Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காவியமான ஆண்களின் தினம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: DIGITAL DESK 3

15 SEP, 2023 | 04:38 PM
image
 

ஆண்கள் உடலால் வலிமையானவர்கள் என்றும் ஆண்கள் சிங்கம் போன்றவர்கள் என்றும் உவமைகளால் அலங்கரித்து அலங்கரித்து அவர்களின் உணர்வுகள் இலை மறை காயாகவே காணாமல் போகச் செய்கிறது. அதேபோல் தான் ஆண்கள் தினமும் இலைமறை காயாகவேதான் ஒவ்வொரு வருடமும் தெரியப்படாமல் கலந்து செல்கின்றது.

ஆண்களுக்கு நிகர் பெண்கள் பெண்களுக்கு நிகர் ஆண்கள் என்று கூவல்கள் இருந்தாலும் அவை அறைக்கூவல்களாகவே ஒழித்து மறைகின்றன மகளிர் தினம் கொண்டாடப்படும் அளவிற்கு ஆண்கள் தினம் பேசப்படுவது கூட இல்லை. சமூக வலைத்தளங்களாக இருக்கலாம் தொழில்துறை நிறுவனங்களாக இருக்கலாம் இவ்வளவு ஏன் ஒரு சாதாரண அடிப்படை அழகான குடும்பத்தில் கூட இருக்கலாம் ஒரு பெண் தான் கொண்டாடப்படுகிறாளே தவிர ஆண் கிடையாது. பெண்களுக்கு நிகர் ஆண்கள் சாதனை புரிகின்றனர் தியாகம் செய்கின்றனர். ஆனால் மகளிர் தினம் பிரபல்யம் காணும் அளவிற்கு ஆண்கள் தினம் பிரபல்யம் ஆகிறதா  என்றால் அது கேள்விக்குறியாகவே இருக்கின்றது….அவ்வாறாக நாம் கடந்துபோன ஆண்கள் தினம் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை தேடிப் பார்ப்போம்.

வரலாறு என்பது எந்தவொரு விடயத்திற்கும் இன்றியமையாத அம்சமாக காணப்படுகின்றது. அவ்வாறாக ஆண்கள் தினம் எவ்வாறானதொரு  வரலாற்று பாதையை கொண்டுள்ளது என நோக்கும் போது..

சர்வதேச ஆண்கள் தினம் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் 19 ஆம் திகதி கொண்டாடப்பட்டு வருகின்றது. ஆண்களின் நல்வாழ்வு மற்றும் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை உருவாக்கி கொண்டாடப்படும் நாளாக இந்நாள் காணப்படுகின்றது. அதே போல் சமூக மட்டத்தில் நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்துவதன் மூலமும் ஆண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலமும் ஆண்களின் நலன் சார் முயற்சிகளில் கவனம் செலுத்துவதை நோக்கமாகக் கொண்டும் செயல்படுகின்றது.

தன்னகத்தே ஒரு நோக்கோடு நவம்பர் 19ஆம் தேதி ஆண்கள் தினம் அனுசரிக்கப்படுகின்றது. ஆனால் அது வெளித்த்தறியப்படாமல் இருப்பதே கவலைக்குரிய விடயமாக இருக்கின்றது. ஆண்கள் தினத்தின் தோற்றம் எவ்வாறு என்று வரலாற்றுத் தொடரை அலசும் போது சர்வதேச ஆண்கள் தினம் என்ற ஒரு விடயம் 1992 ஆம் ஆண்டு தோமஸ் ஒஸ்டரால் என்பவரால் தொடங்கி வைக்கப்பட்டது. இருப்பினும் அது பெரிதும் பேசுபொருளாகவில்லை. ஒரு ஆணின் முக்கியத்துவம்  ஆண்கள் தினத்தின் முக்கியத்துவம் 1999 ஆம் ஆண்டளவில் அறியப்பட்டதென்றே கூறலாம். தனது தந்தையினுடைய பிறந்தநாளை நினைவு கூறும் வகையில் டிரானாட் மற்றும் டொபோகோல் ஆகிய இருவரால் கொண்டாடப்பட்டது. இதுவே பிற்காலத்தில் ஆண்கள் மற்றும் சிறுவர்கள் பற்றிய பிரச்சினைகளை  வெளிக்கொணர்ந்து பேச இந்த நாளை பயன்படுத்தும் படியும் இவர்கள் ஊக்குவித்தார்கள். இவ்வாறு ஆரம்பிக்கப்பட்ட ஆண்கள் தினத்தின் வரலாறு மேற்கிந்திய தீவுகள் பல்கலைக்கழகத்தின் வரலாற்று விரிவுரையாளரான டாக்டர் ஜெரோம் டெலுக்ஸிங் என்பவரால் புதுப்பிக்கப்பட்டதாகவும் வரலாறுகள் காணப்படுகின்றன.

