Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நாமலின் மின்கட்டணம் செலுத்தப்பட்டது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாமலின் மின்கட்டணம் செலுத்தப்பட்டது

 

கடந்த காலங்களில்  சமூக ஊடகங்களில் வெளியாகி சர்ச்சைக்குள்ளாகிய  நாமல் ராஜபக்ஷவின் திருமண வைபவத்தின் மின்சார கட்டணம் தொடர்பான செய்திக்கு நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த முற்றுப்புள்ளிவைத்துள்ளார்.

தங்காலையில் நடைபெற்ற பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் திருமண வைபவத்திற்கான மின்சார கட்டணம் தொடர்பான செய்தியில், சுமார் 26 இலட்சம் ரூபாய் நிலுவையில் உள்ளதாக இலங்கை மின்சார சபையின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

நாமல் ராஜபக்சவின் திருமண வைபவத்தின்  2.6 மில்லியன் மின்சாரக் கட்டணம் நேற்று (02) நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவினால் செலுத்தப்பட்டது.

போரை முடிவுக்குக் கொண்டு வந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு மரியாதை செலுத்தும் வகையிலும், அரசியலிலும் வர்த்தகத்திலும் அவருக்கு ஆதரவாக இருந்த நண்பர் என்பதாலும் தான் இந்தப் பிரச்சினையைத் தான் தீர்த்து வைத்ததாக ராஜாங்க அமைச்சர் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.

“இன்று நான் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் சார்பாக மின்சார சபைக்கு மொத்த மின்சார கட்டணமான 2,682,246.57 ரூபாவை செலுத்தினேன்.

“நான் இலங்கை மின்சார சபையின் தலைவரைச் சந்தித்து பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமணத்திற்கான இந்த சர்ச்சைக்குரிய மின்சாரக் கட்டணத்தைப் பற்றி கலந்துரையாடினேன்.

 நான் நாமல் ராஜபக்சவிடம் பேசியபோது, தானோ அல்லது தனது தந்தையோ திருமணத்திற்கு கூடுதல் மின்சாரம் கோரவில்லை என்று கூறினார்.

ஆனாலும் இவ்வாறாக மின்சார கட்டணம் தொடர்பில் வதந்தி ஒன்று பரவி வருகிறது” என தெரிவித்தார்.

"முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து நாட்டில் பாரிய அபிவிருத்திகளை முன்னெடுத்த தலைவர். அவர் மீது யாரிடமும் பழி சுமத்துவதை என்னால் அனுமதிக்க முடியாது. எனவே கட்டணம் செலுத்தப்படவில்லையென்றால் அதை நான் செலுத்துவேன்” என நான் அவரிடம் கூறினேன்.

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமணத்தில் பல பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொண்டனர்.

 எனவே, பாதுகாப்பு தரப்பினர் அவர்களின் பாதுகாப்பிற்காக பாதுகாப்பு மின்விளக்குகளைக் கோரியிருந்தனர். ஆனால் இதற்கான கட்டணம் ஜனாதிபதி, பாதுகாப்புப் பிரிவு அல்லது வேறு எந்த நிறுவனத்தாலும் செலுத்தப்படவில்லை. இது வாய்மொழியான வேண்டுகோள், அதன்படியே இலங்கை மின்சார சபை மேலதிக வசதிகளை வழங்கியது.

"ஆனால் திருமணம் முடிந்தபின் மற்றும் இரண்டாவது குழந்தை பிறந்ததையடுத்து, செலுத்தப்படாத கட்டணப் பட்டியல் சமூக ஊடகங்களில் பரவத் தொடங்கியது. எனவே, அவர்களுக்கான கட்டணத்தை செலுத்துவது அனைவருக்குமான பொறுப்பு என நான் நினைக்கிறேன்.” என இராஜாங்க அமைச்சர் கூறினார்.

"எனவே, எனது சொந்த நிறுவனமான 'Royalco Aqua Culture (Pvt) Ltd' கணக்கிலிருந்து கட்டணத்தை செலுத்த முடிவு செய்தேன்.

நான் கட்டணத்தை செலுத்தியது நாமல் ராஜபக்சவுக்கு  தெரியாது, ஆனால் அதைப்பற்றி இன்று மாலை நான் அவரிடம் கூறுவேன்" என இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த தெரிவித்தார்.

https://www.tamilmirror.lk/செய்திகள்/நமலன-மனகடடணம-சலததபபடடத/175-325383

1696294690-cartoon03102023T.jpg

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, nunavilan said:

தங்காலையில் நடைபெற்ற பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் திருமண வைபவத்திற்கான மின்சார கட்டணம் தொடர்பான செய்தியில், சுமார் 26 இலட்சம் ரூபாய் நிலுவையில் உள்ளதாக இலங்கை மின்சார சபையின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

 

21 hours ago, nunavilan said:

தானோ அல்லது தனது தந்தையோ திருமணத்திற்கு கூடுதல் மின்சாரம் கோரவில்லை என்று கூறினார்.

