Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தியாகி திலீபன் சாகவில்லை அவரை இந்திய அகிம்சையும் இலங்கை பௌத்தமும் கொலை செய்தது - அருட்தந்தை மா.சக்திவேல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
16 SEP, 2023 | 08:42 PM
image
 

தியாகி திலீபன் சாகவில்லை, அவர் கொலை செய்யப்பட்டார். இந்தியாவின் அகிம்சையும் இலங்கை தேசத்தின் சிங்கள பௌத்தமும் அவரை கொலை செய்துள்ளது. எனவே குற்றவாளிகள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் கூண்டின் முன் நிறுத்தி  தண்டிக்கப்படும் வரையும் இந்த தேச இலச்சிய அரசியல் வெல்லும் வரையும் சாட்சியாக நாங்கள் போராடுவோம். எமது போராட்டம் தொடரும் என மனித உரிமை செயற்பாட்டாளரான வணபிதா மா. சக்திவேல் தெரிவித்தார்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணி தியாகதீபம் திலீபனின் 36 ஆண்டு நினைவேந்தலையிட்டு பொத்துவில் இருந்து யாழ் நோக்கிய தீலிபனின் உருவப்படம் தாங்கிய வாகன ஊர்தி நேற்று வெள்ளிக்கிழமை (15) மாலை பொத்துவில் ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போது வணபிதா சக்திவேல் இவ்வாறு தெரிவித்தார்.

தியாகி திலீபனுடைய 36 வது நினைவு நாளில் சுடர் ஏற்றுகின்றோம். இந்த சுடர் தாயகத்தின் அரசியல் இலட்சியத்தின் சுடர் அன்று திலீபன் என்ன கோரிக்கைகளை முன்வைத்தாரோ அந்த கேரிக்கைகளை இன்றும் நாம் அதற்காக போராடிக் கொண்டிருக்கின்றோம். அந்த போராட்டம் வெற்றி பெறும்வரையில் பயணத்தை தொடருவோம் அவரின் பாதத்தில் சத்தியம் செய்கின்றோம்.

எங்களை ஏமாற்றுகின்ற ஆட்சியாளர்கள் தொடர்ந்து எங்களை ஏமாற்றுவதற்கு ஆயத்தமாக இருக்கின்றனர் தியாகி திலீபன் சாகவில்லை அவர் கொலை செய்யப்பட்டார். இந்தியாவின் அகிம்சையும் இலங்கை தேசத்தின் சிங்கள பௌத்தமும் அவரை கொலை செய்துள்ளது. சிங்கள பௌத்தம் கொலை செய்யும் அழிக்கும் என்பதற்கு அடையாளமாகத்தான் தியாகி திலீபன் இருக்கின்றார்.

இந்த நாட்டின் அழிவுகளுக்கு மத்தியிலே தான் இவர்கள் மகிழ்ச்சியை காண்கின்றார்கள். தங்களுடைய இனத்தையே அழிப்பவர்கள் 2019 உயித்த ஞாயிறு குண்டுவெடிப்பு, தெற்கிலே பாரிய வெடிப்பாக வெளிப்பட்டுள்ளது. இந்த வெடிப்பிற்கு காரணமாணவர்கள் மகிந்த, கோட்டாபய மட்டுமல்ல இந்தியாவும் பதில் சொல்லவேண்டும்.

2009 ம் ஆண்டு முள்ளிவாய்காலில் ஒரு இலச்சத்துக்கு அதிகமானவர்கள் கொல்லப்படும்போது இந்தியாவும் சர்வதேசமும் பார்த்துக்கொண்டிருந்தன, அவ்வாறு பார்த்துக்கொண்டிருந்ததன் காரணமாகத்தான் 2019 ம் ஆண்டு இந்த குண்டுவெடிப்பு நடந்தது. அவர்களுடைய அரசியலுக்காக அரசியல் தேவைகளுக்காக இந்த நாட்டில் ஏழைகளை கொல்வதற்கு ஆயத்தமாக இருக்கின்றனர்.

எனவே சர்வதேசத்தை பார்த்து கேட்கின்றோம் எங்களுக்கு நீதிவேண்டும் அது சர்வதேச தலையீட்டின் மூலம் ஏற்படுகின்ற நீதியாக இருக்கவேண்டும். இந்த நாட்டில் எங்களுக்கு நீதி கிடைக்கப் போவதில்லை, இப்போது உண்மையான குற்றவாளிகள் யார் என்பது வெளிப்பட்டிருக்கின்றது.

