Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உயிர் காக்கும் தரவு சரிபார்த்தல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: DIGITAL DESK 3

03 AUG, 2023 | 09:32 AM
image
 

ரொபட் அன்டனி

சமூக வலை­த­ளங்கள்  மற்றும் டிஜிட்டல் கட்­ட­மைப்பு பாரிய வளர்ச்சி அடைந்­தி­ருக்­கின்ற இந்த கால­கட்­டத்தில் போலி செய்­தி­களை பரப்­பாமல் இருப்­பதும் போலி செய்­தி­­களை கண்­டு­பி­டிப்­ப­தற்­கான தரவு சரி பார்த்­­தலை மேற்­கொள்­வதும் எந்­த­ளவு தூரம்  முக்­கி­யத்­து­வ­மிக்­கது என்­பது தொடர்ச்­சி­யாக வலி­யு­றுத்­தப்­பட்டு வரு­கின்­றது.

முக்­கி­யத்­து­வ­மிக்க தரவு சரி­பார்த்தல்  (FactChecking)

தரவு சரி­பார்த்தல் (FactChecking) என்­பது ஒரு உயிர் காக்கும் கரு­வி­யாக இன்­றைய நிலையில் உரு­வா­கி­யி­ருப்­ப­தையும் காண­மு­டி­கி­றது. போலி தக­வல்­களை தவிர்த்து சரி­யான தக­வல்­களை சரி­பார்த்து உண்மை தக­வலை வெளி­யிட்டால் உயிர்­களை  பாது­காக்க முடியும் என்­பது நிரூ­ப­ண­மாகி வரு­­­கின்­றது. அந்­த­ள­வு­ தூரம் இன்று இந்த போலி செய்­திகள்   மக்­களின் வாழ்க்­கையை பாதிப்­ப­துடன் மக்­களின் உயிர்­க­ளையே காவு கொள்ளும் ஒரு ஆபத்­தான விட­ய­மாக உரு­வாகி வரு­கி­றது. 

எனவே, இங்கு தரவு சரி­­பார்த்­தல் என்­பது மிக முக்­கி­ய­மா­ன­தாக  உரு­­வெ­டுத்து வரு­கின்­றது.  அது   தவிர்க்­கப்­பட முடி­யா­த­தாக   ஊட­க­வியல் செயற்­பா­டு­களில்  காணப்­ப­டு­கின்­றது

இங்கு முக்­கி­ய­மாக போலி மற்றும் தவ­றான செய்­திகள் பரப்­பப்­ப­டு­வதால் உயி­ரி­ழப்­­புகள், வன்­முறை மற்றும்  அமை­யின்மை ஏற்­ப­டு­கின்­றன என்­ப­தற்கு மணிப்பூர் சம்­ப­வங்­களும் சான்று பகிர்­கின்­றன.

அதிர்ச்சி தக­வல்கள்

இந்­தியாவில் மணிப்­பூரில் இடம்­பெற்ற கல­வ­ரங்­க­ளுக்கு போலி செய்திகளும் காரணம் என்று அதிர்ச்சி தக­வல்கள்  அண்மையில் வெளி­யா­கி­ன. கடந்த மே மாதம் 3ஆம் திகதி முதல் சிறு­பான்மை பழங்­குடி மக்­க­ளான குகி இனத்­த­வர்­க­­ளுக்கும் பெரும்­பான்மை மெய்தே இனத்­த­வர்­க­ளுக்­கி­டையில் ஆரம்­ப­மான வன்­மு­றை­களில் இது­வரை 150 பேருக்கும் அதி­க­மானோர் பலி­யா­கி­யுள்­ளனர்.

உல­க­ளா­விய ரீதியில் பெரும் அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யுள்ள இந்தக் கொடூர இன வன்­மு­றை­களில் பல­வற்­றுக்கு ஆரம்­பத்தில் இணை­­யத்­த­ளங்கள் மூலமும் பின்னர் உள்­நாட்டு பத்­தி­ரி­கைகள்  மூலமும் பரப்­பப்­பட்ட போலிச் செய்­தி­களும் வதந்­தி­க­ளும்  காரணம் என பிராந்­திய அதி­கா­ரி­களை மேற்­கோள்­காட்டி இந்­திய ஊட­கங்கள் செய்தி வெளி­யிட்டிருந்தன. 