நவம்பர் 19 ஆம் திகதி கொண்டாடப்படும் ஆண்கள் தினம் சுவாரஸ்யமான வரலாற்று பார்வையை கொண்டு காணப்படுவதோடு ஆண்கள் தினத்தின் முக்கியத்துவம் பற்றியும் சிந்தனை செல்ல அதனை சிறிது அலச ஆரம்பித்தேன்…

காவியமாய் தெரியும் ஆண்களை கண்டு கொள்ளாத நிலையில் சமூகம் காணப்பட அவர்களின்பால் பார்வை செல்ல, அவர்களின் விலைமதிப்பற்ற உணர்வுகள் மதிக்கப்பட, அவர்களின் நல்வாழ்வு மற்றும் ஆரோக்கியம் மேம்பட , அவர்களுக்கான பாலியல் போராட்டங்கள் மற்றும் ஆண்களுக்கான உரிமைகள் பாதிக்கப்படும் சமூக நிலைப்பாடுகள் பற்றி குரல் கொடுப்பதற்கும் அடிப்படை மனிதாபிமானமான விழுமியங்கள் மற்றும் ஆண்கள் மீதான விழிப்புணர்வை மேம்படுத்துவதற்கும் டாக்டர் டெலுக்சிங் என்பவரால் சட்டபூர்வமாக ஆண்கள் தினம் அனுசரிக்கப்பட்டது.

ஆண் என்றால் அழக்கூடாது என்ற சமூக முட்கட்பிதங்களால் உணர்வுகளை உள்ளுக்குள் வைத்து தனக்குள் அழுது முடிக்கும் ஆண்களுக்கு உணர்வுகள் உறைந்தே செல்கின்றன. ஒரு ஆணின் உணர்வுக்காய் பேனாமை வருடும்  நான் ஒரு பெண்தான்.. அவ்வாறான முட்கட்பித வார்த்தைகளை எதிர்த்து நான் பார்த்த ஆணின் உணர்வுகள் என் போனா முனையை எழுத எத்தனித்தது.

அவனது அழுகைகள் காற்றோடு கரைகிறது.. அவனது தியாகங்கள் இரவோடு மறைகின்றது.. ஏனோ  அவனின் சிரிப்பை மட்டும் சமூகம் விட்டு வைத்து விட்டது. ஆடவர்களுடைய உணர்வுகள் மறைக்கப்படுவதைப் போல அவர்களுக்கான தினமும் நாட்காட்டியின் சாதாரண நாளாகவே கிழக்கில் உதயமாகி மேற்கில் மறைந்த செல்கின்றது. கடந்து செல்லும் தினத்தின் இன்னும் சில சுவாரசியங்களை மீட்டி பார்ப்போமானால்..

நம் எல்லோரது வாழ்விலும் தகப்பனாய், சகோதரனாய், காதலனாய், கணவனாய் என்ற பாத்திரமேற்று வாழ்வின் முன்னேற்றத்திற்கு தூணாய் விளங்கும் அவனின் தினம் ஆறுதூண்களை அடிப்படையாகக் கொண்டு கொண்டாடப்படுகிறது. இது ஆறு முக்கியத்துவம் மிக்க விடயங்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. முதலாவது தூண் இன்றைய வாழ்வின் தொழிலாளர் வர்க்க ஆண்களை போற்றுவதாகவும், இரண்டாவது தூண் ஒரு ஆணின் சமூகம் அமைப்பில் குடும்பம் திருமணம் குழந்தை பராமரிப்பு இரண்டாவது தூணாகவும்,மற்றும் சுற்றுச்சூழலில்  ஆண்களின் பங்களிப்பு வெளிப்படுவதை மூன்றாவது தூணாகவும்  ஆண்களின் ஆரோக்கியம் மற்றும் சமூக உணர்ச்சி உடல் மற்றும் ஆன்மீக நல்வாழ்வை கவனத்தில் கொள்வதற்காக நான்காவது தூணாகவும், ஐந்தாவது தூணாக பல துறைகளில் அவர்கள் எதிர்கொள்ளும் பாகுபாடுகளை எடுத்துக்காட்டுவதாகவும், இறுதியாக பாலின சமத்துவம், பாலின உறவுகள் ,  பால்நிலை விழிப்புணர்வை வெளிப்படுத்துவதே ஆறாவது தூணாகவும் கொண்டு ஆறு தூண்களின் வாயிலாக ஆண்களின் அவசியப்பாடுகள் அடக்கப்படுகின்றன. அவற்றை மேம்படுத்துவதிலும் கவனம் செலுத்தி  வருவது ஆண்கள் தினத்தின் ஒரு பகுதியாக   விளங்குகின்றது.

