Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கை இராணுவத்திற்கு சீனாவினால் அதிநவீன தகவல் தொடர்பாடல் வாகனங்கள் கையளிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: VISHNU

22 AUG, 2023 | 08:22 PM
image
 

2017 ஆம் ஆண்டு சீன மக்கள் குடியரசின் தேசிய பாதுகாப்பு அமைச்சுக்கும் பாதுகாப்பு அமைச்சுக்கும், இலங்கை பாதுகாப்பு அமைச்சுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கையின் பிரகாரம், சீன மக்கள் குடியரசினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட அதிநவீன தகவல் தொடர்பாடல் அமைப்புகளுடன் கூடிய வாகனங்கள் பதில் பாதுகாப்பு அமைச்சர் பிரேமித பண்டார தென்னகோன் மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன ஆகியோரால் உத்தியோகபூர்வமாக செவ்வாய்க்கிழமை (22) இராணுவ தலைமையக வளாகத்தில் இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்டது.

_45A8227.JPG

45 மில்லியன் யுவான் (அமெரிக்க டொலர் 6.2 மில்லியன்) பெறுமதியான இந்த தொடர்பாடல் முறைமை இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இந்த வாகனங்கள் அனைத்திலும் அதிநவீன ஈஎல்டி தொடர்பாடல் அமைப்பு பொருத்தப்பட்டுள்ளன. குறுங் அலைவரிசை அமைப்பு, மற்றும் அவசர காலங்களில் நேரடி தகவல் தொடர்பாடலுக்கு உதவும் விமானிகள் அற்ற விமானங்கள் (ட்ரோன்கள்) என்பன பொறுத்தப்பட்டுள்ளன.

இந்த அமைப்புகளைப் பயன்படுத்துவதன் மூலம், இலங்கை இராணுவத்தின் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு வலையமைப்பை மிகத் திறமையாகவும் ஒருங்கிணைக்கப்பட்ட முறையிலும் இயக்கும் திறனைப் பெறுவதற்கு இலங்கை இராணுவத்திற்கு வாய்ப்பாக அமையும்.

https://www.virakesari.lk/article/162962

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, ஏராளன் said:

இந்த அமைப்புகளைப் பயன்படுத்துவதன் மூலம், இலங்கை இராணுவத்தின் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு வலையமைப்பை மிகத் திறமையாகவும் ஒருங்கிணைக்கப்பட்ட முறையிலும் இயக்கும் திறனைப் பெறுவதற்கு இலங்கை இராணுவத்திற்கு வாய்ப்பாக அமையும்.

எந்த நாட்டுடன் மோதுவதற்கான திட்டம்... மாலைதீவா அல்லது இந்தியாவா?

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, nochchi said:

எந்த நாட்டுடன் மோதுவதற்கான திட்டம்... மாலைதீவா அல்லது இந்தியாவா?

சீன கப்பல்கள் , விமானங்கள் வந்தால்தானே இந்தியாவுக்கு பிரச்சினை. எனவே அந்த உளவு பார்க்கும் கருவிகளை இலங்கைக்கே கொடுத்து விடடார்கள். இனி இந்தியா ஒன்றும் சொல்ல முடியாதுதானே. எனவே இலங்கைக்கும் பிரச்சினை இல்லை, இந்தியாவுக்குப்பிரச்சினை இல்லை, சீனாவுக்கும் பிரச்சினை இல்லை. சங்கிகள் தலையை பிய்த்துக்கொண்டு திரிய வேண்டியதுதான். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சீனாவிடமிருந்து இலங்கைக்கு 6.2 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான இராணுவ வாகனங்கள்

இலங்கை இராணுவம் சீன தேசிய பாதுகாப்பு அமைச்சிலிருந்து 11 கடற்படை வாகனங்களை பெற்றுள்ளது.

6.2 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான வாகனங்களை நேற்று (ஆகஸ்ட் 22) இராணுவத் தலைமையக வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வின் போது பதில் பாதுகாப்பு அமைச்சர் பிரேமித பண்டார தென்னகோனினால் உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டன .

அதி நவீன தகவல் தொடர்பு சாதனங்களுடன் பொருத்தப்பட்ட இந்த வாகனங்கள் இராணுவ நோக்கங்களுக்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவம் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.

இலங்கையிலுள்ள சீனத் தூதரகத்தின் பாதுகாப்பு உதவியாளர் (டிஏ) சிரேஷ்ட கர்னல் சோவ் போவிடம் இருந்து இராணுவத்திற்கு நன்கொடை வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, பதில் பாதுகாப்பு அமைச்சர் தென்னகோன் அதனை பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவிடம் கையளித்தார்.

இலங்கை பாதுகாப்பு உயர் அதிகாரிகள் சீன தூதரக அதிகாரிகளுடன் வாகனங்களை சோதனையிட்டனர்

இலங்கை இராணுவம் எதிர்காலத்தில் உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் விசேட கடமைகளுக்காக இந்த இராணுவ வாகனங்களை பயன்படுத்த உத்தேசித்துள்ளது.

இந்நிகழ்வின் இறுதிக்கட்ட நிகழ்வாக, பாதுகாப்பு அமைச்சர் தென்னகோன் நல்லெண்ணத்தின் அடையாளமாகவும், நிகழ்வின் அடையாளமாகவும், இலங்கை இராணுவத்தின் சார்பாக சீன டிஏ சிரேஷ்ட கேணல் போவுக்கு நினைவுச் சின்னமொன்றை வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் இலங்கைக்கான சீனத் தூதரகத்தின் மேலதிக செயலாளர்கள், பாதுகாப்பு அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள், சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் மற்றும் உதவிப் பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

https://thinakkural.lk/article/269890

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.