Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிணையில் வெளிவரமுடியாத பிரிவுகளில் சீமான் மீது வழக்குப்பதிவு - ’லீக்’கானது 2011 எஃப்.ஐ.ஆர்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிணையில் வெளிவரமுடியாத பிரிவுகளில் சீமான் மீது வழக்குப்பதிவு - ’லீக்’கானது 2011 எஃப்.ஐ.ஆர்!

23rd Sep, 2023 at 9:20 PM
 

விஜயலட்சுமி, சீமான்

விஜயலட்சுமி, சீமான்

நடிகை விஜயலட்சுமி, சீமான் மீது அளித்த புகாரின் அடிப்படியில் 2011ல் பதிவான முதல் தகவல் அறிக்கையின் (எஃப்ஐஆர்) விபரங்கள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

நடிகை விஜயலட்சுமி 2011ஆம் ஆண்டு திரைப்பட இயக்குநரும், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளருமான சீமான் தன்னை திருமணம் செய்துக்கொள்வதாக கூறி ஏமாற்றி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், இதனால் 6 முறை தனக்குக் கட்டாயக் கருகலைப்பு செய்யப்பட்டதாகவும் ஆர்9 வளசரவாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

கடந்த சில ஆண்டுகள் இந்த விவகாரம் பேசப்படாத நிலையில், அடிக்கடி விஜயலட்சுமி சீமான் குறித்த வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வந்தார். இந்த நிலையில், சமீபத்தில் பெங்களூரில் இருந்து சென்னை வந்த நடிகை விஜயலட்சுமி சென்னை காவல் ஆணையாளர் அலுவலகத்தில் சீமான் மீது நடவடிக்கை எடுக்கும்படி புகார் அளித்திருந்தார். இதனால், இந்த விவகாரம் மீண்டும் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் இந்த வழக்கில் தனக்கு துணையாக வீரலட்சுமி இருப்பதாகவும், இந்தமுறை சீமானை ஜெயிலுக்கு அனுப்பாமல் விட போவது இல்லை எனவும் செய்தியாளர்களிடம் விஜயலட்சுமி தெரிவித்தார். 11 ஆண்டுகளாக என்ன செய்தீர்கள்? தேர்தல் வரும் நேரத்தில் அரசியல் பின்புலத்தோடு புகார் அளித்துள்ளீர்களா? என செய்தியாளர்கள் கேள்விகளை எழுப்ப அதற்குப் பதில் தர முடியாமல் நிதானம் இழந்த விஜயலட்சுமி பாதியிலேயே செய்தியாளர் சந்திப்பில் இருந்து வெளியேறினார். 

விஜயலட்சுமியின் புகாரை தொடர்ந்து சீமான் விளக்கம் அளிக்க காவல்துறையால் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. .நோட்டீஸ் அனுப்பியும் ஆஜராகாமல் இருந்த சீமான் தனது சார்பில் வழக்கறிஞர் அணியை அனுப்பி விளக்கம் அளித்தார். மேலும் புகார் தொடர்பாக விஜயலட்சுயிடம் போலீஸ் விசாரணையும், மருத்துவ பரிசோதனை நடந்தது. நீதிபதியிடம் தனியறையில் ரகசிய வாக்குமூலமும் தந்தார். 

இதையடுத்து இந்த வழக்கில் சீமான் கைது செய்யப்படுவார் என தகவல்கள் வெளியானது. விஜயலட்சுமி வழக்கால் டென்ஷனான சீமான், 2 லட்சுமிகளால் தன்னை எதுவும் செய்ய முடியாது என்றும், லட்சுமி வெடியை வைத்து பெரிய மலையை தகர்க்கப்பார்க்கிறார்கள் என்றார்.மேலும் எனது தம்பிகளை ஒரு எல்லைவரை தான் கட்டுப்படுத்த முடியும். பின்னர் ஏதாவது நடந்தால் நான் பொறுப்பில்லை என்ற ரீதியில் மிரட்டல் விடுக்கும் தொனியில் பேசி இருந்தார்.

இதைத்தொடர்ந்து திருவள்ளூர் அருகே கோவிலுக்கு சென்ற தமிழர் முன்னேற்றப்படை தலைவர் வீரலட்சுமிக்கும், நாம் தமிழர் கட்சியினருக்கும் மோதல் ஏற்பட்டது. இதில் ஆவேசமான வீரலட்சுமி, ”என் படையை திரட்டி வந்தால் வட தமிழ்நாட்டில் உன்னால் கால் வைக்க முடியாது. ஓட்டு வாங்கக்கூட முடியாது” என பேசினார்.

எஃபஐஆர் நகல்

எஃபஐஆர் நகல்

இந்த நிலையில், சீமான் மீது அளித்த புகாரை வாபஸ் பெறுவதாக நடிகை விஜயலட்சுமி மீண்டும் கிளம்பிய பரபரப்பை அணைத்தார்.மேலும், தனக்கு சீமான் பணம் தரவில்லை என்றும் வழக்கு தொடர்பாக சரியான ஒத்துழைப்பு இல்லை எனவும் சீமானை எதிர்த்துத் தன்னால் எதுவும் செய்யமுடியவில்லை என்று தோல்வியை ஒப்புக்கொள்வதாகவும் தெரிவித்தவர் வீரலட்சுமி தனது சரியாக சோறுக்கூட கொடுக்கவில்லை என குற்றம்சாட்டிவிட்டு பெங்களூருக்குத் திரும்பிச் சென்றார்.

