Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மியர்னேசா ஆகிய நான்…

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

IMG-4333.jpg
பெரிய தொழில்
நிறுவனங்களை வாடிக்கையாளர்களாகக் கொண்டிருந்ததுதான் புரொசேகுயர் என்ற நிறுவனம் . யேர்மனியில் ஸ்ருட்கார்ட் நகரில் அமைந்திருந்த அந்த நிறுவனம், தனது வாடிக்கையாளர்களின் நிலையங்களுக்கு  சென்று அவர்களின் பணங்களைத் திரட்டி பாதுகாப்பாக வைத்திருந்து அவர்கள் தேவைக்கு ஏற்ப  மீண்டும் வழங்கிக் கொண்டிருந்தது. அந்த நிறுவனத்தில்தான் மியர்னேசா வேலை செய்து கொண்டிருந்தாள்.

42 வயதான மியர்னேசா தன்னை எப்பொழுதும் அழகாகக் காட்டிக் கொண்டாள்.. வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும் என்பது அவள் விருப்பம். ஆனாலும் துணையின்றித்  தனியாகத்தான் வாழ்ந்து கொண்டிருந்தாள். 28 வயதான ரோபேர்ட் அவளைத் தேடி வந்த போது, அமைதியான நதியாக இருந்த அவளது வாழ்க்கையில் ஆனந்த அலைகள் எழ ஆரம்பித்தன.

ஒரு மாலை நேரம் மியர்னேசா  நகர மையத்தில் உள்ள  ‘பார்ஒன்றில் தனியாக இருந்து மதுவைச் சுவைத்துக் கொண்டிருந்தாள். எந்தவித அனுமதியும் பெறாமல் அவளுக்கு அருகில் இருந்த இருக்கையில் ஒரு இளைஞன் வந்து அமர்ந்தான்

ஹலோ, தனிமையில் இனிமையா?”

 நீண்ட நாள் பழகிய நண்பர்களிடம் இருந்து வரும் வார்த்தைகள் அந்த இளைஞனின் கேள்வியில் இருந்தன. முன்பின் தெரியாத ஒரு அழகான இளைஞன். அவனைப் பார்த்ததும், அவன் தன்னைவிட வயதில் குறைந்தவன் என்பது மியர்னேசாவுக்குத் தெரிந்தது. சிரித்துக் கொண்டாள்.

உங்கள் தனிமைக்கு நான் இடைஞ்சல் செய்கிறேன் என்றால் சொல்லுங்கள் போய்விடுகிறேன்

இல்லை. பிரச்சினை இல்லை. நீங்கள் இருக்கலாம்அவள் தன்னை அறியாமல் அதைச் சொன்னாள். ஏதோ ஒன்று அந்த இளைஞனிடம் இருந்து அவளை ஈர்த்தது.

நன்றி. என்பெயர் ரோபேர்ட்……”

அந்தச் சந்திப்பின் பின்னர், அடிக்கடி ரோபேர்ட்டை, மியர்னேசா சந்தித்தாள்.எப்போதும் அந்தச் சந்திப்புகள் எதேச்சையாக நடந்ததாகவே அவள் நம்பினாள்.

இப்பொழுதெல்லாம் மியர்னேசா தனது தனிமையை உணர்வதில்லை. ரோபேர்ட் அவளுடன் கூடவே இருந்தான். சந்தர்ப்பம் கிடைக்கும் நேரம் எல்லாம் மியர்னேசோவின் அழகை ரோபேர்ட் புகழ்ந்தான். “காதலுக்கு வயதில்லை. பிரான்ஸ் ஜனாதிபதியைப் பார்த்தியா?” என்று அவளுக்கு நம்பிக்கை தந்தான். மியர்னேசாவைச் சந்திக்குப் போதெல்லாம் ஏதாவது ஒரு உயர்ந்த பரிசுப் பொருள் ஒன்று ரோபேர்ட்டின் கையில் இருக்கும்.

வாழ்க்கை இனிமையானதுதான். பணம் இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும். நீயாவது வேலை இடத்தில் கட்டுக் கட்டாகப் பணத்தைப் பார்க்கிறாய். நாலு நோட்டுக்களை ஒரு சேரப் பார்ப்பதே எனக்கு குதிரைக் கொம்பு

பணம் இருந்தால் நல்லதுதான். அது சும்மா கிடைக்காது

கிடைக்கும். நீ நினைச்சால்

எப்பிடி?”

