்பந்தமானது இனப்பிரச்சினைக்கான தீர்வின் போது ஒரு முக்கிய படியாக அமையும்.

இலங்கைக்கு உதவி வழங்கும் இணைத்தலைமை நாடுகளின் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ள வேண்டுமென வேண்டுகோள் விடுக்கப்பட்டது. விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்பாக வகைப்படுத்தி, அவ்வமைப்பை இந்தியா தடை செய்துள்ள காரணத்தால் இந்தியா புலிகளுக்கு எதிரே அமர்ந்து, அவர்களுடன் உத்தியோகபூர்வமான முறையில் எவ்வித பேச்சுக்களையும் மேற்கொள்ளாது.

இலங்கை பிரச்சினையானது இந்தியாவில் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. ஏனெனில் அங்குள்ள தமிழ் மக்களின் உணர்வுகளுடன் சம்பந்தப்பட்ட பிரச்சினையாக இது உள்ளது.

எனினும் 1991 ஆம் ஆண்டு இந்திய பிரதமர் ரஜீவ்காந்தி விடுதலைப் புலிகளால் படுகொலை செய்யப்பட்டதையடுத்து இந்தியாவின் செயற்பாடுகளில் மாற்றம் ஏற்பட்டது. இங்கு இனப்பிரச்சினை விடயத்தில் முக்கிய இரண்டு கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட தவறி விட்டன. பிரச்சினையை தீர்ப்பதற்காக பேச்சுவார்த்தை ஒன்றிற்கு செல்வதை விட, அங்கு எதைப் பேசப் போகின்றோம் என்பதே முக்கியமானதாகும். இலங்கையில் சமாதான பேச்சுவார்த்தைகள் பின்னடைவைச் சந்தித்தமைக்கு இதுவே காரணம். பேச்சுவார்த்தைக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதேயன்றி அங்கு என்ன பேசப்பட வேண்டும் என்பது திட்டமிடப்படவில்லை. விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் பின்னடைவுகளை சந்தித்துள்ளனர். எனவே, அரசியல் ரீதியான தீர்வுத் திட்டமொன்றிற்கு அவர்களை வரவழைப்பதற்கு இதுவே சரியான தருணமாகும்.

தகவல்கள் இங்கே...

http://www.virakesari.lk/html/pol_view.asp?key=2416

தருணம் பார்த்துக் கல்லெறியக் காத்திருக்கும் ராம். தோற்றுப்போனவர்கள் வரிசையில் முன்னிற்பவர். ஊடகர்கள் நீதியின் வழி நிற்கும்போது தோற்பதில்லை. இலங்கை இந்திய ஒப்பந்தத்pதன் சிதைப்பு நடந்தோறியவிதம் அந்த ஒப்பந்தத்திற்குக் காவலாக வருகைதந்த அமைதிப்படைத் தளபதிகளின் போட்டிகளினால் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

இந்து ராம் அவர்கள் பக்கச் சார்பும் உள்நோக்கமும் இன்றி எழுதியிருந்தால் அவரது விமர்சனங்கள் சில பயனுள்ள விவாதத்துக்கு வழி வகுத்திருக்கும். ஈழப் போராளிகளளின் மூழையாக அவர் தன்னை உருவகித்த காலம் ஒன்றிருந்தது. அந்தக் காலத்தில் "பிரபாகரன் இலங்கை முழுவதையும் கைப்பற்ற வேண்டும்" என்ற கருத்து அவருக்கு இருந்ததாக சொல்லப் படுகிறது. அவர் தன்னை மாகிசிய கம்யூனிஸ்ட் கட்சியின் மூழையாகவும் கருதுவதாக சொல்லப் படுகிறது. ஒருகாலத்தில் ரஜீவின் மூழையாகவும் செயல் பட விரும்பியிருந்தார் என்கிறார்கள். அது சரிப்படாத போது போர்போஸ் ஊளல் பிரச்சினையை கிளப்பி ராஜீவை அரசியல் ரீதியாகக் கொன்றார் என்றும் சொல்கிறார்கள். மாத்திமம் மலையாள சஞ்சிகையிலும், தீராரதி 2006 பேட்டியிலும் ஈழத் தமிழருக்கு எதிரான சதிகள் தொடர்பாக நான் கண்டித்த பதிரிகையாளர் பற்றி கேரளத்திலும் தமிழ் நாட்டிலும் பாரவலான சர்ச்சை நிகழ்ந்தது.

http://www.tamilcanadian.com/tamil/?cat=10&id=97

மாதிமம் எனது பேட்டியுடன் திரு ராமின் படத்தை வெளியிட்டு சர்ச்சையைக் கிழப்பி விட்டது. தமிழகத்தில் திரு.பழ நெடுமாறனும் தென்செய்தியில் என்பேட்டியின் பகுதியை இந்து ராமுடன் அடையாளப் படுத்தி எழுதினார்.