அதாவது, சுர­சாந்­து­பூ­ரி­லுள்ள பழங்­கு­டி­யி­னத்­த­வர்­களால் படு­கொலை செய்­யப்­­பட்ட  பெண் ஒரு­வ­ரது சடலம் என்ற பொய்­­யான செய்­தி­யுடன் பொலித்­தீனால் சுற்­­றப்­­பட்ட பெண்­ணொ­ரு­வரின்  உடலை வெளிப்­­ப­டுத்தும் புகைப்­படம் இம்பெல் பள்­ளத்­தாக்குப் பிராந்­தி­யத்தில் பரப்­பப்­பட்­ட­தை­ய­டுத்தே மேற்­படி இனக் கல­வ­ர­மா­னது கிளர்ந்­தெ­ழுந்­தது. 

எனினும், மேற்­படி கல­வ­ரத்­திற்குக் கார­ண­மான புகைப்­ப­டத்­தி­லுள்ள பெண் சுர­சாந்­து­பூரில் படு­கொலை செய்­யப்­ப­ட­வில்லை எனவும் அவர் டில்­லியில் படு­கொலை செய்­யப்­பட்ட ஒருவர் எனவும் பின்னர் கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது.

போலிப் புகைப்­ப­ட­மா­னது காட்டுத் தீ போல பர­வி­யதால் இந்த வன்­மு­றைகள் இடம்­பெற்­றுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றமை போலி செய்­திகள் எந்­த­ளவு தூரம் மக்­களின் வாழ்க்­கையை பாதிக்­கின்­றன என்­­ப­த­னையும் ஊட­க­வி­யலில் தரவு சரி­பார்த்தல் என்­பது எந்­த­­ளவு தூரம் முக்­கியம் என்­ப­த­னையும் எடுத்­துக்­காட்­டு­கின்­றது.

உண்­மை­யான அறிக்­கை­யிடல்

ஊட­க­வி­ய­லா­ளர்கள் செய்­தி­களை தவ­றுகள் இன்­றியும் நம்­ப­க­ர­மா­ன­தா­கவும் அறிக்­கை­யி­ட­வேண்டும். அதிலும் தவ­றான ஒரு தகவல் வெளி­யி­டப்­படும் பட்­சத்தில் அதனை  சரி­பார்த்து மீண்டும் திருத்­து­வ­தற்கு ஒரு­போதும் பின்­வாங்­கக்­கூ­டாது. இன்­­றைய நிலையில் தரவு சரி­பார்த்தல் என்­பது உல­க­ளவில் ஒரு முக்­கி­ய­மான கார­ணி­யாக வளர்ந்து வரு­கின்­றது.

அதா­வது, கவ­லைக்­கு­ரிய விடயம் என்­ன­வென்றால் ஒரு சில சந்­தர்ப்­பங்­களில் தவ­று­த­லாக அறிக்­கை­யிடல் செய்­யப்­ப­டலாம்.  அதனால் தவ­றான செய்தி பரப்­பப்­ப­டலாம்.  அதனை திருத்திக் கொள்­ளலாம்.  ஆனால் சமூக ஊடங்­க­ளிலும் பிர­தான ஊட­கங்­க­ளிலும் சில வேலை­களில் திட்­ட­மி­டப்­பட்டே  போலி­யான செய்­திகள் பரப்­பப்­ப­டு­கின்­றமை கவ­லைக்­கு­ரி­ய­தாகும்.  எனவே, தரவு சரி­பார்த்தல் என்­பது  இங்கு மிக முக்­கி­ய­மான  விட­ய­மாக இருக்­கின்­றது.   இல்­லா­விடின் மக்­களின் உயிர்­களை காவு கொள்ளும் அபா­ய­க­ர­மான நிலையை அது உரு­வாக்­கி­விடும்.

