Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நமது சருமத்திற்கு ஏற்ற சன்ஸ்கிரீனை எப்படி தேர்வு செய்வது?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
பல தோல் பிரச்னைகளுக்கு புற ஊதா கதிர்கள் தான் காரணமாக இருக்கின்றன.

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

பல தோல் பிரச்னைகளுக்கு புற ஊதா கதிர்கள் தான் காரணமாக இருக்கின்றன.

கட்டுரை தகவல்
  • எழுதியவர், அனுஜா வைத்யா லத்தி
  • பதவி, பிபிசிக்காக
  • 4 செப்டெம்பர் 2023

சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க, நாம் ஒவ்வொருவரும் ஊட்டச்சத்து மிக்க சரிவிகித உணவுகளை உட்கொள்ளவேண்டும். மேலும், தோல் பராமரிப்புக்காக எந்த மாதிரியான பொருட்களை தேர்வு செய்ய வேண்டும், எப்போது மருத்துவரிடம் செல்ல வேண்டும் என்பது போன்ற விஷயங்களையும் நாம் அறிந்திருக்க வேண்டும்.

தோல் பராமரிப்பில் மூன்று முக்கிய விஷயங்களை ஒவ்வொருவரும் நினைவில் கொள்ள வேண்டும். அவற்றில் முதலாவது சன்ஸ்கிரீன் (உங்கள் சருமத்தை வெயிலில் இருந்து காக்க உதவும் க்ரீம்).

இரண்டாவது க்ளென்சர் (முகத்தை சுத்த செய்ய பயன்படுவது). மூன்றாவது மாய்ஸ்சரைசர் (முகத்தின் ஈரப்பதத்தை காக்க உதவும் க்ரீம்). மேலும் இவற்றை எப்படி தேர்வு செய்வது என்பதையும் நாம் நன்றாக அறிந்திருக்கவேண்டும்.

 
சரும பிரச்னை

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

பல தோல் பிரச்னைகளுக்கு புற ஊதா கதிர்கள் தான் காரணமாக இருக்கின்றன. அதனால் தான் சன்ஸ்கிரீன் லோஷனை சருமத்தில் தடவ வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.

முதலில் சன்ஸ்கிரீன் லோஷனைப் பற்றிப் பார்ப்போம்.

சன்ஸ்கிரீன் லோஷனைப் பற்றிப் பார்க்கும் போது, முதலில் சூரியனில் இருந்து வரும் புற ஊதாக் கதிர்களைப் பற்றிப் பேச வேண்டும். இந்தக் கதிர்கள் நேரடியாக நம் தோலின் மீது விழுகின்றன.

இந்த கதிர்களின் காரணமாக தோல் எரிச்சல் அல்லது தோல் அரிப்பு, சூரிய ஒளி ஒவ்வாமை, வெயிலில் காய்ந்து தோல் கருமையாவது போன்ற பிரச்னைகள் ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது.

பல தோல் பிரச்னைகளுக்கு புற ஊதா கதிர்கள் தான் காரணமாக இருக்கின்றன. அதனால் தான் சன்ஸ்கிரீன் லோஷனை சருமத்தில் தடவ வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.

இதே போல் வெயிலில் நீண்ட நேரம் இருந்தால் முகத்தில் சுருக்கங்கள் தோன்றும். இது நமக்கு வயதாகிவிட்டதாக உணர வைக்கிறது.

அதனால்தான் சன்ஸ்கிரீன் லோஷன் மிகவும் முக்கியமானது. இருப்பினும், எந்த லோஷனை நாம் பயன்படுத்த வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுப்பதில் தான் பல முக்கியக் கேள்விகள் நம் முன்னே எழுகின்றன.

ஒவ்வொரு முறை வெளியே செல்லும்போதும் சன்ஸ்கிரீனைப் பயன்படுத்த வேண்டுமா? யாரெல்லாம் இதைப் பயன்படுத்த வேண்டும்? எந்த வகையான சன்ஸ்கிரீனை நாம் பயன்படுத்த வேண்டும்?

இந்த கேள்விகளுக்கான பதிலை இப்போது புரிந்துகொள்வோம்.