உன் வேலை இடத்தில் இருந்து எடுத்திடு

எனக்கு சினிமா காட்டுறியா? எவ்வளவு கமரா அங்கே இருக்கு? ஒருதாள்கூட எடுக்கேலாது

பணத்தைப் பற்றிய முதல்நாள் பேச்சில் அவள் கொஞ்சம் நகர்ந்திருப்பதை ரோபேர்ட் உணர்ந்தான். தொடர்ந்த சந்திப்புகளில் அவன், அவள் அழகைப் பற்றி பேசிவிட்டு அடுத்ததாகப் பணத்துக்கு தாவிவிடுவான். கொஞ்சம் கொஞ்சமாக ரோபேர்ட்டின் முழுக் கட்டுப்பாட்டுக்குள் மியர்னேசா வந்து சேர்ந்து விட்டாள்.

ஒரு வெள்ளிக்கிழமை, மதியம் தாண்டி, நேரம் மெதுவாக மாலைக்குள் நகர்ந்து கொண்டிருந்தது. மியர்னேசா நேரத்தைப் பார்த்தாள் 15:10. வார விடுமுறை வருவதால் பலர் 3மணிக்கே வேலையை முடித்து விட்டுப் போய் விட்டார்கள். அவளும் மூன்று மணிக்கு வேலையை முடித்து வீட்டுக்குப் போயிருக்க வேண்டும். ஆனால் அன்று  அவள் பத்து நிமிடங்கள் கூடுதலாக எடுத்துக் கொண்டாள்

பணம் இருக்கும் அறைக்குள் சென்று  பணப் பாதுகாப்புப் பெட்டகத்தைத் திறந்து அங்கிருந்த பணத்தை எடுத்து ஒரு அட்டைப் பெட்டிக்குள் அடுக்கிக் கொண்டாள். உடை மாற்றும் அறைக்குள் போய் அந்தப் பணக்கட்டுகளை தனது  sports bagக்குள் மாற்றிக் கொண்டாள். கட்டுக் கட்டாக இதுவரை  பார்த்த பணம், இப்பொழுது அவள் தோள் பட்டையில் தொங்கிக் கொண்டிருந்த  பைக்குள் இருந்தன. வழமைபோல் காவலாளிக்கு மாலை வாழ்த்துக்களை சொல்லிப் போகிறவள் அன்று  வார இறுதி நாட்களுக்கும் சேர்த்து வாழ்த்துச் சொல்லி விட்டு, வீதியில் நின்ற ரோபேர்டடின் காரில் ஏறிக் கொண்டாள்.

குற்றம் என்று தெரிஞ்சும் பிழையான வேலை ஒன்றை செய்திட்டன். உன்னால்தான் எல்லாம். எனக்குப் பயமாக இருக்கு

இது உனக்கு முதல் களவு…”

அப்பிடி எண்டால் நீ முந்தியும் களவு செய்திருக்கிறாயா?”

ரோபேர்ட் பெரிதாகச் சிரித்தான். “அப்பிடி எல்லாம் இல்லை. நான் உன்னைப் போல பதட்டப்பட இல்லை அவ்வளவுதான்

அங்கே கமராவிலே எல்லாமே பதிஞ்சிருக்கும்

நாங்கள்தானே  எங்களுடைய அடையாளங்களை மாற்றிக் கொள்ளப் போகிறோமே! பயப்படுறதுக்கு எதுவுமே இல்லை. வழக்கம் போலை பூட்டிப் போட்டு வந்தனிதானே? பணத்தைக் காணவில்லை எண்டு தெரிஞ்சாப் போலைதான் கமராவைப் பாப்பாங்கள். அதுவரை எங்களுக்கு நேரம் இருக்கு. அதாவது திங்கட்கிழமை காலை மட்டும்

இப்ப எங்கே போகிறோம்?”

சேர்பியாவுக்கு

சேர்பியாவுக்குப் போய் அங்கே பெயர்மாற்றம் செய்யப்பட்ட கடவுச் சீட்டைப் பயன்படுத்தி வேறு ஒரு நாட்டில் புது வாழ்வை தொடங்குவதுதான் அவர்களின் திட்டமாக இருந்தது.

சேர்பியாவிற்கு போனதன் பின்னர் மியர்னேசாவுக்கு, அவன் தன்மேல் கொண்டிருப்பது காதல் அல்ல என்பது புரிய ஆரம்பித்தது. ஆடம்பரமாக தன்னுடைய வாழ்க்கையை கற்பனை செய்தவளுக்கு, எல்லாமே இடிந்து போய்விட்டது. ரோபேர்ட் அவளைத்  தவிர்க்க விரும்புவது மெதுவாகப் புரிய ஆரம்பித்தது. எப்பொழுதும் அவளது அழகைப் புகழ்ந்து பேசுபவன், அவளது முகத்தைப் பார்ப்பதையே இப்பொழுது தவிர்த்தான்.  

