Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அது இல்லாவிட்டாலும் கோட்டா வென்றிருப்பார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அது இல்லாவிட்டாலும் கோட்டா வென்றிருப்பார்

 

கத்தோலிக்க வாக்குகளைப் பெற்றுக்கொள்ளும் ஒரே நோக்கத்தில் தான் சனல்-4 ஊடக நிறுவனம் வெளியிட்டுள்ள புனையப்பட்ட காணொளி தொடர்பில் சர்வவேச விசாரணையை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோருவதாகவும், குறித்த நிறுவனம் கோட்டாபயவுக்கு எதிராக மட்டுமல்ல ஒட்டுமொத்த சிங்கள, பௌத்தத்துக்கு எதிராகவே பொய்பிரசாரம் செய்வதாகவும் தேசிய அமைப்புகளின் சம்மேளனத்தின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார்.

அத்துடன், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபாயவுக்கு அளிக்கப்பட்ட 69 இலட்சம் வாக்குகளில் 9 இலட்ச வாக்குகள்  மட்டுமே கத்தோலிக்க வாக்குகளாக உள்ள நிலையில் அந்த வாக்குகள் கிடைக்காது விட்டிருந்தால் கூட அவர் வெற்றி பெற்றிருப்பார் என்பதை சனல்-4 தெரிந்து கொள்ள வேண்டுமெனவும் இவ்வாறான பொய்கள் பற்றி தொடர்ச்சியாக பேசினால் சர்வதேசம் தொடர்ச்சியாக சேற்றை வாரியிறைப்பார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சனல்-4 ஊடக நிறுவனம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் வெளியிட்டுள்ள காணொளி தொடர்பில் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், 

சனல்-4 ஊடக நிறுவனம் எமது நாட்டின் அரச தலைவர்கள், மற்றும் படைவீரர்கள் சம்பந்தமாக தொடர்ச்சியாக எதிர்மறையான விடயங்களையே வெளியிட்டு வருகின்றது. அதுவொரு நிகழ்ச்சி நிரலின் அடிப்படையிலேயே செயற்படுகின்றது.

ஆகவே, அந்த விடயம் சம்பந்தமாக தொடர்ச்சியாக பேசுவதால் எவ்விதமான பயனுமில்லை. உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் பேசினால் தொடர்ந்தும் அந்த நிறுவனம் இலங்கை மீது சேற்றை வாரியிறைக்கும் செயற்பாட்டையே மேற்கொள்ளும்.

அதேநேரம், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பந்தமாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள காணொளியில் சாட்சியமளிப்பவர் ஒரு முஸ்லிம் பிரஜை. அவர் தற்போது சுவிஸ்ட்சர்லாந்தில் உள்ளார். அவர்தன்னுடைய புகலிடக் கோரிக்கையை உறுதி செய்து கொள்வதற்காக இவ்விதமான பொய்களை வெளியிட்டுக்கொண்டிருக்கின்றார்.

அவர்வெளியிடுகின்ற பொய்களை சனல்-4 நிறுவனம் ஆராயாது வெளியிட்டுக் கொண்டிருக்கின்றது. முதலில் அந்த நிறுவனம் கோட்டாபாய ராஜபக்ஷவை இலக்கு வைத்து செயற்படவில்லை. அது ஒட்டுமொத்த பௌத்தர்களயும், சிங்கள இனத்தினையும் இலக்குவைத்து தான் செயற்படுகின்றது.

அடுத்து, கோட்டாபாய ராஜபக்ஷ உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் தான் 69இலட்சம் மக்களின் வாக்குகளைப் பெற்றார் என்பது பொய்யான விடயமாகும்.

அவருக்காக தேசிய சக்திகள் அனைத்தும் ஒன்றிணைந்து பிரசாரம் செய்தன. பௌத்த தலைவர்கள் குரல் எழுப்பினார்கள். அதனடிப்படையில் தான் அவர் வெற்றி பெற்றார்.

இலங்கையில் ஆகக் கூடுதாலாக 9இலட்சம் கத்தோலிக்க வாக்குகளே உள்ளன. அந்த வாக்குகளைப் பெற்றுக்கொள்ளாது விட்டால் கூட கோட்டாபய ஜனாதிபதியாக வெற்றி பெற்றிருப்பார். அதேநேரம், 9இலட்சம் வாக்குகளுக்காக இவ்வாறான செயற்பாட்டை மேற்கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை. 