இந்தியாவில் வாழும் மக்களின் தோலில் மெலனின் அதிகம் உள்ளது. இதனால் வெயிலில் எவ்வளவு நேரம் செலவழித்தாலும் சருமம் அவ்வளவு சீக்கிரம் பாதிப்படைவதில்லை. இருப்பினும், நாம் சன்ஸ்கிரீனையும் பயன்படுத்த வேண்டும். ஏனெனில் இந்த கிரீம்கள் தோல் பாதிப்படைவதைக் கட்டுக்குள் வைத்திருக்கும்.

 
சரும பிரச்னை

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

எண்ணெய் பசை உள்ள சருமம் இருந்தால், ஜெல் வடிவிலான சன்ஸ்கிரீனையும், வறண்ட சருமம் என்றால் லோஷன் அல்லது கிரீம் வடிவிலான சன்ஸ்கிரீனையும் தேர்வு செய்ய வேண்டும்.

சரியான சன்ஸ்கிரீனை எவ்வாறு தேர்வு செய்வது?

உங்களுக்கு எண்ணெய் பசை உள்ள சருமம் இருந்தால், ஜெல் வடிவிலான சன்ஸ்கிரீனை தேர்வு செய்யவேண்டும்.

உங்களது சருமம் வறண்ட சருமமாக இருந்தால், லோஷன் அல்லது கிரீம் வடிவிலான சன்ஸ்கிரீனைத் தேர்வு செய்யவும்.

இங்கே 'SPF' என்பது சூரிய பாதுகாப்பு காரணியைக் குறிக்கிறது. சன்ஸ்கிரீன் பாட்டில்களில் இப்படித்தான் குறிப்பிடப்பட்டிருக்கும்.

இந்த காரணியின் அளவு 15 முதல் 40 வரை உள்ள கிரீம் இந்தியா போன்ற நாடுகளில் வசிப்பவர்களுக்குப் போதுமானது.

சன்ஸ்கிரீன் எப்போது பயன்படுத்த வேண்டும்?

முடிந்தால் தினமும் சன்ஸ்கிரீனைப் பயன்படுத்தலாம். ஆனால், இரவில் அல்ல. காலையில் வீட்டிலிருந்து வெளியில் கிளம்பும் போது அதைப் பயன்படுத்தவேண்டும்.

காலை 8-9 மணி முதல் மாலை 5-6 மணி வரை முகத்தில் சன்ஸ்கிரீன் இருப்பது நல்லது.

நீங்கள் வெளியில் வேலை செய்ய வேண்டியிருந்தால் அல்லது வெயிலில் அதிக நேரம் செலவிட வேண்டியிருந்தால், சன்ஸ்கிரீன் லோஷனை உங்களுடன் எடுத்துச் செல்வது அவசியம்.

குறிப்பாக ஜிங்க் ஆக்சைடு மற்றும் டைட்டானியம் ஆக்சைடுகள் உள்ள சன்ஸ்கிரீனைத் தேர்ந்தெடுப்பது நல்லது.

சரும பிரச்னை

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

சன்ஸ்கிரீன் வாங்கும் போது, ஜிங்க் ஆக்சைடு மற்றும் டைட்டானியம் ஆக்சைடுகள் உள்ள சன்ஸ்கிரீனைத் தேர்ந்தெடுப்பது நல்லது.

 

க்ளென்சரை எவ்வாறு பயன்படுத்துவது?

முகத்தில் சோப்பு போட வேண்டுமா? அல்லது ஃபேஸ் வாஷ் பயன்படுத்தவேண்டுமா? இந்த சந்தேகம் பலருக்கும் உள்ளது.

நீங்கள் எதை வேண்டுமானாலும் தேர்ந்தெடுக்கலாம். ஆனால், அவற்றில் எதைப் பயன்படுத்தினாலும், அதற்கு முன், சில விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும்.

ஒரு நாளைக்கு இரண்டு முறை உங்கள் முகத்தை கழுவ வேண்டும்.

எண்ணெய் பசை உள்ள சருமம் அல்லது பருக்கள் போன்ற பிரச்னைகள் இருந்தால், அடிக்கடி முகத்தை கழுவுவது நல்லது. ஆனால், இப்படி கழுவுவது சருமத்தில் உள்ள மென்மையான பாதுகாப்பு அடுக்கை சேதப்படுத்துவதாக நீங்கள் உணர்ந்தால், அதை உடனடியாக நிறுத்திவிடுங்கள்.