நடிகை விஜயலட்சுமி சென்னையில் இருந்து வெளியேறிய நிலையில், சீமான் தனது ஆதரவாளர்கள் புடைசூழ சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜர் ஆகி தனது விளக்கத்தை அளித்தார். அதற்கு முந்தைய நாள் தான் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராக உள்ளதால் அனைத்து உறவுகளும் தனக்கு பக்கபலமாக இருந்து ஆதரவு தர வேண்டும் என பேசும் ஆடியோ வெளியானது.

இதைத்தொடர்ந்து சீமான், ”ஆமாம் யார் சொன்னாலும், சொல்லவில்லை என்றாலும், ஐ எம் பவர்புல் லீடர்” என்றார். மேலும் விஜயலட்சுமி மீது மான நஷ்ட ஈடு வழக்கு தொடரபோவதாகவும் கூறினார்.

இதனால் கொதித்தொழுந்த நடிகை விஜயலட்சுமி, சீமான் மீது தான் அளித்த புகாரை வாபஸ் பெறுவதாக எழுதித் தந்திருந்தாலும் தன் மீது மானநஷ்ட ஈடு வழக்கைத் தொடர மாட்டேன் என்று சீமான் தக்க உறுதியைத் தரவேண்டும் அப்படி அவர் செய்யாவிட்டால் வழக்கை வாபஸ் பெறுவதற்கான அதிகாரபூர்வ ஆவணத்தில் கையெழுத்திட மாட்டேன் என்று அதிரடியாக அறிவித்துள்ளார்.

மேலும் அவர் என்னிடம் 2 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடாக கேட்டால், நான் அவரிடம் 20 கோடி கேட்டு கர்நாடகாவில் வழக்கு தொடர்வேன். மேலும் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகாரை வாபஸ் பெற சாட்டை துரைமுருகன் மூலம் சீமான் பேசியதாகவும், ரூ.50 ஆயிரம் பணத்தை தனது அக்கவுண்டில் போட்டு விட்டதாகவும் விஜயலட்சுமி வீடியோ வாயிலாகத் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், சீமான் மீது விஜயலட்சுமி அளித்த புகாரின் பேரில் 2011ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்த எஃப்.ஐ.ஆர் காப்பி தற்போது இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த எஃப்.ஐ.ஆரில் இணைக்கப்பட்டுள்ள புகாரில், ஒருநாள் காலை 8 மணிக்கெல்லாம் மதுபோதையில் இருந்த சீமான் விஜயலட்சுமியை தனது ஆபிஸ்க்கு கார் அனுப்பி அழைத்து வந்ததாகவும், விஜயலட்சுமி வேண்டாம் என்று பலமுறை மறுத்தும்,கெஞ்சியும் விடாமல் அவரை பாலியல் வல்லுறவு செய்ததாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும், இதை வெளியில் சொன்னால் பார்ன் வீடியோ போன்று உன்னுடைய வீடியோவை வெளியிடுவேன் என்று விஜயலட்சுமியை சீமான் மிரட்டியது உள்பட பல்வேறு தகவல்கள் அதில் குறிப்பிடப்பட்டுள்ளன.

இதையடுத்து 417, 420, 354, 376, 506(1) இதச மற்றும் பெண்கள் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டம் 4 வது பிரிவு ஆகிய பிணையில் வெளிவரமுடியாத சட்டப் பிரிவுகளில் சீமான் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

சீமான் விவகாரத்தில் தற்போது வெளியாகி இருக்கும் எஃப் ஐ ஆர் விபரங்கள் மேலும் இந்த விவகாரத்தில் சூட்டை அதிகப்படுத்துவனவாக உள்ளன. சீமான் மீதான வழக்கு வாபஸ் என்று விஜயலட்சுமி எழுதித் தந்திருந்தாலும் நீதிமன்றம் அது குறித்து எடுக்கும் முடிவே இறுதியானது என்றும் கூறப்படுகிறது. இதனால் சீமான் வழக்கு விவகாரத்தில் பரபரப்பு தொடர்ந்து நீடிக்கிறது.

https://www.kumudam.com/amp/story/news/tamilnadu/actress-vijayalakshmi-complaint-case-registered-against-seeman

 

 

டிஸ்கி

ஆரம்பத்தில் 2011 இல் தமிழ்நாட்டு பொலிஸ் சரியாகத்தான் வழக்கை பதிந்து நடத்த தொடங்கி இருக்கிறது.

ஆனால் பின்னர் ஜெயலலிதா அதன் பின் எடப்பாடி தலையிட்டு வழக்கை அடித்து நூத்துள்ளார்கள்.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.