நாங்கள் 14 வருடங்களாக சர்வதேச விசாரணை வேண்டும் என கேட்டுக் கொண்டிருக்கின்றோம். இதற்கு செவிமடுக்காத தென்னிலங்கை அரசியல்வாதிகள் இப்போது  சர்வதேச விசாரணை வேண்டும் என்கின்றனர். எனவே இது தான் நீதி இது தான்  மனுநீதி இது தான் இறைநீதி.

எந்த மக்கள் சர்வதேச விசாரணை வேண்டாம் என கோரினார்களோ அவர்களின் வாயாலே இப்போது சர்வதேச விசாரணை வேண்டும் என்றால் இப்போது அவர்கள் பக்கம் திரும்பியிருக்கின்றது. எனவே குற்றவாளிகள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின்  கூண்டின் முன் நிறுத்தி தண்டிக்கப்படவேண்டும் அதுவரை எமது போராட்டம் தொடரும்.

dileepan-2.jpg

https://www.virakesari.lk/article/164725

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ஏராளன் said:
16 SEP, 2023 | 08:42 PM
எங்களை ஏமாற்றுகின்ற ஆட்சியாளர்கள் தொடர்ந்து எங்களை ஏமாற்றுவதற்கு ஆயத்தமாக இருக்கின்றனர் தியாகி திலீபன் சாகவில்லை அவர் கொலை செய்யப்பட்டார். இந்தியாவின் அகிம்சையும் இலங்கை தேசத்தின் சிங்கள பௌத்தமும் அவரை கொலை செய்துள்ளது. 

 

இந்தியா அஹிம்சையை  கை விட்டு பல வருடங்கலாயிற்றுது. அங்கும் இனவாதம், மத வாதம், சாதி வாதம்  தலைவிரித்தாடுகின்றது. தங்கள் சுய நலத்துக்காக எதுவும் செய்வார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ஏராளன் said:

. இந்த வெடிப்பிற்கு காரணமாணவர்கள் மகிந்த, கோட்டாபய மட்டுமல்ல இந்தியாவும் பதில் சொல்லவேண்டும்.

இந்தியா இலங்கைக்கு உதவிகொண்டு முகிலே குத்துவதற்கு சமயம் பாத்திருக்கிறது. காரணம் இலங்கையை கைவிடுவதால் தனது பாதுகாப்பு கேள்விக்குறியாகுமென அது அஞ்சுகிறது. இலங்கை இதை தெரிந்து வைத்துக்கொண்டு நேராகவே குத்துகிறது இந்தியாவுக்கு. தெரிந்தோ தெரியாமலோ இலங்கையை நேரடியாக காட்டிக்கொடுக்க முடியாத வலைக்குள் இந்தியா மாட்டிக்கொண்டுள்ளது. ஈஸ்ரர் குண்டுவெடிப்பின்போது, தான், இந்தியாவிலும் மலேசியாவிலும் இருந்ததாக சுரேஷ் சாலே தெரிவித்துள்ளார். குண்டு வெடிப்பு எச்சரிக்கை விடுத்ததும் இந்திய புலனாய்வு, அசாத் மௌலானா இந்தியாவிலிருந்தே ஜெனீவாவுக்கு போயிருக்கிறார். அங்கிருந்தே அவர் ஜெனீவாவுக்கு செல்வதற்கான ஏற்பாடுகளை செய்திருக்கிறார், ஆகவே மனித உரிமைகள் சபையோ வேறெதுவோ தொடர்புகொண்டு அவர்களின் வழிநடத்துதல் மூலமே அவர் வெளியேறியிருக்கிறார். இவர் டெல்லியில் தரை இறங்கியிருந்திருந்தால் நிட்சயம் இந்திய புலனாய்வு மோப்பம் பிடித்திருக்கும்.  சிங்களவரையும் தமிழரையும் மோதவிட்டு சுயநலன் காக்க திட்டமிட்ட இந்தியா முஸ்லிம்களை பாவிக்க திட்டமிட்டிருக்கலாம். அதாவது பெரிய எடுப்பில் தடுக்க முயற்சிக்காமல் எச்சரிக்கையோடு நிறுத்தியிருக்கலாம். மோடி அரசுக்கு முஸ்லீம் இனத்தின்மீது வெறுப்புண்டு. அவர் முதலமைச்சராக இருந்த காலத்திலேயே முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை பெருமெடுப்பில் நடந்ததும் மோடிக்கு அமெரிக்கா பயணத்தடை விதித்ததுமென நினைக்கிறேன்.    

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.