Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இனவாதம் மதவாதத்தை தூண்டுபவர்களை கட்டுப்படுத்த வேண்டும் - வஜிர அபேவர்தன

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
16 AUG, 2023 | 04:51 PM
image
 

(எம்.ஆர்.எம்.வசீம்)

நாடு பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் அதனை மீட்டு, நாட்டி கட்டியெழுப்ப அரசியல் கட்சிகளுக்கு வேலைத்திட்டம் இருக்கமானால் அவர்கள் தற்போதாவது முன்வைத்திருக்கலாம்.

ஆனால் அவர்களிடம் எந்த வேலைத்திட்டமும் இல்லை. ஆனால் இவர்கள் இனவாதம், மாதவாதத்தை தூண்டி நாட்டை குழப்பும் நடவடிக்கையில் ஈடுபடுகிறார்கள்.

அதனை மக்கள் தடுக்க வேண்டும். இனவாதம், மதவாதத்தை தூண்டுவதை கட்டுப்படுத்த முடியாமல் போனால் இலங்கைக்கு எதிர்காலம் இல்லாமல் போகும் என ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்த்தன தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் செவ்வாய்க்கிழமை (15)  இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

வங்குரோத்து அடைந்துள்ள எமது நாடு தற்போது படிப்படியாக பலப்படுத்தப்பட்டு வருகிறது. சரவதேச நாணய நிதியம் நேற்று விடுத்திருந்த குறிப்பொன்றில், செப்டேம்பர் 15ஆம் திகதிக்கும் 27ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில்  மீண்டும் இலங்கைக்கு வந்து, வங்குரோத்து நிலைமையில் இருந்து மீட்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள தயாராக இருப்பதாக தெரிவித்திருக்கிறது.

அதனால் ஊடகங்கள் நாட்டின் நிலைமை தொடர்பில் மக்களுக்கு உண்மை தகவல்களை வெளிப்படுத்த வேண்டும். வீழ்ச்சியடைந்த நாட்டை மீட்பதற்கு அரசியல் கட்சிகளுக்கு ஏதாவது வழி இருந்தால், கடந்த மே மாதம் ரணில் விக்ரமசிங்கவுக்கு பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்ள கிடைப்பதும் இல்லை. ஜூலை மாதத்தில் ஜனாதிபதியாக பதவி ஏற்றுக்கொள்ள கிடைப்பதில்லை.

அதனால் அரசியல் கட்சிகளுக்கு எந்த வழியும் இல்லை என்பது உறுதியாகி இருக்கிறது. என்றாலும் நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து மீட்க ரணில் விக்ரமசிங்கவிடம் தெளிவானதொரு வழி இருந்தமையாலே அவர் முன்வந்து நாட்டை பொறுப்பேற்றார்.

அத்துடன் நாட்டின் சுதந்திரத்துக்காக அனைத்து இன மக்களும் ஒன்றாக இருந்து செயற்பட்டது போல் தற்போது நாட்டின் பொருளாதாரத்தை மீட்கவும் நாங்கள் ஒன்றாக இணைந்து செயற்பட வேண்டும்.

நாட்டின் சுதந்திரத்துக்காக ஒன்றிணைந்து செயற்பட்டாலும் அதிகாரத்தை பெற்றுக்கொள்வதற்காக  அரசியல் கட்சிகள் காலத்துக்கு காலம் தேர்தல்களின் போது பொய் வாக்குறுதிகளை வழங்கி அதனை செயற்படுத்த முற்பட்டதன் பிரதிபலனாகவே இன்று நாடு வங்குரோத்து நிலைக்கு தள்ளப்பட காரணமாகும்.

மேலும் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்த ஒவ்வொரு காலகட்டத்திலும் ரணில் விக்ரமசிங்க அதிகாரத்துக்கு வந்து பொருளாதாரத்தை கட்டியெழுப்ப நடவடிக்கை எடுத்து வந்திருக்கிறார்.

பொருளாதாரம் ஸ்திரமடையும் நிலை ஏற்படும் போது இனவாதத்தை தூண்டி, ஆட்சியை வீழ்த்தும் நடவடிக்கை 2000ஆம் ஆண்டில் இருந்து இடம்பெற்று வந்திருக்கிறது. அதனால் பொருளாதாரம் வீழ்ச்சியடைவதையும் அதனை எவ்வாறு மீட்கமுடியும் என்பதையும் அரசியல் அனுபவத்தால் ரணில் விக்ரமசிங்க தெரிந்து தெரிந்து வைத்திருக்கிறார்.

அதனால் தான் 2000ஆம் ஆண்டில் நாடு வீழ்ச்சியடையும்போது  2001 டிசம்பர் மாதம் நாட்டை பொறுபேற்று, சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஏனைய நிதி நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் நாட்டை முன்னுக்கு கொண்டு சென்றார்.

ஆனால் மீண்டும் இனவாதத்தை தூண்டி நாட்டில் பிரச்சினையை ஏற்படுத்திய நிலையில்  2014 ஆகும்போது நாடு பொருளாதார ரீதியில் மீண்டும் வீழ்ச்சியடைய ஆரம்பித்தது.

அதனால் 2017இல் நடத்த இருந்த ஜனாதிபதி தேர்தலை 2015இல்  நடத்தி அதிகாரத்தை பெற்றுக்கொள்ள முயற்சித்தார்கள். என்றாலும் 2015 ஜனவரி 8ஆம் திகதி ரணில் விக்ரமசிங்க மீண்டும் நாட்டை பொறுப்பேற்று, நாட்டை முன்னுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்துவந்தார். இந்நிலையில்தான், உள்நாட்டு, வெளிநாட்டு சக்திகள் ஒன்றிணைந்து  2019இல் 52 நாள் கலவரம் மற்றும் ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் வரை இடம்பெற்றது.