ஏனெனில் இது போன்ற சூழ்நிலையில், பருக்கள் அதிகரிக்கும் நிலையும் ஏற்படலாம். எனவே இந்த விஷயத்தில், தனிப்பட்ட நபர்களின் சருமத்தின் வகையைப் பொறுத்து தான் முடிவு செய்ய வேண்டும்.

ஆனால், பொதுவாக, நம் முகத்திற்கு ஏற்ற க்ளென்சர் மூலம் இரண்டு முறை கழுவுவது நல்லது.

எந்த சோப்பை பயன்படுத்துவது சருமத்துக்கு நன்மை பயக்கும்?

சோப்பு பயன்படுத்த வேண்டும் என்றால் மருத்துவ குணம் கொண்ட சோப்புகளை தேர்வு செய்வதே சிறந்த தேர்வாக இருக்கும். குறிப்பாக முகப்பருவை சரிசெய்யும் மருந்துகளைக் கொண்ட சோப்பைத் தேர்ந்தெடுக்க வேண்டும். உங்களுக்கு பூஞ்சை தொற்று இருந்தால் பூஞ்சைக்கு எதிரான குணம் கொண்ட சோப்பை தேர்வு செய்ய வேண்டும்.

இருப்பினும், மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படும் பாக்டீரியா எதிர்ப்பு சோப்புகளை உங்கள் முகத்தைக் கழுவப் பயன்படுத்த வேண்டாம். ஏனெனில் அந்த சோப்புகள் சருமத்தைப் பாதுகாக்கும் நல்ல பாக்டீரியாக்களுக்கும் தீங்கு விளைவிக்கும் ஆபத்து இருக்கிறது.

அதனால்தான் குறைந்த pH உள்ள சோப்பைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இங்கே சோப்பு நமது தோலின் pH உடன் பொருந்தினால் நல்லது. நிறத்துக்கும், நறுமணத்துக்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கும் சோப்புகளைத் தேர்வு செய்ய வேண்டாம்.

 
சரும பிரச்னை

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படும் பாக்டீரியா எதிர்ப்பு சோப்புகளை உங்கள் முகத்தைக் கழுவப் பயன்படுத்த வேண்டாம்.

பேஸ் வாஷ் பயன்படுத்தும் போது என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்?

முகத்தை கழுவுவதில் இரண்டு வகைகள் உள்ளன. நுரையுடன் கூடிய கிரீமைப் பயன்படுத்துவது மற்றும் நுரையில்லாத கிரீமைப் பயன்படுத்துவது என்ற இரண்டு வகைகள் தான் அவை.

எண்ணெய் பசை சருமம் இருந்தால் நுரை வரும் பேஸ் வாஷை தேர்வு செய்வது நல்லது.

உங்கள் சருமம் சற்று வறண்டதாக இருந்தாலும் அல்லது 30 அல்லது 40 வயதிற்குட்பட்டவராக இருந்தாலும், ஈரப்பதமூட்டும் ஃபேஸ் வாஷ்களைத் தேர்வு செய்யவும். அல்லது நுரை வராத வகையிலான கிரீம்கள் அல்லது சோப்புகள் நன்றாக இருக்கும்.

முகம் கழுவுவதில் பெண்கள் ஒரு விஷயத்தை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும். மேக்கப் போட்டுக் கொண்டு இரவில் படுக்கும் பழக்கம் எப்போதும் கூடாது. க்ளென்சர் மூலம் முகத்தை நன்றாகக் கழுவிவிட்டுத் தான் படுக்கைக்குச் செல்லவேண்டும்.

 
சரும பிரச்னை

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

மேக்கப் போட்டுக் கொண்டு இரவில் படுக்கும் பழக்கம் எப்போதும் கூடாது. முகத்தை நன்றாகக் கழுவிவிட்டுத் தான் படுக்கச் செல்லவேண்டும்.

மாய்ஸ்ச்சரைசரை எவ்வாறு பயன்படுத்துவது?

ஒவ்வொரு நாளும் மாய்ஸ்சரைசர் போட வேண்டுமா? இதுவும் பலர் கேட்கும் கேள்வியாகவே உள்ளது.

இதற்கு ஆம் என்பதே பதில். தினமும் மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்துவதை உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும்.