 

21 hours ago, nunavilan said:

“இன்று நான் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் சார்பாக மின்சார சபைக்கு மொத்த மின்சார கட்டணமான 2,682,246.57 ரூபாவை செலுத்தினேன்.

 

21 hours ago, nunavilan said:

"ஆனால் திருமணம் முடிந்தபின் மற்றும் இரண்டாவது குழந்தை பிறந்ததையடுத்து, செலுத்தப்படாத கட்டணப் பட்டியல் சமூக ஊடகங்களில் பரவத் தொடங்கியது.

ம்..... இதில் யார் சொல்வது உண்மை? யார் சொல்வது பொய்? ஏன் அப்படி நாமலை இலக்கு வைக்கிறார்கள்? அவர்களது மின்சார கட்டணத்தை இவர் ஏன் செலுத்த வேண்டும்? ஏன் பொய்யான தகவலுக்கு சட்ட நடவடிக்கை எடுக்கவில்லை? இதில ஜனாதிபதி கனவு! பிள்ளையின் திருமணத்திற்கும் மின்சாரம் இனாமாக பெறலாம். நாட்டின், மக்களின் வளங்களை ஒரு குடும்பம் நோகாமல் சுரண்டுகிறது, அதற்கு பலபேர் வக்காலத்து. காரணம் அவர்கள் செய்வதும் அதே தொழில்தானே.

  • கருத்துக்கள உறவுகள்
On 3/10/2023 at 12:15, nunavilan said:

நாமலின் மின்கட்டணம் செலுத்தப்பட்டது

May be an illustration of 1 person and text

 

May be a doodle of baby and text

நாட்டில் நடக்கும் கூத்துக்களை பார்க்க, ஒரே சிரிப்பாக இருக்கின்றது. 😂 🤣

  • கருத்துக்கள உறவுகள்

நாமலுக்கு மறைப்புசெய்தாரா?  மறைப்புக்குள்ளே என்ன இருக்கிறது என்று மக்களுக்கு துகிலுரிந்து காட்டினாரா ராஜாங்க அமைச்சர்? சரியான நேரத்தில் சரியான காரியத்தை மக்களுக்கு வெளிப்படுத்தியிருக்கிறார். மக்களின் பணத்தில் கொண்டாட்டம், கொடுக்க துப்பில்லை, பிறர்மேல் பழி சுமத்தி, பிறர் பணத்தில் கடன் அடைப்பவர், பொருளாதாரத்தை கட்டி எழுப்ப முடியாமல் தப்பியோடியவர்கள், நாட்டின் ஜனாதிபதியானால் நாடு என்ன  நன்மையடையும் என்பதை நாசூக்காக வெளிப்படுத்தியிருக்கிறார். ஒருவேளை இவர்கள் அரசியலுக்கு வந்தால், தான் இவர்களால் பழிவாங்கப்படுவதை தவிர்ப்பதற்காக இப்படி செய்து வெளிப்படுத்தினாரோ தெரியவில்லை. என்ன இருந்தாலும் நாங்கள் நாட்டை சூறையாடவில்லை, நன்மையே செய்தோம் என பீற்றித்திரியும் நாமலுக்கு  சிறந்த செருப்படி சேறடிப்பு. பௌத்த மகா சங்கம்  செலுத்தவேண்டிய மின்சார நிலவையை சஜித் கட்டினார், பிக்கு ஒன்று மின்சார ஊழியரை தாக்கி சன்னதம் ஆடுது. இதில பௌத்தம் சொந்தம் கொண்டாடுகினம்.    

  • கருத்துக்கள உறவுகள்

இதில் பெரிதாக கூறுவதட்கு ஒன்றுமில்லை. இதை ஜேவிபி தான் வெளி கொணர்ந்தது. பொலநறுவை பகுதியை சேர்ந்த ஒருவர் இது சம்பந்தமாக அடிப்படை உரிமை (FR ) வழக்கு தாக்கல் செய்திருந்தார். அடுத்த மாதம் இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் எடுக்க இருக்கிறது. இதனை கருத்தில் கொண்டே ஓடி போய் இந்த பணத்தை கட்டி இருக்கிறார்கள் இந்த மானம் கெடட கொள்ளையர்கள். மற்றப்படி வெட்கம் மானம் ரோசம் என்பதெல்லாம் இவர்களுக்கு ரெண்டாம் பட்ச்சம்தான். 

  • கருத்துக்கள உறவுகள்
On 3/10/2023 at 12:15, nunavilan said:

 

நான் கட்டணத்தை செலுத்தியது நாமல் ராஜபக்சவுக்கு  தெரியாது, ஆனால் அதைப்பற்றி இன்று மாலை நான் அவரிடம் கூறுவேன்" என இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த தெரிவித்தார்.

 

8 hours ago, satan said:

 பௌத்த மகா சங்கம்  செலுத்தவேண்டிய மின்சார நிலவையை சஜித் கட்டினார், பிக்கு ஒன்று மின்சார ஊழியரை தாக்கி சன்னதம் ஆடுது. இதில பௌத்தம் சொந்தம் கொண்டாடுகினம்.    

May be a doodle of text

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.