இந்த யாதார்த்தினை சனல்-4 புரிந்து கொள்ள வேண்டும். மேலும், எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச சர்வதேச விசாரணையைக் கோரியுள்ளார். அதற்கு அரசாங்கமும் தயார் என்று அறிவித்திருக்கின்றது. இந்தச் செயற்பாடு படைவீரர்களை காட்டிக்கொடுக்கும் முயற்சியாகும். 

நாட்டின், சிங்கள, பௌத்த அபிமானங்களை கேள்விக்கு உட்படுத்தும் செயற்படாகும். ஆகவே, சனல்-4 தொடர்பில் பேசுவதே பயனற்றது. அது புனையப்பட்ட கற்பனையாகும் என்றார்.

https://www.tamilmirror.lk/செய்திகள்/அத-இலலவடடலம-கடட-வனறரபபர/175-324084

  • கருத்துக்கள உறவுகள்

நான் கூட “அது” இல்லாமல் கூட எண்டு நினைத்தேன். செய்தியை வாசித்த பின் தான் அது அது இல்லை இந்த அதுவாம் எண்டு தெரிந்தது 🤣.

நல்லா வைக்கிறாங்கைய்யா தலைப்பு.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

நல்லா வைக்கிறாங்கைய்யா தலைப்பு.

தலைப்பு என்றால்’அது’தான்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Kavi arunasalam said:

தலைப்பு என்றால்’அது’தான்.

அது!

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, nunavilan said:

எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச சர்வதேச விசாரணையைக் கோரியுள்ளார். அதற்கு அரசாங்கமும் தயார் என்று அறிவித்திருக்கின்றது. இந்தச் செயற்பாடு படைவீரர்களை காட்டிக்கொடுக்கும் முயற்சியாகும். 

எங்கப்பன் குத்திருக்குள்ள இல்லை!!! உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் பற்றி விசாரிக்க, இவர்கள் ஏன் குதிக்க வேண்டும்? ஏன் படையினரை காட்டிக்கொடுக்கும் வேலை என முடிச்சுப்போட வேண்டும்? அப்போ..... இது படையினர் வேலைதானோ? ஆகா .... இன்னும்சொல்லுங்கோ கேட்ப்போம்!

13 hours ago, nunavilan said:

அவர்வெளியிடுகின்ற பொய்களை சனல்-4 நிறுவனம் ஆராயாது வெளியிட்டுக் கொண்டிருக்கின்றது.

உங்களுடன் இணைந்து பணியாற்றும்போது, உங்கள் படையினர். காட்டிக்கொடுத்தவுடன் அவர் முஸ்லிம், தமிழர் என்று மாற்றியமைப்பது. இதை முஸ்லிம்களும், ஏவல் புரியும் தமிழரும் உணர்ந்து கொள்ள வேண்டும். இவரது வார்த்தையே இவருக்கு எதிராக திரும்பப்போகிறது. அவர் இராணுவத்தில் பணியாற்றியிருக்கிறார், அதை எல்லோரும் ஏற்றுக்கொள்கிறார்கள். அவர் கூற்று பிழையானது என்றால் அவர் ஆற்றிய பணி பிழையானது, இராணுவத்தினர் செய்தது தவறு என நீங்களே ஒத்துக்கொள்கிறீர்கள். அது இருக்க .... இன்னும் பல சிங்கள புலனாய்வாளர்களும் சாட்சியமளித்துள்ளனரே. இதுக்கே இப்பிடியென்றால், இன்னும்  பல திடுக்கிடும் சாட்சியங்கள் வர இருக்கின்றன, இப்பவே மறுப்புரைகளை தயாரியுங்கள்.  சணல் நான்கிற்கு உங்கள் இராணுவம் பொய் சொல்லுகிறதா நீங்கள் பொய் சொல்லுகிறீர்களா என்பது தெரியாது, எல்லாவற்றையும் மறுக்கிறீர்கள், ஆனால் விசாரணை செய்கிறோம் என்கிறீர்கள், முடிவை மறைக்கிறீர்கள். ஆகவே அவர் சொல்வது பொய்தான் என நிரூபிக்க சர்வதேசத்துக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுத்து உங்களை நிஞாயப்படுத்த ஏன் தயங்கவேண்டும்? கோபப்படவேண்டும்? அவர்களை குற்றம் சொல்ல வேண்டும்? சில நாட்களுக்கு முன் வெளிநாட்டில் குண்டு வெடித்தபோது நீங்கள் அறிக்கை விட்டீர்களே, அப்போ உங்களை யாரும் குறை சொல்லவில்லையே. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.