எனினும் இந்து ராமின் போக்கில் இப்போது தளர்வு காணப் படுகிறது. முன்னைநாள் இலங்கைத் தூதுவர் திரு.டிக்சிற் ரஜீவ்காந்தியின் பெயரில் தமிழ் போராட்டத் தலைவரான திரு.பிரபாகரனைச் சுட உத்தரவிட்டது பற்றி புறன்ற் லினில் வாசித்தபோது நம்ப முடியவில்லை. மனமாற்றமானால் வரவேற்க்கப் பட வேண்டும். ஆனாலும் அவர் கொழும்புக்கு வந்தால் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிவிடுகிறார்.

Edited by poet

இந்துராம் ஒரு ஊடகவிபச்சாரி 89 இல் தலைவரை கொன்று விட்டதாக எப்படி எல்லாம் திட்டமிட்டு தாக்குதலை செய்ததாகவெல்லாம் எழுதியதாக கேள்விப்பட்டேன் அடுத்த நாள் தலைவர் அந்த பத்திரிகையை வாசிப்பது போல படம் ஊடகங்களில் வெளியாகி இந்துராமின் ஊடகவிபச்சாரத்தை உலகறிய செய்யப்பட்டது இலங்கை அரசின் விருதை பெற்ற உவர் ஊடக விபச்சாரத்தை சிங்களத்திற்கு நன்றிக்காக செய்து வருகினாறார் இவர் தருணம் கணிப்பது எல்லாம் ரெம்ப ரெம்ப ஓவர் புலிகளை பற்றி சிலருக்கு தெரிவதில்லை சிலருக்கு பட்டும் புரிவதில்லை அல்லது புரியாதது போல பினாத்துவார்கள் ராம் பட்டும் திருந்தாத ஜென்மம் விரைவில் அவருக்கு மீண்டும் பாடம் கற்பிக்கப்படும்

தமிழ் நாட்டில் பிராமணப் பிரிவினர் நடத்துகின்ற பத்திரிகைகள் எப்பவும் தமிழரை அதுவும் தமிழ் மேல் அதிகம் பற்றுக் கொண்டவர்களை தாக்கி கொச்சை படுத்தி எழுதுவதில் அலாதி பிரியம் கொண்டவர்கள்.

இந்த இந்து பேப்பரும் அப்படித்தான். இந்து பேப்பரை வாசிப்பவர்களின் விகிதாசாரம் ஒப்பீட்டளவில் மிக குறைவு. அந்த பேப்பர் ஒரு மேல்தட்டு வர்க்கத்தின் பாசமுள்ள பேப்பர் என்று சொல்வார்கள். இவரது பத்திகள் தமிழ் நாட்டில் பெரிதும் எடுபடா.

Edited by நேசன்

இறாம் தன்னை மிதவாதி என்று நினைக்கின்றாரா அல்லது மதவாதி என்று நினைக்கின்றாரா? அரசியல் தீர்வுக்கு புலிகளை வரவழைப்பதற்கு இதுவே தருணம் என 'இந்து' பத்திரிகையின் ஆசிரியர் ராம் கூறுகிறார். தருணம் பார்த்து செயற்படுவது மிதவாதமாக இருக்கமுடியாது, மதவாதமாகவே இருக்கமுடியும்.

Edited by ஞானி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இராணுவ- அரசியல் ரீதியாக புலிகள் பின்னடைந்துவிட்டனர்: கொழும்பில் "இந்து" என். ராம்

[செவ்வாய்க்கிழமை, 18 செப்ரெம்பர் 2007, 12:47 ஈழம்] [கொழும்பு நிருபர்]

இராணுவம் மற்றும் அரசியல் ரீதியாக தமிழீழ விடுதலைப் புலிகள் பின்னடைந்துள்ளனர் என்றும் தமிழ்நாட்டில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு இல்லை என்றும் "இந்து" நாளிதழின் ஆசிரியர் என். ராம் கூறியுள்ளார்.

மேலும் வாசிக்க http://www.eelampage.com/?cn=33448

தமிழ் உணர்வுக்கு பகையான இந்துவின் பழிக்கு ஆகக்கூடிய காரியமாக இருப்பது சிங்களத்துக்கு முதுகு சொறிவதைத் தவிர வேறு என்னத்துக்கு முடியும். இந்த சூழ்நிலமையை தன் சாண்வயிற்றுக்கு வண்டி ஓட்டுகிறது ராமின் புத்திசாலித்தனம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.