பல சந்­தர்ப்­பங்­களில் ஒரு நிறு­வ­னத்தை அல்­லது ஒரு தனி­ந­பரை இலக்­கு­வைத்து  போலி செய்­திகள் வெளி­யி­டப்­ப­டு­கின்­றன.  அந்த போலி செய்­தி­களை உட­ன­டி­யாக   தரவு சரி­பார்த்து உண்­மை­யான விட­யத்தை  மக்­க­ளுக்கு வெளிப்­ப­டுத்­து­வதே இங்கு பிர­தான விட­ய­மா­க­வுள்­ளது.  சமூ­கத்தில் இனங்­க­ளுக்கு மத்­தியில் வேண்­டு­மென்றே குழப்­பத்தை ஏற்­ப­டுத்தும்  நோக்கில் பொய்­யான,  போலி­யான செய்­தி­களை பரப்பும் பட்­சத்தில் அது எவ்­வா­றான விளை­வுகள் ஏற்­படுத்தும் என்­ப­தற்கு மணிப்பூர் இன்று உதா­ர­ண­மாக இருக்­கின்­றது. போலி செய்­திகள் எந்­த­ள­வு­தூரம் ஆபத்­தா­னவை, அபா­ய­க­ர­மா­னது     என்­பதை மணிப்பூர் சம்­ப­வங்கள் எடுத்­துக்­காட்­டு­கின்­றன.

எனவே, இங்கு போலி  செய்­தி­களை வெளி­யி­டு­வதை முதலில் தடுக்க வேண்டும். போலி செய்­திகள் வெளி­யாகும் பட்­சத்தில் அவற்றை சரி பார்த்து உண்­மை­யான செய்­தியை வெளி­யி­டு­வ­தற்க ஊட­க­வி­ய­லா­ளர்­கள்   முயற்­சிப்­பது முக்­கி­ய­மாகும்.

சமூ­கங்­களில் அபா­யங்­களை, வன்­முறை­­­களை, பிரச்­சி­னை­களை, அமை­தி­யின்­மையை தடுப்­ப­தற்கு   தரவு சரிப்­பார்த்­தில் மிக முக்­கி­ய­மாக இருக்­கின்­றது. தரவு சரி­பார்த்­த­­லுக்கு பல நாட்கள், பல வாரங்கள், பல வரு­டங்கள் கூட எடுக்­கலாம்.  ஆனால் அந்த செயற்­பாட்டை நிறுத்தி விடக்­கூ­டாது.

கடந்த வருடம் பாகிஸ்­தானில் இலங்­கையர் ஒருவர் எரிக்­கப்­பட்டுக் கொலை செய்­யப்­பட்­டி­ருந்தார். அங்கு ஒரு தவ­றான செய்தி பரப்­பப்­பட்­ட­மையே அதற்கு மிக கார­ண­மாக  இருந்­த­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

எவ்­வாறு செய்­வது?  

இங்கு தரவு சரி­பார்த்­தலை ஊட­க­வி­ய­லா­ளர்கள் முன்­னெ­டுப்­ப­தற்கு பல கரு­விகள் சர்­வ­தேச ஊடக கற்கை நிறு­வ­னங்­க­ளினால் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளன. அவற்றை பயன்­படுத்­தி­னா­லேயே போலி­யான தக­வல்­களை கண்­டு­பி­டித்து உண்மை தக­வல்­களை வெளி­­யிட முடியும்.

தரவு சரி பார்த்தல் செயன்­மு­றைக்­காக ஏழு கரு­விகள் சர்­வ­தேச மட்­டத்தில் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன.  பொய்ன்டர் என்ற சர்­வ­தேச ஊடக கற்கை நிறு­வனம் இது தொடர்பில்  ஏழு கரு­வி­களை அல்­லது நுட்­பங்­களை உரு­வாக்­கி­யுள்­ளது.

ஏழு கரு­விகள்

அதா­வது பேச்­சா­ளரைத் தொடர்பு கொள்­ளல், (சம்­பந்­தப்­பட்ட தரப்பு)  ஏனைய தரவு சரி­பார்த்தல் மூலங்­களை பார்த்தல்,  உயர்ந்த­மட்ட கூகுள் ஆய்வு, ஆழ­மான இணைய ஆய்வு, பல்­வேறு கண்­ணோட்­டங்­களைக் கொண்ட நிபு­ணர்­களை நாடுதல், புத்­த­கங்­களை ஆராய்தல், வேறு மூலங்­களை பார்த்தல் ஆகிய இந்த ஏழு கரு­வி­களே  தரவு சரி­பார்த்தல் முறைக்­காக பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன.  இவற்றை பயன்­ப­டுத்­தினால் சந்­தே­கத்­துக்­கு­ரிய செய்தி தொடர்பில் உண்­மையை கண்­டு­பி­டிக்­கலாம்.  