எனவே நாடு பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் அதனை மீட்டு, நாட்டை கட்டியெழுப்ப அரசியல் கட்சிகளுக்கு வேலைத்திட்டம் இருக்குமானால் அவர்கள் தற்போதாவது முன்வைத்திருக்கலாம். ஆனால் அவர்களிடம் எந்த வேலைத்திட்டமும் இல்லை.

ஆனால் இவர்கள் இனவாதம், மதவாதத்தை தூண்டி நாட்டை குழப்பும் நடவடிக்கையில் ஈடுபடுகிறார்கள். அதனை மக்கள் தடுக்க வேண்டும். இனவாதம் மதவாதத்தை தூண்டுவதை கட்டுப்படுத்த முடியாமல் போனால் இலங்கைக்கு எதிர்காலம் இல்லாமல் போகும்.

அதனால் அனைவரும் இலங்கையர்களாக எமது பிரச்சினைகளை எமது நாட்டுக்குள்ளேயே தீர்த்துக்கொள்ள நடவடிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு தேசிய ஐக்கியம் முக்கியமாகும் என்றார்.

https://www.virakesari.lk/article/162507

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஏராளன் said:

ஊடகங்கள் நாட்டின் நிலைமை தொடர்பில் மக்களுக்கு உண்மை தகவல்களை வெளிப்படுத்த வேண்டும்.

கடந்த காலங்களில் உண்மைகளை மறைத்தும், திரித்தும், கட்டுப்படுத்தியும் வன்முறைகளும் கலவரங்களும் ஏற்பட பத்திரிகைகளே காரணமாய் அமைந்தன, வழிநடத்தப்பட்டன. உண்மையை எழுதியதற்காக அதன் ஆசிரியர்கள்  கடத்தப்படும் காணாமல் ஆக்கப்படும் கொல்லப்படும் தடைசெய்யப்படும் சம்பவங்கள் அரசினாலேயே அரங்கேறியிருந்தன.  அவர்களை அவ்வாறு நடந்துகொள்ளவேண்டும்  என்று அறிவுறுத்தி பயிற்சியளித்து பாராட்டிவிட்டு இப்போ திடீரென்று மாறி, வழமைக்கு மாறாக வழமையை மாற்றுங்கள், உண்மையை   எழுதுங்கள் என்றால் முடியுமா அவர்களால்? எழுதினாலும் மக்களை விடுங்கள், அதை தாங்கிக்கொள்ள உங்களால்முடியுமா?   ஆரம்பத்தில் இருந்து எழுதினாலே மக்கள் உண்மையை அறிந்து, திருந்த முடியும். நூல் நிலையம் எரிக்கப்பட்டது, இனப்பரம்பல் மாற்றியமைக்கப்பட்டது, தமிழர் ஓரங்கட்டப்பட்டது, திட்டமிட்டு வஞ்சிக்கப்பட்டது எல்லாம் சுதந்திரம் அடைந்ததிலிருந்து நடந்த உண்மைகள் எழுதப்படவேண்டும், பறிக்கப்பட்டவை திருப்பித்தரவேண்டும், செய்யப்பட்ட அநீதிகளுக்கு மன்னிப்பு கோரி இனிமேலும் இப்படி நடவாது என உறுதிப்படுத்த வேண்டும் முடியுமா உங்களால் அது?  அன்றும் இன்றும் உங்கள் சுயநல அரசியலுக்காகவே பத்திரிகைகளை பயன்படுத்தி வருகிறீர்கள். பத்திரிகைகளுக்கு கோரிக்கை வைப்பதற்கு முன் இனவாதிகளை கைது செய்யும்  இலகுவான அதிகாரம், ஆயுதம்  உங்கள் கையில்  இருக்க வெறும் பத்திரிகைகளையும் பேனாக்களையும் கோரி உங்களை காப்பாற்ற முயல்கிறீர்கள். 

5 hours ago, ஏராளன் said:

அனைவரும் இலங்கையர்களாக எமது பிரச்சினைகளை எமது நாட்டுக்குள்ளேயே தீர்த்துக்கொள்ள நடவடிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு தேசிய ஐக்கியம் முக்கியமாகும் என்றார்.

இவ்வளவு உபதேசமும் குற்றச்சாட்டும் இது ஒன்றுக்காகத்தானா? நீங்கள் திருத்தவோ, நாடு முன்னேறவோ வழியேதுமில்லை. நாடு உங்கள் கையை விட்டுப்போவதும் உறுதி என்கிறீர்கள். சரி ...... கொடுங்கள், அவர்கள் கையிலாவது நாடு அமைதியாக முன்னேறட்டும். 

  • கருத்துக்கள உறவுகள்

இப்போதைக்கும் இலங்கைக்கு எதிர்காலம் இருப்பதாக தெரியவில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, Cruso said:

இப்போதைக்கும் இலங்கைக்கு எதிர்காலம் இருப்பதாக தெரியவில்லை. 

தேர்தலை முன்னிறுத்தி கருத்து வெளியிடுகிறார்கள். இதற்கு முக்கியத்துவம் யாரும் கொடுக்கப்போவதில்லை. பாம்பின் காலை பாம்பறியுமென்பார்கள். ஒரு கட்சி தங்கள் பாணியில் சண்டித்தனம், இவர்களோ கருத்துக்களால் தமிழரை கவருகிறார்களாம்.  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.