இவ்வாறான முக்கியத்துவமான அம்சங்கள் புதைந்து காணப்படும் ஆண்கள் தினத்தினை மேலைத்தயே நாடுகள் ஆரம்பகால முதல் கொண்டாடி வருகின்றது. அதேவேளை 2007ஆம் ஆண்டு ‘ஆண்கள் உரிமை கழகம்’ என்ற அமைப்பின் ஊடாக இந்தியாவில் கொண்டாடப்படுவதாக பிரகடனப்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து இலங்கையிலும் ஆண்கள் தினம் கொண்டாடப்படுவதற்கான அங்கீகாரம் கிடைத்தது. ஆனால் அனைத்தும் இரு பரிமாணத்திலேயே இன்று வரையிலும் வெள்ளைப் பக்கங்களின் கருப்பெழுத்தாகவே காணப்பெறுகின்றது. முப்பரிமான நிலைப்பாட்டை காண இன்னும் காலங்கள் எடுக்கும் என்பதே சமூக நிலைப்பாடாகும். இது கவலைக்குரிய ஒரு வெளிப்பாடாகவே இருக்கின்றது என்பதில் எவ்வித ஐயப்பாடுமில்லை.

கடந்து சென்ற காலங்களை மீட்க முடியாது இனிவரும் காலங்களிலாவது ஆண் என்ற புத்தகத்தை படித்து உணர்வுகளுக்கு மதிப்பளித்து ஆண்கள் தினத்தை கொண்டாடுவோம். இவர் கூறும் போது அடுத்த கேள்விக்கணையும் என்னுள்ளே உதிக்கிறது. உங்களுக்குள்ளும் வந்திருக்கலாம் என நினைக்கின்றேன். இந்த ஆண்கள் தினத்தை எப்படித் தான் கொண்டாடுவது சற்றே அதனையும் பார்த்து செல்வோம்..

ஆண்கள் தினம் அது நீங்கள் விரும்பிய வண்ணம் அவர்களை மகிழ்வுப்படுத்தலாம். ஆனாலும் அதனை வீண் செலவிற்கு வழிகாட்டிடாமல் ஆணின் உடல்நலம் தொடர்பான காரணங்களுக்காக நன்கொடை செய்யுங்கள் அல்லது ஆண்களின் மன ஆரோக்கியம் மற்றும் உடல்கோளாறுகளை பற்றி பேசும் சுவரொட்டிகள் விழிப்புணர்வுகளை மேற்கொள்ள பழகுங்கள். வெறுமனே வலைதள பரப்புரைகளையும் வலைத்தள கொண்டாட்டங்களாகவும் இருந்து விட்டுச் செல்லாமல் உணர்வுகள் மறைத்து வாழும் உறவுகளுக்கு ஒரு நாளையேனும் நேரில் வாழ்த்துங்கள் ‘இனிய ஆண்கள் தினம்’ என்று..

ஒரு பெண் தந்தையிடமிருந்தும் கணவனிடமிருந்தும் காதலனிடமிருந்தும், சகோதரனிடமிருந்தும் பெற ஏங்கும் அன்பை ஒரு ஆணும்  தாயிடமிருந்தும் மனைவியிடமிருந்தும் காதலியிடமிருந்தும் சகோதரியிடமிருந்தும் பெற விரும்புவான் என்பதை எப்போதும் மறவாதீர்கள். இலைமறைகாயாய் கொண்டாடப்பட்ட ஆண்கள் தினம் இனியாவது வெளித்தெரியட்டும் நவம்பர் 19ஆம் திகதியன்று என்று.. ஆழமான உணர்ச்சிகளுக்கு ஆண் சொந்தமில்லை என்ற முற்கற்பிதங்களை இந்த சமூகம் இனியாவது தகர்த்தெறியட்டும்.. ஆணும் அழகியதொரு கவிதைதான் படிக்கத் தெரிந்தவர்களுக்கு….

பெரியசாமி சுசாந்தனி
இரண்டாம் வருடம் ஊடககற்கைகள் துறை
யாழ் பல்கலைக்கழகம்

https://www.virakesari.lk/article/164661

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.