அதே நேரம் உங்கள் சரும வகைக்கு ஏற்ற மாய்ஸ்சரைசரை தேர்வு செய்வதும் முக்கியம். உங்களுக்கு எண்ணெய் பசை சருமம் இருந்தால், தண்ணீர் சார்ந்த மாய்ஸ்ச்சரைசரை தேர்வு செய்யவும். உங்களுக்கு எண்ணெய் பசை சருமம் மற்றும் பருக்கள் இருந்தால், தண்ணீர் சார்ந்த ஜெல்லை தேர்வு செய்வது அவசியம்.

ஆனால், உங்களுக்கு வறண்ட சருமம் இருந்தால், நீங்கள் இன்னும் கொஞ்சம் மென்மையாக்கும் மாய்ஸ்ச்சரைசரை தேர்வு செய்ய வேண்டும். மாய்ஸ்சரைசரை ஒவ்வொரு நாளும் இரண்டு முறை பயன்படுத்த வேண்டும்.

காலையில் குளித்த மூன்று முதல் ஐந்து நிமிடங்களுக்குள் மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்தினால், அது உடனடியாக சருமத்தில் ஊடுருவிவிடும். மேலும் நீண்ட காலம் நீடிக்கும். உங்களுக்கு நீண்ட பாதுகாப்பும் இருக்கும்.

இரவில் போடும்போது, படுக்கும் முன் முகத்தை நன்றாகக் கழுவி மாய்ஸ்சரைசரை தடவவும்.

 
சரும பிரச்னை

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

மாய்ஸ்ச்சரைசரை தினமும் பயன்படுத்துதே தோலுக்கு நல்லது என மருத்துவர் கூறுகிறார்.

தோல் ஆரோக்கியத்தில் வாழ்க்கை முறை மிக முக்கிய பங்கு வகிக்கிறது.

வாழ்க்கை முறைக்கும் தோலுக்கும் இடையே மிகவும் இறுக்கமான உறவு உள்ளது. ஆரோக்கியமான வாழ்க்கை முறை என்றால் என்ன? இதுவும் பலர் கேட்கும் கேள்வியாகவே உள்ளது. இதற்கு ஒரே பதில் என்னவென்றால், உடற்பயிற்சியும் சரிவிகித உணவும்தான்.

தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள். உங்கள் வேலை உட்கார்ந்துகொண்டே செய்வதாக இருந்தால், அதிக உடற்பயிற்சி செய்யுங்கள்.

அதன் பிறகு சரிவிகித உணவையும் எடுத்துக்கொள்ள வேண்டும். கார்போஹைட்ரேட்டுகள், கொழுப்புகள், வைட்டமின்கள் மற்றும் புரதங்கள் அந்த உணவில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

முடிந்தவரை சர்க்கரையை குறைப்பது நல்லது. நீங்கள் எவ்வளவு சர்க்கரை சாப்பிடுகிறீர்களோ, அவ்வளவு அதிகமாக பருக்கள் வரும். மேலும், வயதானாலும் சுருக்கங்கள் அதிகரிக்கின்றன. சர்க்கரையை அதிகமாகப் பயன்படுத்தும் போது, பாக்டீரியா மற்றும் பூஞ்சை தொற்று அபாயமும் அதிகரிக்கிறது.

எண்ணெயில் பொரித்த உணவுகளையும் குறைக்க வேண்டும். அதே நேரம், பால் மற்றும் பேக்கரி பொருட்களும் சருமத்தில் பருக்கள் வரக்காரணமாக அமைகின்றன. அதனால்தான் கேக் மற்றும் பேக்கரி உணவுகளைக் குறைக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.

இவற்றையெல்லாம் கவனமாகப் பின்பற்றினால் சருமம் ஆரோக்கியமாக இருக்கும். ஆனால், இவற்றை எல்லாம் சரியாகக் கடைபிடித்தால் சரும பிரச்னைகள் இருக்காது என நீங்கள் எடுத்துக்கொள்ளக்கூடாது.

ஏனென்றால் அனைவருக்கும் சரும பிரச்னைகள் இருக்கும்; ஆனால், அந்த பிரச்னைகளைச் சரிசெய்வதற்காக நாம் இயன்றவரை முயலவேண்டும். அதே நேரம், சரும பிரச்னை தீவிரமடைந்தால், உடனடியாக மருத்துவ உதவியை நாடுங்கள்.

(இந்தக் கட்டுரையை எழுதியவர் ஒரு மருத்துவர். இதில் அளிக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுப்புரிதலுக்கு மட்டுமே.)

https://www.bbc.com/tamil/articles/cw089wxeqd2o

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.