வேறு ஒரு பெயரில் அவளுக்கு கடவுச் சீட்டு ஏற்பாடு செய்து தருவதாகச் சொன்னவன், இப்போது அதைப் பற்றிக் கேட்டால் சத்தம் போட ஆரம்பித்தான். அவளை அவன் பார்க்கும் பார்வையில் ஏளனம் மிகுந்திருந்தது. அவனது உதட்டில் தெரிந்த இழிவான புன்னகை அவளைப் பயமுறுத்தியதுஅவனுடன் தொடர்ந்து இருப்பது ஆபத்தானது என்பது அவளுக்குப் புரிய ஆரம்பித்தது. காதல் என்பது அவனுக்குப் பணத்தின் மேல்தான். இப்போது அவனது கையில் அது வந்து சேர்ந்து விட்டது. இனி அவள், அவன் மடியில் தேவையில்லை. பணத்துக்காகத்தான் தன்னுடன் அவன் பழகி இருக்கிறான் என்பது அவளுக்குத் தெளிவானது. அமைதியான நதியாக இருந்து, அலைகள் எழுந்து இப்பொழுது தேங்கி நின்ற நீராகி வாழ்வு அவளுக்குச் சகதியாகிப் போனது.

“ஒருவேளை அவன் தன்னை ஏதாவது செய்துவிட்டால்? யாருடைய துணையும் இல்லாமல் தனியாக இருக்கிறேன். குற்றவாளியாகத் தேடப்படும் பட்டியலில் என் பெயர் இருக்கிறதுநினைக்கும் போதே அவளுக்கு பயம்  ஏற்பட்டது.

அவளைப் பற்றிய தகவல் தந்தால் 50,000யூரோக்கள் சன்மானம் தருவதாக அறிவிப்பும் வந்திருந்தது. அவளது உயரம்,அகலம் தொட்டு  அங்க அடையாளம், உடலில் எங்கெல்லாம் பச்சை குத்தியிருக்கிறாள் என்ற விபரங்களோடு  புகைப்படமும் இணையத்தில் வெளியிட்டிருந்தார்கள். வெளியில் அவளால் நடமாட முடியவில்லை. வீட்டின் உள்ளே மரணபயம். ரோபேர்ட்டை விட்டு ஓடிவிடு என்ற எச்சரிக்கையை அவள் மூளை விடுத்தது.

மொன்ரனேர்குரோவுக்கு இடம் மாறி, மியர்னேசா தன்னை மறைத்துக் கொண்டாள். ஒரு சட்டத்தரணியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனது நிலமையைச் சொன்னாள்

எனது கட்சிக்கார், கொள்ளைக்காகத் தூண்டப்பட்டார். அவர் இந்தக் கொள்ளையில் ஈடுபட்டதை முழுமையாக ஒப்புக் கொள்கிறார்என்று சட்டத்தரணி யேர்மனிய பொலிஸுக்கு கடிதம் ஒன்றை எழுதினார்.

ஸ்ருட்கார்ட் நகர நீதிபதியின் ஒப்புதல் மற்றும்  மொன்ரனேர்குரோ அரசாங்கத்தின் உதவியுடன் யேர்மனியப் பொலிஸார் மியர்னேசாவுக்கான பயண ஒழுங்கைச் செய்தார்கள். ஸ்ருட்கார்ட் விமான நிலையத்தில் வந்து இறங்கிய மியர்னேசாவை சந்திக்க பொலீஸார் காத்து நின்றார்கள்.  

மியர்னேசாவுக்கு ஏழு மாதங்கள் தடுப்புக் காவலில் போனதுஏழு மாதங்களின் பின்னர் நடந்த வழக்கில்,  “சில கண்மூடித் தனமான காதல்கள் முட்டாள்தனமான முடிவுகளை எடுக்கும். மியர்னேசாவுக்கு மூன்று வருடங்கள் சிறைத்தண்டனைஎன நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

ரோபேர்ட்? அவன் விரும்பிய வாழ்க்கை அவனுக்கு கிடைத்து விட்டது.

அப்படியானால் மியர்னேசாவுக்கு?

ஒருவேளை, அவள் பணத்தை எங்காவது மறைத்து வைத்திருந்தால், விடுதலைக்குப் பின்னர் அவள் விரும்பிய வாழ்வு அவளுக்குக் கிடைக்கும். அது அவளுக்குமட்டும் தெரியும்.

 

உண்மைச் சம்பவம்

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு குறும்படம் பார்த்த மாதிரி இருந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு முதிர்சியான பெண்ணை எவ்வளவு நைச்சியமாக ஏமாற்றி விட்டான் .......பெண்ணுக்கு பெண்ணுமாச்சுது, பணத்துக்கு பணமுமாச்சுது.........!   😁

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.