தற்­போது சகல நாடு­களும் இந்த தரவு சரி பார்த்தல் தொடர்­பாக கவ­னத்தில் செலுத்த வேண்­டிய அவ­சியம் காணப்­ப­டு­கி­றது.    சமூக ஊட­கங்கள் ஆதிக்கம் செலுத்­து­கின்ற இந்த யுகத்தில் தவ­றான செய்­திகள் போலி செய்­திகள் வேண்­டு­மென்றே  உரு­வாக்­கப்­பட்டு பரப்­பப்­ப­டு­கின்­றன.     இதனால் கடு­மை­யான நெருக்­க­டிகள்,  பிரச்­சி­னைகள் அமை­தி­யின்மை,  வன்­முறை போன்­றன நிகழ்­கின்­றன.

நிபு­ணர்­களின் நோக்கு

‘’தவ­றான செய்­திகள் மற்றும் போலி செய்­துகள் மக்­களை மிக வேக­மாக சென்­ற­டை­கின்­றன.  ஆனால் அவற்றை பிழை­நீக்கம் செய்து முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்ற திருத்த செயல்­பாடு அந்­த­ளவு தூரம் கவர்ச்­சி­யாக மக்­க­ளிடம் செல்­வ­தில்லை. இவை   ஆழ­மா­கவும் மக்­க­ளிடம் செல்ல வேண்டும்.  அதற்­காக ஆழ­மான முறையில் செயற்­பட வேண்டும்’’  என்று அமெ­ரிக்­காவில் நோர்த் கரோ­லினா மாநி­லத்தில் இந்த   தரவு சரி­பார்த்தல் செயல்­பா­டு­களை தீவி­ர­மாக முன்­னெ­டுத்து வரு­கின்ற மற்றும் பொலி­டிபெக்ட் இணை­ய­த­ளத்தின்  ஸ்தாப­க­ர­மாக  இருக்­கின்ற பேரா­சி­ரியர் பில் அடையர்  கூறு­கிறார்.  

ஊடக அறிவு, Media literacy

அது­மட்­டு­மின்றி  ஊடக அறிவும் தெளி­வும் சக­ல­ருக்கும் இருக்க வேண்­டி­யது அவ­­சி­ய­­மா­கின்­றது. ஆங்­கி­லத்தில் Media literacy என்று கூறு­வார்கள்.  அதா­வது ஒரு செய்­தியை புரிந்து கொள்­ளக்­கூ­டிய தன்­மையை இது குறித்து காட்­டு­கி­றது. ஒரு செய்­­தியை பார்த்­த­வுடன் இது உண்­மை­யாக இருக்­குமா? அல்லது பொய்யானதாக இருக்குமா? போலியானதாக இருக்கும் என்­பதை புரிந்து கொள்ளக்கூடிய திற­மையை வளர்த்துக் கொள்ள வேண்டும். கார­­ணம் நாம் தற்போது தகவல் உலகில் வாழ்கி­றோம். எங்கு பார்த்தாலும் தகவல்கள் குவிந்து கிடக்கின்றன. ஒரு செய்தி  வெளி­யிடப்படுகின்றது என்பதற்காக அதனை முற்று முழுதாக நம்பவேண்டிய அவசிய­மில்லை. அது தொடர்பாக ஒரு ஆய்வு சகல மட்டத்திலும் இருக்கவேண்டும். அப்­படியானால்  மட்டுமே அதன் பாதிப்பிலிருந்து காப்பாற்றிக்கொள்ள முடியும்.  

அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், இந்தியா, இலங்கை என பல நாடுகள் இன்று தரவு சரிபார்த்தல் விடயத்தை மிக அதிகமாக முன்னெடுக்க ஆரம்பித்துவிட்டன. இந்தி­யாவில் பல நிறுவனங்கள் தற்போது தரவு சரிபார்த்தலை செய்கின்றன. ஆனால் அவற்­றை­யும் தாண்டி அசம்பாவிதங்கள் இடம்­பெறுகின்றன.  

தரவு சரிபார்த்தல்,  ஊடக  அறிவு,  போலி செய்திகளை தவிர்த்தல் என்பன தொடர்பாக மிக தீவிரமாக சிந்திக்க வேண்டிய அவசி­யத்தை தற்போது மணிப்பூர் சம்பவமும் எடுத்­துக் காட்டியிருக்கிறது.

https://www.virakesari.lk/article/161522

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.